https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, May 19, 2017

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year of Formation of Madras Labour Union)

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு
(Centenary year of Formation of Madras Labour Union)
                                                                 -ஆர்.பட்டாபிராமன்

இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் என பெயரும் புகழும் பெற்ற மெட்றாஸ் லேபர் யூனியன் (எம் எல் யு) பி அண்ட் சி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கம் துவங்கிய நூறு ஆண்டுகளை நாம் நம் காலத்தில் காண்கின்றோம். 1918 ஏப்ரல் 27 அன்று சங்கம் துவங்கியதாக B P வாடியா பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டத்தில்  அறிவித்தார்.
I propose that we should form a little association to be called  the Madras Labpur Union. சங்க சட்டங்கள் என்ன, சந்தா எவ்வளவு என முடிவு எடுங்கள். முதலில் ஆயிரக்கணக்கானோர் சேரமாட்டார்கள் சில நூறில் துவங்குவோம். . எண்ணிக்கை என்பதைவிட குவாலிட்டி மிக முக்கியமானது. உங்கள் நலன் உங்கள் கையில்தான் உள்ளது. அரசாங்கம் செய்யாது. தலைவர்கள் கூட செய்யமுடியாது. பிராம்மணர்கள், பிராம்மணர் அல்லாதவர், நிர்வாகம், அரசாங்கம் என எதற்கும் depend ஆகாமல் உங்களை நம்பி செயலாற்றுங்கள் என அவர் உரை நிகழ்த்தினார்.
1850களிலேயே பருத்தி சணல் மில்கள் பம்பாய், கல்கத்தாவில் உருவாயின. 1880களில் பாக்டரி கமிஷன், பாக்டரி சட்டம் உருவாயின. இதற்காக லோகாந்தே போன்றவர்கள் முன்நின்று தொழிலாளர்களை திரட்டி போராடினர். லோகாந்தே பிராமணர் அல்லாதவர் எழுச்சியில்  மகாத்மா பூலேவுடனும் இணைந்து பணியாற்றியவர். பம்பாய் மில் தொழிலாளர் அசோசியேஷன், ஏற்படுத்தப்பட்டு தீனபந்து என்கிற பத்ரிக்கையும் வெளியிடப்பட்டது.. தொடர்ந்த 15 ஆண்டுகளில் ரயில்வே ஊழியர்களின் அமல்கமேட்டட் சொசைட்டி, அச்சக  தொழிலாளர் சங்கம், போஸ்டல் கிளப் என பல உருவாயின.
  1917ல் அலுமினியம் தொழிலாளர் சங்கம் என்ற ஒன்று மெட்றாசில் அமைந்து செயல்பட்டாலும் நவீன ஆலைத்தொழிலாளர் சங்கம் என்கிற வகையில் இந்தியாவில்  அமைந்த முதல் தொழிற்சங்கமாக மெட்றாஸ் லேபர் யூனியன் என்பதையே அனைத்துதரப்பு வரலாற்றாய்வாளர்களும் ஏற்றுள்ளனர். 1878ல் பின்னி பஞ்சாலையை ஐரோப்பியர் திறந்தனர். 1884ல் பின்னி மற்றொரு ஆலையை கர்னாடிக் மில் என்றும் திறந்தனர். சுந்தர்தாஸ் மூல்ஜி என்பார் சூளைப்பகுதியில் மில் திறந்தார்சூளை இந்திய மூலதனத்தாலும் , பி அண்ட் சி அய்ரோப்பியர் மூலதனத்திலும் நடந்துவந்தன.

1895ல் அகமதாபாத் நெசவு தொழிலாளர் வேலைநிறுத்தமும் நடந்தது. தொடர்ந்த ஆண்டுகளில் பம்பாய் கல்கத்தா சென்னை நகரங்களில் பல்வகைப்பட்ட வேலைநிறுத்தங்கள் நடந்தேறின. திலகர்  சிறைத்தண்டனை எதிர்த்து தங்களின்  அரசியல் வேலைநிறுத்தத்தையும் தொழிலாளர் நடத்திக்காட்டினர். முதல் உலகப்போர் அதன் காரணமான பொருளாதாரா நெருக்கடிகள், அவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஆங்காங்கே  தொழிலாளர்களின் போராட்டங்களை அதிகப்படுத்தின. சிறைவிதிகளின்படி தரப்படவேண்டிய வாழ்க்கை சூழலைவிட மோசமான நிலையில் 40 சத தொழிலாளர்கள் இருந்ததாக முதல் உலகப்போர் சூழல் ஆய்வு ஒன்றில் முல்கராஜ் என்பார் தெரிவித்திருந்தார். Therir scandoulous wages, seminakedness, ghastly hovels, awful surroundings are of a nature of which any state ought to be throughly ashamed என்று வாடியா எழுதினார்.
முதல் உலகப்போர் முடிந்த தருவாயில் மாத ஊதியம் ரூ 20 ஆக இருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கான செலவோ அதைவிட ஒன்றறை மடங்கு கூடுதல் என்பதால் பொருளாதார அவதிகள் அதிகமாயிற்று. கெல்லர்ட் இன்ஸ்டிடியூட் ஆய்வின்படி குறைந்தது ரூ 22.80 ஆவது வேண்டும். அவ்வறிக்கை வீட்டுவாடகையை மிக குறைவாக ரூ 1.50 என எடுத்துக்கொண்டு மோசமாக ஆய்வுதனை வெளியிட்டுள்ளது என பிரச்சனைகள் எழுந்தன. கழிப்பிட வசதியற்ற, காற்றோட்டமில்லாத கூண்டுகளாக வீடுகள் இருந்தன. அரிசி தட்டுப்பாடு நிலவியது. ரூபாய்க்கு 41/2 படி திடிரென 3 படிதான் என விலை உயர்ந்தது.
விடுதலை இயக்கத்தில் காந்தியின்  நுழைவு, ஒத்துழையாமை இயக்கங்கள், சோவியத் புரட்சியின் தாக்கம் - சோசலிச கருத்துக்கள் என்கிற சூழல் நாட்டில் உருவாகியிருந்தது. மெட்றாசில் ஹோம்ரூல் இயக்கத்தார்  அன்னிபெசண்ட் தலைமையில் செயல்பட்டு வந்தனர். தியோசாபிகல் சொசைட்டி இதழ்களில் மக்கள் பிரச்சனைகளை எழுதி வெளியிட்டு வந்தது. பி பி வாடியா அன்னி பெசண்ட்டுடன் இணைந்து பணியாற்றிவந்தார்மெட்றாசில் பின்னி கர்நாடக மில்லில் பிரிட்டிஷ் சூப்பர்வைசர்களின் கொடுமையும் தொழிலாளர்களை மிக மோசமாக நடத்துவதும் பிரச்சனையாகி வந்தன. மதிய உணவு இடைவேளை 30 நிமிடம் என்பதைக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
பட்டு கேசவ பிள்ளை என்பவர் தனது 22 வயதிலேயே  இந்து நிருபராக இருந்தவர். இந்தியன் பேட்ரியாட்டில் எழுதிவந்த்வர். பின்னாட்களில் சென்னை சட்டம்ன்றத்திற்கு சென்றவர்.  1885 இந்தியதேசிய காங்கிரஸ் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றவர். மக்களின் பிரச்ச்னைகளை பத்ரிக்கைகளில் தனது எழுத்துக்கள் மூலம்  வெளிக்கொணர்ந்தவர். 1917ல் அவர் மெட்றாஸ் டெக்ஸ்டைல் தொழிலாளர் பிரச்ச்னைகள் அவதிகள் குறித்து செய்தி எழுதியிருந்தார். இறைப்பற்றுடன் செயல்பட்டுவந்த ஸ்ரீ வெங்கடேஷ் குணாம்ருத வர்ஷினி சபாவுடன் சேர்ந்து இளைஞர்களாக இருந்த ஜி ஆர் நாயுடு, கி சி செட்டி என்பவர்கள் நியு இந்தியா பத்ரிக்கை அலுவலகத்தில் வாடியா அவர்களை சந்தித்து துணிஆலை தொழிலாளர் துன்பங்களை எடுத்துரைத்தனர்.
பின்னி ஆலைக்கருகில் இருந்த வணிக பெருமகனார்கள் செல்வபதி செட்டியார், ராமாஞ்சலு நாயுடு ஆகியோருடன் பின்னி தொழிலாளர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. மனித சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கேவலமாக தொழிலாளர் நடத்தப்படுவதை பத்ரிக்கைகளில் இடம் பெற வைத்தனர். வெங்கடேச குணாம்ருத வர்ஷணி செல்வபதி குடும்பத்தார் நடத்திய பஜனை கூடம். திருவிக அங்கு சொற்பொழிவாற்றுவார்.
பின்னியில் தொழிலாலர் நிலைமைகளை விளக்கி கூட்டம் ஒன்றிற்கு பெரம்பூர் பகுதியில் மார்ச் 2 1918ல் ஏற்பாடு செய்யப்பட்டது.. சுதர்சன முதலியார் தலைமையில் திரு வி க சொற்பொழிவாற்றினார். போலீசார் அச்சுறுத்தல் செல்வபதி அவர்களுக்கு தரப்பட்டது. அவர்கள் கேசவப்பிள்ளையை அணுகினர். அவரின் அறிவுரைப்படிதான் வாடியா அணுகப்பட்டார். 1918ல் ஏப்ரல் 13ல் அவர் தொழிலாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். திரு வி க மொழிபெயர்த்தார். மூன்றாவது கூட்டம் ஒன்றில் ஏப்ரல் 27 சனிக்கிழமை 1918ல் மெட்றாஸ் லேபர் சங்கம் என்பதை அறிவித்தனர். வாடியா தலைவர், திரு வி க துணைத்தலைவர், செல்வபதி, ராமாஞ்சலு செயலர்களாக அறிவிக்கப்பட்டது. இந்த முதல் தொழிற்சங்கம் அமைவதற்கு வர்க்க அரசியல் உணர்வு தூண்டுகோலாக அமையவில்லை என்பது தோழர் வீரராகவன்  அவர்களின் பதிவாகவுள்ளது.
பூர்னிகர் அவர்கள் For the first time in India, class consciousness had arisen among workers. The Madras Textile Labour Union seized the opportunity and enhanced the spirit of class consciousness and class solidarity என எழுதினார்- முதன்முறையாக தொழிலாளர் மத்தியில் வர்க்கணர்வின் பிரதிபலிப்பாக வர்க்க ஒற்றுமை அதிகரிப்பின் அடையாளமாக மெட்றாஸ் டெக்ஸ்டைல் லேபர் யூனியன் உருவாக்கத்தை பூர்னிகர் குறிப்பிட்டார்-  பூர்னிகர் தொழிலாளர் அமைச்சகத்தில் ஆய்வு அதிகாரியாக செயல்பட்டவர், பின்னாட்களில் டாட்டா நிறுவன ஆய்வுகூடத்தில் பணியாற்றியவர். மேற்கூறிய கருத்தை  S D பூர்னிகர்  தனது  ’தொழிற்சங்க இயக்க வரலாறு’ புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். தொழிலாளர் பிரச்ச்னைகள் குறித்து எகானாமிக் பொலிட்டிகல் வீக்லியில் பூர்னிகர் பல கட்டுரைகள் எழுதியவர்.
MLUவில் உறுப்பினர் ஆகாத தொழிலாளரே இல்லை என்ற நிலை துவக்கத்திலேயே உற்சாகமூட்டியது. பிறபகுதி தொழிலாளரும் உறுப்பினர் ஆகலாம் என்கிற பொதுத்தொழிலாளர் அமைப்பாக அத்தொழிற்சங்கம் இருந்தது. சந்தா என்கிற முறை அவசியம் என வாடியா தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஆர்பிட்ரேஷன் முறையை வாடியா கோரினார். தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோரப்பட்டது. பிரிட்டிஷ் தொழிற்சங்க இயக்கங்களின் தாக்கத்தில் சங்கம் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக நவீன தொழிற்சங்கம் என்ற பொருளில் செயல்படுத்திட முயற்சித்தனர்.
 மில் நிர்வாகம் 1918 மே மாதம் கடைசியில் தொழிலாளர்களுக்கென பலசரக்கு கடை ஒன்றை ஏற்படுத்தியது. அறை ஒன்றை ஒதுக்கி நூலகம்  ஏற்படுத்தியது. 25சத ஊதிய உயர்வு, பிரதிமாதம் 7ஆம் தேதிக்குள் சம்பளம், இன இழிவுகளை பிரிட்டன் சூப்பர்வசர்கள்  செயக்கூடாது, மதிய உணவிற்கு 30 நிமிடங்கள் கோரிக்கையாயின. வாடியா வேலைநிறுத்தம் என்பதை ஏற்கவில்லை. நிர்வாகம் லாக் அவுட் செய்தது. தொழிற்சங்கம் மலிவு உணவுக்கடைகளை திறந்தது. கடன்கள் கொடுத்து குடும்பங்களை மீட்பதற்கு சிறிய அளவிலாவது வாய்ப்புக்களை உருவாக்கியது..

முதல் தொழிலாளி வர்க்க ஸ்தாபனம் என்கிற வகையில் சமுக நலம் என்கிற சிந்தனையுடன், போர்க்குணமிக்க ஆலைத்தொழிலாளி என்கிற தன்மையையும் அச்சங்கம் வெளிப்படுத்த வேண்டியிருந்ததுசில அடிப்படையான அனுபவங்களை சங்கம் சந்திக்க வேண்டியிருந்தது. தொழிற்சங்கம் எந்த அளவு அரசியல் சார்பை கொள்ளவேண்டும். வாடியா பேசிய ஹோம்ரூல் , பிரிட்டிஷ் லேபர் கட்சியுடன் உறவு என்கிற அரசியலா, இந்திய தேசிய காங்கிரசின் பின் நிற்கவேண்டிய அரசியலா பிராமணர் இல்லாதோர் இயக்கமா, ஆதிதிராவிடர் நலன் என்கிற அம்சமா என அது உள்வாங்க வேண்டியிருந்தது. சட்டரீதியாக தீர்க்கலாம் என்றால் போதுமான பாதுகாப்பு சட்டங்கள் இல்லையே என உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் எதார்த்தமாக இருந்த (இன்னும் இருக்கின்ற) சாதிய வேறுபாடுகளை  சமாளித்து சமுகத்தில் நிலவும் வேறுபாடுகளை தொழிற்கூடத்தில் அண்டவிடாது சமமானவர்கள் என்கிற உணர்வை உருவாக்கி தொழிலாளிகளை ஒன்றுபடுத்துவது சவாலாக இருந்தது. முன்னணி தலைவர்களாக இருப்பவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை இணக்கப்படுத்தி உடைவை தடுப்பது போன்ற சவால்களையும் அனுபவங்களையும் அது பெறவேண்டியிருந்தது.
வீரராகவன் அவர்களின் ஆய்வில் வந்த மெட்றாஸ் லேபர் வரலாற்றின்படி 1918ல்  பின்னிஆலையில் 67 சதம் சாதி இந்துக்கள், 20 சதம் ஆதிதிராவிடர்கள், 8 சதம் கிறிஸ்துவர், 5 சதம் இஸ்லாமியர் இருந்தனர். 1921 வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஆதிதிராவிடர் 39 சதமாகவும், சாதி இந்துக்கள் 46 சதம் என்கிற மாற்றத்தை ஆலை நிர்வாகம் உருவாக்கியதுசூளை மில்லில் சாதி இந்துக்கள்தான் அதிகம் இருந்தனர்பின்னி ஆலைத்தொழிலாளியைவிட சூளைத் தொழிலாளி சம்பளம் குறைவாக இருந்தது.
1918ல் சங்கம் வருவதற்கு முன்னரே பின்னியில் போராட்டங்கள் நடக்காமல் இல்லை. ஞாயிறு வேலை மறுப்பு,, உற்பத்தி பழுதுகள் தொடர்பாக அடிக்கடி நடக்கும் சம்பளவெட்டு எதிர்ப்பு என போராட்டங்கள் எழுந்தன. அவை காவல்துறை உதவியுடன் முறியடிக்கப்பட்டன. சங்கம் அமைந்தபின் நடைபெற்ற இயக்கங்களை கண்ணுற்ற கவர்னர் பெட்லண்ட் கூட்டங்களில் பங்கேற்று நிலைமைகளை மோசமாக்காதீர் என்கிற எச்சரிக்கையை வாடியாவிடம் தந்தார். பேச்சுவார்த்தை மூலம் குறைகளை சரி செய்வீர் என அறிவுறுத்தினார். வாடியா மேற்பார்வையில் கோரிக்கை சார்ட்டர் தயாரிக்கப்பட்டது. 20 சத உயர்வு (சில ஆய்வாளர் 25 சதம்) எனவும், மதிய இடைவேளை 40 நிமிடம் , (சிலர் 30 நிம் இடம் என), ஊதிய வெட்டு கூடாது என்பன கோரிக்கைகள். மெட்றாஸ் மெயில் போன்றவை தொழிலாளர்களை தூண்டும் வாடியாவை தண்டிக்கவேண்டும் என்றது. நிலைமைகளில் மாற்றம் ஏற்படாததால் வேலைநிறுத்தம் என்ற குரல் வரத்துவங்கியது. தொழிலாளர் கூட்டம் 1918 செபடம்பர் 25ல் கூட்டப்பட்டது. வேலைநிறுத்தம் என  ஏதும் முடிவாகவில்லை. ஆனால் நிர்வாகம் அக்டோபர் இறுதியில் கதவடைப்பு செய்து பழிவாங்கியது. தொழிலாளர் சரியான வேலைநேரம் என்பதை ஏற்றால்தான் ஆலை இயங்கும் என்றது நிர்வாகம்.


வாடியா வேலைக்கு செல்வீர் என அறிவுறுத்தினார். சங்கத்தலைமைக்கு கட்டுப்பட்டு பணிக்கு  சென்றனர். நவம்பர் மாதம் ஆலைக்குள் ஏற்பட்ட கைகலப்பை காரணமாக்கி கதவடைப்பு செய்த்னர். சங்கம் இதில் தனக்கு பொறுப்பில்லை என விளக்கம் தந்தாலும் நிர்வாகம் கேட்க மறுத்தது. காந்தி வந்தால் பிரச்சனை தீரும் என்கிற கருத்து வலுப்பட்டது. வாடியாவும் அழைப்பை விடுத்தார். காந்தி வரமுடியவில்லை. சி எஃப் ஆண்ட்ரூஸ் ஆண்டு இறுதியில் வந்தார். பேச்சுவார்த்தைகளில் சமரசம் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ரூஸ் வெளியார் எனச் சொல்லி முதலில் நிர்வாகம் பேசத்தயங்கியது பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆலையில் அய்ரோப்பியர் பாதுகாப்பு, கிராஜுட்டி மீட்பு , பழிவாங்கல் இல்லாமை என்பன பொதுவாக ஏற்கப்பட்டன. அய்ரோப்பியரை தாக்கியவரை நிர்வாகம் வேலைக்கு எடுக்க மறுத்தது.

1 comment:

  1. கட்டிட வேலையில் கொத்தனாருக்கு இருக்கிறேன் எந்த ஒரு நிறுவனங்களில் கீழ் வேலை செய்யவில்லை இதற்கான வேலை சான்றிதழ் யாரிடம் வாங்குவது.

    ReplyDelete