Skip to main content

Posts

Showing posts from December, 2024

ரயில்வே தொழிற்சங்க தேர்தல் 2024

  ரயில்வே தொழிற்சங்க தேர்தல்   தெற்கு ரயில்வேயில் SRMU   DREU ஆகிய இரு சங்கங்களும் அங்கீகாரம் பெற்றுள்ளன நல்வாழ்த்துகள். ரயில்வேயில் 2007ல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் அங்கீகார தேர்தல் விதிகள் வந்தன. டெலிகாமில் இவ்விதிகளையும் நாம் அப்போது சுட்டிக்காட்டிதான், ஒன்றுக்கு மேற்பட்ட சங்க அங்கீகாரம் என்பதை பெற்றோம்.   2007ன் படி அங்கீகாரம் 5 ஆண்டுகள். 2012ல் முடிவடிந்த நிலையில் அடுத்த தேர்தலை 2013ல் நடத்தினர். இப்போது டிசம்பர் 4-6, 2024ல் நடந்த தேர்தல் 2019லேயே நடைபெற்று இருக்க வேண்டும். லேபர் கோடு பிரச்சனையை நிர்வாகம் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது.   நீதிமன்ற வழக்குகள் உருவாயின. நிர்வாகம் தேர்தலை நடத்த சம்மதித்தது. ரயில்வே 17 ஜோன்களில் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக ரயில்வே வாரியம் அனைத்து வட்டார தேர்தல் முடிவுகளையும் தொகுத்து வெளியிடவில்லை. அது வந்த பின்னர்தான், வட்டாரவாரியாக ஒவ்வொரு சங்கமும் பெற்ற வாக்குகள், அனைத்திந்திய அளவில் தெரிய வரும்.   ரயில்வே போர்டு தேர்தலுக்கான கமிட்டியை நவம்பர் 2023ல் அமைத்தனர். 40 பதிவு செய்யப்பட்ட சங்க...

New E Book Founding Mothers of Indian Republic

  New E Book   Founding Mothers of Indian Republic முன்னுரை இந்திய நாடாளுமன்ற மக்களவை 2024 டிசம்பர் 13, 14 இரு நாட்களில் ’இந்திய அரசமைப்பு சிறப்பின் 75 ஆண்டுகள்’ விவாதம் ஒன்றை நடத்தியது. சில மணி நேரம் விவாதத்தை கவனிக்க முடிந்தது. பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பாபசாகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பை பேசினர். இன்னும் கூடப்போய் அம்பேத்கர் நினைவை எவர் போற்றுகிறோம், அவர் உழைப்பால் உருவான அரசியல் அமைப்பு சட்டத்தை எவர் உயர்த்திப்பிடிக்கிறோம், எவர் பாழ்படுத்தினோம்- பாழ்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிற பேச்சுப்போட்டியும் இருந்தது. அவரவர் அரசியல் கணக்கு தேவை அடிப்படையில் உரையை பொதுவாக அமர்த்திக்கொண்டதையும் காணமுடிந்தது. மறைந்த ஆந்திரா தலைவர் என் டி ராமாராவ் அவர்களின் மகள் திருமதி புரந்தேஸ்வரி தன் உரையில் சற்று மாற்றாக, அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய மகளிர் குறித்து பேசியது என் மனதில் சென்றது. அப்படி ஒப்பற்ற பங்களிப்பை செய்த 15 மகளிரை அவர்   Founding Mothers Of Indian Republic  என அழைத்து பெருமை செய்தார். இத்தலைப்பை அவர்  வேறு இடத்திலிருந்து...

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு

  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு   மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பிப்ரவரி 2006லிருந்து   ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மிக பின்னடைந்த 200 மாவட்டங்களில் மன்மோகன் அரசால் முதலில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் 2008ல்   முதலில் கூடுதலாக 130 மாவட்டங்களுக்கும் , பின்னர் நாடு முழுமைக்கும் நீட்டிக்கப்பட்டது.   நபர் நாட்கள் 2023 வரை ஏறத்தாழ 4300 கோடி மனித நாட்கள் (பெர்சன் டேஸ் ), இச்சட்டப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை தரவேண்டும். முடியவில்லை என்றால் வேலையின்மை படியை தரவேண்டும் என இச்சட்டம் சொல்கிறது.   கேட்க 4300 கோடி நாட்கள் பெரிதாக தோன்றலாம். இந்தியாவில் அன்றாட உழைப்பு சக்தி என்பது குறைந்தபட்சம் 80 கோடி மக்கள். அதாவது தினமும் 80 கோடி நபர் நாட்கள்- 8 மணிநேர கணக்கில்.   அரை நாள், குறை மணி உழைப்பு என எப்படி பார்த்தாலும் இந்த 80 கோடி நபர் நாட்கள் தினமும் இருக்கலாம். இப்படிப் பார்த்தால் 100 நாட்களுக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து 8000 நபர் நாட்கள்/ ஆண்டொன்றுக்கு என வரும். ...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் - தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 1

  Hind Swaraj   ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்                   தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 1                     காந்தியடிகள் தன் நாற்பதாவது வயதில் 1909 ஆம் ஆண்டில் எழுதிய நூல் இந்திய சுயராஜ்யம் எனப்படுகிற ஹிந்த் ஸ்வராஜ்.   காந்தியடிகளின் வாழ்நாள் சிந்தனையின் வேராக இந்நூல் பார்க்கப்படுகிறது. காந்திய சிந்தனைகளுக்கான விதை நெல், நாற்றங்கால், தோற்றுவாய்   என்று பலவாறு இந்நூல் பேசப்பட்டுள்ளது. காந்தியால் தன் தாய்மொழி குஜராத்தியில் எழுதப்பட்டு, அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலாக இது கருதப்படுகிறது. அவரது சுதந்திர சிந்தனையின் வெளிப்பாடாக, நம்பிக்கை முன்மொழிவுகளாக, தனித்த அரசியல் கோட்பாட்டிற்குரிய ஒன்றாகவும் இந்நூல் ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சிறு நூலில்   இடம் பெற்றுள்ள அவரின் கருத்துக்கள் ’உடோபியா’வல்ல, சோதிக்க தகுந்தவையே என்கிற பார்வை காந்தியிடம் மட்டுமின்றி , அவரின் ஆய்வாளர் ...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 2

  ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 2                                 2 தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அவதி துயர் துடைக்க அவர் இங்கிலாந்து பயணத்தை 1906 லும், 1909லும் மேற்கொண்டார். லண்டன் அவர் படித்த பழகிய நகரம்தான். தென்னாப்பிரிக்கா ஒற்றுமை என்பதற்கான நகல் அரசியல் சாசனம் குறித்துப் பேசுவதற்கு அந்நாட்டு தலைவர்கள் போத்தா, ஸ்மட்ஸ் போன்றோர் 1909 ல் லண்டன் சென்றனர். அந்த அரசியல் சாசனம், ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு மேலும் பாதகமாக அமைந்துவிடக்கூடாது என்கிற கவலையில் காந்தி மற்றும் ஹாஜி ஹபீப் ஆகிய இருவரும் இங்கிலாந்திற்கு ஜூலை 1909ல் சென்றனர். தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கான துயர் துடைக்கும் வேலைகளில் தங்களால் முடிந்தவற்றை இருவரும் செய்கின்றனர். உடனடி பலன் ஏதுமின்றி நவம்பர் 13,1909 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பிட கப்பல் ஏறுகின்றனர். லண்டனில் இருந்த இந்த ம...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 3

  ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 3 3 லண்டன் படிப்புக்காலம் தொடங்கி, தனது இந்திய குடும்பப் பின்னணியுடன், அவரது அறிவுசார் வளர்ச்சியின் பாதை மிக விரிவான ஒன்றாகவே அமைந்ததை நாம் காணமுடியும். சைவ உணவு குறித்த அமைப்புகளில் பயிற்சி, தியோசிபிகல் எழுத்துக்கள், புத்தர், கீதை, இந்திய உபநிடதங்கள், கிறிஸ்துவ இலக்கியங்கள்- மலைப் பிரசங்கம், குரான் வாசிப்பு இன்னும் பல்வேறு மதப்பிரதிகள் குறித்த அறிமுகம், இந்தியாவின் வைர வியாபார குடும்பப் பின்னணியில் பெரும் இந்திய பண்டைய இலக்கிய சிந்தனையாளராக இருந்த ராய்சந்துடன் உரையாடி அனேகானந்தவாதம்- விவாத பன்முகம் கற்றல் என அவரின் உள்வாங்கும் திறன் வலுவாக போய்க்கொண்டிருந்த காலமது. தாதாபாய், கோகலே போன்ற தலைவர்களுடன் நெருக்கம், இந்திய ஒபீனியன் இதழில் தொடர்ந்து இந்தியா குறித்து எழுதுதல் என்பனவும் நடந்துகொண்டிருந்தது. தனது சட்டப்படிப்பு வழி கற்றுக்கொண்டவையும் அவருக்கு எழுத்தை கச்சிதமாக வடிவமைக்க உதவின. பிளாட்டோ வழியாக சாக்ரடிசை உணர்ந்து அவரை பெரும் சத்தியாகிரகி என உருவகித்தது, ரஸ்கினை உள்வாங்கி கடையனுக்கு மோட்சம்- ...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 4

  ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 4 4 லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்கா திரும்பிட ’கில்டோனின் காசில்’ கப்பலில் ஏறியதிலிருந்தே தன் கடுமையான வேலையை   அவர் மேற்கொண்டார். நவம்பர் 13- 22, 1909 ஆகிய 10 நாட்களில் கப்பலில் கிடைத்த காகிதங்களில் 271 பக்கங்களில் அவர் ’ஹிந்த் சுயராஜ்யா’ வை குஜராத்தி மொழியில் எழுதினார். நவ 22 அன்று நூலை முடித்து அதற்கு முன்னுரை எழுதியுள்ளார். வலது கை வலித்தபோதெல்லாம் இடது கையால் எழுதியுள்ளார். எவ்வளவு பக்கங்கள் இடது கையால் எழுதினார் என்பதில் மாறுபட்ட எண்ணிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன.   நன்கு மனதில் ஊறப்போட்ட சிந்தனை என்பதால் மிகவும் கவனமான சொற்கள் வருவதில் கஷ்டம் ஏதுமில்லாமல் போனது. மிகக் குறைந்த இடங்களிலேயே அவர் திருத்தியுள்ளார் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தென்னாப்பிரிக்கா வந்தவுடன் பீனிக்ஸ் ஆசிரம அச்சகத்திலேயே இந்தியன் ஒபீனியன் இதழில் 1909 டிசம்பர் 11, டிசம்பர் 18ல் இந்திய சுயராஜ்யம் வெளியிடப்படுகிறது. 1910 ஜனவரியில் குஜராத்தி நூலாக வெளிவந்து இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. கல்லன்பக்கிற்கு க...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 5

  ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 5 5 காந்தி இந்நூலில் ’ரீடர்’ என எவரையெல்லாம் மனதில் வைத்து எழுதினார் என்பதை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளேன். அந்தோணி பரேலுக்கு 4 முக்கிய ஆளுமைகள் இந்த வாசக அடையாளங்களாக இருக்கும் எனத் தோன்றியுள்ளது. சாவர்க்கர், விரேந்திரநாத் சட்டோ, ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, டாக்டர் பிரஞ்சீவன் மேத்தா என்கிற நால்வரை பரேல் உருவகப்படுத்துகிறார். 1940வரை காந்தி எவருக்காக எழுதினேன் என எவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 1940 பிப்ரவரி 21 அன்றுதான் தன் நண்பர் டாக்டர் பிரஞ்சீவன் மேத்தாவிற்காகத்தான் எழுதியதாக   காந்தி சேவா சங்க கூட்டத்தில் சொல்கிறார். காந்தி லண்டனில் இருந்த 1909ன் மாதங்களில் இருவரும் இரவு 11 மணிக்கு மேல் அமர்ந்து பல்வேறு அம்சங்களை விவாதித்த செய்தியை டாக்டர் மேத்தா பற்றி எழுதிய மெக்ரோத்ரா சொல்கிறார். காந்தி 1940 பிப்ரவரியில் பேசும்போது, நாங்கள் இருவரும் நடத்திய உரையாடல் அப்படியே என்னால் எழுதப்பட்டுள்ளது. அந்த நண்பரும் மனம் மாற்றம் பெற்றார் என்கிறார். விவாத காலத்தில் மேத்தா காந்தியை நட்புரிமையுடன் வ...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 6

  ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 6 6 ஹிந்த் ஸ்வராஜ் நூல் 20 இயல்களால் அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் வாசகர்- ஆசிரியர் என்கிற கேள்வி பதிலாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 கேள்வி பதில்களை இந்நூலில் காந்தி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளார். முதல் 5 அத்தியாயங்களில் 10, 3, 2, 7, 7 என 29ம், அடுத்த 5ல் 3, 3, 6, 8, 4 என 24ம், அடுத்த 5ல்   2, 1, 2, 6, 2 என 13ம், இறுதி 5ல்   2, 7, 5, 5, 6 என 25ம் ஆக மொத்தம் 91 கேள்வி அவற்றிற்கான பதில் விளக்கங்களை நாம் பார்க்கிறோம். பல ’தீம்களில்’ காந்தி நூலில் விவாதித்துள்ளார். பத்திரிகையாளர் பணி என்ன- அவை எப்படி இருக்கின்றன? காங்கிரசின் பணியை எப்படி பார்க்கவேண்டும்- முன்னோடியாக வேலை செய்த தலைவர்களை மதியாமல் இருக்கலாமா? வங்கப்பிரிவினை விளைவுகள் என்ன? மக்களின் அச்சம் போனதா, சூரத்தில் நடந்த பிளவு அதிருப்தி இருப்பதன் அவசியம் எது சுயராஜ்யம்- இங்கிலாந்தை அனுப்பிவிட்டால் அதுதானா? இல்லையெனில் எது? இங்கிலாந்தின் நிலை என்ன? அங்கு நாடாளுமன்றம், உறுப்பினர், பிரதமர்   குணாதிசயங்கள் யாவை? ...

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 7

  ஹிந்த்   ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 7 7 இந்திய சுயராஜ்யத்தில் காந்தியின் முன்மொழிவுகளாக கீழ்கண்டவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். பிரதியை வாசிப்பவர் இதனை உணரமுடியும். 1.    வெறுப்பிற்கு பதில் அன்பு நெறி- பலாத்காரத்திற்கு பதில் தன்னலத் தியாகம்- மிருக சக்திக்கு பதில் ஆன்ம சக்தி 2.    சாத்வீக எதிர்ப்பு இந்தியாவிற்கு மட்டுமன்றி மனித குலத்திற்கே அவசியமான வழியாகும் 3.    ஆள்பவர்கள் செய்வதில் உடன்பாடின்மை இருக்கும் நிலையில் சாத்வீக எதிர்ப்பு ஒருவரின் கடமையாகிறது 4.    மேற்கிலிருந்து இந்தியா பெற்று வருகிற நவநாகரிகத்தை இந்தியா கைவிடுமாயின் அதற்கு நன்மையே உண்டாகும் 5.    நான் சொல்லும் சுயராஜ்யத்தை அடைய இந்தியா இன்னும் பக்குவமாகவில்லை. ஆனால் அது எனது சித்தாந்தம். அதற்கு தனிப்பட்ட ஒருவனாக ஆயினேன் என்றாலும் பாடுபட்டே வருவேன் 6.    உயர்வான நாகரிகம் என்பது புதியவகை மருத்துவம் நீதிஸ்தலம், ரயில்வே, இயந்திரத் தொழிலில் இல்லை. ஒழுக்கத்தை இம்மியும் இவைகள் உயர்த்தவில்லை. தீமைகளாகவே இருக்...