Skip to main content

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் - தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 1

 

Hind Swaraj

 

ஹிந்த்  ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்

                 தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 1     

             

காந்தியடிகள் தன் நாற்பதாவது வயதில் 1909 ஆம் ஆண்டில் எழுதிய நூல் இந்திய சுயராஜ்யம் எனப்படுகிற ஹிந்த் ஸ்வராஜ்.  காந்தியடிகளின் வாழ்நாள் சிந்தனையின் வேராக இந்நூல் பார்க்கப்படுகிறது. காந்திய சிந்தனைகளுக்கான விதை நெல், நாற்றங்கால், தோற்றுவாய்  என்று பலவாறு இந்நூல் பேசப்பட்டுள்ளது.

காந்தியால் தன் தாய்மொழி குஜராத்தியில் எழுதப்பட்டு, அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலாக இது கருதப்படுகிறது. அவரது சுதந்திர சிந்தனையின் வெளிப்பாடாக, நம்பிக்கை முன்மொழிவுகளாக, தனித்த அரசியல் கோட்பாட்டிற்குரிய ஒன்றாகவும் இந்நூல் ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சிறு நூலில்  இடம் பெற்றுள்ள அவரின் கருத்துக்கள் ’உடோபியா’வல்ல, சோதிக்க தகுந்தவையே என்கிற பார்வை காந்தியிடம் மட்டுமின்றி , அவரின் ஆய்வாளர் பலரிடத்திலும் இருப்பதைக் காணமுடிகிறது.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்கால இந்திய மனிதர்களிடம் அவர்களுக்கான பண்டைய நினைவு கிடங்கு ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டி, அதை மீட்டுக்கொள்வதை விடுத்து, தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் முறை ஒன்றிடமே மோகித்து கிடப்பதேன் என்கிற கேள்வியை இந்நூல் எழுப்பியது. நவீன நாகரிகம் எனும் நோயிலிருந்து விடுபடுவீர் என்கிற அறிவுரையை, தன் சொந்த சோதனைகள் வழி காந்தி தந்திருந்தார். நூல்வழி தான் பேசியவற்றை வாழ்நாள் முழுதும் அவர் சோதித்து கொண்டவராக இருந்தார்.

உரையாடல்களில் எப்போதும் நம்பிக்கைக்கொண்ட காந்தி, இந்நூலை வாசகர்- பத்திரிகை ஆசிரியர் என்கிற விவாத வழியே அமைத்துக்கொண்டார். பண்டைய இந்திய முறையான குரு- சிஷ்யன் என்கிற பாங்கில் அமைத்துக்கொள்ளவில்லை. நவீன உலகம் தந்த பத்திரிகை என்பதை அவர் பயன்படுத்தவே செய்தார். இந்நூல் எந்த வறட்டுத்தன பிடிவாதத்தையும் கொண்டதல்ல. காந்தி தன் வாழ்க்கையில் கண்டடைந்த, உணர்ந்தவைகளின் பிரதிபலிப்புகளாக அந்நூலை 1909ல் எழுதியிருந்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்கள், ஏற்கமுடியாது என  ஒருவர் எண்ணக்கூடிய கருத்துக்கள் இடம் பெற்றிருக்கலாம். அவர் தொடர் உரையாடல்களுக்கும், அவற்றின் விரிவுகளுக்கும் இடமளித்தே நூலை எழுதியுள்ளார். வாசிக்கும் காலந்தோறும் புதிய அர்த்தங்களுக்கும் விரிவுகளுக்கும் இடமளிக்கின்ற நூலாக படிப்பவர் உணரமுடியும்.

19 ஆம் நூற்றாண்டு எழுத்துக்கள் கேள்வி பதில் என்கிற வகையில்- ”கடேசிசம்’ வகையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். கிறிஸ்துவ ஞாயிறு உபதேசங்கள் இவ்வகையில் நடந்துள்ளன. மார்க்சின் உற்றத்தோழர் எங்கெல்ஸ் கூட இந்த கடேசிசம் முறையில்தான் (catechism)  The Principles of Communism  நூலை யாத்திருப்பார். காந்தியும் இம்முறையை எடுத்துக்கொண்டு உரையாடலை பெருக்கியிருப்பார்.

 

 

                               

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...