Skip to main content

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 3

 

ஹிந்த்  ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்

தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 3

3

லண்டன் படிப்புக்காலம் தொடங்கி, தனது இந்திய குடும்பப் பின்னணியுடன், அவரது அறிவுசார் வளர்ச்சியின் பாதை மிக விரிவான ஒன்றாகவே அமைந்ததை நாம் காணமுடியும். சைவ உணவு குறித்த அமைப்புகளில் பயிற்சி, தியோசிபிகல் எழுத்துக்கள், புத்தர், கீதை, இந்திய உபநிடதங்கள், கிறிஸ்துவ இலக்கியங்கள்- மலைப் பிரசங்கம், குரான் வாசிப்பு இன்னும் பல்வேறு மதப்பிரதிகள் குறித்த அறிமுகம், இந்தியாவின் வைர வியாபார குடும்பப் பின்னணியில் பெரும் இந்திய பண்டைய இலக்கிய சிந்தனையாளராக இருந்த ராய்சந்துடன் உரையாடி அனேகானந்தவாதம்- விவாத பன்முகம் கற்றல் என அவரின் உள்வாங்கும் திறன் வலுவாக போய்க்கொண்டிருந்த காலமது.

தாதாபாய், கோகலே போன்ற தலைவர்களுடன் நெருக்கம், இந்திய ஒபீனியன் இதழில் தொடர்ந்து இந்தியா குறித்து எழுதுதல் என்பனவும் நடந்துகொண்டிருந்தது. தனது சட்டப்படிப்பு வழி கற்றுக்கொண்டவையும் அவருக்கு எழுத்தை கச்சிதமாக வடிவமைக்க உதவின. பிளாட்டோ வழியாக சாக்ரடிசை உணர்ந்து அவரை பெரும் சத்தியாகிரகி என உருவகித்தது, ரஸ்கினை உள்வாங்கி கடையனுக்கு மோட்சம்- உழைப்பு வழி வாழ்வே சிறந்தது என்கிற உழைப்பு கோட்பாடு- சமத்துவ சிந்தனைகள் அவரை பெருமளவு பற்றிக்கொண்டன. ரஸ்கின் ’அன் டு தி லாஸ்ட்’ நூலைத்தான் அவர் தன் உள்வாங்கலில் சர்வோதயா என நூலாக்கி தந்தார்.

ரஸ்கினிடமிருந்து அவர் 1904லேயே மூன்று முக்கிய கோணங்களை எடுத்தாண்டார். தனிநபர் ஒருவரின் நன்மை அனைவரின் நன்மையில் அடங்கியுள்ளது. வக்கீலின் உழைப்பும் முடிதிருத்துவர் உழைப்பும் சமமானதே. அவரவர் உழைப்புக்கேற்ற ஊதியம் உரிமைகளை அவரவர்கள் பெறலாம். உழைத்து உண்பதே சிறந்தது. விவசாயமும் கைத்தொழிலும் சிறப்பானவை என நாம் அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

டால்ஸ்டாயிடமிருந்து அவர் 1905லேயே கற்றுக்கொள்ளவேண்டியவை என்ன என இந்தியன் ஒபீனியலில் எழுதலானார். சொத்து மீதான மோகம் நீக்குதல் என்பதை அவர் இந்திய இலக்கியங்களிலிருந்து குறிப்பாக உபநிடதத்திலிருந்து எடுத்துக்கொண்டாலும், டால்ஸ்டாய் எழுத்தில் செல்வத்திற்காக ஓடாதே என்பதை சரி பார்த்துக்கொண்டார். தீமை செய்தார்க்கும் நன்மை என பைபிள் சொன்னதையும் , எவரிடமும் சண்டைக்காக நிற்காதே, உரிமையைவிட கடமையில் கவனம் கொள், விவசாயம் உன்னதத் தொழில், ஆலைகள் சுரண்டல் கூடம், அன்பே வாழ்வின் ஆதாரம் என சிலவற்றை அவர் டால்ஸ்டாயிடம் சரி பார்த்துக்கொண்டார்.

லண்டனில் இருந்தபோதுதான் செப்டம்பர் 1909ல் அவர் எட்வர்ட் கார்பண்டரின் புகழ் வாய்ந்த நூலான ’நாகரிகம் காரணங்களும் தீர்வும்’  என்கிற நூலை (civilisation its causes and cure)  அவர் படித்து முடித்தார். மேலை நவீன நாகரிகம் மீதான அவரிடம் இருந்த பார்வையை இந்நூல் உறுதிப்படுத்தியது. அதேபோல மாக்ஸ் நோர்டாவ் எழுதிய நாகரிகம் குறித்த நூல் ஒன்றையும் அவர் செரித்துக்கொண்டார்.

பரபரப்பான அதிவேக உலகின் தீங்குதனை பேசக்கூடிய டைலர் அவர்களின் ’வேகத்தின் வழுவாதம்’ ( fallacy of speed )  என்பதும் அவர் உள் சென்றது. 1909 செப்டம்பர் 18ல் எழுத்தாளர் செஸ்டர்டன் கட்டுரை ஒன்றும் அவரை தொந்தரவு செய்திருந்தது.

தோரோவை அறிவதற்கு முன்பாகவே அவர் சத்தியாகிரக சோதனையை செய்திருந்தாலும், தோரோவின் வாசிப்பால் சிவில் ஒத்துழையாமையின் சிறப்பை அவர் மேலும் கூர்தீட்டிக்கொண்டார். மாஜினியிடம் மனிதனின் கடமை என்பதின் அழுத்தத்தை அவர் உணர்ந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்ளை குறித்த நவ்ரோஜியின் எழுத்துக்களும் , ஆர் சி தத்தின் பொருளாதார வரலாறும் அவர் கண்களை கலங்க வைத்தன. இக்கொள்ளைக்கு தாமே முன்வந்து இந்தியர் தலைவணங்கி அனுமதிப்பதை பார்த்து அவர் கவலைகொண்டார்.

இந்திய சுயராஜ்யம் நூல் இப்படியான பல்வேறு அறிவார்ந்தவர்களின் படைப்புக்களை உள்வாங்கி காந்தி தன் மொழியில் வெளிப்படுத்திய நூலாக அமைந்ததைக் காண்கிறோம். அந்நூல் இறுதியில் இணைப்பாக கொடுத்துள்ள நூல் பட்டியலில் உள்ள 20 நூல்களில் இரண்டு மட்டுமே இந்தியர் நூல்கள், மீதி அனைத்துமே  இயந்திரத்தொழில் நாகரிக  உலகு குறித்த மேலைச் சிந்தனையாளர்கள் விமர்சனமே என நம்மால் காணமுடியும். இந்தியாவின் பண்டை நாகரிகம் குறித்து விதந்து பேசியுள்ள சிறந்த சிந்தனையாளர்களாக மாக்ஸ்முல்லர் , செய்மன் கே, விக்டர் கசின், ஷெலிகல் , துபாயிஸ், தாமஸ் மன்றோ, வெட்டர்பர்ன் போன்ற சிலரின் பெயரையும் அவர் தந்துள்ளதைக் காண்கிறோம். நூறு பக்க நூல் எழுத எவ்வளவு விரிவாக அவர் கற்றுள்ளார் என்கிற பிரமிப்பை ஒருவரால் உணரமுடியும்.

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...