Skip to main content

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 4

 

ஹிந்த்  ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்

தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 4

4

லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்கா திரும்பிட ’கில்டோனின் காசில்’ கப்பலில் ஏறியதிலிருந்தே தன் கடுமையான வேலையை  அவர் மேற்கொண்டார். நவம்பர் 13- 22, 1909 ஆகிய 10 நாட்களில் கப்பலில் கிடைத்த காகிதங்களில் 271 பக்கங்களில் அவர் ’ஹிந்த் சுயராஜ்யா’ வை குஜராத்தி மொழியில் எழுதினார். நவ 22 அன்று நூலை முடித்து அதற்கு முன்னுரை எழுதியுள்ளார். வலது கை வலித்தபோதெல்லாம் இடது கையால் எழுதியுள்ளார். எவ்வளவு பக்கங்கள் இடது கையால் எழுதினார் என்பதில் மாறுபட்ட எண்ணிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன. 

நன்கு மனதில் ஊறப்போட்ட சிந்தனை என்பதால் மிகவும் கவனமான சொற்கள் வருவதில் கஷ்டம் ஏதுமில்லாமல் போனது. மிகக் குறைந்த இடங்களிலேயே அவர் திருத்தியுள்ளார் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா வந்தவுடன் பீனிக்ஸ் ஆசிரம அச்சகத்திலேயே இந்தியன் ஒபீனியன் இதழில் 1909 டிசம்பர் 11, டிசம்பர் 18ல் இந்திய சுயராஜ்யம் வெளியிடப்படுகிறது. 1910 ஜனவரியில் குஜராத்தி நூலாக வெளிவந்து இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது.

கல்லன்பக்கிற்கு கப்பலில் இருக்கும்போதே இந்நூல் பற்றி நவ 25, 1909 அன்று காந்தி முதலில் தெரியப்படுத்துகிறார். அங்கும் கூட நூலின் தலைப்பை சொல்லாமல், பின் குறிப்பில் ஒரு நூலை சுயமாக எழுதியிருக்கும் செய்தியை பரிமாறிக்கொள்கிறார்.

கல்லன்பக் வேண்டுகோளை ஏற்று , இருவருக்கும் கிடைக்கும் நேரங்களில் காந்தி ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல  கல்லன்பக் எழுதுகிறார். அப்பிரதியை தென்னாப்பிரிக்கா ஆங்கில நண்பர் சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களை காந்தி கேட்கிறார்.

காலம் செய்யும் வினைகள் விநோதமானதாக அமையும். பம்பாயில் உளவுத்துறையினர் கையில் குஜராத்தி நூல் சிக்கியது. காந்தி எதையும் இரகசியமாக , ஒளிவு மறைவாக செய்யவில்லை. உளவு அமைப்பினர் குஜராத்தி மொழி அறிந்த ஒருவரிடம் மார்ச் 10, 1910ல் கொடுத்து அதன் ஆங்கில குறிப்பைக் கேட்கின்றனர். 21 பக்க குறிப்பு கொடுக்கப்படுகிறது. ஆசிரியர் வன்முறையையோ கலகத்தையோ தூண்டவில்லை. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்த்த போராட்ட அறைகூவல் என்கிற ஆபத்து அதில் இருக்கிறது என்கிற பொருளில் அக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. எம் கே காந்தி பெயரில் வந்த பப்ளிகேஷன்ஸ் என்ன என்ன என்பதைப் பார்த்து அவற்றை எல்லாம் இந்திய சுயராஜ்யம் என்பதுடன் தடைப் படுத்தினர். சாக்ரடிஸ் குறித்த பிளாட்டோவின் நூல், கமல் அடாதுர்க் உரை, ரஸ்கின் நூல் என 4 வெளியீடுகளும் மார்ச் 24, 1910ல் தடை செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின்னர்தான் 1938 டிசம்பர் 21ல் அதிகாரபூர்வமாக தடை நீக்கப்படுகிறது.

நமது வெளியீடுகள் தடைக்கு உள்ளாக்கப்பட இருக்கின்றன என்ற செய்தி அறிந்த காந்தி அது குறித்து இந்திய ஒபீனியனில் எழுதிவிட்டு, அதன் ஆங்கில நூல் வரவிருக்கிறது. அது தனியாக 6 பென்ஸ் விலையில் வரலாம் எனத்தெரிவிக்கிறார். மார்ச் 20 1910 அன்றே ஆங்கில நூலை முன்னுரை எழுதி வெளியிடுகிறார். இந்தியன் ஹோம் ரூல் என அது வெளியானது. 1914ல் குஜராத்தி பதிப்பு மீண்டும் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராஜாஜி குறிப்புடன் ஆங்கில நூல் 1919ல் வெளியாகிறது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு பரலி சு நெல்லையப்பர் அவர்களால் செய்யப்பட்டு மே 1921ல் கொணரப்படுகிறது. ராஜாஜி குறிப்புடன் வந்த ஆங்கில நூல் ’ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்தியன் ஹோம் ரூல்’ என வந்தது. இதன் பின்னர் அந்த நூல் 1938ல் நவஜீவனால் கொணரப்பட்டு அதற்கு மகாதேவதேசாய் முன்னுரை எழுதுகிறார். இதன் திருந்திய பதிப்பாக 1939ல் கொணரப்பட்டு, அப்பதிப்பே இன்றுவரை வெளி வந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம்.

1924ல் அமெரிக்காவில் ஹிந்த் ஸ்வராஜ் ஜான் ஹோம்ஸ் மற்றும் ஹரிதாஸ் மஜூம்தார் முயற்சியால் ’ஸெர்மன் ஆன் தி ஸீ’ ( sermon on the sea)  என்று வெளியானது. அமெரிக்காவில் காந்தியைக் கொண்டு சென்றவர்களில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது. இருவரும் காந்தி குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.

இங்கிலாந்தில் ’ஹிந்த் ஸ்வராஜ்’ குறித்த விவாதத்திற்கு ’ஆர்யன் பாத்’ என்கிற இதழ் மேடை அமைத்துக்கொடுத்தது. 1938 செப்டம்பர் சிறப்பிதழ் ஒன்றை சோபியா வாடியா ஆசிரியராக இருந்து பல்வேறு அறிஞர்களின் விவாதப் பொருளாக ’இந்திய சுயராஜ்யத்தை’ மாற்றினார்.

’இந்திய சுயராஜ்யம்’ 2009ல் நூற்றாண்டை கண்டபோது அந்தோணி பரேல் கொணர்ந்த Hind Swaraj and Other writings வந்தது. வார்தாவில் நவம்பர் 2009ல் அமர்ந்து இரு நாட்கள் கருத்தரங்கம் நடத்தி கட்டுரைகளைப் பெற்று Reflections of Hind swaraj Edited by Sibi K Joseph, Bharath வந்தது.  காந்தி அருங்காட்சியகம் சார்பில்  Gandhi on Hind Swaraj  and select Views of others by National Gandhi Museum வந்தது. 1985ல் நாகேஸ்வர பிரசாத் Hind Swaraj A fresh look by Gandhi Peace foundation  சார்பில் கொணர்ந்துள்ளார். 2022ல் ராஜிவ் பர்கவா ஆசிரியராக இருந்து பலர் கட்டுரைகளைத் தொகுத்து  Politics Ethics and Self – rereading of Hind Swaraj  கொணர்ந்தார்.

தமிழில் மகாத்மா தொகுப்பு நூல் வால்யூம்  1ல் வேங்கடராஜு மொழிபெயர்ப்பில் இந்திய சுயராஜயம் 1957ல் வந்ததைக் காண்கிறோம். இன்றும் சிறந்த மொழிபெயர்ப்பாக இதை உணரமுடிகிறது. 2019ல் காந்தியின் 150 ஆம் ஆண்டில் மறைந்த ஈரோடு டாக்டர் ஜீவானந்தன் அவர்களில் மொழிபெயர்ப்பில் (சற்று சுதந்திரமான மொழிபெயர்ப்பாக) இந்திய சுயராஜ்யம் வந்தது. பரலி மொழிபெயர்ப்பும் வேங்கடராஜு மொழிபெயர்ப்பும் இணையத்தில் கிடைக்கின்றன.

1909ல் சிறு நூலாக வெளிவந்து  கடந்த நூறாண்டில் தொடர்ந்த விவாதப்பொருளாக ’இந்திய சுயராஜ்யம்’ இருப்பதைக் காண்கிறோம்.

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...