Skip to main content

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 5

 

ஹிந்த்  ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்

தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 5

5

காந்தி இந்நூலில் ’ரீடர்’ என எவரையெல்லாம் மனதில் வைத்து எழுதினார் என்பதை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளேன். அந்தோணி பரேலுக்கு 4 முக்கிய ஆளுமைகள் இந்த வாசக அடையாளங்களாக இருக்கும் எனத் தோன்றியுள்ளது. சாவர்க்கர், விரேந்திரநாத் சட்டோ, ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, டாக்டர் பிரஞ்சீவன் மேத்தா என்கிற நால்வரை பரேல் உருவகப்படுத்துகிறார்.

1940வரை காந்தி எவருக்காக எழுதினேன் என எவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 1940 பிப்ரவரி 21 அன்றுதான் தன் நண்பர் டாக்டர் பிரஞ்சீவன் மேத்தாவிற்காகத்தான் எழுதியதாக  காந்தி சேவா சங்க கூட்டத்தில் சொல்கிறார். காந்தி லண்டனில் இருந்த 1909ன் மாதங்களில் இருவரும் இரவு 11 மணிக்கு மேல் அமர்ந்து பல்வேறு அம்சங்களை விவாதித்த செய்தியை டாக்டர் மேத்தா பற்றி எழுதிய மெக்ரோத்ரா சொல்கிறார்.

காந்தி 1940 பிப்ரவரியில் பேசும்போது, நாங்கள் இருவரும் நடத்திய உரையாடல் அப்படியே என்னால் எழுதப்பட்டுள்ளது. அந்த நண்பரும் மனம் மாற்றம் பெற்றார் என்கிறார். விவாத காலத்தில் மேத்தா காந்தியை நட்புரிமையுடன் விமர்சித்தவர். ஆரம்பத்தில் காந்தி ’வாசகர்’ எனப் பொதுப்படத்தான் பேசியுள்ளார். வன்முறை வழியை நாடும், ஆங்கில கல்வி பின்புலம் கொண்ட,  இயந்திர தொழில் சூழல் உற்பத்தி- நாடாளுமன்றம் நவீன நாகரிகம் ஏற்கும் மத்தியதர வர்க்கம், வெளிநாட்டு வாழ் புரட்சியாளர்கள் என்பதாகவே நாம் உணர்ந்த்தப்படுகிறோம். 1940ல் அவர் மேத்தா என்கிற பெயரை வாசகரின் அடையாளமாக தருவதைக் காண்கிறோம்.

ஏன் எழுதினார்- எது அவரை அவசரமாக உந்தி தள்ளியது என்கிற கேள்வியை காந்தியே எழுப்பிக்கொண்டு பதிலும் தந்துள்ளார். எனது இதயத்தை இனியும் திறக்காமல் இருக்க முடியாது என்கிற அவதியை அவர் உணர்ந்தார். வன்முறை கொலைவழி கூடாது என்பதை கொண்டு செல்லவேண்டிய அதிஅவசரம் அவரை உந்தித் தள்ளியுள்ளது. இந்திய சுயராஜ்யத்திற்கான தீர்வு வன்முறை வழி அமைவது பெரும் தீங்காக அமையும் எனக் கருதினார். காலனியம் என்கிற கொடுமையைவிட நவீனநாகரிகத்தின் கொடுமை அதிகமாக இருக்கும் என அவர் ஊகித்தார். பிரிட்டிஷ்  சாம்ராஜ்யத்திற்கு எதிராக இந்தியா தனக்கான தனித்த வழி போராட்டமான சாத்வீக எதிர்ப்பு- சத்தியாகிரகம் அவசியம் என அவர் முன்வைக்க விழைந்தார்.

இந்தியாவிற்கென நீண்ட மரபான நினைவு கிடங்கு இருக்கிறது. அதன் அழகே ’கட்டுபாடுள்ள எளிமை, போதும் என்கிற நிறைவுகொண்ட தானே முன்வந்து மேற்கொள்ளும் வறுமை,  அவசர வேகம் தவிர்த்த நிதானகதி நடவடிக்கைகள்’ என்பதை சொல்ல அவர் விழைந்தார். அவரது இந்த நூல் ஒவ்வொரு இந்தியனின் , ஏன் இன்னும் ஒவ்வொரு மனிதனின் சுய ஒழுக்க நன்னெறிக்கான மேடை என நாம் உணரமுடியும். தடம் புரளும் மானுடத்தை, அதன் உன்னத மானுட நேயத்தை சுட்டிக்காட்டி மீட்கும் படைப்பாக உணரலாம்.

லெனின் காலனியம் என்பதை முதலாளித்துவ பேராசை என விளக்க முனைந்தால் காந்தியோ காலனியத்தை நவீன நாகரிகத்தின் பேராசையாக காட்டுகிறார்.

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...