Skip to main content

New E Book Founding Mothers of Indian Republic

 

New E Book   Founding Mothers of Indian Republic


முன்னுரை

இந்திய நாடாளுமன்ற மக்களவை 2024 டிசம்பர் 13, 14 இரு நாட்களில் ’இந்திய அரசமைப்பு சிறப்பின் 75 ஆண்டுகள்’ விவாதம் ஒன்றை நடத்தியது. சில மணி நேரம் விவாதத்தை கவனிக்க முடிந்தது. பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பாபசாகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பை பேசினர். இன்னும் கூடப்போய் அம்பேத்கர் நினைவை எவர் போற்றுகிறோம், அவர் உழைப்பால் உருவான அரசியல் அமைப்பு சட்டத்தை எவர் உயர்த்திப்பிடிக்கிறோம், எவர் பாழ்படுத்தினோம்- பாழ்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிற பேச்சுப்போட்டியும் இருந்தது. அவரவர் அரசியல் கணக்கு தேவை அடிப்படையில் உரையை பொதுவாக அமர்த்திக்கொண்டதையும் காணமுடிந்தது.

மறைந்த ஆந்திரா தலைவர் என் டி ராமாராவ் அவர்களின் மகள் திருமதி புரந்தேஸ்வரி தன் உரையில் சற்று மாற்றாக, அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய மகளிர் குறித்து பேசியது என் மனதில் சென்றது. அப்படி ஒப்பற்ற பங்களிப்பை செய்த 15 மகளிரை அவர்   Founding Mothers Of Indian Republic  என அழைத்து பெருமை செய்தார். இத்தலைப்பை அவர்  வேறு இடத்திலிருந்து பெற்றதை நான் கண்ணுற்றேன்.



இந்திய அரசமைப்பு அவையில் இருந்த தாட்சாயினி வேலாயுதம் பெயரில் பெண்ணிய குழு ஒன்று இணையம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்களது இணையத்தில் அவையிலிருந்து செயல்பட்ட அந்த 15 தாய்மார்கள் குறித்து தனித்தனியாக செய்தி தொகுப்பை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பாலின சமத்துவ போராட்டத்திற்கான சட்டப் போராட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், உச்சநீதிமன்ற பெண் ஆளுமைகள் என பல அம்சங்களை தங்களது இணையத்தில் வைத்து டிஜிட்டல் சேவை செய்து வருகின்றனர்.

இந்த இணையம் தனித்தனியாக கொடுத்துள்ள விவரக்குறிப்புகளை இணைத்து ஒரே நூலாக- மின் புத்தகமாக மாற்றி பொதுவெளியில் வைத்தால் என்ன என்ற சிந்தனை தூண்டி, அதற்கான சிறிய உழைப்பை கொடுத்துள்ளேன். இங்கு நான் செய்திருப்பது  dvda மின்கிடங்கில் தனித்தனியாக இருந்தவற்றை ஒருசேர தொகுத்து ஒரே இடத்தில் மின் புத்தகமாக மாற்றிக் கொடுத்தது மட்டுமே. ஒன்றாக சேர்த்து பார்க்கும்போது, இப்பெரு மக்களின் தனித்த பங்களிப்பை உணரமுடியும். அரசமைப்பு சட்ட உருவாக்க தந்தை என நாம் அறிவோம்.  அரசமைப்பு உருவாக்க கட்டுமான தந்தையர்  Founding Fathers எனப் பேசப்பட்டதை நாம் உணர்ந்திருக்கலாம்.   Founding Mothers எனப் பேசப்படவேண்டிய 15 தாய் ஆளுமைகள் குறித்த குறிப்பு தொகுப்பாக இதைப் பார்க்கலாம்.

அரசமைப்பு உருவாக்கத்தில் அம்பேத்கர் பங்களிப்பு ஏராளம் பேசப்பட்டுள்ளது. அப்படி பேசப்பட்டதும் – பேசப்படவேண்டியதும் சரியானவையே. அதேபோல் நேரு கமிட்டி- கராச்சி தீர்மானம்- நேருவின் நோக்கத் தீர்மானம் போன்றவை ஓரளவிற்கு பேசப்பட்டுள்ளன.  நான் பார்த்த அளவில் ’அரசமைப்பும் நேருவும்’ என புத்தகம் ஒன்று வந்துள்ளதே தவிர விரிவான ஆய்வுகள் இல்லை. மூல நகலை உருவாக்கிய பின் என் ராவ் குறித்து கொஞ்சம் பேசப்பட்டுள்ளது. படேல் பங்களிப்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்டுள்ளது. கோபால்சாமி அய்யங்கார் , அல்லாடி போன்றவர் உரைகள் சிறிய அளவு தனி நூல் ஒன்றில் கிடைக்கின்றன. அரசமைப்பு சட்ட உருவாக்கம் - அரசியல் அமைப்பு சட்ட சிறப்புகள் குறித்து ஏராள நூல்கள் வந்துள்ளன. மேலும் வரக்கூடும்.

7000 பக்க அளவில் அரசமைப்பு சட்ட அசெம்பிளி விவாதம் பல வால்யூம்களாக, நாள் அடிப்படையில் முழுமையாக இணையத்தில் கிடைக்காமல் இல்லை. எவர் யார் என்ற விவரம் கூட கிடைக்கும். ஆனால் உறுப்பினர்கள் பங்கென்ன, எதில் எப்படி கருத்தை ஒருவர் வெளிப்படுத்தினார் என , சில முக்கிய ஆளுமைகள் பற்றிய தனித் தொகுப்பு என ஏதுமில்லை. நேரு , படேல் போன்றவர்க்கு கூட எங்கெல்லாம். எப்போதெல்லாம் தலையிட்டு என்ன பங்களிப்பு செய்தனர் என தனித்த நபர்வாரியான தொகுப்பு இல்லை.

காங்கிரசின் 50 ஆண்டுகளுக்கு மேலான நேரு முதல்- மன்மோகன் சிங் வரையிலான ஆட்சி இதை செய்யத்தவறி விட்டதாக தோன்றுகிறது. பின் வந்த பாஜக ஆட்சியும் இதற்கான முனைப்பைக் காட்டவில்லை. தமிழ்நாட்டிலும் , ’அரசமைப்பு அவையில் தமிழர் பங்களிப்பு’ என எந்த தொகுப்பும் வரவில்லை. 75 ஆண்டுகால தமிழக முதல்வர்கள் ராஜாஜி காமராஜ் பக்தவச்சலமானாலும், தொடர்ந்த திராவிட முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் வரை இது குறித்து முனைப்பைக் காட்டியதாக உணரமுடியவில்லை.

ஆனால் இங்கு 15 தாய்மார்களின் அரசமைப்பு விவாத பங்களிப்பை பெரும் கிடங்கிலிருந்து தேடி நமக்கு டிவிடிஏ தாட்சாயினி மின்கிடங்கு குழுவினர் அளித்துள்ளனர். அதை ஒருசேர தொகுத்து தரும் சிறிய வேலை மன நிறைவைத் தருகிறது. தொகுப்பு முழுமையாக ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மொழி பெயர்ப்பாளர் கண்ணுக்கு அகப்பட்டு அவர்கள் கைப்பட்டு தமிழில் வரும் எனில் இன்னும் கூடுதலான வாசிப்பாளருக்கு இத்தொகுப்பு  போய் சேரலாம்.

இந்த 15 தாய்மார்கள் குறித்து சமீபத்தில் ஆஞ்சலிகா மற்றும் சத்யாவாலி என இருவரின் ஆய்வில் ஆங்கில நூல் ஒன்றும் வந்துள்ளது பாராட்டிற்குரியது.

Hope we can cherish the legacy of our Founding Mothers of Indian Republic

15-12-2024                             - ஆர். பட்டாபிராமன்


 Index

1. Ammu Swaminathan

2. Annie Mascarene

3. Begum  Azaz Rasul

4. Dakshayini Velayudham

5. Durgabai Deshmukh

6. Hansa Jivraj Mehta

7. Kamla Chaudhary

8. Leela Roy

9. Malati Chaudhary

10. Purnima Banerjee

11. Rajkumari Amrit Kaur

12. Renuka Ray

13. Sarojini Naidu

14. Sucheta Kripalani

15. Vijaya Lakshmi Pandit

 









https://archive.org/details/founding-mothers-of-indian-republic-book

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...