Skip to main content

Posts

Showing posts from October, 2021

இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி

                 இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி பழகிய தோழர்களால் பாலா என அழைக்கப்பெறும் பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் இன்றைய காந்திகள் சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் பேசப்பட்ட புத்தகம் . அதன் திறனாய்வுகளை மட்டுமே பார்த்த எனக்கு அப்புத்தகத்தை படிக்கும் நல்வாய்ப்பு இப்போதுதான் கிட்டியது . கவிஞர் யுகபாரதி உபயம் . தமிழக பொதுவெளியில் அதிகம் பேசப்படாத உணரப்படாத பல ஆளுமைகளை சுருக்கமாக அவர்களின் செயல்களின் வழியே ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார் .   வர்கீஸ் , அருணாராய் சிறிய வட்டாரத்திலாவது பேசுபொருளாக இருந்திருப்பர் . அரவிந்த் கண் மருத்துவமனை பலரிடம் போய் சேர்ந்திருக்கும் . ஆனாலும் அதன் துவக்க நாயகர் பற்றிய செய்திகளை பொதுபுத்தி உள்வாங்கியிருக்காது . இவர்களைத்தவிர லஷ்மி சந்த் ஜெயின் , பங்கர் ராய் , ராஜேந்திர சிங் , அபய் - ராணி பங்க் , சோனம் வாங்ச்சுக் , அர்விந்த் குப்தா பேசப்பட்டுள்ளனர் . இலா பட் அவர்களை தொழிற்சங்க தோழர்கள் சற்று அறிந்திருக்கலாம் . கட்டுரைகளை படிப்பவர்கள் இந்த செயலூக்க நல்மாதிரி மனிதர

யுகபாரதியின் நல்லார் ஒருவர் உளரேல்

            யுகபாரதியின் நல்லார் ஒருவர் உளரேல் யுகபாரதியை சினிமா பாடலாசிரியராக   தமிழகம்   அனுபவித்து கொண்டாடும் . அவரின் இலக்கிய தேர்ச்சியும் , இசைத்தேடலும் அவருடன் நெருங்கிய அன்றாட உரையாடல்களைக் கொண்டவர்களுக்கு புரிந்ததாக இருக்கும் .   வாழ்க்கை வசதிக்கான வாகனம்   சினிமா என்றால் அவரின் எழுத்துக்கள் - கருத்து தெறிப்புகள் அவரின் ஆன்ம வசதிக்கான பெரும் பிரயத்தனங்கள் .   அவரின் மனப்பத்தாயத்தை மட்டுமே நான் அறிந்தவனாக இருந்தபோது அவர் நான் கிறுக்கும்   கட்டுரைகளை இணையவழி பார்த்து என்னிடம் அன்புபாரட்டத்துவங்கினார் . பேசுவதை பாராட்டி சொல்லத்துவங்கினார் .   நானோ 65 யை கடந்து போய்க்கொண்டிருப்பவன் . யுகபாரதி இப்போதுதான் 40 யைக் கடந்துள்ளார் . வாழ்க்கையின் உயர்படிகளை மெதுவாக நிதானமாக ஏறிக்கொண்டிருக்கிறார் . அதற்காக அவர் சந்தித்த வாழ்க்கைச் சோதனைகள் ஏராளம் என அறியமுடிகிறது. எவ்வளவு உயரம் சென்றாலும் தன் மக்களின் பூமிப்பந்தில் அவர்களுடன் சேர்ந்திசை செய்வதில் கவனமாக இருக்கிறார் . அரசியல் பின்னணி குடும்பமாக இருந்தாலும் தமிழக வளர்ச்சிப்ப

காந்தியின் அவசியம்குறித்து அக்டோபர் 5 2021 உரை CCTU

காந்தியை கண்டுணர்தல் | பட்டாபிராமன் பொதிகை பேட்டி அக் 2 2021