இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி பழகிய தோழர்களால் பாலா என அழைக்கப்பெறும் பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் இன்றைய காந்திகள் சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் பேசப்பட்ட புத்தகம் . அதன் திறனாய்வுகளை மட்டுமே பார்த்த எனக்கு அப்புத்தகத்தை படிக்கும் நல்வாய்ப்பு இப்போதுதான் கிட்டியது . கவிஞர் யுகபாரதி உபயம் . தமிழக பொதுவெளியில் அதிகம் பேசப்படாத உணரப்படாத பல ஆளுமைகளை சுருக்கமாக அவர்களின் செயல்களின் வழியே ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார் . வர்கீஸ் , அருணாராய் சிறிய வட்டாரத்திலாவது பேசுபொருளாக இருந்திருப்பர் . அரவிந்த் கண் மருத்துவமனை பலரிடம் போய் சேர்ந்திருக்கும் . ஆனாலும் அதன் துவக்க நாயகர் பற்றிய செய்திகளை பொதுபுத்தி உள்வாங்கியிருக்காது . இவர்களைத்தவிர லஷ்மி சந்த் ஜெயின் , பங்கர் ராய் , ராஜேந்திர சிங் , அபய் - ராணி பங்க் , சோனம் வாங்ச்சுக் , அர்விந்த் குப்தா பேசப்பட்டுள்ளனர் . இலா பட் அவர்களை தொழிற்சங்க தோழர்கள் சற்று அறிந்திருக்கலாம் . கட்டுரைகளை படிப்பவர்கள் இந்த செயலூக்க நல்மாதிரி மனிதர