Skip to main content

Posts

Showing posts from June, 2024

Terry's Why Marx was Right ?

 டெரி ஈகிள்டன் அவர்களை எனக்கு பேரா வி இராமசாமி தான் அறிமுகப்படுத்தினார். எங்கள் இளம் கம்யூனிஸ்ட்கள் குழுவில் சற்று மூத்தவர் தோழர் இராமசாமி.  அப்போது அவருக்கு மணமாகி இரு குழந்தைகள் இருந்தனர். எங்களுடன் எங்களை ரசித்து கொண்டாடி பல மணிகள் ஒன்றாக இருப்பார்.  தோழர் தா பாண்டியன்  , ஹிரன் முகர்ஜி கட்டுரை எனில் உற்சாகம் பொங்கப் பேசுவார். திரு வி க  அரசு கல்லூரியில் முற்போக்கு சிந்தனை கொண்ட பல பேராசிரிய பெருமக்கள் இராமசாமி கூட நின்றனர்.  மறைந்த பேரா அறிவழகன் , சுவாமிநாதன், பாலு, பழநி, கெளதமன் என தொடர்  பேராசிரிய தலைவர்கள்  இருந்தனர். வங்கி தொழிற்சங்கத் தலைவர் ரகுவின் அறை நல்ல சந்திப்பு விவாத இடமாக இருக்கும். ரகு இப்போது பொள்ளாச்சியில் அதே துடிப்புடன் செயலாற்றி வருகிறார். பேரா இராமசாமி  உதவியால்தான் அங்கு சமூகவியல் பேரவை துவங்க முடிந்தது. தோழர் வெங்கட் ராமன் ( மணியரசன் தோழர்) தோள் கொடுத்தார். பின்னர்   பேரா கெளதமன் பொறுப்பேற்று நடத்தினார்.  பேரா இராமசாமியும் நானும் இணைந்து ராஜிவ் காலத்தில் கொணரப்பட்ட கல்விக்கொள்கை குறித்து பிரசுரம் எழுதி வெளியிட்டோம். மக்ரோத் கமிஷன், யுஜிசி பரிந்துரைகள் குறித்து

Pattabi's New E Book Caste Essays

  சாதி எனும் பிசாசு (சாதி குறித்த பன்முகக் குரல்கள்) முன்னீடு சாதி குறித்து வாசித்தல் வழி எழுதிய 21 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆவணம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. கடந்த   5 ஆண்டுகளில் இணையத்திலும், முகநூலிலும் அறிமுகப்படுத்திய கட்டுரைகள் இவை. பல்வேறு அறிஞர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தந்த சில புரிதல்களை இத்தொகுப்பை படிப்போர் உணரமுடியும். அவரவர் சாய்வுக் கோணத்தில் அவர்களது எடுத்து வைப்புகள் அமைந்திருக்கும். எவரும் சாதி குறித்த முழுமையை தந்துவிடமுடியாது. ஆங்காங்கே கிடைக்கும் perceptions,   உரிமைகோரல்களை, மேலேறுதல் என்கிற தவிப்பின் போராட்டங்களை உணர்த்துதல் என்கிற அளவில் அவற்றை நாம் புரிந்துகொள்ளமுடியும். சாதிப்பற்று - caste patriotism அரசியலில், பொருளாதாரத்தில், சமூக நடவடிக்கைகளில் ஏதோவொருவகையில் முகம் காட்டாமல் இல்லை. ஓட்டரசியல் இதற்கான நல்ல விளைநிலமாகவும் மாறியுள்ளது. சாதிக்கு அப்பாற்பட்டு வர்க்கமாக மக்களை திரளச் செய்தல்- உணரவைத்தல் என்பதில் இடது அரசியல் வெற்றியை பெறமுடியாமல் போயுள்ளது. வர்க்கத்தில் சாதியும், சாதிக்குள் வர்க்கமும் இருப்பதை உணர்ந்த ப

The Idea of Democracy sam pitroda

may 12 2024 திரு சாம் பிட் ரோடா அவர்கள் குறித்து சர்ச்சை எழுந்தவுடனேயே, அவருக்கு மரியாதை செய்திடும் வகையில் அவரின் The Idea of Democracy யை விரைவில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  35 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உரைகள் சிலவற்றை கேட்க டெலிகாம் ஊழியர்களாக எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திரா அம்மையார் காலத்திலிருந்து  இந்தியா வந்து போய், ராஜிவ் காலத்தில் டெலிகாம் மேம்பாட்டிற்காக உழைத்தவர் என்ற வகையில் எங்களின் மரியாதையை அவர் பெற்றிருந்தார். அதன் பின்னரும் மன்மோகன் காலத்தில் கட்டுமான மேம்பாட்டிற்காக அவர் தன் உழைப்பை தந்தவர்.  Better Mission Communication என்கிற அவரது உரைதான் எங்களிடம் முதலில் வந்து சேர்ந்தது. எங்கள் மாநாட்டில் டிஜிட்டல் வழியாக அவரது உரை எங்களிடம் வந்தது.  இயக்கத் தலைவர் தோழர் குப்தாவுடன் அவர் தொடர் உரையாடல்களை மேற்கொண்டிருந்தார். பிட் ரோடாவின்  அன்றைய cDot முயற்சி வெகுவாக இயக்கத்தோழர்களால் பாராட்டப்பட்டது. வழக்கமான bureaucrat ஆக அவர் நடக்காத தன்மையை, அவரை மற்றும் மீமாம்சி போன்றவர்களை பார்த்து உரையாடிவந்த குப்தா, ஜெகன் போன்றவர்கள் எங்களிடம் எடுத்துரைத்தனர். உன்னி க

Gandhi His Life and Thought

  கிருபளானி அவர்கள் எழுதிய  Gandhi His Life and Thought சற்றுப்பெரிய -500 பக்கங்களை மிகக்கூடிய புத்தகமானாலும்- very good account எனச் சொல்லமுடியும். அவர் எப்போதுமே ஆவணக்காரராகவே எழுதும் முறை கொண்டவர். அவர் அறிந்த விஷயங்கள், refer செய்து எழுதும் அம்சங்கள் எல்லாவற்றிற்கும் முடிந்தவரை fact sheet வைத்திருந்தவராக இருந்தார். அடிப்படையில் பேராசிரியராக, காந்தியுடன் அவ்வப்போதான சகப்பயணியாக, காங்கிரஸ் செயலராக- தலைவராக,   ஆசாத்  நேரு மற்றும் சோசலிஸ்ட்களுடன் பெரும் விவாதக்காரராக கிருபளானி இருந்தார்.   கிருபளானியின் இந்த புத்தகத்தை பப்ளிகேஷன் டிவிஷன் காந்தியின் நூற்றாண்டை முன்வைத்து 1969 அக்டோபரில் கொணரவிரும்பியது. Builders of Modern India வரிசையில் 1970ல் வந்தது. இதன் 5வது பதிப்பு 2019ல் காந்தியின் 150யை ஒட்டி வந்தது. ரூ 300க்கு publication division/ Amazon வழி பெறமுடிந்த ஒன்றுதான்.  நல்ல அக்கவுண்ட் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்திய நூல். கிருபளானியின் எழுத்துக்களை வாசித்தவன் என்கிற வகையில் அவருக்கு bias ஏதும் இல்லவே இல்லை என சொல்லமுடியாது. இந்த நூலிலிருந்து சில வரிகளைத் தருகிறேன். காந்தி நேருவை

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

  இந்தியாவில் சாதி உருவாக்கம் குறித்து ஏராள ஆய்வுகள், ஊகங்கள் , அபிப்பிராய முன்மொழிவுகள் இருக்கின்றன. இதுதான் மிகச்சரியான ஆய்வு என நேர்மையானவர் எவரும் உரிமை பாராட்டாமல் இருப்பதையும் காணமுடிகிறது. பல நேரங்களில் அரசியல் தேவைகளுக்கேற்ற முகாந்தர முனைப்புகளாக , இந்த சமூக ஆய்வுகள் செல்வதையும் உணரமுடிகிறது. உத்தேச மதிப்பிடல்கள், ஊக முன்மொழிவுகள்தான் என்றால் அங்கு நிதானம் தொழிற்படும். புகழ் வாய்ந்த தென்னிந்திய சமூகம் குறித்த ஆய்வாளர் நொபுரு கராஷிமாவும், ஆய்வாளர் எ சுப்பராயலு அவர்களும் எழுதிய 4 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அத்துடன் இணைப்பாக கராஷிமாவின் நினைவுக் குறிப்பொன்றும் இணைக்கப்பட்ட நூல் ஒன்றை என் சி பி எச் 2017ல் வெளியிட்டனர். நூலின் பெயர் “ தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்” . சிறிய 75 பக்க நூல்தான். 2022 பதிப்பில் ஸ்டிக்கர் ஒட்டி ரூ 100 ஆக்கியுள்ளனர்.இப்போது வேறு ஸ்டிக்கர் உள்ளதா தெரியவில்லை. இனி நூலில் இந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் சில கருத்தாக்கங்களை, நான் உணர்ந்த அளவில் தருகிறேன். கட்டுரைகள் பொது ஆண்டு 800-1500 வரைக்கான காலத்தைக் குறித்து கல்வெட்டுகளின் வழி வந்த ஆய்வ

Who were Sudras - சூத்திரர் வரலாறு டாக்டர் அம்பேத்கர்

  Who were Sudras - சூத்திரர் வரலாறு டாக்டர் அம்பேத்கரின் புகழ் வாய்ந்த ஆய்வுகளில் ஒன்று. 1946ல் இந்நூலை அவர் வெளியிட்டார். அவரின் நூல்களை பம்பாயில் வெளியிட்டு வந்த தாக்கர் சன்ஸ் நிறுவனம்தான் இதனையும் வெளியிட்டனர். சூத்திரர் ஆர்யரே- பின்னர் இறக்கப்பட்டனர் என்கிற முடிவை அம்பேத்கர் இதில் எட்டியிருப்பார். இக்கட்டுரையில் சுருக்கமாக , இது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நூலின் 1947 ஆம் பதிப்புதான், அம்பேத்கரின் நூல்தொகைகளில், ஆங்கிலத்தில் 7 வது வால்யூமிலும் ( 1990ல்) , தமிழ் தொகைகளில் வால்யூம் 13லும் (ncbh 1999) அப்படியே இடம் பெற்றது. நான் இங்கு சொல்ல வரும் நூல் 1994ல் வாங்கிப்படித்த எ. பொன்னுசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த ‘சூத்திரர் வரலாறு’. தி நகர் அ ஆ பதிப்பகம் கொணர்ந்த நூல். இந்த மொழிபெயர்ப்பில் , அம்பேத்கர் எழுதிய நூலில் இருந்த முகவுரைத் தவிர இருக்க வேண்டிய 12 அத்தியாயங்கள் இல்லை. 10 தான் இருக்கிறது. 1946, 1947 மூல நூல் பதிப்புகளிலும், ஆங்கில வால்யூம் 7 லும் 12 அத்தியாயங்கள் இருக்கின்றன. தமிழ் வால்யூம் 13லும் இருக்கிறது. ஆனால் பொன்னுசாமி மொழிபெயர்ப்பில் அத் 7 மற்றும் 12 இடம் பெ

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள்

  நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள்   நடந்து முடிந்த 2024 தேர்தலில் இடதுசாரிகள் எங்கு நின்றார்கள் , அவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி அமைந்தது எனப் பார்க்கத் தோன்றியது. மாநிலவாரியாக ஒவ்வொரு தொகுதியையும் எடுத்துக்கொண்டு இந்த தேடலை நடத்தவேண்டியிருந்தது. 543 தொகுதிகளையும் பார்க்க சில மணிநேர உழைப்பு தேவைப்பட்டது. அப்படிப்பார்க்கும்போதுதான் , பல குறைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான தேர்தல் ஆணையத்தின் வேலை மலைப்பை உணரமுடிந்தது. இதன் பொருள் அவர்கள் மீதான விமர்சனங்களுக்கு பொருள் இல்லை என்பதல்ல. வேலை கடினமான ஒன்று எனப் புரிந்துகொள்ள முடிந்தது. கட்சிகள் , சுயேட்சைகள் என்ற ஜனநாயக உரிமையில் ஏராள   non serious players.   அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி வாக்கு சீட்டு , எண்ணிக்கை, ஒவ்வொருவருக்குமான சின்னம், வாக்கு எண்ணிக்கை முடிவுகள்- தொகுதிவாரியாக என்கிற பெரிய வேலையை செய்திடும் இன்ஸ்டிட்யூஷன் அது. 543 தொகுதி பெயரை மட்டுமாவது எழுதிப்பார்த்தால் வேலை புரியும்.   2024 ல் மக்கள் பொதுவாக மேம்பட்ட புரிதலுடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் . மாநிலத்திற்கு மாநிலம் புரிதல் மாறுபட்டுள்ளது என்பதும் கண்கூட