https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, March 20, 2017

Com JAGANNATH SARKAR ஜகன்னாத் சர்கார்

தோழர் ஜகன்னாத் சர்கார்
                         -ஆர். பட்டாபிராமன்
பீகார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர் தோழர் ஜகன்னாத். 1919ல் பிறந்து தனது 20ஆம் வயதில் கட்சியில் சேர்ந்து 22 வயதிலேயே அப்பிரதேச அமைப்பு கமிட்டியின் செயலராக ஆக்கப்பட்டவர். தோழர்கள் பவானிசென், பி சி ஜோஷி, சோமநாத் லாகிரி, சர்தேசாய் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டவர். இந்திரதீப் சின்ஹா, யோகேந்திர சர்மா, சதுரானன் மிஸ்ரா போன்றவர்களுடன் சேர்ந்து வளர்ந்தவர். பீகாரில் பல்லாண்டுகள் மாநில கமிட்டிக்கு செயலராக இருந்து இயக்கத்தை வீச்சாக வளர்த்தவர்.
ஜகன்னாத் அவர்களின் தந்தை டாக்டர் அகில்நாத் சர்கார். பாட்னா மெடிக்கல் காலேஜ் மருத்துவர். 1920 களில் ஒரிஸ்ஸா, பாட்னா மக்களுக்கு மருத்துவம் பார்த்தவர். பூரி பகுதியில் அவர் இருந்தபோது , தாய் பினாபன் பூரி ஜகன்னாதர் தேர் இழுத்து வந்த பிறகு பெற்ற மகவிற்கு ஜகன்னாத் என பெயரிட்டனர். அவர் பூரியில் செப்டம்பர் 25, 1919ல் பிறந்தார். பின்னர் குடும்பம் பாட்னா நோக்கி நகர்ந்தது . ஜகன்னாத் எம் படிக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு ஏற்பட்டது. படிப்பை தொடர்வதா, கட்சிக்கு போவதா என்ற குழப்பம் தெளிந்து பட்டமேற்படிப்பை விடுவிட்டு ஜோஷி அறிவுரையை ஏற்று கல்கத்தா சென்றார்.
பீகாரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் பலர் இருந்த்னர். பின்னர் அதில் தொடர முடியாத நிலையில் 1939ல் பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. கல்கத்தாவில் பவானிசென் தோழர் ஜகன்னாத்திற்கு மார்க்சிய பயிற்சி கொடுத்தார். அங்குதான் அவர் நிருபென் சக்கரவர்த்தி போன்றவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. நிருபென் தனது சக தோழருடன் ஹிஜ்ரி சிறையிலிருந்து ஏறி குதித்து  தப்பி வந்த காலமது. சோமநாத் லாகிரிதான் ஜகன்னாத் அவர்களுக்கு தலைமறைவு கட்சி வாழ்க்கையின் நுணுக்கங்களை கற்பிக்கிறார். இரண்டாம் உலகப்போர் சூழல் சோவியத் பங்கேற்பையடுத்து கட்சி நிலைப்பாடு மாறியதால் அவர்களால் பயிற்சியை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டது. பீகார் திரும்பியவுடன் 1941ல் கட்சி கூடி பயிற்சி பெற்ற ஜகன்னாத்தான் பிரதேச கமிட்டி (provincial organizing Committee- POC) செயலர் என்றனர். 1942வரை இப்பொறுப்பில் அவர் இருந்தார்.
தோழர் சர்தேசாய் அவர்கள் பீகார்  மத்திய கமிட்டி பிரதிநிதியாக பீகார் வரும்போதெல்லாம் தொழிலாளிவர்க்க போராட்டம் அதில் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்து பேசுவார். சர்தேசாயால் கவரப்பட்ட ஜகன்னாத்  கிரிதி நிலக்கரி தொழிலாளர் மத்தியில் பணிபுரியத் துவங்கினார். அவர்களது வாழ்வியல் தன்மைகள், போராட்டங்களின்போது அவர்களது மனப்பாங்கு, அவர்களது மதரீதியான எண்ணங்கள் அவை இயக்கங்களில் பிரதிபலித்து கொடுத்த அனுபவங்கள் பலவற்றை அவர் பீகாரின் பலபகுதி நிலக்கரி தொழிலாளர் இயக்கத்தில் கற்றார். தனது சில வறட்டுத்தனங்களை களைய அவை உதவியதாகவும் ஜகன்னாத் பின்னாட்களில் தெரிவிக்கிறார்.
இந்திரதீப் சின்ஹா, யோகந்தரமிஸ்ரா, சதுரானன் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், அலி அஷ்ரப், சுனில் முகர்ஜி போன்ற பீகாரின் புகழ்வாய்ந்த பல தலைவர்கள் அவரின் சமகாலத்தவர்களாகவும் பீகார் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களாகவும் விளங்கினர். இந்திரதீப் பின்னாட்களில் விவசாய தொழிலாளர் இயக்கத்திலும் நியுஏஜ்ஜின் சிறப்பான எடிட்டராகவும் உயர்ந்தவர். இந்திரதீப், யோகேந்தர், ஜகன்னாத் பீகார் குழுவினர் 1948களில் தோழர் ரணதிவே தலைமையிலான மத்திய கமிட்டியை கல்கத்தாவில் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவர். கட்சி அதிதீவிர நிலைப்பாடு எடுத்த ஆண்டுகள் அவை. ரயில்வே வேலைநிறுத்தம் இந்திய புரட்சிக்கான அஸ்திவாரம் என ரணதிவே இத்தோழர்களிடம் பேசியதாக  அனில் ரஜிம்வாலே தெரிவிக்கிறார்.
நாடுமுழுதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானது போலவே ஜகன்னாத் உட்பட கட்சித்தலைவர்கள் கைதுப்படலம் நடந்தேறுகிறது, தலைமறைவு டெக்னிக் அப்போது ஜகன்னாத்திற்கு உதவவில்லை. அவர் கழிப்பறையில் பதுங்கி உள்ளதை போலீஸ் மோப்பம் பிடித்து அவரை சிறைக்கு அனுப்புகிறது. மத்திய கட்சியில் தோழர் ராஜேஸ்வரராவ் புதிய தலைமை பீகார் கட்சியை மாற்றுகிறது. அந்நேரத்தில் பொறுப்பிலும் சிறையிலும் இருந்த ஜகன்னாத் புதிய மாற்றத்தில் இடம் பெறவில்லை. பின்னர் அஜாய் தலைமையில் மத்திய கட்சியில் மாற்றம் வருகிறது, பீகாரில் மீண்டும் மாநில செயலராக 1952-56 காலத்தில் ஜகன்னாத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேபோல் 1967-78 காலத்திலும் தொடர்ந்து மாநில செயலராக அவர் செயல்படுகிறார்.
காங்கிரசிற்கு பீகாரில் சோசலிஸ்ட்கள் கர்ப்பூரிதாகூர் , மண்டல் தலைமையிலும் கம்யூனிஸ்ட்கள் ஜே எஸ் (ஜகன்னாத் சர்கார் தனது சக தோழர்களால் JS என அழைக்கப்படலானார்) இந்திரதீப் தலமையிலும் கடும் சவால்களை தந்தனர். 1967ல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி மந்திரிசபை பீகாரில் அமைந்தது, இந்திரதீப் அதில் வருவாய்துறை அமைச்சராக இடம் பெறுகிறார். வறட்சி பாதித்த பல்வேறு மாவட்டங்களின் நிவாரண பணிகளை அவர் முடுக்கி விடுகிறார். கட்சியின் செயலர் என்ற வகையில் கட்சி முழுமையையும் வறட்சி நிவாரண பணிகளில் ஈடுபடுத்தி மிக முக்கிய பங்களைப்பை ஜே எஸ் செய்கிறார்.
தோழர் ஜே எஸ் சிறந்த மேடை பேச்சாளர் அல்லர். ஆனால் கமிட்டிகளில் அழுத்தமாக  நிதானமாக மற்றவர்கள் ஏற்க தகுந்தவாறு கருத்துக்களை முனவைப்பவர் என சக தோழர்களால் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தார். இன்று கட்சியின் மார்க்சிய சிந்தனையாளராக கல்வி இலாகாவிற்கு பொறுப்பாக இருக்கும் அனில்ரஜிம்வாலே குடும்பம் ஜே எஸ் குடும்பத்திற்கு மிக நெருக்கமானது, அனில் தந்தை ரஜிம்வாலாவும் ஜே எஸ் அவர்களும் இணைந்துதான் இந்தி தினசரி ஜனசக்தியை பீகாரில் கொணர்ந்தனர். தோழர் ஜே ஏஸ் அவர்களுக்கு பல்கலைகழக பேராசிரியர்களின் தொடர்பும் பாட்னா புத்திஜீவிகளின் தொடர்பும் இருந்தது. லேபர் இன்ஸ்டிட்யூட்கள், ஆய்வு மையங்கள் துவங்கிட இத்தொடர்புகள் அவருக்கு உதவின. ஜோஷி அதிகாரி ஆய்வு மையம் அமைவதில் அவர் பெரும் பங்காற்றினார்.
Science and people, Social Science Probings போன்ற ஆய்விதழ்கள் வர அவர் உத்வேகமூட்டினார். மார்க்சிய வரலாற்றறிஞர்கள் தேவிபிரசாத், ஆர் எஸ் சர்மா போன்றவர்கள் அதன் ஆசிரியர் குழுவில் இருந்தனர். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்த நீலம் ராஜசேகர ரெட்டி (குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சகோதரர்) அவர்களும் அப்பத்ரிக்கைகளை  தீவிரமாக கொண்டு செல்லவேண்டிய அவசியத்தை பேசிவந்தார். இக்கட்டுரை ஆசிரியர் (பட்டாபி) ஒருநாள் முழுவதும் தோழர் ராஜசேகர் ரெட்டி அவர்களுடன் இருந்து கட்சி பத்ரிக்கைகள் party Life  குறிப்பாக  Social Science Probings பற்றி  விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. Social Science Probingsயை சி பி எம் கட்சி சார்ந்த  Social scientistவிட அற்புதமாக கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையை  தோழர் ராஜசேகர் வெளிப்படுத்தினார்.
1970 களின் மத்தியில் ஜெயபிரகாஷ் நாராயண் முழுபுரட்சி இயக்கம் பீகாரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொள்கைபூர்வமாக அதை எதிர் கொள்ளவேண்டிய பொறுப்பு பெருமளவு பீகார் கட்சிக்கு வந்தது. அதை திறம்பட தனித்து நின்று கட்சி செய்து வந்தது. அதில் அப்போது மாநில செயலராக இருந்த தோழர் சர்கார் பெரும்பங்காற்றினார். Intellectual Fora பலவற்றில் பங்கேற்று ஜேபி இயக்கத்தின் எதிர் அரசியல் அம்சங்கங்களை சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தார். ஒருமுறை டெல்லி ஜவஹர்லால் பல்கலை அமர்வு ஒன்றில் 1974ல் அவர் உரையை தனிமைப்படுத்தும் முயற்சியை டிராட்ஸ்கியவாதிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர், ஜேபி ஆதரவாளர்கள், ஜனசங்கத்தினர் செய்தனர். ஆனாலும் ஜே எஸ் தனது கருத்துக்களை அழுத்தமாக உறுதியுடன் எடுத்து வைத்த காட்சியை அனில் ரஜிம்வாலே தனது கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். அவரது நேரிய வகைப்பட்ட விவாதமுறை பின்னர் பாராட்டுகளைப் பெற்றது.
பேராசிரியர் டாக்டர் அருண்குமார் தோழர் ஜே எஸ் தெருக்களிலும், செமினார்களிலும் பேசிய ஆழமான கருத்துக்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், ஜே எஸ், இந்திரதீப் வகுப்புகளால்  தனது ளமைக்காலத்தில் பயன்பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். ஜே எஸ் எங்களைப் போன்றவர்களுக்கு Comrade Intellectual  ஆக இருந்தார் என்கிறார். நகைசுவை உணர்வுடன் பெரிதாக வாய்விட்டு சிரிக்க தெரிந்த கம்யூனிஸ்ட்டாக நண்பர்கள் மத்தியில் அவர் இருந்தார் என்கிற பதிவும் உள்ளது. இளைஞர்களுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங்கள் குறித்து விவாதிப்பவராகவும், அவர்கள் மூலம் அவர்கள் அறிமுகப்படுத்தும் best sellersகளை படிப்பவராகவும் அவர் இருந்தார்.
தொழிலாளர்களும் நமது சமூகத்தில் ஓர் அங்கம்தான் – மற்றவர்களிடம் உள்ள பலம் பலவீனங்கள் அவர்களிடமும் இருக்கும் என தெரிந்து தொழிலாளி வர்க்க மத்தியில் பணிபுரியவேண்டும் என்றார். ஆரம்பத்தில் பீகாரில் சாதி குறித்த தனி கருத்த்ரங்கங்கள் வேண்டாம் என் கருத்து அவர் தெரிவித்திருந்தபோதிலும், தனது தவறை அவர் அவ்வாறு வேண்டும் என யார் தெரிவித்தரோ அவர்களிடம் சென்று திருத்திக்கொள்வதாக வெளிப்படையாக தெரிவித்தார். ஜே எஸ் போன்றவர்களுக்கு 1960 களின் சூழல் லோகியாவின் caste struggle  என்கிற கருத்தாக்கம் எதிர்த்து Class struggle என்பதை தொழிலார்களிடமும் வெகுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனாலும் இந்தியாவின் சமூக எதார்த்தம் என்ற புரிதல் மார்க்சியத்திற்கு விரோதமானதல்ல என்ற கருத்திற்கு அவர் வந்தார்.
 அவர் பழங்குடிகள் மத்தியில் பணியாற்றியவர். அவர்கள் குறித்து எழுதியவர். அவர்களுக்கான கோரிக்கைகள்- கூட்டங்கள்- இயக்கங்கள் கண்டவர். அவர்களுடன் விவாதித்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயக்கத்தை முன்கொண்டு செல்லவேண்டும் என அறிவுறுத்தியவர். கல்கத்தா சாந்திநிகேதனில் இதற்கென பல்வேறு ஆய்வார்களின் அமர்வுகளுக்கு துணைநின்றவர்.
 சர்கார் அவர்களை கட்சி டெல்லி மையத்தில் பணியாற்ற அழைத்தது. எப்போதும் பரபரப்பான பீகார் வெகுஜன இயக்க கட்சி சூழலிருந்து மாறுபட்ட, நிதான கதியில் செயல்படும் கட்சி மைய சூழல் தனக்கு பொருந்தவில்லை என்றார் ஜகன்னாத். பீகாரிலும் ஜே பி இயக்கம், மண்டல் எழுச்சிகள், சோவியத் வீழ்ச்சி கியவை தொடர்ந்து கட்சி பலவீனப்படத் துவங்கியது. தோழர் ஜே எஸ் ராஜேஸ்வர் ராவிற்கு பின்னர் பொதுச்செயலராக வருவார் என்கிற நிலை இருந்தது. அவர் நோய்வாய்பட்டு தீவிர அரசியல்பணிகளை மேற்கொள்ளமுடியாத சூழல் எழுந்தது. ஆனால் அவர் தனது அறிவுப்பயணத்தை இறுதிவரை கைவிடவில்லை. தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களிடம் இந்திய அரசியல் போக்குகள், கட்சியின் நிலைப்பாடுகள், சீனகட்சியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தெல்லாம் விவாதிப்பவராக இருந்தார். நிதானமாக மற்றவர்களை ஏற்க செய்திடும் வித்த்தில் அவரது கருத்துக்கள் அமையும். தேசிய கவுன்சில் கூட்டங்களில் அவர் உரையாற்றும் போது உன்னிப்பாக கவனிப்போம் என்றார் பார்வதிகிருஷ்ணன்.

தாகூர்மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தது. தாகூருடன் சேர்ந்து எடுத்த்க்கொண்ட போட்டோ ஒன்றை தான் தறவிட்ட்தற்காக அவர் வருந்தினார். சாந்தி நிகேதனில்கூட போய் இருந்துவிடலாம என்ற எண்ணம்கூட அவருக்கு இருந்த்தாக அவரை அறிந்த பெர்லின் ஹம்போல்ட் பேராசியர் சுனில் சென்குப்தா தெரிவிக்கிறார். அழகியல் உணர்வுகளை ஜே எஸ் தாகூரிடமிருந்து கற்றதாக அவர் தெரிவிக்கிறார்.

Com JAGANNATH SARCAR தோழர் ஜகன்னாத் சர்கார் 2

II
மார்க்சிய மூல நூல்களை கற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஜே எஸ் ஒருவர். கிராம்ஸியைகூட அவர் கற்றதாக அறிகிறோம். கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் புத்தகங்களையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் புத்தகங்களையும் கூட அவர் படிக்க தவறியதில்லை. எல் கே அத்வானியின் சுயசரிதையையும் அவர் படித்தார். பீகாரின் சாதி, உபசாதி அம்சங்களை வரலாற்று பார்வையில் அவர் தெரிந்துகொண்டார். புரா இலக்கியங்களையும் அவர் படித்தார். மதுபானி ஓவியங்களுக்கு பின்னால் உள்ள சாதி, மத கண்ணீர் கதைகளை எடுத்துரைப்பவராக இருந்தார். அவரை நாங்கள் சமுகவியலராகவே பார்த்தோம் என கல்கத்தா ஸ்காட்டிஷ் கல்லூரியில் பேராசிரியராக இருந்த தருண் சன்யால் தெரிவிக்கிறார்.
பீகாரில் சி பி அய் அக்டோபர் 20, 1939ல் 19 தோழர்களுடன் துவக்கப்பட்டது. இரண்டுமாத காலத்தில் டிசம்பர் 1939ல் ஜகன்னாத் கட்சியில் இணைக்கப்படுகிறார். புகழ்வாய்ந்த மிக உயர் பதவிகளில் இருந்த தாய்வழி, தந்தைவழி குடும்ப மூத்தவர்கள் ஜகன்னாத், அவரது சகோதரர் கட்சி வாழ்க்கையினால் பெரிதும் கவலைக்கு உள்ளாயினர். அவரை ICS ஆக உயர் பதவியில் பார்த்திட தந்தை கனவு கண்டார். 200 புத்தகங்கள் இதற்காகவே தருவிக்கப்பட்டு வீட்டில் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மகன் ஜகன்னாத் கல்கத்தா கட்சிப்பணி என சென்றார். தாய் மனநோய்க்கு உள்ளானாதாக அறிகிறோம்.
1964ல் கட்சி பிளவின் போது சேதாரம் இல்லாமல் பீகார் கட்சியை காத்து நின்றது, கட்சியில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்வதற்குரிய சூழலை உருவாக்கியது 1967ல் காங்கிரஸ் அல்லாத மந்திரிசபை உருவாக்கம், 1970 நிலமீட்பு இயக்கத்தில் பல தோழர்களை கட்சி பலிகொடுத்து ஆயிரகணக்கான மக்கள் பயனுற நிலப்பகிர்வு, ஜே பி இயக்கம் எதிர்த்த கொள்கை போராட்டம், கட்சி திட்ட்த்தை மாறிவந்துள்ள உலக, இந்திய நிலைகளுக்கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்கி உட்கட்சி போராட்டம் , பழங்குடி மக்கள் இயக்கம், புத்திஜீவிகளை கட்சிபால் கொணர்தல் போன்றவற்றில் அப்பரிய பங்கை செலுத்தியவராக  தோழர் ஜகன்னாத் சர்கார் செயல்பட்டவர். தலைவராக உயர்ந்த நிலையிலும் தன்னை தினந்தோறும் புதிய விஷயங்களில் update செய்து கொள்வது- தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது என்பதற்கு அவர் முன்னுதாரணமாக இருந்தார். Sharp scientific intellect, Marxist outlook, Comradely behaviour-  இதுதான் தோழர் ஜகன்னாத் என்று எழுதினார் தோழர் பரதன்.
 தோழர் ரதிவே கட்சியின் பொதுச்செயலராக இருந்த தருணத்தில் தோழர் ஜகன்னாத்தின் ராமகிருஷ்ண மிஷன் தொடர்புகளை பி டி ஆர் கண்டித்தார். ராமகிருஷ்ண மிஷன் சார்ந்த அவ்யானந்த மகராஜ் என்பார்தான் ஜகன்னாத் அவர்களுக்கு முதலில் மார்க்சிய நூல் ஒன்றை படிக்க தந்தார் என்பது தோழர் ரணதிவேவிற்கு தெரியாது என்கிறார் ஜே எஸ். ரால்ப் பாக்ஸ் எழுதிய லெனின் குறித்த நூல் அது என தனது நினைவில் சொல்கிறார். ராஞ்சி சிறையில் ஜே எஸ் இருந்தபோது அவர் கேட்கும் புத்தகங்களை கொண்டு போய் கொடுப்பது மற்றும் சிறைகளை மாற்றியதால் குடும்பம் பட்ட துயர்களை அவரது துணவியார் நிலிமா சர்கார் பகிர்ந்துகொண்டுள்ளார்.
 ஜே எஸ் செவ்வியல்  இந்துஸ்தானி இசைப்பிரியர். பண்டிட் ரவிசங்கர் மற்றும் உஸ்தாத் அலிகான் ஜுகல்பந்திதனை ரசித்து அவர் உரையாடுவார் என அறியமுடிகிது. தனக்கு எவ்வவு வேலை தொந்திரவு இருந்தாலும் தனது டைகளை தானே துவைத்து உலர்த்தும் பழக்கமுள்ளவராக இருந்தார் ன அவருடன் பழகிய பாலிடெக்னிக் ஒன்றின் பேராசிரியர் சுப்ரதாகோஷ் தெரிவிக்கிறார். அவரின் பொறுமை, சுகட்டுப்பாடு எங்களை வியக்கவைக்கும் என்கிறார். லியுஷோஷியின்  How to be a Good Communist  என்பதன் உருவமாக அவரை நாங்கள் உணர்வோம் என்கிறார்.
அவரது துணவியாரின் சகோதரரும் இவரால் கட்சி வாழ்க்கைக்கு ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் மூலம் மொகித்சென் சுயசரிதை, மாவோ பற்றி அவரது டாக்டர் எழுதிய Private Life of Mao, காஸ்ட்ரோ நினைவுகள் குறித்தும் அவர் படித்து சக தோழர்களுடன் விவாதித்தார் என அறிகிறோம்.  1968 செக்கோஸ்லோவியா மீதான சோவியத் படையெடுப்பை அவர் ஏற்கவில்ல்லை.. விமர்சனம் இருந்தது என்கிறார் சமித் கோஷ். ஜெர்மானியர் ரசோஜின் என்பார் எழுதிய வேத இந்தியா நூல் குறித்து சக தோழர்களுடன் விவாதித்ததாக அறியமுடிகிறது. காயத்ரி மந்திரம் பற்றி ஆர்வமூட்டும் ஆய்வுப் பார்வை அவரிடம் இருந்தது. விஸ்வாமித்திரர்  ஆர்யர் அல்லாதவர்களை ஆர்யர்களாக மாற்றி inclusive societyக்கு முயற்சித்ததாகவும் வசிஸ்டர் ஆரியர் தூய்மைவாதம் பேசியதாகவும் அவரது கட்டுரை பேசுகிது. தாகூர், நஸ்ருல், ஷேக்ஸ்பியர் மேற்கோள்கைகளை அவர் உரையாடலில் பயன்படுத்துவார் என டாக்டர் அர்ஜித் தாஸ் குப்தா தெரிவிக்கிறார். டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் குறித்து தன்னிடம் அவர் உரையாடியதாக  அவர் எழுதுகிறார்.
தோழர் S G சர்தேசாய் அவர்களுடன் ஜே எஸ் அவர்களுக்கு நெருக்கம் இருந்த்து. சர்தேசாய் உறவினர் G S  சர்தேசாய் என்கிற வரலாற்று அறிஞருடன் ஜே எஸ் அவர்களின் மாமா ஜாதுநாத் நெருங்கிய நண்பராக இருந்தார். குடும்ப பழக்கமாகவும் இருந்தது. சர்தேசாயும், ஜகன்னாத்தும் கட்சி விஷயங்கள் குறித்து கடித போக்குவரத்து செய்திருப்பதாக அறியமுடிகிது அவை பராமரிக்கப்பட்டு வெளிப்பார்வைக்கு வந்தால் மேலும் இயக்க ய்விற்கு உதவியாக இருக்கலாம். ஜே எ ஸ் சர்தேசாயின் கடிதம் ஒன்றை (ஜனவரி 29, 1989) சுட்டிக்கட்டுகிறார். சர்தேசாய் சோவியத் நிலை குறித்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் அப்போது மெயின்ஸ்ட்ரீமில் கட்டுரைகள் எழுதிவந்தார். அக்கடிதத்தில் அவர் வெளிப்படையாக விமர்சனம் வைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிது. During the Emergency, Dange once referred to Indira as revolutionary democrat in a meeting of the National council, and not one of us got up to protest against such nonsense”   என்றும் அதே போல் EMS காங்கிரஸ் எதிர்ப்பில் எந்த சாத்தானுடனும் கூட்டு என பேசிவந்ததை விமர்சித்தும் அக்கடிதம் முடிகிது.
 ஆங்கில பேராசிரியை அர்ஜித் அவர்களுக்கு அவர் ஒருமுறை பேட்டி அளித்தார். அதில் வங்க கம்யூனிஸ்ட் (அவரது சமகால) முன்னோடிகள் ஜோதிபாசு, புபேஷ்குப்தா, இந்திரஜித் குப்தா ஆகியோர் லண்டனில் பிரிட்டிஷ் தலைவர்கள் ஹாரிபாலிட், பென்பிராட்லி, ரஜினிபாமித்த் செல்வாக்கில் கம்யூனிஸ்ட்களாக மாறி வந்ததை குறிப்பிடுகிறார். அவர்களிடத்து ஹாரால்ட் லாஸ்கியின் செல்வாக்கும் இருந்தது என்கிறார். தனக்கு பின்னர் அடுத்த ஆண்டில் 1940ல் ஜோதிபாசு கட்சிக்கு வந்ததாக தெரிவிக்கிறார். நிருபன், ஜகன்னாத் போன்ற நாங்கள் லண்டன் செல்வாக்கில் இல்லாமல் இங்கு பவானி, லாஹிரி செல்வாக்கில் மார்க்சியம் கற்றதாக தெரிவிக்கிறார்.
 கட்சி பிவு குறித்த கேள்விக்கு ஜோதிபாசு அதற்காக பெருமளவு இங்கி வேலை செய்யவில்லை என்றும் அஜாய், புபேஷ், ஜோதி மூவரும் மற்றவர்களை Convince செய்துவிடலாம் என்றே பேசி வந்தனர் என்கிறார். ஆனால் 1964 சி பி எம் உருவானபோது ஜோதிபாசு அதன் பொலிட்ப்யூரோவில் இடம் பெற்றது irony  முரண் என்கிறார். ஜோதிபாசு மறைவுடன் சகாப்தம் ஒன்று முடிவுற்றதாக கருதமுடியுமா என கேட்டபோது அவர் almost (க்குறைய) என ஒரு வார்த்தையில் பதில் தருகிறார். ஜோதிபாசு அவர்களின் நிலசீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களை அவர் தெரிவித்தார்.
ஜே எஸ் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியதாக அறிகிறோம். அவற்றில் பல தொகுக்கப்படவில்லை என்கிறார்கள் சில முக்கிய கட்டுரைகளை தொகுத்து Selected Essays  கொணர்ந்துள்ளனர். விடுதலை போராட்டத்தின் பன்முகம், இந்திய விடுதலை 50 ஆண்டுகள், காந்தி, நேரு, சோசலிசம், சோசலிச மார்க்கம், மதசார்பின்மை, இஸ்லாம், வங்க விடுதலை, சாதியின் வேர்கள், பழங்குடிகள், தேசபக்தி, ஜனநாயகம், மத்தியத்துவ ஜனநாயகம், பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கம், நக்சலைட் இயக்கம், ஜேபி இயக்கம், காயத்ரி மந்திரம், நிலக்கரி தொழிலார் இயக்க அனுபவம், தோழர்கள் டிமிட்ரோவ், சர்தேசாய், ராஜேஸ்வர்ராவ் போன்றவை சில முக்கிய கட்டுரைகள்.
 காந்தி குறித்த பார்வையில் கம்யூனிஸ்ட்களின் தவறு குறித்த சுயவிமர்சனத்தை அவர் முன்வக்கிறார். காந்தியடிகளின் உயிர்த்தியாக 50 ஆண்டுகள் ஒட்டி 1998ல் அவர் கட்டுரை ஒன்றை எழுதுகிறார்.  பிரிட்டிஷாரை பின்வாங்க செய்து வெளியேற்றும் போராட்ட்த்தில் -அகிம்சை முறையில் மக்களை திரட்டிய போராட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார் என்கிறார். He never surrendered to British rule. Inch by inch he made the rulers to retreat. That was that Indian people saw. And the understanding of the communist in this regard was rather puerile   - கம்யூனிஸ்ட்கள் புரிதல் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என கடும் சுயவிமர்சனத்தை வைக்கிறார். அவரின் அகிம்சை , ஒத்துழையாமை எனும் ஆயுதங்கள் இன்றும் பொருத்தமானவை என்கிறார்.
நேரு அவர்களின் நூற்றாண்டு ஒட்டி 1989ல் கட்டுரை ஒன்றை அவர் எழுதினார். இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டது. நேரு இந்திய விடுதலைப்போரை பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகவும் புரிந்துகொண்டவர். நமது உயர் கலாச்சாரம் குறித்து கொண்டாடும் அதே நேரம் வழக்கொழிந்தவைகளை விமர்சித்தவராகவும் அவர் இருந்தார். அரசியல் விடுதலை என்பது பொருளாதார விடுதலையாக மாறும்போது தான் வெகுமக்கள் முன்னேற்ம் என்பதையும் அவர் புரிந்தவராக இருந்தார். தனது கொள்கைகள் மூலம் சோசலிசம் என அவர் பேசினாலும் வளர்ந்தது முதலாளித்துவம்தான் என  ஜே எஸ் நிதான பார்வையுடன் நேருவை அணுகுகிறார். காங்கிரசின் வலதுசாரி பிரிவிற்கு அவர் சில நேரங்களில் பணிந்துபோனார் என்லவீனத்தையும் ஜே எஸ் எடுத்து வைக்கிறார். நேரு மதசார்பின்மை, ஜனநாயக நிறுவனங்களை தூக்கிப்பிடிப்பவராக பொதுவாக இருந்தார் என்ற மதிப்பீட்டையும் வைக்கிறார். இன்று அவை சோதனைக்கு உள்ளாகிவருகின்றன என்கி கவலையையும் அக்கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.
 வங்கதேச விடுதலையை வர் வரவேற்றார். அதே நேரத்தில் தனது எச்சரிக்கையையும் அவர் வெளியிட தவறவில்லை. ஒருநாட்டில் ஜனநாயகம் என்பதை பிற நாடு ஒன்றின் படையெடுப்பின் மூலம் கொணரமுடியாது. அங்குள்ள மக்களின் உர்வுகள் மூலம் ஜனநாயகம் கட்டப்படவேண்டும் என்றார். பாகிஸ்தான் இஸ்லாமிய ஜனநாயகம் என பேசியபோது அது குறித்து தனது கருத்தை அவர் வெளியிட்டார்.  Theocracy   மதஅடிப்படையிலான என்பதை theo- democracy  ( democracy limited by the words of God) கடவுளின் வார்த்தைக்குள் நின்று அடங்கும் ஜனநாயகம் என்பதாக அவர்கள் பேசிவருகின்றனர் என்றார். 
இந்தியாவானாலும், உலகில் எந்த நாடாக இருந்தாலும் மதத்தின் பெயரால் ஆட்சி என்றால் முதலில் அங்கு பலியாவது மக்களின் இறையாண்மையும் ஜனநாயகமும்தான் என்றார். மதசார்பற்ற அரசு என்பதை அவர் உயர்த்தி பிடித்தார். மதம் மக்களை மீட்பதற்கு பதில் அவர்கது மூளையில் முறிவை உருவாக்கிவிடுகிது என்றார். மதத்தில் அதன் நம்பிக்கைதான் ஆக உயர்ந்தது. உலகியல் வாழ்வில் சட்டங்கள்தான் மேலானது. ஆனால் எங்கள் மதநம்பிக்கைக்கு சட்டங்கள் கட்டுப்படவேண்டும் எனும்போது சமுகம் பதட்டம் அடைவதாக அவர் கருதினார்.
பேராசிரியர் வாசி அகமது என்பாருக்கு அவர் இந்தியாவில் சாதிகளின் வேர்கள் குறித்து எழுதினார். வேத உபநிடதங்கள், புத்தம், மனு, பகவத்கீதை, மாக்ஸ்முல்லர் என மேற்கோள்களை காட்டுகிறார். அவரின் புரிதல் விரிவை நாம் உணரமுடிகிரது. புத்தம் வர்ந்தபோதிலும் சாதிபழக்கம் முறியடிக்கப்படவில்லை. சைதன்யர் போன்றவர்களை பற்றியும் அவர் அதில் குறிப்பிடுகிறார். இந்திய சமூக சூழலில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டங்களை அவர் தெரிவிக்கிறார். இந்திய அரசியல் சட்டம் பல தடைகளை உடைத்திருந்தாலும் சாதியின்  சமுக தாக்கம் செல்வாக்குடன் நிற்கிறது என்றார்.
கர்பூரிதாகூர் முன்மொழிவுகள் பிற்பட்ட வகுப்பாரை கைதூக்கி சமுகத்தில் சமநிலைக்கு உயர்த்திடத்தான். புதிய சாதி ஒன்றின் மேலாதிக்கத்திற்கு அல்ல என அவர் தெளிவு படுத்தினார். முஸ்லீம்கள் சிலர் பீகாரில் பிற்பட்ட முஸ்லீம்  மோர்ச்சா என துவங்கியபோது அவர்களுக்கு அறிவுரை நல்கினார். இஸ்லாமில் இல்லாத சாதி பழக்கத்தில் சிக்கி தங்களது ஒற்றுமையை சிதைத்துவிடக் கூடாதென்றார். இதற்காக குரானின் பல பகுதிகளை அவர் மேற்கோள் காட்டினார்.
வளர்ச்சி குறித்தும் பழங்குடிகள் அதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்தும் அவர் கட்டுரைகள் தந்தார். அவர்களின் காலம் காலமான வாழிடம் , காடுகளின் பொருளாதாரம் , பழக்கங்கள் ஆகியவற்றின் அழிவாக வரும் வர்ச்சியை அவர்கள் எதிர்ப்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் ஜே எஸ். அவர்கள் சமுகத்தில் தனிசொத்துரிமை, அதன் அடிப்படையில் உற்பத்தி, சந்தை பொருளாதாரம் என்பதெல்லாம்  கிடையாது என்பதையும் நாம் உணரவேண்டும் என்கிறார்.
 கிரிட்டிக் எனும் இதழில் 2001ல் சோவியத் வீழ்ச்சி, சோசலிச கருத்தாக்கம் குறித்து அவர் நீண்ட கட்டுரை எழுதினார். In earlier times, the communists of india thought a non peaceful path or civil war unavoidable. The second congress of CPI in 1948 reiterated this path. But experiences of this path proved its fruitlessness and the communists slowly reoriented themselves for such transmission thro peaceful path. Emergence of CPI as the second largest party in the parliament in 1952 and its securing majority in Kerla in 1957 strngthened confidence in peaceful pathவன்முறை இல்லாத  அமைதி வழியில் மாற்றத்தின் சாத்தியப்பாடு பர்றி பேசுகிரார்.
நக்சல் இயக்கம் பர்றி பேசும்போது “A group of communists broke away from the mainstream communist movement and dogmatically advocated non peaceful path and civil wars. They advanced slogans like power flows thro the barrel of Gun, Not by ballots but by bullets. They tried to build liberated areas என்கிற விமர்சன் பார்வையை வைக்கிறார். அரசின் அங்கங்கள் எனப்படும் ராணுவம், அதிகாரவர்க்கம், போலீஸ் மற்றும் பலபடியிலான நிர்வாகம் போன்றவை மக்கள் நலனுக்கு உகந்த வகையில்  பயன்படுத்தப்படவேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கிறார். இடதுசாரி ஜனநாயக மாற்று அரசாங்கம்- அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உரிய மாற்றங்களுடன் என்பது குறித்தும் சொல்கிறார்.
1990ல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிப்படையாக கட்சி செய்து கொள்ளவேண்டிய மாற்றம் குறித்து விவாதிக்கிறார். ஜனநாயக மத்தியத்துவம் என்பதை அவர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார். If we relax the existing rule of democratic centralization and permit the minority to express its views  publicly, it will facilitate such discussion on a very wide scale. If the CPI relaxes the rules in the aforesaid manner, it may encourage other parties based on Marxism to do likewise. In a way it will help such parties to come close leading to ultimate unity of the communist movement, a goal that we cherish. The rigidities of the existing rules obstruct the process” என சோதிக்கப்படவேண்டிய மாற்றம் ஒன்றை கட்சியில் கோரினார் ஜே எஸ்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜகன்னாத் சர்கார் அவர்கள் ஏப்ரல் 8 2011 அன்று பாட்னாவில் மறைந்தார்.


Ref:
Articles by Various Professors and Party Leaders about Jagannath  sarkar
Selected Essays of Jagannath