Skip to main content

Posts

Showing posts from February, 2017

விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்

விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்                                         - ஆர் பட்டாபிராமன் State, Society and Socialism என்கிற தலைப்பில் விவேகானந்தரின் கருத்துக்கள் அவரது நூல் தொகையிலிருந்து சேகரிக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. கல்கத்தா அத்வைத ஆசிரமம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டனர். இப்புத்தகம் கேள்வி பதில் முறையில் அ மை க்கப்பட்டுள்ளது. அவரது நூல்தொகை ஆதாரம் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில் சகோதரி நிவேதிதா கருத்துக்களும், சுவாமி அவர்களின் ம றை விற்கு 15 ஆண்டுகள் பின்னர் உருவான சோவியத் லெனின் ஆட்சி குறித்தும் இதில் கருத்துக்கள் ஓரிரு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் அவர் நேரிடையாக தெரிவித்ததாக ஆதாரம் தரக்கூடிய எழுத்துக்களை எடுத்து புரிந்து கொள்ளவேண்டும். அவரது சிந்தனைகளை பின்பற்றி சொல்பவர்கள் எழுத்துக்களை பிரித்து அறிய வேண்டியுள்ளது. இப்புத்தகம் சமூகம்-அதன் அம்சங்கங்கள், வரலாறும் முன்னேற்றமும், அரசும் வர்க்க ஆட்சியும், சுரண்டல் வடிவங்கள், ஜனநாயகமும் சோசலிசமும், புரட்சியும் சமூக மாற்றமும் என 7 பகுதிகளில் விவாத வடிவ

விவேகானந்தர் பார்வையில் 2

II எங்கு போராட்டம் உள்ளதோ, எதிர்ப்புணர்வு இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வும் உயிரும் உள்ளது. ஒன்றுபடுத்திக்கொண்டேயிருக்கும் சக்தியும், வேறுபடுத்தும் சக்தியும் இயற்கையில் உள்ளன. இந்த இருசக்தி தன்மை இயற்கையின் ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்விலும் நிலவுகிறது. மனித வளர்ச்சி நாகரீகம் என்பது இ யற் கையை கட்டுப்படுத்துவதாகவே உள்ளது. மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இக்க ட் டுப்பாட்டை மேற்கொள்ள மாறுபட்ட மனித இனங்கள் முயற்சித்தன. தங்கள் மக்களின்மீது பேரன்பும், பிறர்மீது வெறுப்பும் என்பது தொழிற்பட்டது. பெர்சியா எ திர் ப்பில் கிரீஸ், கார்த்தேஜ்- ரோம்,  காபீர்- அரபியர், ஸ்பெயின் – பிரான்ஸ், பிரான்ஸ்- இங்கிலாந்து என ஒன்றை விஞ்சி ஒன்றின் முன்னேற்றம் எட்டப்பட்டன. இவர்கள் ஒன்றுபட்டும், வேறுபட்டு நின்று எ திர் த்தும் கொண்டனர். உலக வரலாற்றை பார்த்தால் ஒவ்வொரு கட்ட்த்திலும் ஒரு பெரும் ஆன்மா, அவரது சிந்தனைகளை பி ன் தொடர்ந்த மக்கள் என்பதை காண்கிறோம். மனிதர்கள் பட்டினியில்லாமல் உயிர்வாழவேண்டும் என்ற தே வை இயக்கிக்கொண்டே இருக்கி ற து. பிரா மண ர்கள் கற்பதுதான் சக்தி என்றனர். சத் தி ரியர் வாள் என் ற னர். வைஸ்யர

விவேகானந்தர் பார்வையில் 3

III  தனிநபர்- சமூக உறவுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். தனிநபரை வியஸ்தி (vyashti) என்கிறோம். கூட்டாக எனும்போது சமஸ்டி (samashti) என அறிகிறோம். வியஸ்திக்கு எந்த அளவு உரிமை, சமஸ்டிக்காக எந்த அளவிற்கு தியாகம் என்பது ஒவ்வொரு சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள். நவீன மேற்கு சமூகம் இந்த அலைகளில் அல்லாடுகிறது. சமூக மேலாண்மைக்காக தனிநபர்களின் தியாகத்தை சோசலிசம் என பேசுகிறோம். மேற்கு நாடுகளில் ’லிபர்ட்டி’ வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது. அதே நேரத்தில் வலுத்தவர் வாழவும் இளைத்தவர் வீழவும் மேற்கு ஜனநாயகம் வழிவகுத்துள்ளது- அரசின் பெயரில் மக்கள் சுரண்டப்பட்டு சிலர் செல்வந்தர் ஆகின்றனர் என்கிற பார்வையை விவேகானந்தர் வைக்கிறார். இதை அவர்கள் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட ஆட்சி, நாடாளுமன்றம் என்றெல்லாம் அழைக்கின்றனர் என கேலி செய்கிறார். அனார்க்கிச தாக்கம் அவரிடம் இருந்திருக்கலாம். சோசலிசத்தில் நன்மை- தீமைகள் என அவர் விவாதிக்கிறார். (இப்பகுதிக்கு நூல்தொகை காட்டப்பட்டுள்ளது) அனைவருக்கும் கல்வி, சில வசதிகள் கிடைக்கும். ஆனால் மக்கள் எந்திரங்களாக்கப்பட்டுள்ளனர். சுய அறிவுத்திறனற்று இரயிவே என்

E M S தோழர் நம்பூதிரிபாட்

E M S Namboodripad            தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாட்                           -ஆர் பட்டாபிராமன் நம்பூதிரிபாடும் மினுமசானியும் நாகபுரியிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் செயற்குழுவை முடித்துவிட்டு ஆந்திரா திரும்பினர் . அங்கு காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது . அதில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர் பசவபுன்னையா மசானியை கேள்விக்கணைகளால் துளைத்துக்கொண்டிருந்தார் . 1935 அக்டோபரில் காங்கிரஸ் கமிட்டி சென்னையில் நடந்தபோது ராயிஸ்ட்கள் , காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என அனைவரும் ராடிகல் மாநாடு ஒன்றை நடத்தினர் . அதில் கிருஷ்ணன்பிள்ளை , நம்பூதிரி , சுந்தரையா போன்றவர்கள் பங்கேற்றனர் . அப்போதுதான் நம்பூதிரி அவர்களுக்கு   கம்யூனிஸ்ட்களுடன் விவாத தொடர்பு ஏற்படுகிறது. இத்தொடர்பு குறித்து அவர் ஜெயபிரகாஷ் அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் கட்சி உறுப்பினர் என்பதில் ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால் அவ்வாறு ஆனதை அவர் தெரிவிக்கவில்லை  டாக்டர் ஹரிதேவ் சர்மாவிற்கு அளித்த பேட்டியில்  இஎம்எஸ் மேற்கூறிய நினைவை பகிர்ந்துகொள்கிறா