Skip to main content

காந்தி பற்றிய புத்தகங்கள்

சில தினங்களுக்கு முன்பு வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்க பத்திரிக்கையாளர் எழுதிய புகழ் வாய்ந்த காந்தி வாழ்க்கை புத்தகத்தையும், பிரஞ்சு சிந்தனையாளர் ரொமய்ன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகத்தையும் படிக்க முடிந்தது. ரொமெய்ன் ரோலந்த் எழுதி ஜெயகாந்தன் மொழிபெயர்த்த வாழ்விக்க வந்த காந்தியை சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்க வாய்ப்பு கிடைத்து. வின்சென்ட்  ஷீன்  புத்தக மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. தோழர்கள் பால்சாமி, மோகன் போன்றவர்கள் இம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் அவற்றை வாங்கி சென்றனர்காந்தி குறித்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் தமிழ் வாசகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக இப்புத்தகங்கள் அதிகம் சென்றிருப்பது பாராட்டிற்குரியது. இம்முறை தரம்பால் எழுதிய காந்தியின் தமிழ் பதிப்பும் அதிகம் போயுள்ளது. வேறு முக்கிய இருவர் எனில் ஆண்ட்ருஸ் எழுதியது, லூயி பிஷர் எழுதியதையும் சொல்லலாம்இந்தியாவில் இன்று சுதந்திரமாக வாழும் ஒவ்வொருவரும் காந்தி குறித்த நேரடியான சுய வாசிப்பு சிலவற்றையாவது மேற்கொள்ளவேண்டும். அவர் குறித்த விமர்சன  புத்தகங்களும் ஏராளம். மார்க்சியர்கள், அம்பேத்கரியர்கள் புத்தகங்கள் மூலம் அவற்றை பெறமுடியும்.




கடந்த வாரம் காந்தியின் கடித முறையில் அமைந்த GITA DISCOURSES படித்தேன்.இந்த சிறிய புத்தகத்தை (80 பக்க அளவிலான சிறு வடிவ புத்தகம்) தொலைதொடர்பு  தொழிற்சங்க தலைவர் தோழர் வள்ளிநாயகம் எனக்கு கொடுத்திருந்தார். குஜாராத்தி மொழியில் கீதை குறித்து காந்தி எழுதியது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என சபர்மதி ஆசிரம நண்பர்கள் தெரிவிக்க , காந்தியடிகள் அவற்றை எளிமைபடுத்தும் முயற்சியில் சிறையிலிருந்து கடிதம் வாயிலாக 18 அத்தியாயங்களையும் விளக்கினார். அவை குஜராத்தியிலிருந்து ஆங்கில வழியில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் தோழர் வள்ளியால் எனக்கு கிடைக்கப்பெற்றது. அவருக்கு எனது நன்றி

இதற்கு முன்னரே தேவ்தத் எழுதிய நவீன கீதை விளக்கம், பங்கிம் சட்டர்ஜி எழுதிய கீதை கட்டுரைகள் சில, பாரதியார் தமிழில் எழுதிய கீதை விளக்கம் போன்றவற்றை படிக்க முடிந்தது. தோழர்கள் திலிப் போஸ் ( ரஜினி பாமிதத் சீடர்சர்தேசாய் இணைந்து எழுதிய மார்க்சியமும் கீதையும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த நினைவு. அப்புத்தகம் எங்கு உள்ளது என தெரியவில்லை. சென்னையில் வீட்டில் தென்படவில்லை. இதே போல் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, திலகர், விவேகானந்தர், அரவிந்தர்கோசாம்பி போன்றவர்களும்- வீரமணி போன்றவர்களும் கீதையை  மிக புகழ்ந்தும்- விமர்சித்தும் எழுதியுள்ளனர். கீதை குறித்து 2000 பக்கங்கள் படிப்பதற்கு என்னிடமே இருக்கிறது. இந்திய சமுகம் மீது அதன் தாக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது. இஸ்லாமிய சிந்தனையாளர் ஒருவரின் புத்தகம் ஒன்றையும் கீதை குறித்து பார்த்தேன். நாத்திக சிந்தனையாளர்கள் சிலர் எழுதிய விமர்சனங்களும் கட்டுரைகளாக பார்க்கமுடிகிறது. நேரம் - தாகம் உள்ளவர்கள்  தொடர்ந்து காலத்திற்கேற்ப சில ஆய்வுகளை   கூடுதலாக செய்ய இயலும் என கருதுகிறேன்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு