பேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு புத்தக வடிவில் தமிழ் இலக்கியத்தில் அறம் - நீதி - முறைமை என்பதாக வெளியிடப்படது . முதல் வால்யூம் 367 பக்க அளவில் அய்ந்திணைப் பதிப்பக விற்பனையாக வந்தது . படித்துக்கொண்டிருக்கிறேன் .. அதிலிருந்து பிடித்தவை ... காமஞ் சான்ற கடைகோட் காலை ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே செய்தவற்றை இனி செய்யவேண்டியதில்லை என உணர்தல் - அடுத்த நம் வாரிசுகளிடம் அதை விடுதல் - நெஞ்சினால் துறத்தால் என்கிறார் ஆசிரியர் மணிவாசகரின் இப்பாடல் அற்புதமானது புல்லாகி பூடாகிப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பரவையாய் பாம்பாகிக் கல்லய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் எம்பெருமான் மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை - பயன்படும் இடம் பொதுவாழ்க்கை - வாழும் இடம் தனிவாழ்க்கை மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்