Skip to main content

Posts

Showing posts from May, 2016
பேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு புத்தக வடிவில்    தமிழ் இலக்கியத்தில் அறம் - நீதி - முறைமை என்பதாக வெளியிடப்படது . முதல் வால்யூம் 367 பக்க அளவில் அய்ந்திணைப் பதிப்பக விற்பனையாக வந்தது . படித்துக்கொண்டிருக்கிறேன் .. அதிலிருந்து   பிடித்தவை ... காமஞ் சான்ற கடைகோட் காலை ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே            செய்தவற்றை இனி செய்யவேண்டியதில்லை என உணர்தல் - அடுத்த நம் வாரிசுகளிடம் அதை விடுதல் - நெஞ்சினால் துறத்தால் என்கிறார் ஆசிரியர் மணிவாசகரின் இப்பாடல் அற்புதமானது புல்லாகி பூடாகிப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பரவையாய் பாம்பாகிக் கல்லய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் எம்பெருமான் மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை - பயன்படும் இடம் பொதுவாழ்க்கை - வாழும் இடம் தனிவாழ்க்கை மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்
என்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்ற நிலை இருந்து வந்தது . மண்டை காயக்கூடிய மார்க்சிய எழுத்துக்களை மட்டும்தான் பழக்கம் காரணமாக படிக்க முடியுமோ என்ற நிலை ..  சில நண்பர்கள் என்னை Raw எனக்கூட விமர்சித்த காலமுண்டு .. சில இலக்கிய எழுத்துக்களை தற்போது படிக்க முடிகிறது . தக்கையான சாதாரணமாக புரிந்து கொள்வதற்கு எந்த உழைப்பும் தேவைப்படாத சாவி அவர்களின் என்னுரை 101 பக்க தொடர் கட்டுரைகள் - வார இதழில் வந்து புத்த்கமாக மாறியதொன்று .. ஒரே மணியில் படிக்க முடிந்தது . கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னுரை .. ராஜாஜி , சதாசிவம் , பெரியார் , காந்தியென மிகச் சாதாரண பதிவுகள் . கண்டிப்பாக   படிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டிய புத்தகமாக படவில்லை .
26-5-16 கம்பராமாயணம் இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை தந்திருக்கிறேன் 69. கலம் சுரக்கும் , நிதியம் ; கணக்கு இலா , நிலம் சுரக்கும் , நிறை வளம் ; நல் மணி பிலம் சுரக்கும் ; பெறுதற்கு அரிய தம் குலம் சுரக்கும் , ஒழுக்கம் - குடிக்கு எலாம் . குடிக்கு   எலாம் - கோசல நாட்டு மக்களுக்கெல்லாம் ; நிதியம் கலம் சுரக்கும் -  செல்வத்தைக்   கப்பல்கள் கொடுக்கும் ; நிலம் கணக்கு இலா நிறை   வளம்   சுரக்கும் -  நன்செயும்   புன்செயும்   ஆகிய   நிலங்கள் அளவற்ற   நிறை   வளத்தைக்   கொடுக்கும் ; பிலம் நல் மணி சுரக்கும் - சுரங்கங்கள்   நல்ல   இரத்தினங்களைக்   கொடுக்கும் ; பெறுதற்கு அரிய தம் குலம்    ஒழுக்கம்   சுரக்கும் -  பெறுவதற்கு   அரியதாகிய   குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும் 70 கூற்றம் இல்லை , ஓர் குற்றம் இல்லமையால் ; சீற்றம் இல்லை , தம் சிந்தனையின் செம்மையால் ; ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால் , ஏற்றம் அல்லது , இழி