Skip to main content

Posts

Showing posts from May, 2017

தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Movement and Secularism

தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும்                                                              -ஆர். பட்டாபிராமன் காலனிய எதிர்ப்பில் எழுந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் சில முக்கிய கருதுகோள்களை உட்கிரகித்துக்கொண்டே வளர்ந்தது. விடுதலை எழுச்சிக்கு மதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் ஒற்றுமை அதன் அவசரத்தேவையாக இருந்தது. கிறிஸ்துவத்தைவிட இந்து, இஸ்லாம் மதங்கள் எவ்வகையிலும் குறைந்தவை அல்ல என்கிற உரையாடல்  இருந்திருக்கலாம். ஆனால் முழுமையான காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை கிறிஸ்துவத்திற்கு எதிரான சொல்லாடலாக தேசிய இயக்கம்  மாற்றவில்லை. தேச கட்டுமானம்,  இந்து- முஸ்லீம் ஒற்றுமை, விடுதலைக்கு பின்னர் ஜனநாயக முறையில் அரசாங்கம், வலுவான இந்திய அரசாங்கத்தை உருவாக்கி வளர்த்தல்,  மதசார்பின்மை- வழிபாட்டு சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம் அதன் நோக்கங்களாக இருந்தன. இவற்றில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களுக்கு ஒத்த  கருத்தும் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டதிலிருந்து கிலாபத் இயக்கம் தவிர   மற்ற காலங்களில் மத கோரிக்கைகளை விடுதலை இயக்க தலைவர்கள் பொதுவாக முன்னெடுக

Kindle E Book

 பட்டாபி அவ்வப்போது எழுதிய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் பற்றிய 9 கட்டுரைகள்  'இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள்'  (Fore Runners of Communist Movement) KIndle E Book ஆக நிர்மலின் உதவியுடன் வெளியாகியுள்ளது.  அமேசான் கிண்டில் ஸ்டோர்களில் இ- புக்காக இதை பெறமுடியும். கிண்டிலில் வாங்கி தரவிறக்கம் செய்திட விலை ரூ 99. கிண்டில் அன்லிமிடெட் சந்தா உடையவர்கள் இதை இலவசமாக தரவிறக்கம் செய்து படித்துவிட்டு கிண்டில் ஸ்டோரிடம் ( நூலக புத்தகம் போல) திரும்ப கொடுத்து விடலாம்.  கிண்டிலில் பட்டாபியின் முதல் புத்தகம்  பகவத்கீதை பன்முககுரல்கள். 138 பக்கங்கள் - 946 KB பைல்  Rs 49.  இரண்டாவது புத்தகமான இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள் 143 பக்கங்கள்- 1554 KB . பைல்  Rs 99.  Amazon.in   authorதேடலில்  புத்தக விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகளுக்கு பட்டாபி எழுதிய எளிய முன்னுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.                      கம்யூனிச இயக்க முன்னோடிகள் விடுதலை இயக்க காலத்தில் சோவியத்  புரட்சியின் தாக்கத்தில் வெளிநாடுகளில் சென்ற புரட்சிகரவாதிக ளும் , இந்திய இளைஞ

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year of Formation of Madras Labour Union)

மெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year of Formation of Madras Labour Union)                                                                  - ஆர்.பட்டாபிராமன் இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் என பெயரும் புகழும் பெற்ற மெட்றாஸ் லேபர் யூனியன் (எம் எல் யு) பி அண்ட் சி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கம் துவங்கிய நூறு ஆண்டுகளை நாம் நம் காலத்தில் காண்கின்றோம். 1918 ஏப்ரல் 27 அன்று சங்கம் துவங்கியதாக B P வாடியா பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டத்தில்  அறிவித்தார். I propose that we should form a little association to be called  the Madras Labpur Union. சங்க சட்டங்கள் என்ன, சந்தா எவ்வளவு என முடிவு எடுங்கள். முதலில் ஆயிரக்கணக்கானோர் சேரமாட்டார்கள் சில நூறில் துவங்குவோம். . எண்ணிக்கை என்பதைவிட குவாலிட்டி மிக முக்கியமானது. உங்கள் நலன் உங்கள் கையில்தான் உள்ளது. அரசாங்கம் செய்யாது. தலைவர்கள் கூட செய்யமுடியாது. பிராம்மணர்கள், பிராம்மணர் அல்லாதவர், நிர்வாகம், அரசாங்கம் என எதற்கும் depend ஆகாமல் உங்களை நம்பி செயலாற்றுங்கள் என அவர் உரை நிகழ்த்தினார். 1850 களிலேயே