https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, December 30, 2015

டிசம்பர் 29 அன்று விருதுநகரில் மிக முக்கிய கருத்தரங்கம் ஒன்றை CPI 90 ஆண்டுகள் நிறைவின் முகத்தான் நடத்தப்பட்டது. தமிழகத்தில் போற்றப்படவேண்டிய இரு ஆளுமைகளான சிங்காரவேலர், ஜீவா அவர்களின் பங்களிப்பை அவர்களின் முழு எழுத்துக்களை தங்களது கடும் உழைப்பால் தொகுத்த புலவர் வீரமணி மற்றும் பேரா அரசு ஆகியோர் முதன்மை உரையாற்றினர்.தோழர்கள் தோதாத்ரி, பொன்னீலன், ஆனந்தகுமார், ராஜா, சுதாகர்ரெட்டி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். சிங்காரவேலர், ஜீவா ஆகியோருடன் பெரியார் என மூன்று ஆளுமைகள் குறித்தும் அம்பேத்கார் குறித்தும் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேரா அரசு பெரும் முயற்சியுடன் தனது உரையை focused ஆக தந்தார்.

 நிகழ்த்தப்பட்ட உரைகளில் சிங்காரவேலர் குறித்த பதிவுகளில் மிக முக்கியமாக விடுபட்டதாக நான் கருதுவது அவரின் புரிதலான நமது சோசலிசம் போல்ஷ்விசம் அன்று- வன்முறை வழிப்பட்டதன்று- ஜனநாயக தன்மையுடனான இந்துஸ்தான் பஞ்சாயத்து.. பஞ்சாயத்துவழிப்பட்ட மக்கள் நிர்வாகம் என்பதும், மனித முன்னேற்ற திட்டத்தில் சுத்தம்- ஆரோக்கியம் குறித்த  இணைப்பும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிக முக்கியமானதாக இருந்தது. பேரா அரசின் மைய செய்தியாக பெரியார் கொள்கை நிலைப்பாடுகளில் இடதுசாரிகள் விமர்சனம் மோதல் என்பது நடைமுறை வேறுபாடு என புரிந்து கொள்ளப்படாது மோதலாகி இரு இயக்க வீழ்ச்சிக்கும் கூட வழியானது என்பதாக இருந்தது.

Saturday, December 26, 2015

Now two books in PDF format with me one Imran Khan's Pakistan- A Personal History and the other one is The Idea Of Pakistan by Stephen Philip Cohen American Political Scientist.  I Just started viewing both the books. I hope that Imran will go fast because of its bio mix with pak political history. Regarding Tamil reading,  I started Chilambu Neri of Kundrakudi Adigalar. His  inimitable style itself enthralls you. It may  go fast. The first pak book is 260 pages and the second one 400 pages. I hope that I can do with them atleast two months.. definitely more than that even.  Just 70 pages left in John Kaey.. it is more than 600 pages book. Hindu Alternate History stranded in its 25th percetage location itself.. I shall try to have a dialogue with that and finish but when I don’t know..

I am just breaking my head why communists fail to get the confidence of people in the parliamentary democracy.. whether the theory that we celebrate is not combatible with parliamentary democracy..or the fraudulent moneybag system  is powerful. why communists not able to get even a reasonable space in the medias.. it is just media bias only or any intellectual lacking on our part.. why our highlevel leaders not able to occupy the wide spaces of various newspaper columns either in Hindi or in English

Monday, December 21, 2015

எனது விடுப்பு ஏன் இவ்வாறு  ஆனது என தெரியவில்லை.. மறுபடியும் சுகமின்மை.. துணைவிக்கும்.. அவதியில் இருவரும்..      பிடித்த வேலை எதுவும் செய்யமுடியாமல் போன நாட்களாக
18 புராணங்கள் போய்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு இல்லை. சஞ்சீவியின் சிலப்பதிகார பதிப்பு குறிப்பு, சுவடிகளிருந்து அச்சேற்ற அப்பெரியவர்கள்  செலுத்திய உழைப்பு கண்கலங்கியது. சமீபத்தில் நான் அறிந்த மற்றுபொரு அமைதியான கடும் உழைப்பு கங்குலியின் மகாபாரதம்  அருட்செல்வபேரரசுவின் தமிழ் ஆக்கம். அந்த மனிதர் அசுர உழைப்பை செலுத்தி வருகிறார். அவர்கள் குடும்ப பெண்கள் அற்புத்மாக ஆடியோ செய்துள்ள்னர். எதையும் எதிர்பாரா அசுர உழைப்பு மகத்தானது.

Sunday, December 6, 2015

5-12-15 சென்னை சிரபுஞ்சி ஆனால்..புராணங்கள் விஷ்ணு புரண்டு படுத்தால் பிரளயம் என்கிறது. சென்னையில் லட்சக்கணக்கானவர் உடைமைகளை வீட்டை இழந்தனர்.  சென்னை மூழ்கியது என்ற நிலை காணப்பட்டு- இளைஞர் பட்டாளம், தன்னார்வ குழுக்கள், மீட்புக்குழுவினர் அரும்பாடுபட்டு ஏராள உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.. நியூஸ்சானல் 7, தினத்தந்தி டிவி, பாலிமர் பாராட்டிற்குரியது. நிரம்ப அலட்டிக்கொள்ளும் TimesNow, NDTV போன்றவை வருவதற்கு 4 நாட்கள் ஆனது. அரசியல் கட்சிகள் வழக்கம்போல் show business செய்ய முடிந்தது.
 வேடிக்கைப் பார்த்தவர்களில்/ ஏதும் செய்யாதவர்களில்  ஒருவனாக நானும் இம்முறை இருந்தேன். கடந்தகால திருவாரூர் வெள்ளப்பணிகளை  தோழர்களுடன்ஆபத்துக்களை பொருட்படுத்தாது செய்தவனா நான்? தோழர்கள் இல்லாமையால் சோர்ந்தேனா? 60 வயதுஎன்பதால் ஏற்பட்ட இயலாமையா?