https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, February 23, 2023

இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள்

 

           இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள்

இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள் ஆங்கிலத்தில்  காலவரிசைப்படி (664-1858) அவரால் எழுதப்பட்டுள்ளது. அவற்றை தொகுத்து Moscow Foreign Language Press  வெளியிட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கட்டுப்பாட்டில் இருந்த மார்க்சிய லெனினிய இன்ஸ்டிட்யூட் ருஷ்ய பதிப்பிற்கு பின்னர் ஆங்கில பதிப்பை 1947ல் இறுதிப்படுத்தி வெளியிட்டது.



632 என அந்தக்குறிப்பு நபிகள் மறைவுடன் துவங்கும். முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை காலவரிசையில்  சிற்சில வரிகளாகச் சொல்லும். இந்த இந்திய வரலாறு குறித்த மார்க்சின் குறிப்புகளை பலவேறு வரலாற்று புத்தகங்கள் வழி மார்க்ஸ் சேகரித்ததாக இதன் பதிப்பாளர்கள் சொல்கின்றனர். அதன் இறுதிக் குறிப்பு ஆகஸ்ட் 2, 1858 தேதியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2, 1858 ஸ்டான்லி பிரபுவின் இந்தியா பில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிழக்கிந்திய ஆட்சி முடிவுற்றுஇந்தியா ராஜதானிவிக்டோரியா மகாராணி ஆட்சிக்குள் வந்தது. இங்கு மார்க்ஸ்  India Province  என்று பயன்படுத்தியிருப்பார்.

இந்த சிறு கட்டுரையில் மார்க்ஸ் எழுதியவற்றிலிருந்து கஜினி படையெடுப்பு, துக்ளக் ஆட்சி, பாபர்- அக்பர்- அவுரங்கசேப், சிவாஜி என்கிற காலத்தின் குறிப்பை மட்டும்  கொடுத்துள்ளேன். சுவாரஸ்யமான வரலாற்றுத்தகவல்கள்.

எனது பள்ளிக்கால சரித்திர புத்தகம் கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தாக எனக்குச் சொல்லித்தந்தது. மார்க்ஸ் தன் இந்த குறிப்பில் கஜினியின் 12 படையெடுப்புகளைத் தருகிறார். கஜினி சுல்தான் 1001ல் லாகூர் மீதான படையெடுப்பு அவரின் முதல் படையெடுப்பு. லாகூர் ராஜா ஜெயபால் வீழ்த்தப்பட்டார். பஞ்சாபின் பதிந்தாவரை அப்போது கஜினி வந்துள்ளார்.  1003, 1005, 1008 என அடுத்த படையெடுப்புகள் நடந்தன. 1008ல் ஜெயபால் மகன் ஆனந்த் பால் கஜினியை எதிர்த்து நின்றுள்ளார். மார்க்ஸ் இங்கு இவ்வாறு குறிப்பை எழுதியுள்ளார்.  Hindus fought fanatically; Mahmud defeated them, sacked temple of Nagarkot.

கஜினியின் அடுத்த படையெடுப்பு 1010, 1011களில் நடந்துள்ளன. 1011ல் கஜினி தானேஷ்வர் கோயிலை கைப்பறிய செய்தியை மார்க்ஸ் தருகிறார். 1013, 1014 கால படையெடுப்புகள் காஷ்மீர் மீதாக இருந்தன என மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.  கஜினியின் 9 ஆம் படையெடுப்பு 1017 குளிர்காலத்தில் பெஷாவர்- காஷ்மீர் வழியாக கனாஜ் நோக்கியிருந்ததாம். 1022லேயே அவர் இருமுறை படையெடுத்து வந்தாராம்.

 1024தான் மார்க்ஸ் கூறும் 12 ஆம் படையெடுப்பாண்டு. சோம்நாத் கொள்ளை என்கிற வரலாற்று முக்கிய செய்தியை நாம் காணமுடியும். கஜினி மூல்தான் சிந்து வழியாக குஜராத்தை அடைகிறார். அதன் தலைநகரான அங்கல்வாரை கைப்பற்றியதாக மார்க்ஸ் எழுதியிருப்பார். ஆஜ்மீர் ராஜாவின் பிரதேசங்கள் அழிக்கப்பட்டதாகவும், ராஜபுத்திரர்கள்  gallantly defended  என்கிற வார்த்தைகளை நாம் காண்கிறோம். ஜெர்மனியில் மார்க்ஸ் என்ன பதத்தைப் பயன்படுத்தினார் எனத் தெரியவில்லை. கஜினி அத்தலைநகரில் ஓராண்டு இருந்தாராம். முன்பெல்லாம் படைத்தாக்குதல், கைப்பற்றல் திரும்ப ஊர் திரும்புதல் என்பது இங்கு மாறுவதைக் காண்கிறோம். இதை மார்க்ஸ் குறிப்பிடவில்லை. இந்த படையெடுப்பில்தான் சோமநாத் கோயில் கைப்பற்றப்பட்டதாக மார்க்ஸ் எழுதியிருப்பார்.

 ஏப்ரல் 29, 1030ல் கஜினி மறைந்த செய்தியையும் அவரது அவையில் பிர்தெளசி எனும் புகழ்வாய்ந்த மேதை இருந்ததையும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கஜினி படைப்பிரிவில் துருக்கிய  அடிமைகள் இருந்ததாகவும், அராபியர் கனவான்களாக  இருந்ததாகவும் சொல்கிறார். மதம், நீதி, சிவில் ஆட்சி முறை அனைத்தும் பெர்ஷியர் கட்டுப்பாட்டில் இருந்ததையும் அவர் எழுதியுள்ளார்.

முகம்மது துக்ளக் பற்றி 1325-1351 கால குறிப்பில்  ablest prince of his time, he ruined himself by his own much too extensive plans எனச்சொல்லிவிட்டு சில மோசமான விளைவுகளைத் தந்த அவரது திட்டங்கள் பற்றி மார்க்ஸ் சொல்லியிருப்பார். கஜான காலியாகும் போதெல்லாம் கொடும் வரிகளைப் போட்டார் என்கிறார். Most  ruinous exactions on the people- taxes heavy  என மார்க்ஸ் எழுதுவதைக் காண்கிறோம்.

1421 ஆண்டின் குறிப்பில் பாமினி அரசு தெலங்கானா ராஜாவை வாரங்கலிருந்து வெளியேற்றினார் என்ற செய்தியை மார்க்ஸ் தந்திருப்பார். தெலங்கானா என்பது   Northern Circars, Hyderabad- Balaghat, carnatic and the language spoken Telinga  என அவர் குறிப்பிடுவதைக் காண்கிறோம். தெலுங்கு என்பதை அப்படி குறித்துள்ளார். ராஜமுந்திரி, மசூலிப்பட்டினம், காஞ்சிபுரத்திலும் தெலுங்கு மொழி பேசப்பட்டதாக அவரது குறிப்பு சொல்கிறது.

பாபர் என அவர் ஆரம்பிப்பது 1526-1530 காலத்தில். பாபர் துவக்கிய முகலாயர் ஆட்சி 1526- 1761 என 235 ஆண்டுகள் குறிக்கப்பட்டுள்ளது. பாபர் டிசம்பர் 26, 1530ல் உடல்நிலை சரியில்லாமல் டெல்லியில் மறைந்தார். அவரது விருப்பப்படி அவரது உடல் காபூலில் அடக்கமானது என மார்க்ஸ் சொல்வார். ஹீமாயுன் பானிபட் யுத்தம் பற்றியெல்லாம் சிறு குறிப்புகளை மார்க்ஸ் எழுதியிருப்பார்.

அக்பர் 1560ல் ஆட்சிக்கு வருகிறார். 18 வயது அக்பரின் ஆளுகை டெல்லி, ஆக்ரா, பஞ்சாப் சுற்றி இருந்தது. பின்னர் ஆஜ்மீர், குவாலியர், லக்னோ, மால்வா என அவர் கைப்பற்றினார். அக்பரின் சகோதரர் ஹக்கீம் காபூலைப் பிடித்தார். 1568ல் ராஜ்புதன ஆட்சிகளை அக்பர் கைப்பற்றினார். இங்கு மார்க்ஸ் குறிப்பில்

 Akbar married two Rajput queens in order to have peaceful connection with Jaipur and Marwar .

அக்பர் மீர்சாக்களை வென்று குஜராத் பகுதிகளை எடுத்துக்கொள்கிறார். மீர்சாக்கள் கலவரங்களை அவர் ஒடுக்கினார் என மார்க்ஸ் குறிப்பு செல்கிறது. 1575ல் ஒரிஸ்ஸா, வங்கம் அக்பர் வசமாயின. பீகாரும் அவரின் ஆளுகையில்.

1582-85 காலக்குறிப்பில் மார்க்ஸ் எழுதியிருப்பதாவது

 Akbar settled the empire- was different in religious matters, tolerant; his chief religious literary advisors were Faizi and Abdul Fazl. Faizi translated old Sanskrit poems, including Ramayana and Mahabharatha. Akbar brought a Roman Catholic Portuguese Priest from Goa, Faizi also translated the Evangelists. Indulgence towards the Hindus; Akbar only insisted on abolition of Suttee. He abolished Jeziah- capitation tax.

அக்பரின் வருவாய் நிர்வாகம் பற்றியும் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். 15 ராஜதானிகளில் வைஸ்ராய்கள் அமர்த்தப்பட்ட நிர்வாகம்.  Mir-i-Adl என்கிற தலைமை நீதிபதியின் கீழ் நீதித்துறை-  represents will of the Sovereign, hearing the conclusion and passing sentence. Akbar reformed the Code of Punishments partly on Mohammedan Custom, partly on the laws of Manu  என்கிற முக்கிய விஷயத்தை மார்க்ஸ் தன் குறிப்பில் தருவதைக் காண்கிறோம்.

1657 அவுரங்கசேப் பற்றிய குறிப்பாகும். ஷாஜஹானுக்கு தாரா ஷிகோ, ஷுஜா, அவுரங்கசேப், முரத் என்கிற நான்கு புதல்வர்கள். தாரா ஒரு பகுதி வைஸ்ராய், முராத் குஜராத் பொறுப்பு, ஷுஜா வங்கப்பொறுப்பு கவர்னர், அவுரங்கசேப் ஹைதராபாதை கைப்பற்றினார். ஷாஜகான் உடல் சுகவீனத்தால் தாராவிடம் பொறுப்பு என்றனர். ஷுஜா கூடாது என்றார். அவுரங்கசேப் இஸ்லாமின் பெயரால் எனச் சொல்லி தாராவையும், ஷுஜாவையும் போட்டியில் பின் தள்ளி அவர் முன்னேறினார். தாராவையும் ஷாஜகானையும் அவுரங்கசேப் சிறை வைத்தார்.  A lamgir  என்ற பட்டத்துடன் அரியணை ஏறிய  அவுரங்கசேப் கதையை மார்க்ஸ் மிக சுருக்கமாக குறிப்பெடுத்துள்ளார். தாரா ஷிகோ பல நகர்களுக்கு தப்பிச் சென்றாலும் இறுதியில் கொல்லப்பட்டார். டெல்லி கலவரங்களை அவுரங்கசேப் ஒடுக்கினார்.

ஸ்ரீநகர் அரசன் தாராவின் புதல்வன் சுலைமானை விடுவிக்க அவர் விஷம் வைத்து அவுரங்கசேப்பால் கொல்லப்பட்டதாக மார்க்ஸ் குறிப்புச் சொல்கிறது. சகோதரன் முராத்தும் கொலை செய்யப்பட்டார்.

1660-70 என்கிற குறிப்பில் சிவாஜி பற்றி மார்க்ஸ் எழுதுகிறார்.  He acquired habits of a robber, which he practiced early. He seized his father's own territory, captured many forts with his capital Kalyan.

1665  சிவாஜியின் செயல்களால் ஆத்திரமடைந்த அவுரங்கசேப் படையெடுத்தார்.  சிவாஜியுடன் உடன்பாடு ஏற்பட்டது. சிவாஜி மராத்தியர்கள்  as nation  என்ற கட்டுமானத்தை செய்தார். சிவாஜி தனது பிரதேச விரிவாக்கத்தை செய்தார்.

1677ல் சிவாஜி கர்நூல், கடப்பா வழியாக மதராஸ், வெல்லூர், ஜிஞ்சி வரை வந்தார்.. 1680ல் சிவாஜியிடம் மைசூர், தஞ்சாவூர் வந்ததையும் மார்க்ஸ் குறிப்பாக எடுத்து வைத்துள்ளார். 1680 சிவாஜி மரணமடைகிறார். அவரது மகன் சாம்பாஜி பொறுப்பேற்கிறார். 1689ல் சாம்பாஜி பிடிபட்டு அவுரங்கசேப் ஆட்சியில் தலைகொய்யப்படுகிறார். பிப்ரவரி 21, 1707 தனது 89ஆம் வயதில் அவுரங்கசேப் மறைந்தார். தனது மகன்கள் எவரும் சாகும்போது அருகே இருக்கவிடவில்லை என்ற குறிப்பையும் மார்க்ஸ் எழுதிவைத்துள்ளார்.

மார்க்ஸ் 170 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முகலாயர் ஆட்சியில் நில உறவுகள் குறித்தும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வம்கொண்டு, இந்தியா குறித்து கிடைத்தவற்றையெல்லாம், குறிப்பாக அதன் வரலாற்றை மிக ஆர்வத்துடன் படித்துள்ளதை  இந்த குறிப்புகள் நமக்கு காட்டுகின்றன.

இந்தியாவில் வாழும் நம் தலைமுறையே இந்தியா குறித்து முனைப்புடன் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைக் காட்டாத நிலையில், அந்த மனிதர் அன்று அவ்வளவு ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள தவித்தது அவர் மீதான மரியாதை கூட்டாமல் இருக்காது.  மார்க்ஸ்க்கு வணக்கம்.

22-2-2023                                                                       - ஆர்.பட்டாபிராமன்

 

Monday, February 20, 2023

சிக்கலைப் புரிதலும் அதை தீர்த்தலும்

 

சிக்கலைப் புரிதலும் அதை தீர்த்தலும்

பென்ஷன் மாற்றம் எவ்வழியில் என்கிற இருவேறு நிலைப்பாடுகளில் ஒரு பஞ்சாயத்து வந்ததை நான் சமீபத்தில் பார்க்கிறேன். எனக்கு கோவைத் தோழர் எஸ் எஸ் ஜி 50 நிமிட ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார்.

 தஞ்சாவூர் ஓய்வூதியர் மாநாட்டில் அவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் தோழர் DG பேசிய உரையது. விரிவான விளக்கங்களுடன் அவர் உரையாற்றியுள்ளார். 7th CPC அடிப்படையில் 2.515 ( 14.55 %) பிட்மெண்ட் கேட்பதன் நியாயத்தையும், அமைப்பின் தலைவர்களுக்கு இருக்கும் விஷன் - பார்வை தீர்க்கம் குறித்தும் அதில் சொல்லியுள்ளார். உரையை முடிக்கும்போது ஒருவேளை கோரிக்கை ஏற்கப்படாமல் 10 சதமோ அல்லது 5 சதமோ DOT கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு தொடர்ந்து 7th CPC Fitmentக்கான நியாயத்திற்கு போராடுவோம் என்ற வாக்குறுதியையும் அவர் தந்துள்ளதைக் கேட்டேன். இப்படி accept what is given and fight for the improvement of the rest  என்கிற தோழர் குப்தா பார்வையை ஏற்ற பல தோழர்கள்  இந்த நிலைப்பாட்டை வரவேற்கவே செய்வார்கள். அதை வரவேற்கலாம்.

அந்த உரையில் சில misunderstanding  இருப்பதை சாதாரண ஓர் உறுப்பினர் என்ற வகையில் சுட்டிக்காட்ட விழைகிறேன். என் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவே அதைச் செய்கிறேன். தனிப்பட்ட வகையில் ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அமைப்பில் பணிபுரியும் முத்தியாலு , டி ஜி போன்றவர்கள் என்னைவிட மூத்தவர்கள்- அனுபவம் வாய்ந்தவர்கள்.

பிரச்னையின் முடிச்சு post 2017 ல்  உட்கார்ந்திருக்கிறது. இதனால்தான் டிலிங்க் சாத்தியமா என்ற விவாதமே முன்னர் நடந்தது. இப்போது அசோசியேசன்கள்- யூனியன்கள் கேட்ட அடிப்படையில் pension revision in the absence of pay revision  என்பதை அதன் வசதி கருதி DOT ஏற்று அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது.

 pre 2017 பென்ஷனருக்கு  ரிவிஷன் தருவதற்கு  போஸ்ட் 2017 காரர்களுக்கு தீர்வு என்ன என்ற கேள்வி இதில் லிங்க் ஆக வேண்டியுள்ளது. 2.515 போன்ற அதே பலனை அந்த போஸ்ட் 2017 காரர்கள் ஓய்வு பெறும் போது அப்படியே அந்தலாஸ்ட் பே டிரானில்’ வந்த பென்ஷனை பெருக்கி கொடுத்து விடலாம் என்ற தீர்வை  அமைப்பின் தலைவர் முன் வைக்கிறார். இதை நான் ஏற்கவில்லை என்பதல்ல பிரச்னை. அது சரியான தீர்வல்ல என்பதை நல்லவேளை DOT புரிந்துகொண்டு அவர்கள் வெளியிட்ட Methodolgyல்  அதிகாரிகள் தங்களின் சரியான புரிதலை தந்துள்ளனர்.

இதில் கவனம் பெற வேண்டிய முதல் அம்சம் எந்த தேதியிலிருந்து கோரிக்கைத் தீர்வை அனைவரும் வேண்டுகிறோம் என்பதுதான். அந்த தேதி pre 2017  பென்ஷனருக்கு 1-1-2017 என்ற தெளிவு எல்லோரிடமும் இருக்கிறது. அதே தேதியில் தான் post 2017 காரர்களுக்கும் என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. இதில் DOT தெளிவாக இருக்கிறது. post 2017 காரர்களுக்கும் பலன் 1-1-2017 லிருந்துதான்  என்பதை அது எழுத்து வடிவில் தந்துவிட்டது. இங்குதான் 3rd PRC நுழைவின் அவசியம்- அதன் ஊதிய நிலைகளின் தேவை உணரப்படுகிறது. இதில் புரிதல் அவசியமாகிறது. அதாவது ’pre 2017’ காரர்களுக்கு  pensionல் மாற்றம்   ’post 2017’ காரர்களுக்கு PAYல் மாற்றம் என்ற வகையில் தீர்வு.

7th CPCபடி பிட்மெண்ட்  எனச் சொல்பவர்கள் இரண்டாவது பி ஆர் சியில் செல்கிற ஊதிய நிலையிலேயே pre 2017- post 2017 காரர்களுக்கு ரிவிஷன் என்ற புரிதலுடன் பேசி வருவதைக் காண்கிறேன். ஆனால் இவர்கள் 3rd PRCன் பரிந்துரைப்படியிலான IDA Merger என்பதை ஏற்றுத்தான் ரிவிஷன் கோருகிறார்கள். அதாவது 2017க்கு முந்திய பென்ஷன்தாரர்களுக்கு 3rd PRC படி 1-1-2017 தேதி முதல், 119.5 சத இணைப்பு ஆகியவற்றையும் 7வது ஊதியக்குழுப்படி 2.515 ( 32 சத உயர்வு) என்பதையும் கோருகின்றனர்.

 போஸ்ட் 2017 என வரும்போது யார் யார் எப்பொழுதெல்லாம் வெவ்வேறு தேதிகளில் ஓய்வு பெறுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் ஓய்வு பெறும் தேதியிலிருந்து இந்த 2.515 மாற்றத்தை கோருகிறார்கள்.  போஸ்ட் 2017 காரர்களுக்கு இந்தப் பலனை ஏன் 1-1-2017 லிருந்து DOT  சொல்வது போல் கேட்காமல் அவர்களின் ஓய்வூதியராகும் வெவ்வேறு  தேதிகளிலிருந்து கேட்கும் தவறைச் செய்கிறார்கள்?

அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஊதிய மாற்றமின்றி வரும் Pre 2017 Pension Revision ஏற்படுத்தும் அனாமலியை   Post 2017 பென்ஷனர்களுக்கு அவர்களின் ஊதிய மாற்றம் வழிதான் தீர்க்க முடியும் என்பதே. அதுவும் 1-1-2017 அன்றே பலனைக் கொடுத்து தீர்க்கவேண்டும். 1-1-2017 அன்று போஸ்ட் 2017காரர்கள் அனைவரும் ஊழியர்களாக இருப்பர். ஊழியர் என்றால் அவர்களுக்கு ஊதியம்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே ஊதியத்தில் மாற்றம் செய்து அதை  (நிர்ணயிக்கப்பட்ட பென்ஷனை) தீர்க்கவேண்டும். DOT உத்தரவு வந்த பின்னரும் தொடர்ந்து ஊழியர்களாக இருந்து பென்ஷனராக மாறுபவர்களுக்கும் இந்தப் பலனை அவர்கள் ஊதியத்தில் மாற்றம் செய்து அவர்கள் பென்ஷனராகும் போது தரவேண்டும்.

ஊதிய மாற்றமின்றி பென்ஷன் மாற்றம் என்பது  DOT க்கு வசதியான ஏற்பாடானது. பி எஸ் என் எல் நுழைந்த ஊழியர்க்கு பென்ஷன் நிர்ணயிக்க 37 ஏ விதிகள் உள்ளன. ஆனால் அதன் பென்ஷன்தாரர்களுக்கு பென்ஷன்  மாற்றம் செய்ய  எந்த விதியும் இல்லை. ஊதியக்குழுவோ அல்லது ஊதியக்கமிட்டி பரிந்துரைகளோ இல்லை. இது DOTக்கு வசதியாக போனது.

ஊதிய மாற்றமின்றி பென்ஷன் மாற்றம் செய்ய DOT முன் வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதிய நிலைகள் தேவைப்படுகிறது. எனவே அவர்கள் 3rd PRC  படி 1-1-2017 முதல் பலன்கள், 119.5 % மெர்ஜர், ஊதிய நிலைகள் என்பதைக் கொண்டு ஊதிய மாற்றமே இல்லாமல் pre 2017 க்கு பென்ஷன் மாற்றத்தையும், போஸ்ட் 2017காரர்களுக்கு அதே தேதியில் அதே மெர்ஜருடன் ஊதியத்தில் மாற்றத்தை புதிய ஊதிய நிலைகளில் நோஷனலாகவும் செய்ய முன்வந்துள்ளனர்.

பிரச்னை NIL Fitment க்கு பதில் 3rd PRC  ன் எந்த பிட்மெண்டை எடுத்துக்கொண்டு பென்ஷன் ரிவிஷனை இறுதிப் படுத்துவது என்பதில் நிற்கிறது.

போஸ்ட் 2017ல் 1-1-2017 முதல் ஓய்வு பெற்று வருகிறவர்களுக்கும், இனி 2026 வரை  (அடுத்த மாற்றம் வருகிறவரை தொடர்ந்து 2026 தாண்டியும்) ஓய்வு பெறப்போகிறவர்களுக்கும் இந்த 1-1-2017 முதலான நோஷனல் பிக்சேஷன் வழியாக அனாமலியை  DOT  சாதுர்யமாக தீர்க்கப்பார்க்கிறது. இதனால்தான் 7th CPC  என்பதையோ  7th CPC scales என்பதையோ அதனால் எடுத்துக்கொள்ள முடியாமல் போகிறது.

 இந்த  pre - post  என்கிற லிங்க் தான் நமது ஆதாரமான அம்சம்.  37 ஏ எப்போதும் அது வந்த நாள் முதல் ’போஸ்ட்’ காரர்கள் – அதாவது ஊழியர்களாக இருப்பவர்கள் வழிதான் தன்னை அது நிலை நிறுத்தி பென்ஷன் உத்தரவாதத்தை தந்துகொண்டிருக்கிறது. தோழர் குப்தாவை இதற்கு நினைவு கூறாமல் இருக்க முடியாது.

 எந்த ஓர் அமைப்பிலும் அந்த அமைப்பிற்காக  உழைக்கக்கூடியவர்களையே அதன் உறுப்பினர்கள் பாராட்டியும் செவிமடுத்தும் இருக்க முடியும். அமைப்பில் அன்றாட வேலை செய்யாத என் போன்றவர் கருத்தை ஏற்க வேண்டும் என நான் வலியுறுத்த முடியாது. தெரிந்த கருத்தை சொல்வது அவசியம் என்பதால் சொல்லவேண்டியுள்ளது. அமைப்பில் பணியாற்றுபவர்கள் வெற்றி எந்த அமைப்பிற்கும் மிக முக்கியமானது. என் வாழ்த்துகள்!

14 hrs 20-2-2023     -   R. Pattabiraman

 

 

Friday, February 17, 2023

pension Revision

 

This piece is with regard to a letter addressed to the Secretary , Telecom by one of the Pensioners Associations dated 16th Feb, 2023.

 

I have nothing to comment upon their claim of ‘ one of the largest association’. But I need to express where I differ as an absorbed BSNL pensioner having entered BSNL thro 37 A with lakhs of employees of those days and retired , and employees continuing even today and beyond 2026.

 

I have been repeatedly telling, whether heard or unheard by my fellow travellers , that we the 37 A entrants are having our own inter connectivity and as long as as that connectivity prevails ( that will prevail till all the absorbed or most of the absorbed retires) the same yardstick should be applied to pre 2017 and post 2017 retirees from the same date of effect namely 1-1-2017.

 

This only is barring us to place our claim as per 7th CPC fitment on 7th CPC scales. The applicability of CPC or the elements of its incorporation is limited to and within the conditions of 37 A for fixing pension, DCRG, commutation, qualifying service. 7th CPC scales and its fitment are not coming under the umbrella of 37 A.

 

In today’s context of this inter connective relativity, you need to go with the claim of 3rd PRC fitment on 3rd PRC scales.

 

This time confusion is because of the DOT’s decision to consider the issue of pension revision in the absence of pay revision, which suits DOT more than taking up the issue of Pay revision of Executives seeking relaxation clause. But DOT is fair enough to consider the same yardstick to both pre and post 2017 pensioners that also from the same date 1-1-2017, ignoring some associations’ wrong demand of seeking benefits from the date of retirement in the case of post 2017 pensioners.

 

From the written proposals of DOT one may infer the following.

 

a.      DOT is actively considering revision of PENSION for the pre 2017 pensioners from 1-1-2017 - even though there is no pay revision in the BSNL.

 

b.      DOT is contemplating to revise the PAY of those retired on or after 1-1-2017 and future retirees namely the post 2017 pensioners notionally- even though there is no pay revision from 1-1-2017

 

c.      For the execution of ‘b ‘ , DOT is honestly telling about two requirements . One is PAY Scales for both Executives and Non Executives- even though there is no pay revision. The second requirement is the need of some amendment in CCS Rules 2021, for issuing PPO on notional Pay instead of the present system of last pay drawn.

 

d. For the execution of the above ‘ a b c ‘ DOT should find some fitment on the basis of 3 rd PRC instead of the already spelt nil fitment or zero fitment. If that is cleared with DOE of MOF, DOT may push the case to the cabinet clearance.

 

After knowing all these things, I fail to understand why some associations are harping on the same string in the name of 7th CPC scales and fitment and thereby causing the disturbance to the stage arranged for the symphony .

 

Ignorance is nothing wrong but refusing to acknowledge the reality or professing dogmatism will take us no road except causing delay to the solution.

 

If pensioners are vocal about the issue, then dogmatism will find no rooms to survive. Whether we like it or not, it seems DOT is deciding things only on the basis of 3rd PRC taking 3 rd PRC scales w.e.f 1-1-2017.

 

08 hrs 17-2-2023 R.Pattabiraman