Skip to main content

Posts

Showing posts from September, 2022

டேவிட் ரியாஜனாவ் (David Riazanov)

  டேவிட் ரியாஜனாவ் (David Riazanov) நம் காலத்தின் புகழ் வாய்ந்த ’ மார்க்சோலாஜிஸ்ட்’ தோழர் ரியாஜனாவ் . இன்று மார்க்சிய உலகில் பலராலும் வாசிக்கப்படும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் நூல்தொகைகள் உருவாக காரணமான பெரும் அறிஞர். எவ்வளவு பெரும் உழைப்பை மார்க்சிய உலகிற்கு நல்கினாலும் வரலாற்றில் ஆட்சி செய்பவர்க்கு சந்தேகம் இருந்தால் அவர் இல்லாமல் ஆக்கப்படுவார் என்பது டேவிட் வாழ்க்கையிலும் சம்பவித்தது . ஸ்டாலின் ஆட்சியில் ’ செகா’ போலீஸ் அடக்குமுறைகளுக்கு அவர் உள்ளாக நேர்ந்தது . 20 நூற்றாண்டின் குறிப்பாக 1930 களில் பெரும் மார்க்சிய அறிஞராக அவர் கருதப்பட்டவர் . ரஷ்ய கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டி முடிவையொட்டி மார்க்ஸ் - எங்கெல்ஸ் இன்ஸ்டிடுயுட் (1920-21 ல்) அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ரியாஜனாவ் . இந்த அமைப்பை நிறுவிட தோழர் லெனின் மிக ஆர்வம் காட்டினார் . மார்க்ஸ் - எங்கெல்ஸ் எழுதிய சிறு துரும்பைக் கூட - துண்டு சீட்டுக்களைக் கூட விடாமல் தொகுப்பதில் பெரும் உழைப்பை நல்கியவர் ரியாஜனாவ் . எதையும் விடாது என வரும்போத

ராம் சரண் சர்மாவின் ’சூத்திரர்’ ஆய்வு

  ராம் சரண் சர்மாவின் ’ சூத்திரர் ’ ஆய்வு ராம் சரண் சர்மா பண்டை இந்தியா குறித்த மிக முக்கிய வரலாற்றாய்வாளர் . மார்க்சியர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் போற்றும் அறிஞர் . அவர் எழுதிய   Sudras In Ancient India   A social History of Lower Order முக்கிய ஆய்வுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது . தமிழகத்தில் இன்று நடந்துகொண்டிருக்கும் சர்ச்சைகள் இந்த புத்தகம் நோக்கியும் அம்பேத்கரின் சூத்திரர்கள் யார் நோக்கியும் என் கண்களை நகர்த்தின .   சர்மா அவர்களின்   ஆக்கத்தின் முதல் இரு அத்தியாயங்கள்   Historiography and Approach,   Origin என்பதாகும் .   அதை மட்டும் எடுத்துக்கொண்டு அம்பேத்கர் வந்தடைந்த புள்ளிகளுடன் இங்கு சுருக்கமாக தந்துள்ளேன். சர்மாவின் முதல் 50 பக்கங்களில் வரும் சில செய்திகளை இங்கு தருகிறேன் . 400 பக்கங்களுக்கு மேலான   புத்தகம் அது . எனவே ஆய்வில்   பல பக்கங்கள் நகரும்போது பல்வேறு செய்திகள் நமக்கு விரியலாம் . முதலில் கிழக்கு இந்திய கம்பெனியார் செய்த ’ வரலாற்றை எழுதுதல் ’ சார்ந்த முயற்சிகளைப் பேசுகிறார் சரண் சர்மா . 1776 ல்   A code