Skip to main content

Posts

Showing posts from May, 2022

மொழித்தூய்மை

                                  மொழித்தூய்மை மொழித்தூய்மை என்கிற புத்தகம் திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத்துறையால் கொணரப்பட்ட ஒன்று . 15 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு . தேசியக் கருத்தரங்கம் நிமித்தம் வாசிக்கப்பட்டவை . பதிப்பாசிரியர் சித்ரா அவர்கள் . ஆய்வுரைகளை வழங்கிய நன் முனைவர்கள் கோதண்டராமன் , இராமமூர்த்தி , நரேந்திரன் , மணவை முஸ்தபா , மா . நயினார் , கார்த்திகேயன் , திருமாறன் , பூங்காவனம் , மற்றும் உதயசூரியன் . கோதண்டராமன் அவர்கள் தன் ஆய்வில் மொழித்தூய்மை மற்றும் மொழிப்பயன்பாடு பற்றிப் பேசுகிறார் . ஒன்று உளவியல் சார்ந்தும் மற்றது சமூகம் சார்ந்தும் இயங்குவெளியைக் கொண்டவை . பிறமொழிச் சொற்களைத் தன்மொழியில் பயன்படுத்தும்போது அது சமுதாயத்தின் மனநிலையைப் பொறுத்து அமையும் . மொழியிழப்பு என்பது குறித்து அவர் சொல்லும்போது பிறமொழித் தாக்கம் மொழியின் அமைப்பியல் கட்டமைப்பினைச் சிதைக்காதவரை அம்மொழி நிலைத்து நிற்க வல்லதே என்கிறார் . தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி சிறுபான்மையினர் - ஆனால் அவர்கள் தமி

புதுமைப்பித்தனின் ஸ்டாலின்

                       புதுமைப்பித்தனின் ஸ்டாலின் ‘ஸ்டாலினுக்குத் தெரியும் ’ என்கிற முற்றுப்பெறா கட்டுரை இலக்கியம் ஒன்றை ஐந்திணை 1991 ல் வெளியிட்டது . புதுமைப்பித்தன்   இரண்டாம் உலகப்போர் காலத்தில் இதை எழுதியிருக்கலாம்   கப்சிப் தர்பார் - ஹிட்லர் ஆட்சி , ஃபாஸிஸ்ட் ஜடாமுனி முசோலினி பற்றியும் அவர் இதற்கு முன்னர் எழுதியிருந்தார் . எப்படி பல அரிய விஷயங்களை அறிந்து எழுதினார் புபி என வியந்து   முன்னுரையை கண . இராமநாதன் தந்திருப்பார் . அணிந்துரையில் டாக்டர் க . ரத்னம் அவர்கள் ஹிட்லர் - முசோலினியை சமாளிக்க ஸ்டாலின் மேற்கொண்ட ஆயத்தங்கள் , மக்களை தயார்படுத்திய விதத்தை புபி சொல்வதாக எழுதியுள்ளார் . எழுதப்பட்ட சூட்டோடு இந்த படைப்பு வெளிவராததை இழப்பு என்பார் ரத்னம் . திருக்குறள் , கம்பராமாயணம் , சிலப்பதிகாரம் காலத்தை கணக்கிட்டதாக மார்தட்டும் நம்மால் நம்மிடம் வாழ்ந்து மறைந்த புகழ்வாய்ந்த எழுத்தாளர் நூல் எழுதப்பட்ட ஆண்டினை அறிய முடியாமை குறித்தும் ஊகம் செய்யவேண்டிய நிலை குறித்தும் கவலையை ரத்னம் பகிர்ந்துகொள்கிறார் .   ப