Skip to main content

Posts

Showing posts from April, 2024

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும்

  எஸ் ஜெயசீல ஸ்டீபன் எழுதியுள்ள தமிழ் மக்கள் வரலாறு seriesல் வந்துள்ள மற்றொரு புத்தகம் ‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் ( கி பி 600- 1565)’. 2004 ல் UGS நிதி உதவியுடன் செய்யப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் 4 இதில் இடம் பெற்றுள்ளன. Annual Epigraphy Reports மற்றும் தொல்லியல், கல்வெட்டு தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, பெறப்பட்டவை அடுக்கப்பட்டுள்ளன. அடுக்கப்படும் தகவல் வழி அக்கால தமிழ் சமுதாய மனிதர்கள் செய்த தொழில், குறிப்பிட்ட ஒருவர் வெவ்வேறு தொழில்களை செய்தல், தொழில் பிரிவினைகளை சாதியாக இறுக்கமாக்குதல்- பிறப்பு வழி மேல் கீழாக்குதல் போன்றவற்றை உணரவைக்க ஆசிரியர் ஸ்டீபன் முயற்சி செய்துள்ளார். ஆசிரியர் கண்டெடுக்கும் சில புள்ளிகள்.. பரிபாடல் ‘குலம் ‘ என 44 வகை தொழிற்பிரிவினரைக் காட்டுகிறது. அகநானூறு 4 வகை தொழில்களைப் பேசுகிறது கிமு 1500 வரை வர்ணம், தர்மம் கர்மா பற்றி சான்றுகள் காணப்படவில்லை. சங்க கால கிபி 100-300 மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்துள்ளனர். மரபுவழி தமிழ் குடியிருப்புகளில் 12 தொழில் வகையினர் சொல்லப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முன் தமிழகத்தில் மதம்

வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

  வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம் மனிதன் கற்கத் தகுந்தவனாக இருக்கிறான். கற்றவற்றை சோதித்துப் பார்த்து உயர விழைகிறான். அவனுக்கான ஏணிப்படிகளில் இறுதிப்படி கூட செல்கிறான். அதற்குப் பின்னால் என்ற கேள்விக்கும் உட்படுகிறான். புதிய உயரத்தை set செய்துகொள்கிறான்- ஆனால் போதவில்லை. வெறுமை என உணர்ந்து , அண்ணாந்து பார்ப்பதின் அவஸ்தையை உணர்கிறான். கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என அவனுக்கு சொல்லித்தரப்படுகிறது. ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது எனவும் எழுதப்பட்ட ஏடு அவன் முன் வீசப்படுகிறது. வெற்றியாளன் வெளியேறமாட்டான் என்கிற போர்டை அவன் கழுத்து அணிகிறது. துறத்தல் விடுபடல் ஆசை அறுத்தல் தானே ஆகச் சிறந்தது என எதிர் பேச்சு எழுகிறது. பட்ட பாட்டிற்கு என்ன என்கிறான் பலன். விளைவைப் பார்க்காதே என்கிறான் செயல். செயலற்று இரு என்கிறான் மந்திரம். மூளையிலிருந்து பேசாதே இதயத்திலிருந்து பேசு என அன்பு சொல்கிறான். பகுத்தறிந்து பார் என அறிவு பேசுகிறான். என் மூளையால் என்னை சிந்திக்க விடு என எதிர்ப்பாளன் திமிறுகிறான். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்கிறான் தமிழ். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்

For Marx in Tamil

 Louis Althusser ( 1918-1990) எழுதிய For Marx , Lenin and Philosophy, Reading Capital போன்றவை  மார்க்சிய அறிவு வட்டாரத்தில் அவரின் முக்கிய ஆக்கங்களாகப் பார்க்கப்படுகின்றன. இதில் அல்தூசரின் ‘மார்க்சிற்காக’ எனச் சொல்லப்படும் நூல் 1960களின் ஆரம்ப ஆண்டுகளில் எழுதப்பட்டு பிரஞ்சு மொழியில் வெளியானது. இந்த கட்டுரைகளின் ஆங்கில தொகுப்பு 1969ல் வெளியானது. அதை பென் ப்ருஸ்டர் மொழி பெயர்த்தார். ஆங்கில நூல் இணையத்தில் கிடைக்கிறது.  மார்க்சிய ஆர்வலர், அமைப்பியல் ஆர்வலர்கள் சிலர் படித்திருக்கக்கூடும். இந்நூலை புகழ் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் பேரா பூர்ணசந்திரன் அவர்கள் தமிழில் தருவதில் பெரும் உழைப்பை நல்கியுள்ளார். தோழர் முத்துமோகன் பதிப்பாசிரியர் உழைப்பை நல்கியுள்ளார். சவாலான ஆக்கம். தமிழ் அறிவுலகிற்கு என் சி பி எச் கொடுத்திருக்கும் கொடையாக  பாவிக்கலாம்.  2021 ல் கொணர்ந்தனர்.  For Marx என்ற நூல் இப்போது மொழி பெயர்ப்பில் ‘மார்க்சுக்கு ஆதரவாக ‘ என்கிற தமிழ் நூலாக கிடைக்கிறது. இந்நூலை வாசிக்க பொறுமையும் நிதானமும் தேவைப்படலாம். உள்வாங்கிக்கொள்ள கவனம் தேவைப்படலாம்.  மொழிபெயர்ப்பாளர்க்கு சவாலாக இருந்திருக்கக்க

Organisation

  எந்த ஓர் அமைப்பிலும் விமர்சகர்கள் இருப்பர். அவர்கள் இருவகையாக தொழிற்படுவர். அமைப்பின் தலைமை வைத்திருக்கக்கூடிய கருத்துக்கள் மற்றும் எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்து அவர்களிடம் விமர்சன பார்வையிருக்கும். ஒருவகையினர் passive critics ஆக இருப்பர். பிரச்சனையின் வேறு ஒரு பக்கத்தை, தலைமை பார்க்க விரும்பாத கோணத்தை- தாங்கள் மிக முக்கியமான ஒன்று எனக் கருதும் பக்கத்தை முன் வைக்கிறவர்கள். இவர்களுக்கு அந்த அமைப்பில் position power என்பது நோக்கமாக இருக்காது. தன் கருத்து பெரும்பான்மையினரிடம் செல்லாது என அறிந்தும் , சொல்வது தேவை, அவசியம் எனக் கருதி தன் பார்வையை வைத்து வருபவர்கள். Convert செய்யமுயலுமா எனப்பார்ப்பவர்கள். Destroying organisation or replacing the leadership or downgrading their image என்பதை ‘அஜண்டா’ வில் இவர்கள் வைத்துக்கொள்வதில்லை. அவர்களின் ‘லிமிட்டேஷன்’ உணர்ந்து தான் அறிந்த அளவில் சொல்லிவிட்டு obscure - ஆக ஒதுங்கிவிடுவர். இப்படிப்பட்ட விமர்சகர்கள் அமைப்பின் உள்ளும் , வெளியிலும் கூட இருப்பர். இருக்கின்ற தலைமையின் ஆற்றலை இவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. மாற்றம் வந்தால் அதற்கான o

தேவுடு நரசிம்ம சாஸ்திரி

  தேவுடு நரசிம்ம சாஸ்திரி அவர்கள் எழுதிய கன்னட நாவல் மகாபிராமணன் . இறையடியான் மொழிபெயர்ப்பில், சாகித்ய அகாதமி தமிழில் 2012ல் கொணர்ந்த நாவல். கெளசிகன் என்கிற சத்திரிய பேரரசன் தன் தவ வலிமையால் விஸ்வாமித்திரராகி வசிட்டரையும் விஞ்சப் போராடி மகாபிராமணனாகிறார் என்கிற கதையாடலை ஆங்காங்கே சில தெறிப்புகளுடன் தேவுடு நரசிம்மர் நகர்த்துகிறார். தமிழில் வந்து ஒரு மாமங்கம் ஆகிவிட்டது. ரொம்ப raw ஆக வளர்ந்த என் மனம் எப்போதாவது நாவல் பக்கம் எட்டிப்பார்க்கும். தேவுடு எழுத்திலிருந்து பிராணன் சொன்னான் - இதோ இவனே வாயுதேவன்! உடல் முழுவதுமாக பரவி அதனைத் தரித்துக்கொண்டுள்ள திரிவிக்கிரம வடிவினன். இவன் இருப்பதால்தான் உடலில் வெப்பம் இருக்கிறது. இவன் எந்தப் பகுதியை விட்டு நீங்கினாலும் அங்கே குளிர்ந்து அனைத்து செயற்பாடுகளும் சூன்யமாகிவிடும். இவன் அபான தேவன். உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணி இவனுடையது.இவன் செயலை ஒரு வினாடி நிறுத்திவிட்டால் எமதேவன் எடுத்துச் சென்றுவிடுவான். நான் மத்யமன். அபானம் அனைத்தும் என்னுடையது. நீ மூச்சு வாங்கி விடும்போது மூச்சாக இருப்பது அபான தேவனுடையது. உயிரை உள்ளே இழுப்பது நான். யோகத்தி

தேர்தல் திருவிழா

  Theory of Justice - தேர்தல் திருவிழா காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கை -மானிபெஸ்டோவை வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் தத்துவத்தில் புகழ் வாய்ந்த ஆக்கமாக ஜான் ரால்ஸ் அவர்களின் The Theory of Justice வெளியானது. நியாய கோட்பாட்டின் வழியிலான அரசியல், பகிர்வு நியாய வெளியின் விஸ்தரிப்பு என்பதை ரால்ஸ் மட்டுமல்ல அமர்த்யா சென், ழான் டிரீஸ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பேசி வந்தனர். காங்கிரஸ் இந்த நியாயம் பேசும் பத்திரம் மூலம் தனது வாக்குறுதிகளை தந்துள்ளது. சிலர் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ போல் உள்ளது என்றும், திராவிட மாடல் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விவரித்து வருகின்றனர். பாஜகவும் தனது அறிக்கையை விரைவில் வெளியிடலாம். வெளியிட்ட பின்னர் பார்க்கலாம். சில கட்சிகள் மட்டுமே தங்களால் அறுதி பெரும்பான்மையை பெறமுடியும் எனப் பேசிவருகின்றனர். தேசிய அளவில் பாஜக அப்படி முன்வைப்புகளை செய்து வருகிறது. மாநில அளவில் திமுக, திரிணமுல் அதனை செய்து வருகின்றனர். தேசிய அளவில் தங்களால் அறுதி பெரும்பான்மையை பெறமுடியும் என்ற உரிமை கோரலை காங்கிரஸ் வைக்காவிட்டாலும், இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்க

Marx for Today. Marcella Musto

  இடது இலக்கியங்கள் பலவற்றை ஆகார் -Aakar வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு நூல்தான் Marx for Today. Marcella Musto எடிட் செய்த தொகுப்பு. நூல் 2008 ல் வந்திருந்தாலும், ஆகார் வழி இந்திய பதிப்பு 2018ல் வந்தது. 2010ல் மார்க்சை மீள் வாசிப்பு செய்வது என்பது முதல் பகுதி. அதில் 8 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கெவின் ஆண்டர்சன், பரேஷ், லெபோவிட்ஸ், காம்னியல், மஸ்டோ, டெரல் கார்வர், விக்டர் வாலிஸ், ரிக் உல்ப் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்கள் ஆய்வுக்கோணத்தை தந்துள்ளனர். இரண்டாம் பகுதி இன்று உலகம் மார்க்சை எப்படி வரவேற்கிறது என்பதை பேசும் பகுதி. இதில் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில், பிரேசிலில், ஆங்கில மொழிப் பகுதிகளில், பிரான்சில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா, தென்கொரியா, ஜப்பானில் மார்க்சியம் எப்படியான வரவேற்பை பெறுகிறது என கட்டுரையாளர்கள் தங்கள் உள்வாங்குதலை சொல்கிறார்கள். சொப்ரினா, பொய்ட்டோ- எட்வர்டோ, பிளேக்லெட்ஜ், ஹாப், ரகோனா, ஒயிட்டினென், ஹு, ஜெயாங், உசிதா போன்றவர் எழுதியுள்ளனர். இந்தியர் எவரும் இப்பகுதியில் எழுதவில்லை. முதல் பகுதியில் பரேஷ் சட்டோ கட்டுரை ஒன்றே ஒன்று உள்ளது. அவரும்

periyar

  தி இந்து குழுமம் தமிழ் திசையின் அடுத்த வெளியீடு வந்துள்ளது. பெரியார் குறித்த கட்டுரைத் தொகுப்பாக ‘ என்றும் தமிழர் தலைவர்’ எனக் கொணர்ந்துள்ளனர். ஜனவரி 2024 ல் வந்த இந்நூலில் 151 தலைப்புகளில், சிறிதும் பெரிதுமாக பெரியார் விதந்து பேசப்பட்டுள்ளார். பெரியார் குறித்த கவிதைகளும் இதில் அடக்கம். இதற்கு முன்னர் இம்மாதிரி தொகுப்புகளாக வந்த அண்ணா, கலைஞர், ராஜாஜி போன்றவைகளின் வடிவ உள்ளடக்க பத்திரிகையாளர் பாங்கிலான சோதனைகள் இப்பெரியார் நூலிலும் செய்யப்பட்டுள்ளன . 860 பக்கங்களுக்கான நூல். ஆசிரியர் அசோகன் உள்ளிட்ட, தமிழ் இந்து இளம் குழுவினர் நன்றாக உழைத்து இத்தொகுப்பைக் கொணர்ந்துள்ளனர். தமிழ் அரசியல் உலகிற்கு நல்ல தொண்டாக எண்ணி அவர்களை நாம் பாராட்டலாம். 15 பெருந்தலைப்புகளில் பெரியார் குறித்த கவிதைகள், கட்டுரைகள் என 151 உபதலைப்புகளில் நூலை அடுக்கியுள்ளனர். பெரியார்பாதை, பெரியார் யார், பெரியார் இன்று, ஆய்வுலகப்பார்வை (யில்) , பெரியார் விரிவும் ஆழமும், அரசியலும் போராட்டங்களும், பெண்ணுரிமைக் குரல், சாதி மத எதிர்ப்பு, மொழி கலை ஊடகம், பெரியாரின் உலகம், உடன் நின்ற உறவுகள், பெரியாரும் ஆளுமைகளும், பெ

An Intellectual Biography of B R Ambedkar- The Evolution of Pragmatism in India

 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு என் அன்பை மரியாதையை தரும் வகையில் Scott R Stroud அவர்கள் எழுதிய  An Intellectual Biography of  B R Ambedkar-  The  Evolution of Pragmatism in India என்கிற நூலை படிக்க ஆரம்பித்தேன். இந்நூல் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸ் நிறுவனத்தால் 2023 ல் கொணரப்பட்ட நூல். ஸ்காட் ஸ்டிரவுட் அவர்கள்  டெக்ஸாஸ் பேராசிரியர், தத்துவ அறிஞர். அமெரிக்க நடைமுறைவாதத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருபவர். அம்பேத்கர் கொலம்பியாவில் படித்தபோது அவர் மிகவும் மதித்து நேசித்த ஜான் டுயி அவர்களின் pragmatism அம்பேத்கர் அவர்களிடம் எந்த அளவில் தாக்கத்தை உருவாக்கியது என்பது குறித்த ஆய்வை ஸ்காட் தந்துள்ளார். ராமச்சந்திர குஹா, மார்த்தா நுஸ்பாம், அனுபமா ராவ் , சுகாதியோ போன்றவர்கள் இந்நூலினை பாராட்டியுள்ளனர். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு குடியரசாதல், அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பு, சட்ட அமைச்சராக செயலாற்றுதல் போன்ற புகழ் பெற்ற பின்னணியில் - 1952ல் தான் பயின்ற பல்கலைக்கு , பல நண்பர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அம்பேத்கர் செல்கிறார். எப்படியும் தான் நேசித

ராஜாஜியை வாசிக்கலாம்..

  ராஜாஜியை வாசிக்கலாம்.. வரலாற்று மாணவர் என்ற வகையில் ஒருவருக்கு எப்போதும் வாசிப்பு நேர்மை தேவைப்படும். தனக்கு உவப்பான விஷயங்களை கொண்டாடுவது- உவப்பில்லாத அம்சத்தை கண்ணை மூடிக்கொண்டு காணாததுபோல் நகர்ந்துவிடுவது அல்லது அதை மறைத்துவிடுவது என்பது வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியவர் செய்யத்தகாத செயலாகும். வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் குறித்த பல பக்கங்களை பார்க்கும்போதுதான் சற்று balanced மதிப்பீட்டிற்கு ஒருவரால் விருப்பு- வெறுப்பை குறைத்துக்கொண்டு வரமுடியும். எழுதுவது என்பது வெறும் Hagiography புனிதர்களின் திருச்செயல்களாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்பது முக்கியமானது. அதேபோல அவர்களின் தவறுகள் குறித்த வெறும் குற்றப்பத்திரிகைகளாகவும் அவை சுருக்கப்படக்கூடாது. critical appraisal- appreciation என்கிற பழக்கம் பொதுப்பழக்கமானால் சமூகம் நின்று நிதானமாக செயல்பட அப்போக்கு உதவிசெய்யும். ராஜாஜி குறித்த வாசிப்பும் அப்படித்தான் இருக்கவேண்டும். ராஜாஜி குறித்து அவரது பேரன் ராஜ்மோகன்காந்தி உடபட பலர் எழுதியுள்ளனர். ஆயினும் காந்தி, நேரு, அம்பேத்கர்,பெரியார் போல ராஜாஜியின் அரசியல் பொருளாதார சமூக சிந்தன