Skip to main content

வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

 வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

மனிதன் கற்கத் தகுந்தவனாக இருக்கிறான். கற்றவற்றை சோதித்துப் பார்த்து உயர விழைகிறான். அவனுக்கான ஏணிப்படிகளில் இறுதிப்படி கூட செல்கிறான். அதற்குப் பின்னால் என்ற கேள்விக்கும் உட்படுகிறான். புதிய உயரத்தை set செய்துகொள்கிறான்- ஆனால் போதவில்லை. வெறுமை என உணர்ந்து , அண்ணாந்து பார்ப்பதின் அவஸ்தையை உணர்கிறான்.
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என அவனுக்கு சொல்லித்தரப்படுகிறது. ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது எனவும் எழுதப்பட்ட ஏடு அவன் முன் வீசப்படுகிறது. வெற்றியாளன் வெளியேறமாட்டான் என்கிற போர்டை அவன் கழுத்து அணிகிறது. துறத்தல் விடுபடல் ஆசை அறுத்தல் தானே ஆகச் சிறந்தது என எதிர் பேச்சு எழுகிறது. பட்ட பாட்டிற்கு என்ன என்கிறான் பலன். விளைவைப் பார்க்காதே என்கிறான் செயல். செயலற்று இரு என்கிறான் மந்திரம்.
மூளையிலிருந்து பேசாதே இதயத்திலிருந்து பேசு என அன்பு சொல்கிறான். பகுத்தறிந்து பார் என அறிவு பேசுகிறான். என் மூளையால் என்னை சிந்திக்க விடு என எதிர்ப்பாளன் திமிறுகிறான். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்கிறான் தமிழ். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்கிறான் சமூகம். தனித்திரு விழித்திரு என்றான் கொரோனா.
அன்னதானம் அற்புதம் என்கிறான் நன்கொடை. அங்கும் உன் முகம்தான் தெரிகிறது என் முகம் எங்கே என்கிறான் பட்டினி.
கசிந்துருகு என்கிறான் இரக்கம். ஈவு காட்டாதே என்கிறான் நீதி.
நமோ மயம் என்கிறான் ஆதாயம். என் தலைவன் தான் எல்லாம் என்கிறான் கைத்தடி. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்கிறான் குறள்.
என்னை நம்பி வா சொர்ர்க்கம் என்கிறான் ஏகாதிகாரம். சாம்ராஜ்யங்கள் சரிந்தது அறிவாய் என்கிறான் வரலாறு.
எல்லாம் அவன் செயல் என்கிறான் ஈசன். நான் பார்த்துக்கொள்கிறேன் விடு என்கிறான் நம்பிக்கையாளன்.
சம்பந்தமில்லாமல் பேசாதே பொருத்தமானதைச் சொல் என்கிறான் எதார்த்தம். பொன்னுலகம் காண்பிக்கிறேன் என்கிறான் உடோபியன். பெருங்கனவின் பூபாளம் என்கிறான் புரட்சி. புரட்சியின் வறட்சி என்கிறான் உடைமை.
உன் சைக்கிள் கதை எனக்கெதுக்கு என்றான் கார். காரும் மூப்பாகும் என்றான் உள்ளுணர்வு. வரும் போது வரட்டும் என்கிறான் இளமை.
அடுப்படியில்லா மாளிகை என்கிறாள் ஜுமோட்டா. கர்ப்பப்பை சுதந்திரம் என்கிறாள் சூல். மறுபடியும் பெண்ணா என்கிறான் ஆதிக்கம். சாதி இரண்டொழிய வேறில்லை என்றாள் பாட்டி. என் சாதி கொன்னுடுவேன் என்கிறான் ஆணவம்.
இல்லாதவனுக்கும் இசை என்கிறான் பொறம்போக்கு. சங்கீத கலாநிதி எதுக்கு என்கிறாள் கர்னாடிக்.
எல்லாம்தான் சொன்னீங்க என்ன பண்ணி கிழிச்சிங்க என்கிறான் கேள்வி. புனிதம் என எவனுமில்லை என்கிறான் குறை. நிறையை எடைபோடேன் என்கிறான் தர்மி.
அதையெல்லாம் செய்தேனே என்கிறான் நேற்று..அப்படியா அதெல்லாம் பழங்கதை என்கிறான் இன்று.
என்னைப்போல் அவனில்லை என்கிறான் சந்தேகி. அவனும் இருக்கட்டுமே என்கிறான் பன்முகம். வாழத்தெரியவில்லை என்கிறான் குழம்பி. வாழ்வா என்கிறான் மாயம்.
எல்லோரும் object என்கிறான் subject. நானே எல்லாம் என்கிறான் அரசு.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு