Skip to main content

Posts

Showing posts from January, 2020

மு வ பேசிய கட்சி அரசியல்

அறமும் அரசியலும் டாக்டர் . மு . வரதராசன்   கட்சி அரசியல் என்பது குறித்து பலர் பேசியுள்ளனர். அப்படி ஒரு எழுத்தை தமிழறிஞர் மு. வ அவர்களும் தந்துள்ளார். அவர் எழுதிய அறமும் அரசியலும் புத்தகத்தில் நான்காம் அத்தியாயமாக கட்சி அரசியல் என்பது (பக்94-115களில்) விவாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. இது பொதுவாக கட்சி என்பது குறித்த விவாதம். எந்த தனிப்பட்ட கட்சி குறித்தோ அதன் நடைமுறைகுறித்தோ   அதில் மு. வா விவாதிக்கவில்லை. அரசியலில் அறம் வாழப் பாடுபடாமல் தனிவாழ்க்கையில் திணறித் திண்டாடிவிட்டு , “ அறமாவது , நடப்பதாவது , எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் ” என்று ஏங்குவதால் பயன் என்ன ? என முன்னுரையில் மு.வா வினவுகிறார்..   இனி   மு .வ ” கட்சி என்பது என்ன ? செல்வாக்கு என்பதன் கூட்டுப்பண்ணை ; தனித்தனியே தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதில் இடையூறும் தோல்வியும் கண்டபோது , செல்வாக்குக் குன்றாமல் காக்கும் வகையில் அமைத்த கூட்டுப் பண்ணை ,.. ஒரு கட்சியில் நல்லவர்களும் சேர்வார்கள் ; கெட்டவர்களும் சேர்வார்கள் . நல்லவர்கள் சேர்ந்து ஆக்க வே

நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும்

நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும் இந்திய தேசிய காங்கிரசில் வலது- இடது என பிரிவுகளின் மோதல் 1930களிலிருந்து  பெருமளவு வெளித்தெரிய துவங்கியது. காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள், ராயிஸ்ட்கள், போஸிஸ்ட்கள் என நான்கு இடது பிரிவுகள் இணைந்து  காங்கிரசின் பலம் மிகுந்த வலதை  எதிர்த்த வரலாறும் நடந்துள்ளது. தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டு ஒருவரை ஒருவர் மிகமோசமான வசைகளால் தாக்கிக்கொண்ட வரலாறும் நடந்தேறியது. இங்கு நேதாஜி- கம்யூனிஸ்ட்கள் மத்தியிலான உறவும் உரசலும் எடுத்துவைக்கப்படுகிறது. வரலாற்றை புரிதல் என்கிற அளவில் இக்கட்டுரை புதியவர்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். காலவோட்டத்தில் பழையவகைப்பட்ட புரிதல்கள் வழக்கு ஒழிந்து போவதையும் தங்கள் பழைய நிலைப்பாட்டில் வளர்ந்து வருகிற இயக்கங்கள் நிற்க முடிவதில்லை என்பதையும் இவ்வரலாறு நமக்கு சுட்டிக்காட்டலாம்... தொடர்ந்து வாசிக்க கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும் இச்சிறு நூலை ஆர்வமுள்ளவர்கள் - முப்பது நிமிடம் ஒதுக்க முடிந்தவர்கள் வாசித்துவிடமுடியும் என நினைக்கிறேன். https://ia601406.us.archive.org/28/items/converted_202001/

BSNL IDA Pension Revision II

                                             BSNL IDA Pension Revision  II பென்ஷன் ரிவிஷன் எனும் பிரச்சனையில் எவரையும் எந்த அமைப்பையும் புண்படுத்துவதோ கோபப்படுத்துவதோ நோக்கமல்ல. எனக்கு தெரிந்தது என நினைப்பவற்றை வெளிச்சொல்லும்போது அக்கருத்தும் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களால் பரீசிலிக்கப்படும். நான்  சொல்வதில் தவறு  இருக்குமெனில் எனக்கு ஏதோவொருவகையில் பொறுப்பாக மறுமொழி கிடைக்கும்.  என்னை சரி செய்துகொள்ள அப்பதில் உதவும் என்கிற அடிப்படையிலேயே எழுதுகிறேன். எவரின் உழைப்பையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. எவரின்  Honesty  மீதும் மதிப்பீட்டு சரிவு ஏதும் என்னிடம் இல்லை. தற்போது இரண்டாவது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் பெற்று வருபவர்கள் அனைவருக்கும் பென்ஷன் ரிவிஷன் கேட்கிறோமா- இல்லை குறிப்பிட்ட ( ஜனவரி 2016/ 2017க்கு முன்னர்) தேதிக்கு முன்னால் இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் பென்ஷன் பெறுவபவர்களுக்கு  மட்டும் கேட்கிறோமா? பிப்ரவரி 2020ல் ஒரு லட்சம் புதிய பென்ஷனர்கள் இருப்பார்கள். அவர்களும் இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் மட்டுமே பென்ஷன் நிர்ணயம் பெற்றவர்களா

BSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை ?

              BSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை ? மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில் கடந்த ஜனவரி 2016 முதல் பெற்றனர். டிசம்பர் 2015 வரை ஓய்வுபெற்ற பென்ஷனர்களும் பென்ஷன் உயர்வுக்குரிய பலனை ஜனவரி 2016 முதல் பெற்றனர். அங்கு ஊதிய மாற்றம்- பென்ஷன் மாற்றம் என ஒருசேர நடந்தது. ஊதிய மாற்றமின்றி தனியாக பென்ஷன் மாற்றம் நடைபெறவில்லை. பென்ஷன் மாற்றம் நடந்ததால் அதை தொடர்ந்து ஊதிய மாற்றம் நடைபெறவில்லை. பி எஸ் என் எல்லில் ஓய்வுபெற்றவர்கள் ( BSNL IDA Pensioners) தங்களது ஓய்வூதிய மாற்றத்தை 2011ல் பெற்றனர். இரண்டாவது PRC   அடிப்படையில் ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற்றப் பின்னர் பென்ஷனர்களும் அதே அளவு பலனை ஜனவரி 2007 முதல் பெற்றனர். மூன்றாவது PRC நிபந்தனைகளால் இதுவரை பி எஸ் என் எல் ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற முடியாமல் போயுள்ளது. இதற்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆனால் ’கிடைக்குமா - எப்போது கிடைக்கும் - எந்த அளவில் பலன் கிடைக்கும் ’ என்கிற சூழல் இதுவரை தென்படவில்லை. சோராமல் போராடவேண்டிய பொறுப்பில் உழைப்பவர்கள் அங்கு இர

ஜனவரி 8 வேலைநிறுத்தம்

                                                      ஜனவரி 8   வேலைநிறுத்தம் மத்திய சங்கங்களின் அறைகூவலை ஏற்று   பல்வேறு துறைகள் சார்ந்த திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்கள் ஜனவரி 8 2020ல் வேலை நிறுத்தம் செய்யவிருக்கின்றனர். அவர்களுக்கு நல்வாழ்த்துகள். போராட்டம் அமைதியாக முடியட்டும். வேலைநிறுத்தத்தில் 25 கோடி தொழிலாளர் பங்கேற்பர் என தலைவர்கள் மதிப்பிட்டுள்ளனர். கோரிக்கைகள் பல்வேறு அரங்குகளில் விளக்கப்பட்டும், தெருமுனைகளில் பேசப்பட்டும் இருக்கின்றன. ஆட்சியிலிருக்கும் திரு மோடி தலைமையிலான பா ஜ க சர்க்கார் நல்லிணக்கம் சமூக அமைதிக்கு உத்தரவாதம் தராமல் சமூக பதட்டத்தை- ஒற்றுமையின்மையை நாள்தோறும் அதிகரித்து வருவது குறித்த கவலையை அச்சத்தை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. போராடும் பல்வேறு   ஜனநாயக சக்திகளின் குரலுடன் தொழிலாளர் சக்திகளும் சேர்கின்றது . சிலகோரிக்கைகள் முத்தரப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருபவை. முன்பிருந்த திரு மன்மோகன் சிங் சர்க்கார்   பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் 5 முறை   ILC கூட்டப்பட்டிருந்தது. நான்குமுறை பிரதமராக இருந்த திரு மன்மோகன்

Com O P Gupta: The Man of unity struggle and settlement

Com O P Gupta:   The Man of unity struggle and settlement Excerpts from   Some Recollections, Selected Ideas of O P Gupta, Marxism and Trade Unions by OP Gupta, தன்னிகரில்லா தலைவன் , பென்ஷன் பிதாமகன், The History of Pension – its uniqueness for BSNL,   தபால் தந்தி இயக்கம்கடந்து வந்த பாதை   I      Some Recollections   சில நினைவுகள் ஒற்றுமைக்குரல் வெளியீடு தஞ்சை 1997             ( தமிழில் தோழர் ந . வீரபாண்டியன் ) தோழர் குப்தா பக் 8 "1946-66   இந்த 20 ஆண்டுகள் ஒற்றுமை ஒன்றே துயர் நீக்க வல்லது - ஒற்றுமை இல்லையெனினும் செயலே பிரதானமெனும் இரு வேறுபட்ட கருதுகோள்களுக்கு இடையே சரிநிலை வகிப்பதிலும் செயல்பாட்டிற்கான ஒற்றுமை காண போராடுவதிலும் , துடிப்பான பணியிலும் நிகழ்ந்திருக்கிறது . ஒற்றுமைக்கான என் முயற்சிகளை ஆதரிக்கும் அதேவேளை நடவடிக்கை தேவையாகிறபோது எதிர்க்கத் துவங்கும் பிற்போக்கு சக்திகள் ஒரு புறம் - செயல் வெற்றிக்கு ஒற்றுமையை வலியுறுத்தும் என்னை விரும்பாத மிகவும் தேர்ந்த பிரிவுகள் ஒரு புறம் . இந்த இரு துருவங்