Skip to main content

BSNL IDA Pension Revision II

                                             BSNL IDA Pension Revision  II

பென்ஷன் ரிவிஷன் எனும் பிரச்சனையில் எவரையும் எந்த அமைப்பையும் புண்படுத்துவதோ கோபப்படுத்துவதோ நோக்கமல்ல. எனக்கு தெரிந்தது என நினைப்பவற்றை வெளிச்சொல்லும்போது அக்கருத்தும் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களால் பரீசிலிக்கப்படும். நான்  சொல்வதில் தவறு  இருக்குமெனில் எனக்கு ஏதோவொருவகையில் பொறுப்பாக மறுமொழி கிடைக்கும்.  என்னை சரி செய்துகொள்ள அப்பதில் உதவும் என்கிற அடிப்படையிலேயே எழுதுகிறேன். எவரின் உழைப்பையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. எவரின்  Honesty  மீதும் மதிப்பீட்டு சரிவு ஏதும் என்னிடம் இல்லை.


தற்போது இரண்டாவது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் பெற்று வருபவர்கள் அனைவருக்கும் பென்ஷன் ரிவிஷன் கேட்கிறோமா- இல்லை குறிப்பிட்ட ( ஜனவரி 2016/ 2017க்கு முன்னர்) தேதிக்கு முன்னால் இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் பென்ஷன் பெறுவபவர்களுக்கு  மட்டும் கேட்கிறோமா? பிப்ரவரி 2020ல் ஒரு லட்சம் புதிய பென்ஷனர்கள் இருப்பார்கள். அவர்களும் இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் மட்டுமே பென்ஷன் நிர்ணயம் பெற்றவர்களாக இருப்பர் .இவர்களுக்கு  தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள பென்ஷனில் மாற்றம்  ( Refixation)  வரவேண்டுமெனில் அவர்களின் ஊதியத்தில் மாற்றம் பின் தேதியிட்டு வந்தால் மட்டுமே சாத்தியமாகும்.  ஊதிய மாற்றம் இல்லையெனில் அவர்களுக்கு பின்னரும் தொடர்ந்து ’2026வரை ஓய்வு பெறப்போகிறவ்ர்கள் அனைவரும்’ இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையிலேயே பென்ஷன் நிர்ணயம் பெறுவார்கள். இது மாறும்வரை 2026க்கு பின்னரும் இதே நிலைதான் நீடிக்கும்.

தனியாக முந்திய பென்ஷனர்களுக்கு மட்டும் 7 வது ஊதியக்குழு அல்லது 3வது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் 1-1-16/ 1-1-17 லிருந்து பெற்றால் புதிய பென்ஷனர்களுக்கு இப்பலன் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு உள்ள வாய்ப்பு ஊதிய மாற்றம் மட்டுமே. இருவேறு BSNL IDA பென்ஷனர்கள் இருக்க முடியாது. முந்திய பென்ஷனர் பகுதி 3வது ஊதியக்கமிட்டி என்றும் புதிய பென்ஷனர் பகுதி இரண்டாவது ஊதியக்கமிட்டியில் பென்ஷன் நிர்ணயம் பெறுவது என்றும் இருக்க முடியாது. அதேபோல் ஒருபகுதி 7வது ஊதியக்குழு என்றும் புதிய பகுதி இரண்டாவது ஊதியக்கமிட்டிப்படி பென்ஷன் நிர்ணயம் என இருக்கமுடியாது. இது அனாமலி என்ற முறையில் தீர்க்கப்படக்கூடியதல்ல.

 ஊழியர்களுக்கு கிடைத்த ஒன்று முந்திய ஊழியர்களான பென்ஷனர்களுக்கு நீட்டிக்கப்படுதல் என்பது வேறு. முதலில் பென்ஷனர்களுக்கு கொடுத்துவிட்டு  அதே அளவு உயர்வின்பலனை ஊழியர்களுக்கு நீட்டிப்பது என்பது ஊதிய மாற்றம் வந்தால்தான் சாத்தியமாகும். அதிலும் IDAப்படி வந்தால்தான் சாத்தியமாகும். ஏனெனில் ஊழியர் சங்கங்கள் CDA வில் ஊதிய மாற்றம் கோரவில்லை.  IDAவில்தான் மாற்றம் கோரி போராடிவருகிறார்க்ள்.

 பென்ஷன் ரிவிஷன் பிரச்சனையில்  ஊதிய மாற்றம் வந்த பின்னர் காலதாமதம் கூடாது என சொல்வதில் மிகு நியாயம் இருக்கும்.  எனவேதான்  Simultaneous Pay Revision- Pension Revision  என்பது எப்பகுதிக்கும் இடையூறு காத்திருப்பு இல்லாமல் ஒரே நேரத்தில் பலனைக் கொண்டுவந்து சேர்க்கும். ஒரே வகைப்பட்ட முறையிலும் அது அமையும். இக்கோரிக்கை அனைவரையும் ஒன்றுபடுத்தும்.

 BSNL ல் ஊதிய மாற்றம் சாத்தியமா - வராது என்கிற உறுதியான நம்பிக்கை கொண்டவர்களே  தனியாக  தங்களுக்கு பென்ஷன் மாற்றம்- அரசாங்கம் தானே தரப்போகிறது என வாதாடிவருகிறார்கள். ஊழியர் சங்கங்கள் இப்படிப்பட்ட அவநம்பிக்கையில் செயல்படமுடியாது. தங்களின் தொடர்ந்த போராட்டங்கள்- நியாயங்கள் வழியே ஊதிய மாற்றம் என்கிற நம்பிக்கை சாலையில் அவர்கள் பயணித்தே ஆக வேண்டும். மத்திய  அரசாங்க பென்ஷனர்கள் மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெறுகிறவரை காத்திருந்தே பென்ஷன் மாற்றம் கிடைக்கப்பெற்றார்கள் என்பதை வசதியாக நாம் மறக்கமுடியாது. அரசாங்கம் தானே  மத்திய பென்ஷனர்களுக்கு  தருவது போல் எங்களுக்கும் பென்ஷன் தருகிறது என வாதாடும் நாம் நமக்கு பின்னர் வந்திருக்கிற லட்சம் பென்ஷனர்களுக்கும் இன்னும் வரப்போகிற ஆயிரக்கணக்கான பென்ஷர்களுக்கும் அரசாங்கம் தான் பென்ஷன் தரப்போகிறது என்பதை மறக்க முடியாது.

 இன்று வித்தியாசத்துடன் இருக்கின்ற CG பென்ஷனர்களுக்கும்   BSNL IDA பென்ஷனர்களுக்கும் 7வது ஊதியக்குழு காரணமாக வேறுபாடு கூடாது என்பது முக்கியமெனில் அதைவிட முக்கியமானது இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் ஒன்றாக வித்தியாசம் ஏதுமின்றி இருக்கின்ற BSNL IDA பென்ஷனர்கள் மத்தியில் வேறுபாடு வந்துவிடக்கூடாது என்பது.

உழைப்பவர்களை விட உழைத்துக் களைத்தவர்களுக்கு சமூகம் கூடுதல் முன்னுரிமை தரவேண்டும் என எதிர்பார்ப்பது சற்று அதீதமானது. உழைப்பவர்க்கு கிடைக்கும் பலன் உழைத்து களைத்த பென்ஷனர்களுக்கும் என்பது ஏற்கப்பட்ட நீதியாக இருக்கிறது. அரசாங்க பென்ஷன்தாரர்கள் என  ஓய்வு பெற வாய்ப்பு  இருந்த  DOT  ஊழியர்களுக்கு BSNLல் நுழைந்து அதன் ஊழியர்கள் ஆனாலும் அரசாங்கமே ( டிரஸ்ட் என ஏதுமில்லாமல்) பென்ஷன் தரவேண்டும் என தோழர் குப்தா மாற்றியது ஊழியர்களுக்கான விஷயம்தான். பென்ஷனர்களுக்கான ஒன்றல்ல. பென்ஷனர்களாக ஆகப்போகிறவர்களுக்குத்தான். 1-10-2000க்கு முன்னர் இருந்த பென்ஷனர்க்குமானது என ஏதும் அதில் இல்லை. அங்கு இருட்டு வெளிச்சம் கண்டதெல்லாம் ஊழியர்களுக்குத்தான்- எதிர்கால பென்ஷனர்களுக்குத்தான். அதேபோல் இப்போது இருட்டு எனில் அது ஊதிய மாற்றம் எனும் ஊழியர் பிரச்சனையில்தான் உள்ளது. அதில் வெளிச்சம் பாய்ச்சத்தான் சங்கங்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு