https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 12, 2024

நாடாளுமன்ற தேர்தல்கள் கட்சிகளும் காட்சிகளும்

 

நாடாளுமன்ற தேர்தல்கள்

கட்சிகளும் காட்சிகளும்




விடுதலை இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952ல் நடந்தது. அத்தேர்தல் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அரசியல் அமைப்பு உரிமைப்படி நடந்த முதல் தேர்தல். உலக நாடுகள் மத்தியில் இந்தியா தன் மக்களுக்கு கொடுத்த மாபெரும் புரட்சிகர உரிமையது. அவ்வுரிமை இன்றைய நாளில் பல திரிபுகளை, கசடுகளை சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வயது வந்தோர் வாக்குரிமை என்பது பெரும் புரட்சிகரமான நடவடிக்கை. மேற்கே இதில் பாடம் கற்க வேண்டியிருந்தது.

1952 தேர்தலில் 17 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 310 பேர் வாக்காளர் தகுதியில் இருந்தனர். இதில் 10கோடி 61 லட்சத்து 51 ஆயிரத்து 540பேர் வாக்களித்தனர். வாக்கு சதம் 61.81 .

அத்தேர்தலில் 78 கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாக 533 பேரும் ஆக 1874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த தொகுதிகள் அன்று 489.

காங்கிரஸ் தான் பெரும் கட்சி. அடுத்த நிலையில் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் என அன்று இருந்தனர். காங்கிரஸ் 479 இடங்களில் நின்று 364ல் அபார வெற்றி பெற்றது. வாக்கு சதம் 44.98. சோசலிஸ்ட்கள் 254ல் நின்று 12ல் வென்றனர். வாக்கு சதம் 10.59. கிருபளானி கிசான் மஸ்தூர் 145 இடங்களில் நின்று 9 இடங்களைப் பெற்றது. வாக்கு சதம் 5.79. கம்யூனிஸ்ட் கட்சி 49 இடங்களில் மட்டுமே நின்றாலும் 16 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக வந்தது. வாக்கு சதம் 3.29.  ஜனசங்கம் 94 இடங்களில் நின்று 3 பெற்றது. வாக்கு சதம் 3.07. அம்பேத்கரின் எஸ்சி எஃப் 35 இடங்களில் நின்று 2 பெற்றது. வாக்கு சதம் 2.38

25 ஆண்டுகளுக்கு பின்னரான 1977 தேர்தல் நிலையைப் பார்ப்போம். எமர்ஜென்சி அனுபவ சூழலில் நடந்த தேர்தல். மொத்த இடங்கள் 542.  வாக்கு பதிவு 60.53 சதம்.

ஜனதா 387 இடங்களில் போட்டியிட்டு 280 பெற்று வெற்றியடைந்தது. காங்கிரஸ் 492 இடங்களில் நின்று 154 பெற்றது. இடது கட்சிகள் 143ல் நின்று 33ல் வென்றனர். தமிழகத்தில் அண்ணா திமுக 21ல் நின்று 19 யை பெற்றது. வாக்கு சதமாக அவை 39.32, 34.52, 7.21, 2.95 யை பெற்றனர்.

ஜனதா சோதனை வீழ்ச்சியால் 1980ல் இந்திரா அம்மையார் ஆட்சிக்கு வந்தார். இந்திரா படுகொலை சூழலில் நடந்த 1984 தேர்தலைப் பார்க்கலாம். இத்தேர்தலில்

 

வாக்குப் பதிவில் முன்னேற்றத்தை காண்கிறோம். 64.11 சதம். காங்கிரஸ் 517 இடங்களில் நின்று 415 யை இந்திய வரலாற்றில் மகத்தான சாதனை படைத்தது. காங்கிரசின் வாக்கு சதம் 48.01. இடதுசாரிகள் 141ல் நின்று 32யை பிடித்தனர். வாக்கு சதம் 9.39. ஜனதா 218ல் நின்று 9யை வென்றது. வாக்கு சதம் 6.57. பாஜக 229 இடங்களில் நின்று 2 யை வென்றது. வாக்கு சதம் 7.40. தமிழகத்தில் திமுக 28ல் நின்று 2 யையும், அதிமுக 12க்கு 12யையும் பெற்றன. வாக்கு சதம் 2.28, 1.59.

இவ்வளவு பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜிவ் தலைமை காங்கிரஸ் 1989 தேர்தலில் தனித்த பெரும் கட்சியாக வந்தாலும் ஆட்சி அமைக்கவில்லை. வி பி சிங் சோதனை நடந்தது.

காங்கிரஸ் 510ல் நின்று 197 யை பெற்றது. வாக்கு சதம் 39.53. பாஜக 225ல் நின்று 85 பெற்று நம்பிக்கையைக் கூட்டிக்கொண்டது. இடதுசாரிகள் 133ல் நின்று 53யை பெற்றனர். செண்ட்ரிஸ்ட் கட்சி, வலது, இடது என அவரவர்க்கு செல்வாக்கான அரசியல் என்கிற நிலை ஏற்பட்டது. ஜனதா தளம் 220ல் நின்று 126 யை பிடித்தது. பிஎஸ்பி 245 இடங்களில் 3 யை பெற்றது. அதிமுக 11க்கு 11 பெற்றது.

1991 தேர்தல் ராஜிவ் படுகொலை சூழல், நரசிம்மராவ் சோதனை நடந்தது. காங்கிரஸ் 505ல் நின்று 244ல் வென்றது. வாக்கு சதம் 36.64. பாஜக 478ல் நின்று 121 ஆக உயர்ந்தது. வாக்கு சதம் 20.04. இடதுசாரிகள் 141ல் நின்று 57 பெற்றனர். வாக்கு சதம் 10.36. நல்ல மரியாதைக்குரிய அரசியல் நிலை கிடைத்தது. அதிமுக 11க்கு 11 பெற்றது.

1996,98 யுனைட்டட் ஃபிரண்ட் கூட்டணி சோதனை நடந்தன.

1999 தேர்தலைப் பார்ப்போம். வாஜ்பாய் என் டி ஏ ஆட்சி - நிலையான ஆட்சி என்கிற வாய்ப்பு பாஜகவிற்கு வந்தது. காங்கிரஸ் 453ல் நின்று 114 பெற்றனர். வாக்கு சதம் 28.30 என வீழ்ந்தது. பாஜக 339ல் நின்று 182யை பெற்றது. வாக்கு சதம் 23.75 தான். திமுக பாஜகவுடன் சேர்ந்து 19க்கு 12யை பிடித்தது. பாமக, எம்டிஎம்கே கட்சிகளும் பாஜகவுடன் இருந்தனர். அதிமுக காங்கிரசுடன் இருந்து 24ல் நின்று 10யை பிடித்தது.

2004, 2009 காங்கிரஸ் வென்று  மன்மோகன் சிங் சோதனை நடந்தது. யுபிஏ, என் டி ஏ என மோதினர். 2004ல் காங்கிரஸ் 414ல் போட்டியிட்டு, 145 இடங்களைப் பெற்றது. வாக்கு சதம் 26.44. UPA கூட்டணியில் 20 கட்சிகள், திமுக உட்பட இருந்தன. 221 இடங்கள் 36.43 சத வாக்குகள் கிடைத்தன. என் டி ஏ விற்கு 189 இடங்கள் 35.89 சதம் கிடைத்தது. இதில் பாஜக 364ல் நின்று 138 யை பெற்றது. அதன் வாக்கு சதம் 22.16. அதன் கூட்டணியில் அதிமுக உட்பட 15 கட்சிகள் இருந்தன. இடதுகள் 113 இடங்களில் போட்டியிட்டு 62 இடங்களை வென்று அவர்களுக்கான நல்ல அரசியல் இடத்தைப் பெற்றனர். வாக்கு சதம் 8.11. பி எஸ் பி 435 இடங்களில் போட்டியிட்டு 19யை பெற்றது.

மீண்டும் மன்மோகன் ஆட்சிக்கு உதவிய தேர்தலாக 2009 அமைந்தது. வாக்காளர் 71.70 கோடியைத் தொட்டனர். வாக்கு சதம் 58.20 ஆகத்தான் இருந்தது. காங்கிரஸ் 440ல் நின்று 206 இடங்களைப் பிடித்தது. வாக்கு சதம் 28.55. உடன் இருந்த திமுக 22க்கு 18 யை பெற்று 1.83 சதத்தை வாங்கியது. காங்கிரஸ் கூட்டணி 262 இடங்களைப் பெற்றது.

என் டி ஏ 159 இடங்களை மட்டுமே பெற்றது. பாஜக 433ல் போட்டியிட்டு 116யை பிடிக்க முடிந்தது. வாக்கு சதம் 18.8 என வீழ்ந்தது. இடதுசாரிகள் 177ல் போட்டியிட்டாலும் 24 இடங்களாக ஆக வீழ்ந்தனர். வாக்கும் 7.61 என குறைந்தது. பி எஸ் பி 500 இடங்களில் நின்று 21யைப் பெற்றது.

2014 வலதின் தீவிரத்தை கூட்டிய தேர்தல். மோடி ஆட்சிக்கு வரமுடிந்தது. வாக்காளர் 83 கோடியைத் தொட்டனர். வாக்கு சதம் 66.44 எனக் கூடியது.

காங்கிரஸ் 464ல் போட்டியிட்டு வரலாறு காணாத வீழ்ச்சியாக 44 இடங்களை மட்டுமே பெற்றது. அதன் வாக்கு சதம் 19.31 ஆக குறைந்தது. யுபிஏ 59 இடங்களை மட்டுமே பெற்றது. என் டி ஏ 335 இடங்களைப் பிடித்தது. பாஜக 428 இடங்களில் நின்று தனிப்பெரும்பான்மையாக 282 இடங்களைப் பெற்று அதற்கான புதிய வரலாற்றை உருவாக்கியது. வாக்கு சதமும் 31.

இடதுசாரிகள் 210 இடங்களில் நின்றாலும் அவர்களும் 12 இடங்கள் என வீழ்ந்தனர். வாக்கு சதம் 4.83 என சரிவைக் கண்டது. மேவ மமதா 34 இடங்களைப் பெற்று சாதனை புரிந்தார்.

2019 தேர்தலும் மோடிக்கே வாய்ப்பை திரும்பக் கொடுத்தது. வாக்காளர் 91கோடியாயினர். வாக்கு சதம் 67.40 என கூடுதலாக இருந்தது. என் டி ஏ 352 இடங்களைப் பிடித்தது. பாஜக தன் பலத்தை மேலும் கூட்டிக்கொண்டது. 436 இடங்களில் நின்று 303யை பெற்றது. வாக்கு சதமும் 37.3 எனக் கூடியது. ஜெயலலிதா இல்லா அதிமுக 21ல் நின்று 1யைப் பெற்றது.

யுபிஏ 91 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் 421ல் நின்று 52 என சற்று தன்னை உயர்த்திக்கொண்டது. வாக்கு சதம் 19.49ல் பெரிய மாற்றமில்லை. திமுக 23ல் 23யையும் பெற்றது.

இடதுகள் பெரும் சரிவைக் கண்டனர். சிபிஅய் 2, சிபிஎம் 3, ஆர் எஸ் பி 1 என கிடைக்கப்பெற்றன.

 

1984க்கு பின்னரான 40 ஆண்டு அரசியல் மண்டல்- கமண்டல் என்கிற இரு பரிமாணங்களை சுற்றி நடக்கலாயின. ரிஜினலிசேஷன் என்கிற வட்டார அரசியல் தன் பிடிப்புகளையும் கொண்டதானது. இக்காலத்தில் தன் சொந்த பலத்தில் காங்கிரஸ் 1984 யை ஒப்பிடுகையில் அதிகபட்சம் அதில் 50 சதத்தையும், குறைந்த பட்சம் 11 சதத்தையுமே இடங்களாக தக்க வைத்தது. 2024ல் அது 200க்கு மேற்பட்ட இடங்கள் என சொந்த பலத்தைக் காட்டுமா என்பது முக்கியமான கேள்வி. காங்கிரசிர்கு எவ்வளவு இடங்கள் என்பது தான் அடுத்த 5 ஆண்டுகால அரசியலுக்கு முக்கிய கேள்வியாக இருக்கும். இடதுகளும் இந்த 40 ஆண்டுகளில் 60க்கு மேல் என்பதிலிருந்து 6 என்ற நிலைக்கு வந்தனர். இவர்கள் கூடுதலாகப் பெறப்போகும் இடங்களும் வலதின் வெம்மையை சற்று தணிக்கும். பெறுவார்களா எனத் தெரியவில்லை.

பாஜக 400 என்றெல்லாம் பேசிக்கொண்டாலும் அதனால் 2014ல் பெற்ற தனிப்பெரும்பான்மை போல் 272க்கு மேல் பெறுமா என்பது முக்கிய கேள்வி. 272க்கு கீழ் பெற்றாலும்  அதிக இடங்களைப் பெறப்போகும் முதல் கட்சி என்றால், ஆட்சி அமைக்க என்ன செய்யப்போகிறது என்பதும் கேள்வி. அப்போது இயல்பாக பிரதமர் மோடியா வேறு எவரா என்பதும் விவாதமாகலாம். மக்கள் இழுபறி தீர்ப்பை தருவார்களா..அல்லது காங்கிரசைவிட மிகக் குறைவாகவே பாஜக பெற்றது என்ற நிலையை உருவாக்கி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு இடமளிப்பார்களா என்பதை ஜூன் 4 காட்டிவிடும். பார்ப்போம். மக்கள் தங்களுக்கான அரசியல் திசை வழியை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என..

 

12-5-2024

Thursday, May 2, 2024

காகா கலேல்கர் கமிஷன் பற்றி மண்டல் கமிஷன்

 

காகா கலேல்கர் கமிஷன் பற்றி மண்டல் கமிஷன்



நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு விவாதம் தேர்தலில் தீவிரமாக எதிரொலிக்கும் நிலையில் மண்டல் கமிஷன் அறிக்கையை மீண்டும் படித்துப்பார்க்கலாம் எனத் தோன்றியது. அதன் முதல் சாப்டரே  First Backward Classes Commission  பற்றிய மண்டல் கமிஷன் பார்வைதான். அந்தக் கமிஷன் என்ன பேசியது - பரிந்துரைத்தது என்பதை மிகச் சுருக்கமாக மண்டல் பேசியிருப்பார். அதிலிருந்து சில வரிகளை இங்கு தந்துள்ளேன்.

 காகா கலேல்கர் கமிஷன் ஜன 19, 1953ல் அமைக்கப்பட்டது. தனது அறிக்கையை மார்ச் 30, 1955ல் வழங்கியது. சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர் என்பதைக் கண்டறிய அது 4 அளவுகோல்களை வைத்தது. அவை

-Low social position in the traditional caste hierarchy of Hindu society

-Lack of educational advancement among major section of a caste or community

-Inadequate or no representation in govt service

-Inadequate representation in the field of trade, commerce and industry

அவ்வறிக்கை 2399 சாதி வகுப்பார் லிஸ்ட்டை தயாரித்தது. 837 பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் எனச் சொன்னது. அக்கமிஷனின் சில முக்கிய பரிந்துரைகள்

-undertake caste wise enumeration in the census of 1961

-Relating Social backwardness of a class to its low position in the traditional caste hierarchy of Hindu society

-treating all women as a class as backward

-Reservation of 70 % seats in all technical and professional institutions for qualified students of backward classes

-Reservation of vacancies in all govt services and local bodies for OBC

class 1 25 %

class II 33 1/3 %

classs III and iV  40 %

கமிட்டியில் 5 உறுப்பினர் முடிவில் மாறுபட்டனர். ஒன்றுபட்ட முடிவை கமிட்டி தரமுடியாமல் போனது. சாதியை பிற்பட்டத்தன்மைக்காண இணைக்கலாமா என்று சிலர் கேட்டனர். சேர்மனாக இருந்த கலேல்கரும் தனது தயக்கத்தை வெளிப்படுத்தாமல் இல்லை. அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகளும் இங்கு தரப்பட்டுள்ளன.

1951 சென்சஸ் படி எஸ்சி எஸ்டி பிரிவில் 7 கோடி இருந்தனர். இந்த 2399ல் 930 பிரிவினர் 11.5 கோடியாக இருந்தனர்.

அறிக்கையைப் பெற்ற அரசாங்க நடவடிக்கை என்ன என்பதை மண்டல் தருகிறார். நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை விவாதிக்கப்படவில்லை. அரசாங்கம் வேறு வழியிருக்குமா என பார்க்கச் சொல்லியது.

To discover some criteria other than caste which could be the practical application in determining the backward classes.

இதற்கான சர்வே ஒன்றை எடுக்க சொல்லினர்- linking to occupational communities instead of caste. அம்முயற்சி வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அகில இந்திய அளவில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் எனவும் எஸ்சி எஸ்டிக்கு மட்டும் இருக்கட்டும் எனவும் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆக 14, 1961ல் உள்துறை அமைச்சக செய்தியாக நமக்கு கிடைப்பது- மாநில அரசுகள் பட்டியல் வைத்து அதன்படி தங்களின் அளவுகோல்களை கடைபிடிக்கலாம்.

While the State Govts have the discretion to choose their own criteria for defining backwardness, in the view of GOI it would be better to apply economic tests than to go by caste...

the State Govts may adhere to their own lists, any AI list drawn up by the CG would have no practical utility"

காகா கலேல்கர் கமிஷன் முதல் முறையாக அனைத்திந்திய ஆய்வை மேற்கொண்ட ஒன்று எனப் பாரட்டப்பட்டாலும், அதன் முறையியல் குறைகளுடன், உள்முரண்பாடுகளைக் கொண்டதாகவும் இருந்தது. 2399 பிரிவினர் என்கிற பட்டியலை கல்வி இலாகாவும், மாநில சர்க்கார்களும் கொடுத்த விவரப்படி எடுத்துக்கொண்டனர். சரி பார்ப்பதற்கான கள ஆய்வு எதையும் காகா கலேல்கர் கமிஷன் செய்யவில்லை. அதுபோல அது பரிந்துரைத்த இட ஒதுக்கீடு சதவீதங்களும் எந்த அடிப்படையில் எனச் சொல்லப்படவில்லை.

கலேல்கர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்கண்ட வரிகளும் இருந்தன

“ ...I was prepared to recommend to Govt that all special help should be given only to the backward classes and even the poor and the deserving upper classes may be safely kept out from the benefit of this special help.

My eyes were however opened to the dangers of suggesting remedies on the caste basis when I discovered that it is going to have a most unhealthy effect of the Muslim and Christian sections of the nation.."

"..it drove me to the conclusion that the remedies we suggested were worse than the evil we were out to combat"

"..it is only when the report was being finalised that I started thinking anew and found that backwardness could be tackled on a basis or a number of basies other than that of caste. I only succeeded in raising the suspicion of the majority colleagues that I was trying to torpedo the recommendations of the commission. This was another reason why I signed the Report without even a minute of dissent."

வேறு ஒரு இடத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சாதியால் ஏற்பட்ட துன்பங்களை சாதியைக் கொண்டே தீர்ப்பது என்றும் சொல்லியுள்ளார் கலேல்கர். பாவம் காந்தியவாதி காகா என மண்டல் இங்கு தெரிவிக்கிறார்.

2-5-2024

Wednesday, May 1, 2024

சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள் Association of Caste and Class- caste class Dynamics

 

சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள்

Association of Caste and Class- caste class Dynamics

 

 அசீம்பிரேம்ஜி பல்கலை சார்பில் ஆய்வறிக்கை ஒன்றை படிக்க நேர்ந்தது. வைசாலி கோலி அவர்களின் பேப்பர்- சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள்.

இங்கு 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த சாதி என்பதை, இன்றைய வழக்கு மொழியில் வைசாலி எடுத்தாள்கிறார். செட்யூல்ட் வகுப்பார், பிற்பட்ட வகுப்பார், மற்றவர் அதாவது உயர் சாதியினர் என வகைப்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்க்கம் என்பதில், ஊதியம் பெறும் வகுப்பார், வர்த்தக வகுப்பார், அடிமட்ட உழைப்பாளர், விவசாய தொழிலாளர் எனப் பிரித்துக்கொள்கிறார் வைசாலி.

பல்வேறு வர்க்கத்தட்டுகளில் இருப்போரிடம் சாதி என்பது எவ்வாறு கூடவே உட்கார்ந்து வருகிறது. அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகளில் நிற்கிறது என்பது பேசப்பட்டுள்ளது.

 ”how caste identities shape economic life chances and social experiences for individuals placed in different class locations, as well as how class identities shape such experiences of individuals belonging to different caste groups”

occupational convergence between SC households and non-scheduled households இருந்தாலும், எஸ்டி பிரிவில் இது குறைவாக இருக்கிறது.

மற்றொரு சுவாரஸ்யமான தகவல் :

 Although SCs have difficulty in moving out of their traditional occupations, the upper castes are also not completely cushioned from downward mobility.

1999-2000ல் செட்யூல்ட் வகுப்பார் எஸ் சி 19.14 சதம், எஸ் டி 8.63, ஓபிசி 35.57,மற்றவர் 36.65 என்கிற சதவீதத்தில் இருந்தால், 2011-12ல் 18.57,8.45,43.58, 29.51 என்கிற சதத்தில் சோசியல் குரூப்பாக இருப்பதைக் காண்கிறோம். ஊரகப்பகுதியில் வர்க்கப் பகுப்பாய்வை விவசாயி, விவசாய  தொழிலாளி, புரொபஷனல்கள், சுயதொழில் எனச் செய்துள்ளனர். இந்த சதவீதம் 1999-2000ல் 40.36, 44.77, 2.78, 12.09 என்றால் 2011-12ல் 38.73,43.21,3.47,14.59 எனக் காட்டப்பட்டுள்ளது.

நகர்ப்புற வர்க்கப் பிரிவுகளாக சுயதொழில், காஷுவல், புரொபஷனல் என்கிற மூன்றை எடுத்துக்கொள்கின்றனர். 1999-2000ல் 41.15 சதம், 42.04, 16.81 என்றால், 2011-12ல் இந்த சதவீதம் 40.2,40.21,19.59 என இருக்கிறது.

சாதி சமூகவாரியான கிராமம் மற்றும் நகர்ப்புற தலைக்கு மாதச் செலவு என ஒன்றை கணக்கிட்டுள்ளனர்.

கிராமத்தில் எஸ்டி, எஸ்சி, ஓபிசி, மற்றவர் 1999-2000ல்  ரூபாயில் உத்தேசமாக 409, 434, 470, 554 செலவு கணக்கீடு என்றால், இந்த தலைவாரி செலவு 2011-12ல் உத்தேசமாக 499, 572, 628, 734 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் நகர்ப்புறத்தில் இந்த சமூக குழுவிற்கான செலவாக 1999-2000ல் உத்தேசமாக 702, 676, 742, 993 என்றால் 2011-12ல் ரூ 942,885,1033,1399 என்றாக கணக்கிடப்பட்டுள்ளது.

வாரந்திர ஊதியம் என்பதில் வேறுபாடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் சொல்கின்றனர். நகர்ப்புறத்தில் மேல்சாதியினர்க்கு கல்வி வாய்ப்பு கூடுதல் என்றால், கிராமப்புறத்தில் ஓபிசி பிரிவினர் கல்வி வாய்ப்பு கூடியுள்ளது.

கிராமப்புற வர்க்கப்பிரிவினையில் எப்படியான சாதிக் குழுக்கள் ஒவ்வொரு வர்க்கப்பிரிவிலும் எனப் பிரித்துப் பார்த்து ஆய்வை செய்துள்ளனர்.

1999-2000ல் விவசாயிகள் வர்க்கத்தில் எஸ் டி 29.88 சதம், எஸ் சி 12.01, ஓபிசி 23.58, மற்றவர் 23.3 என்கிற சதத்தில் இருக்கின்றனர். இது 2011-12ல் 27.56,10.56,19.1, 19.5 என்றாகியுள்ளது.

அடுத்த வர்க்கமான விவசாயத் தொழிலாளியில் எஸ் டி 33.46, 37.69,22.32,13.89 என்பது 2011-12ல் 24.6, 30.13, 18.95, 13.27 எனத் தெரிகிறது.

கிராமப்புற புரொபஷனல் வர்க்கத்தில் எஸ்டி 1.2, எஸ் சி 1.01, ஓபிசி 1.16, மற்றவர் 2.34 என்பது 2011-12ல் 1.16, 1.17,1.42, 2.67 என்றாகவுள்ளது.

சுயவேலை வர்க்கப்பிரிவு எஸ்டி 2.91, எஸ்சி 5.81, ஓபிசி 7.72, மற்றவர் 6.75 எனில் 2011-12ல் 3.62, 6.03, 7.35, 8.3 என்றாகிறது.

 

இங்கு இதுவரை இந்த ஆய்வுத்தாளில் பேசாத சந்தை தொழிலாளி அல்லாதவர் என ஒன்றைக் காட்டுகின்றனர். அப்பிரிவில் எஸ்டி 32.55, எஸ் சி43.49, ஒபிசி 45.23, 53.67 என இருந்தால் 2011-12ல் இப்பிரிவார் சாதிக்குழுக்களாக 43.06, 52.11, 53.18, 56.25 என மாறியுள்ளது.

மேலே சொன்னதெல்லாம் Class distribution across various caste groups in the rural sector . இதேபோல அந்தப் பிரிவுகள் நகர்ப்புறத்தில் எப்படியுள்ளன என கணக்கிட்டுள்ளனர்.

அந்தக் கணக்கீட்டுப்படி நகர்ப்புறத்தில்:

சுயவேலைவாய்ப்பில் எஸ்டி,எஸ்சி,ஓபிசி, மற்றவர் பிரிவில் 1999ல் 11.95 சதம், 14.01,18.55,16,4 என இருந்தது 2011-12ல் 8.97,12.23, 17.54, 17.33 என மாறியுள்ளது. காஷுவல் என்பதில் 21.07,24.58,19.01,13,45 என்பது 24.05,23.61,17.25,12.71 என்றானது.

புரபொஷனலில் 7.34, 3.98, 4.54, 8.77 என்பது 8.92,6,6.41, 10.13 என்றானது. நான் மார்க்கெட் என்கிற  பகுதியில் 59.65, 57.43, 57.89,61.38 என்பதானது 58.06, 58.17, 58.18, 59.83 என்று மாறியுள்ளது.

அடுத்து வைசாலி தருவது caste distribution across various classes in rural 1999-2000 / 2011-12

விவசாயி எனும் வர்க்கத்தில் எஸ்டி,எஸ்சி, ஓபிசி, மற்றவர் எவ்வளவு போன்ற ஆய்வாகும்.

விவசாயி எனில் 1999-2000ல் 14.38, 11.67, 40.47, 34.48 என்பது 2011-12ல் 15.96, 11.78, 46.6, 25.66 என்றானது.

தொழிலாளி என்பதில் 14.52, 33.01,34.53, 17.94 என்பது 12.77, 30.13, 41.45, 15.65 என்று மாறியுள்ளது.

புரபொஷனல்ஸ் என்பதில் 8.37, 14.28, 28.82, 48.54 என்பது 2011-12ல் 7.51, 14.52, 38.71, 39.27 என்றானது.

சுயவேலை 4.67, 18.83, 44.23, 32.27 என்பது 5.56, 17.85, 47.59, 29 என்றானது. நான் மார்க்கெட் 7.37, 19.89, 36.53, 36.21 என்பது 8.69, 20.27, 45.24, 25.8 என்று காட்டப்பட்டுள்ளது.

 

நகர்ப்புறத்திற்கு வரும்போது விவசாயிகள் என்பதே காட்டப்படவில்லை/

சுயதொழில் 2.55,11.4,34.3,51.66 என்பது 8,10.38,43. 18, 44.65 ஆனது.

தொழிலாளி 4.41, 19.7, 34.4, 41.47 என்பது  7, 20.5, 42.46, 32.72 என்றும், புரபொஷனல்ஸ் 3.84, 7.98, 20.5,67.61 என்பது 3.6, 10.45, 32.37, 53.55 ஆனது.

சந்தைக்கு வராதவர் 3.54, 13, 29.7, 53.68 என்பது 3.2, 13.73, 40.23, 42.84 என மாறுகிறது.

வைசாலி இந்த ஆய்வின் மூலம் நமக்கு சொல்வது

These trends suggest that while, overall, there have been some improvements and gains made by STs, SCs and OBCs, the trajectories of improvements are varied across the caste and class groups. The disparities between the marginalized caste groups and the Forward castes have not significantly narrowed down and the pre-existing associations between the castes and classes have continued to a significant extent.

-SCs are found to be under-represented (relative to Others) in the class of peasants.

-Caste turns out to be a significant determinant in explaining the likelihood of belonging to a particular class category

trends of caste-class associations over the period in the rural sector பலப்படுகிறதா, பலவீனமாகிறதா என்கிற மாட்ரிக்ஸ் ஒன்றையும் வைசாலி தருகிறார். தொழிலாளி என்பதில் பலவீனமாவதையும், விவசாயம் என்பதில் சற்று பலமாகவும் கிராமத்தில் காண்கிறோம். நகர்ப்புறத்தில் இது பொதுவாக பலப்படுவதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.

 -even at higher education levels STs, SCs, and OBCs continue to be mostly under and over represented in better-off and worse-off occupation classes, respectively, over this peak period of growth between 1999-2000 and 2011-12.  For instance, in the rural sector, SCs are under-represented in the class of peasants who are literates below primary, whereas, STs, SCs and OBCs continue to be under-represented in the class of peasants who are primary up to secondary educated.

-A strengthening of the existing caste-class linkage across education categories suggests a tendency of continued stickiness between an individual’s caste identity and class location, whereas weakening suggests a tendency of dilution of the existing caste-class linkages which is likely to result in improved fluidity in the social structure.

-The analysis shows that in the rural sector, the existing association between STs and SCs who are literates below primary and the class of labour has strengthened over this period.

-The continued over and under-representation of STs and SCs in the class of regular and casual workers across all education categories, and the class of self-employed who are primary up to secondary and higher secondary and above educated, respectively, has further strengthened during this peak period of growth.

-The analysis also reveals a striking trend for OBCs. In the rural and urban sectors caste turns out to be insignificant in determining the relative likelihood of OBCs belonging to various class positions

 - the trends for caste over time and caste over time for different education categories show a tendency towards partial dilution of rigid caste boundaries and class hierarchies as some mobility can be witnessed for some caste groups across different class positions

 

-The importance of caste has not diminished in explaining an individual’s class position in majority of cases even when they have access to higher education.

- there is a very strong convergence  between the caste identity and class positions of an individual in general, and across different education categories, and this has further been sustained over the peak period of growth.

1-5-2024