https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, March 28, 2023

பேரா. தோழர் அ.மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ்

 

பேரா. தோழர் .மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் 

பேரா. தோழர் .மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஜனவரி 2023ல் வெளியானது. நேற்று கையில் கிடைத்தவுடன் ஒரே நாளில் சில மணிகளில் 198 பக்கங்களையும் படிக்க முடிந்தது. ஆர்வமும் நேரமும் உதவின.

 

மார்க்ஸ் மற்றும் மார்க்சிற்கு பிந்திய மார்க்ஸியம் குறித்த அம்சங்களை அறிமுகப்படுத்தி விளக்கும் ஆக்கமிது. இளைஞர்களுக்கு நல்ல கையேடாக இந்த புத்தகம் அமையும் என்றே வாசித்தவுடன் எனக்குத் தோன்றியது. இடதுசாரி இளம் தோழர்கள் கூட்டாக வாசித்து புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய புத்தகம். கடினமாக இருக்காது.

 


தோழர் .மார்க்ஸ் அவர்கள் மார்க்ஸின் 200 ஆம் ஆண்டில்மக்கள் களம்ஆசிரியரின் வேண்டுகோளுக்கேற்ப எழுதிய தொடர்கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன. 17 கட்டுரைகள் அதைத் தொடர்ந்த பின் இணைப்புகளின் தொகுப்பு இந்த ஆக்கம். 17 கட்டுரைகளின் சாரமாக பின் இணைப்புகளை கொள்ளமுடியும்.

 

இந்நூல் அட்டையில் சொல்லப்பட்டுள்ளபடி மார்க்ஸ் அவரது ஆக்கங்கள் அறிமுகம் குறிப்பாக அவரது கம்யூனிஸ்ட் அறிக்கை, அந்நியமாதல், மதம், உபரிமதிப்பு, இந்தியா குறித்து மார்க்சின் கட்டுரைகள் என்பதுடன், அல்தூசரின் அமைப்பியல் சார்ந்த பார்வை, ஹார்ட் நெக்ரி இரட்டையரின் பேரரசு மற்றும் பெருந்திரள் குறிப்புகள் மற்றும் ஓரளவு மேலை மார்க்சியம் இதில் பேசுபொருளாக்கப்பட்டுள்ளன.

 

மார்க்சியமும் இலக்கியமும் தனித்து பேசப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு வெளிப்படையானதாக ஜனநாயகம் நிறைந்ததாக இருக்க மார்க்சே வலியுறுத்தியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மார்க்சின் எழுத்துக்கள் ஏன் வாசிக்க கடினமாக இருக்கின்றன என்பதை பல இடங்களில் எழுப்பி தோழர் .மா பதில் தருகிறார். அதேபோல் அவரது உபரி மதிப்பு கோட்பாட்டின் பொருத்தப்பாட்டை இன்றும் எவரும் மறுக்க முடியாது என்பதைப் பேசுகிறார்.

மார்க்சியம் என்பதை வளர்ந்து வரும் அறிவியலாக, அது மார்க்ஸ் உடன் நின்று போகவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனச் சொல்கிறார்.

 

மார்க்சியம் தோற்றுப்போனதா என்ற கேள்விக்கான பதிலை அவர் தேடுகிறார். உலகம் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து விடுபடவில்லை என்பதையும், இன்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி அதற்கான முழு தீர்வுகளையும் தரவில்லை எனப் பார்க்கும்போது , மாற்று சிந்தனைக்காக மார்க்சியம் நோக்கி பலரும் வருவதை தோழர் .மா சொல்கிறார். மார்க்ஸ் முதலாளித்துவம் மீதான விமர்சனம் என்பது பொருளாதாரம் தாண்டி அறவியல் தாக்கங்களையும் கொண்டது என .மார்க்ஸ் எழுதுகிறார்.

 

அது போலவே சோசலிசம் தோற்றுவிட்டது என்று வருகிற உரையாடலுக்குமான பதிலை .மா தேடுகிறார். புரட்சிக்கு பிந்திய சமுதாய கட்டுமானங்கள் அதன் சோதனைகள் தோற்றிருக்கலாம் என்பதை தாண்டி அதை சோசலிசத்தின் தோல்வியாக யார் நிறுவியுள்ளனர் என்ற கேள்வியை தோழர் .மா விடம் பார்க்கிறோம். அதே நேரத்தில் சோசலிச கட்டுமானங்கள் குறித்த உரையாடல் பெருகட்டும் என்கிறார்.

 

இந்த அறிமுகத்தை தோழர் .மார்க்சின் வரிகளுடன் நிறைவு செய்கிறேன்

கார்ல் மார்க்சை வெறும் தத்துவ ஆசிரியராக, பொருளாதார மேதையாக, களப்போராளியாக சுருக்கி பார்த்துவிட இயலாது..அவர் எல்லாமுவாக இருந்தவர்.. அப்படியாக ஒருவரை வரலாறு அவருக்கு முன்னோ பின்னோ யாரையும் அடையாளம் காட்டியதில்லை. மார்க்சிற்கு பிந்திய மாற்றங்களை அவர் வழி நின்று ஆய்வு செய்வோம்மார்க்சிற்கு பிந்திய சிந்தனை வளர்ச்சிகளை ஏற்று அறிந்து நம்மையும் மார்க்சியத்தையும் மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்ல; மார்க்சியத்தை வளப்படுத்த வேண்டிய கடமையும் நமக்குண்டு.

புதிய சிந்தனைகளை திறந்த மனத்துடன் எதிர்கொள்வோம். தோழர்களே! நமக்குத் தேவை திறந்த மனது, தெளிந்த அறிவு, கடின உழைப்பு! “

 

என் ஆர்வம் காரணமாக நான் விரைந்து இந்த ஆக்கத்தை படித்திருக்கலாம். ஆனால் அதில் பேசப்பட்டுள்ள கருத்தாங்களை தேட , படித்து புரிந்து கொள்ள பல நாட்கள் கடின உழைப்பு பேரா

.மார்க்ஸ் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கக்கூடும்.

 

28-3-2023

 

இந்திய பொருளாதாரம் 75 ஆண்டுகள்

 

இந்திய பொருளாதாரம் 75 ஆண்டுகள்

Non Economics மாணவ வாசகர்களுக்கான புத்தகமாக Journey of A Nation 75 years of Indian Economy- Re emerge, Reinvest, Re engage என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

சஞ்சயா பாரு மிகத்திறமையாக சொற்செட்டுடன், பொருளாதார கணக்குப்புலிகளைப் போல் அல்லாமல் என் போன்ற பாமரனுக்கும் புரியவைக்க முயற்சித்துள்ளார். குறிப்பாக இந்தப் புத்தகம்  young audience of millennialsக்கானது என்கிறார். 2000க்குப் பின் பிறந்த இளைஞர்களை மனதில் வைத்துக்கொண்டு பாரு இதனை எழுதியிருப்பதாக அறிவித்துள்ளார்.



2022ல் ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளனர். 175 பக்கங்களில் 14 சாப்டர்களில் இந்திய பொருளாதாரத்தின் திசைவழிதனை புரிய வைக்கும் முயற்சி. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு முந்திய இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படி வீழ்த்தப்பட்டது என்ற அறிமுகத்துடன் பாரு இதை துவங்குகிறார்.

காலனி எதிர்ப்பு இயக்க காலத்தில் பல்வேறு தேசப்பொருளாதார மீட்சிக்கான பாதைகளும் கருத்துக்களும் எப்படி மோதிக்கொண்டன. எப்படிப்பட்ட செழுமையான விவாதங்கள் நடந்தன என்பதை ஓரளவிற்கு தொட்டுக்காட்டுகிறார்.

தாதாபாய் நெளரோஜியின் poverty and Un British Rule in India  துவங்கி Homespun ideas , சோவியத் மற்றும் ஜப்பானிய தாக்கத்தில் வளர்ந்ததை குறிப்பிடுகிறார்.

காந்தியின் வரவையடுத்து இரு பெரும் பிரிவுகளான உரையாடல்களாக  இவை  இந்திய அரசியல் அரங்கில் உருவெடுத்தன.  இதை பாரு இவ்வாறு குறிக்கிறார்

Two grand ideas began to shape indian political thinking on economic policy by the middle of the 20th century- one the ideas  espoused by Gandhiji and Gandhians who believed in the preservation and promotion of gram Swaraj or village industry, small scale industry; second the views of Indian business and political leadership who pushed for large scale and modern industrialisation, mimicking the soviet model.

இந்தியாவில் இருந்த விஜயநகர, காகதீய, சேர, சோழ, பாண்டிய அரசுகளின் கால விவசாய செழுமை, வர்த்தகம், கடல் ஆதிக்கம் என்பதை பாரு தொட்டுக்காட்டுகிறார். அய்ரோப்பாவைவிட இந்தியா நகர நாகரீகம் மேம்பட்ட நாடாக இருந்துள்ளது. முகலாயர் காலத்திலும் கூட இந்தச் சிறப்புகள் நீடித்து வளர்ந்தன. வீழத்துவங்கியதை பற்றிப் பேசும்போது மாடிசன் நூலை பாரு எடுத்துக்காட்டுகிறார்.

The steep decline in India’s share of world income, as shown by Maddison, was the consequence of this drain and parasitical nature of the European colonialism.

மேலும் பாரு எழுதுவதைப் பார்ப்போம்

சஞ்சயா பாருவின் தேசத்தின் பயணம் இந்திய பொருளாதாரம் 75 ஆண்டுகள் அளவில் சிறிய புத்தகமானாலும், நாட்டின் பாதைக்கு போடப்பட்ட கொள்கை முன்வைப்புகள் அவற்றின் விளவுகளை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் புத்தகம். குறிப்பாக என் போன்ற laymanக்கான  புத்தகம்.

பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் அவர்களின் காலனிகால கொள்ளை குறித்த புத்தகங்கள் ஏராளம் வந்துள்ளன. பாரு தோழர்கள் உட்சா மற்றும் பிரபாத் பட்நாயக்கிடமிருந்து கணக்கு ஒன்றைத்தருகிறார். கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் பெறப்பட்ட ஒவ்வொரு 100 ரூபாயிலும் 33 இங்கிலாந்திற்கு சென்றுவிட்டது. இப்படி drain  ஆன wealth 2020 படி பார்த்தால் 13.39 டிரில்லியன் பவுண்ட் - அதாவது பிரிட்டனின் 2020க்கான gdp போல 4 மடங்காம்.

இந்தியாவில் அப்போது இருந்த ஜமிந்தாரி, ரயத்துவாரி முறைகளை பாரு சொல்கிறார். ரயத்துவாரியில் அரசிற்கும் உழவர்க்கும் இடையில் வரி வசூல் ஏஜெண்ட் என ஜமீன்கள் இருப்பதில்லை. மதராஸ் மாகாணம் இப்படி ரயத்துவாரியில் ஒன்றாக இருந்ததால், ஜமின் தாரி கிழக்கைவிட செழுமையாக வளர்ந்தது.

முதல் உலகப்போர், சோவியத் புரட்சி ஆகியவற்றின் பின்புலத்தில் தேசிய எழுச்சிகளும், அதனை ஓரளவிற்கு தணிக்கும் வகையில் பிரிட்டிஷ் பாலிசிகளும் மாற வேண்டியிருந்தது. ஜப்பானின் வளர்ச்சி இந்தியர்களை ஈர்த்தது.

சிகாகோ சென்ற சுவாமி விவேகானந்தர், இத்தருணத்தில் ஜாம்ஷெட்ஜி டாட்டாவுடன் உரையாடினார். இருவரும் ஜப்பானில் இருந்து தங்கள் உரையாடலை நடத்திக்கொண்டனர். சுவாமியின் அருளாசியுடன் இந்தியா திரும்பிய டாட்டா indian Institute of Science நிறுவினார்.

1898ல் ஜப்பான் சென்று திரும்பிய விஸ்வேஸ்வரய்யா ஜப்பான் அனுபவங்களை கணக்கில்கொண்டு industrialise or perish என்ற முழக்கத்தை வைத்தார். அவரின் சேவைகளுக்காக 1955ல் பாரத ரத்னா பெற்றார்.

1916ல் தாகூர் ஜப்பான் சென்றார். 1905 ல் ஆசிய நாடு அய்ரோப்பிய ருஷ்யாவை வெல்லமுடியும் என்று காட்டிய ஜப்பானின் புகழ் பரவியது. தாகூர் எழுதினார்

She has shown her bold spirit in breaking through the confinements of habits, useless accumulations of the lazy mind, seeking safety in its thrifts and its locks and keys. Thus she has come in contact with the living time and has accepted with eagerness and aptitude the responsibilities of modern civilisation. That is it which has given heart to the rest of Asia

ஜெய்சங்கர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகத்தில் 1900-1945 காலத்தில் எப்படி homespun பொருளாதார சிந்தனைகள் குறித்து பலரும் விவாதித்தனர் என சொல்லப்பட்டுள்ளதை பாரு சுட்டிக்காட்டுகிறார்.

லாகூரில் 1909ல் நடந்த இந்திய தொழில் மாநாட்டில் வாமன் கோவிந்த கலே வாசித்த The present Economic Condition of India ல் இந்திய நிலை சொல்லப்பட்டு ஜப்பானின் உயர்வும் காட்டப்பட்டதாம்.

We lack enterprise, capital, experience, scientific knowledge and sufficient state protection. Agriculture is in the most backward condition. Poverty and ignorance stalk over the land. இப்படி 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த இந்தியாவைத்தான், ஆயிரம் குறை குற்றங்களுக்கும் மத்தியிலும் இந்த நூற்றாண்டு காலத்தில், 21 ஆம் நூற்றாண்டு தலைவாயிலில் அதன் பெருமளவு முன்னேற்றத்துடன் காண்கிறோம்.

1921ல் ஜெஹாங்கிர் கோயாஜி discriminating protection through supportive tariff ratesஎன்பதைக் கோரினார். நிதிக்குழுவும் அதை பரிசீலித்ததாம். இதனால் iron and steel industry  வளர வாய்ப்பு கிட்டியதாம்.

அடுத்து பாரு மூன்று முக்கிய விஷயங்களைச் சொல்கிறார். சுபாஷ் அமைத்த நேரு தலைமையிலான National Planning Committee, இந்திய தொழில் அதிபர்கள் முன்வைத்த பம்பாய் திட்டம், எம் என் ராய் முன்வைத்த மக்கள் திட்டம்.

பாரு சொல்வதை மேலும் பார்க்கலாம்….

நேதாஜி காங்கிரஸ் தலைவரானப் பின்னர் அவர் நேருவின் தலைமையில் தேசிய திட்டக் குழு ஒன்றை அமைத்தார். 1938 அக்டோபரில் மாகாண தொழில் அமைச்சர்கள் மாநாடும் கூட்டப்பட்டது.

குழுவில் விஸ்வேஸ்வரய்யா, புருஷோத்தம்தாஸ் தாகுர்தாஸ், மேக்நாத் சஹா, ஷராப், ஷா, நாசிர் அகமது, துபே, வால்சந்த் ஹீராசந்த், குமரப்பா, ராதாகமல் முகர்ஜி போன்ற புகழ் வாய்ந்தவர்கள் இருந்தனர். நிலம்,நீர், இயற்கை வளம், விவசாயம்,தொழிலாளர், தொழில், வர்த்தகம், கல்வி , கிரிடிட் போன்ற அம்சங்களில் திட்டமிடல் அவசியம் எனக் கருதினர்.

1944ல் தாகுர்தாஸ், டாட்டா, பிர்லா, ஶ்ரீராம், தலால், ஜான் மதாய் போன்றவர்கள் கூடி தங்களின் பம்பாய் திட்டம் எனப்படும் A Brief  Memo Outlining a Plan of Economic Development for India என்பதை வைத்தனர்.

பம்பாய் திட்டம் தொழில், விவசாய வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வீடு, கட்டுமானவளர்ச்சி,  தனிநபர் வருவாய் பெருக்கம் குறித்து பேசியது. தனியார் தொழில் ஊக்குவிப்பு என்பதும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட வரிகளும் அதில் இருந்தன என்கிறார் பாரு.

The real capital of a country consists of its materials and manpower, and money is simply a means of mobilising these resources and canalising them into specific forms of activity.

இந்த ஆவணங்களை இணையத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சுனிதி குமார் கோஷ் அவர்களின் மாவோயிச பார்வையிலான ‘இந்திய பெரு முதலாளி வர்க்கம் என்பதை படிப்பவர் இந்த திட்டப் பார்வைகள் குறித்த கடுமையான விமர்சனம் அதில் இருப்பதைக் காண்பர். இந்த தொழிலதிபர்கள் அனைவரையும் பிரிட்டிஷ் தாசானுதாசர்களாக, தரகு ஏஜெண்ட்களாகவும், காந்தியை இந்த தரகு முதலாளிகளின் காவலனாகவும் சுனிதிகுமார் எழுதியிருப்பார்.  பிபின் சந்திரா போன்ற மார்க்சியர்களே இந்தப் பார்வையை ஏற்கமாட்டார்கள்.

பாரு உள்ளதை உள்ளபடி எழுதியிருப்பார். அவரது இந்த ஆக்கம் perception அல்லது Ism சார்ந்த ஒன்றாக இருக்காது. பொருளாதார நாளிதழ் பத்திரிகையாளர் என்ற வகையிலான பார்வையில் அவர் இந்த பிரதியை நகர்த்தியிருப்பார்.

இடதுசாரி பார்வையில் எம் என் ராய் வழிகாட்டலில் பி என் பானர்ஜி, கோவர்தன் தனராஜ் பரிக், விதல் மகாதேவ், தார்குண்டே ஆகியோர் people’s plan for Economic Development of India என்கிற மக்கள் திட்டத்தை முன்வைத்தனர். இந்தியாவில் வறுமை நீக்கம்தான் தலையாய பிரச்னை என்றார் எம் என் ராய். தங்கள் திட்டம் ஏற்கப்பட்டால் தனிநபர் வருவாயை 10 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்த்தலாம் என்ற உரிமை பாராட்டலை ராய் வைத்தார்.

குமரப்பா காந்திய பொருளாதார சிந்தனையை முன்வைத்தார். Parasitic,predatory, enterprising, gregarious, service oriented என பொருளாதார முறை வகைப்பாட்டை அவர் விளக்கினார். அவரின் நிலைத்த பொருளாதாரம் படித்தவர்கள் இதை உணரமுடியும்.

A nation cannot be independent unless it develops self sufficiency in its primary needs- food, clothing, shelter என்ற சாரத்தை அவர் வைத்தார்.

பாரு குமரப்பாவின் பார்வையை இப்படி நிராகரித்துச் செல்கிறார். உடோபியா கற்பனைவாதமாகவும் , மிகை இலட்சியவாதமாகவும் பாரு அதை பார்க்கிறார். பேராசை, காலநிலை குறித்த காந்திய கருத்துக்களை எடுத்துகொள்ளவேண்டும் என பாரு ஏற்கிறார்.

இந்திய விடுதலைக்கு பின்னர் அமுலாக்கத்திற்கு வந்த 5 ஆண்டு திட்டங்கள் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன. முதல் திட்டம் ஒரு  யூனிட் உற்பத்திக்கு மூன்று மடங்கு மூலதனம் என்ற இலக்கை வைத்தது. 25 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக திட்டம் என்றனர்.

கே என் ராஜ் இதில் முக்கிய பங்காற்றினார். வருமானத்தை இரட்டிப்பாக்குதல், விவசாயத்தை நம்பிய உழைப்பாளர்களை 70 சதத்திலிருந்து 1970 களில் 60 சதமாக்குதல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு, ஏற்றத்தாழ்வை குறைத்தல்- பொருளாதார ஜனநாயகத்திற்கு உகந்த சூழல்களை உருவாக்குதல் போன்ற பார்வையை அவர் முன்னெடுத்தார்.

1955 ஆவடி காங்கிரஸ் socialistic pattern of society என்பதை பேசியது.

Economic policy and institutional changes have to be planned in a manner that would secure economic advance along democratic and egalitarian lines.

இரண்டாவது திட்டம் rapid industrialisation emphasis of basic and heavy industries, employment opportunities, reduction of inequalities in income and wealth என்றது. முதல் மூன்று திட்டக்காலத்திலும் 3.6, 4.3, 2.4 percent growth GDP achieved என பாரு காட்டுகிறார். அதேபோல் அடுத்து வந்த திட்டங்களில் ஏற்பட்ட  GDP growth சதம் பற்றியும் சொல்லியிருப்பார். கடைசியாக வந்தது 12 வது திட்டம் 2012-15. அதில் 8 சத வளர்ச்சி எட்டப்பட்டிருந்தது. பின்னர் மோடி ஆட்சியில் திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு நீதிஆயோக் உருவாக்கப்பட்டது. வளர்ச்சி 7 சதமானது.

Industrial policy Resolutions 1948, 1956 குறித்தும் எளிய அறிமுகத்தை பாரு செய்துள்ளார். 1956ல் இடம் பெற்ற சில வரிகள்

The adoption of the socialist pattern of society as the national objective, as well as the need for the planned and rapid development , require that all industries of basic and strategic importance, or in the nature of public utility services, should be in the public sector. Other industries which are essential and require investment on a scale which only the state, in present circumstances could provide, have also to be in the public sector.

பின்னர் 1967ல் ஹசாரி அவர்கள் தலைமையில்   அமைந்த The Industrial and Licensing policy Inquiry committee , கடந்த கால செயல்பாடுகளால் ஆதாயம் அடைந்தவர் பிர்லா என்றது. அனைவருக்கும் கல்வி, ஆரம்ப கல்வி, தொழில்நுட்ப கல்விக்கு போதுமான கவனத்தை நாம் கொடுக்கவில்லை என்ற பொது விமர்சனம் எழுந்தது.

மிஷல் கலேக்கி இந்தியாவில் ஆலோசகராக இருந்து கொடுத்த மதிப்பீடு ஒன்றை பாரு தந்துள்ளார்

The National liberation movements made the middle class potentially influential, and the ‘development of state ‘ offered the middle class access to power through the institution of bureaucracy. This meant such countries would end up neither being truly ‘capitalist ‘ nor ‘socialist ‘ and would, in fact evolve as ‘intermediate regimes ‘

அதாவது நடுத்தரவர்க்கத்தின் கீழ்த்தட்டிலிருந்து கூட  அதன் நலன்களை அரசு முதலாளித்துவத்துடன் இணைக்கும் நோக்கம் என்பதை கலேக்கி விளக்கினார். இது ஓரளவிற்கு equitable development நோக்கிய பாதையாக அமையலாம் எனவும் கருதினார்.

மேலும் பாரு சொல்வதை பார்ப்போம்..எங்களின் அனுபவத்தை சேர்த்தே இதில் சொல்கிறேன்.

நேருவின் காலத்து சிந்தனைகள் கலப்பு பொருளாதார மாடல் என அறியப்பட்டன.  Public sectors the commanding height of economy என உயர்வாக முன் நிறுத்தப்பட்டது.  என் போன்றவர்கள் எல்லாம் இதன் குழந்தைகள். எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இதன் வழி தென்பட்டதை அனுபவித்து வரும் தலைமுறையினர் நாங்கள். இதில் நாடு முழுக்க அந்த தலைமுறை ‘சாதிகளை ‘ தாண்டியே வளர்ந்தது. பிராமணிய தடைகள் பொதுவாக இல்லாமல் பொதுத்துறை வாய்ப்புகளை திறமையானவர் பெற முடிந்தது. அடிமட்டத்திலிருந்து பலர் பதவி மேம்பாடு பெற்றனர்.

எங்கள் பகுதி டெலிகாமில் எங்கள் வாழ்நாளில் பெரும் புரட்சிகர மாற்றத்தைக் கண்டோம். லட்சக்கணக்கான தினக்கூலிகளாக மணிக்கு ரூ 3 ஊதியம் 1980 களில் பெற்ற காஷுவல் லேபர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டு  , அவர்கள் திறமையால் தொழிற்சங்கபோராட்டங்களால் பதவி மேம்பாடு அடைந்து இப்போது ஓய்வு பெறக்கூடியவர்களில் சிலர் மாதம் 90 ஆயிரம் கூட சம்பளம் பெறமுடிந்துள்ளது.

பொதுத்துறைகள் மீது விமர்சனங்கள் ஏராளம் வரத்துவங்கின. ஊழியர்களின் பணி கலாச்சாரம்,  உற்பத்தி திறன் வீழ்ச்சி, மேனேஜர்களின் தவறுகள், அமைச்சர்களின் ஊதாரித்தனம் , மாறி வந்த அரசாங்களின் கொள்கைகள் , தனியார் நுழைவு அவர்களின் இலாப பேராசை என பொதுத்துறை வீழ்ச்சிக்கு பல காரணிகள் பங்களிப்பை செய்தன.  இதில் எல்லாம் என் போன்றோர் பங்கும் உண்டு. நாங்கள் ‘protectors  than producers ‘ என்ற role தான் அதிகம் செய்தோம்.

பாரு முக்கிய பார்வை ஒன்றைத் தருகிறார். The rising role of the state  as a ‘provider ‘ has impacted its role as a ‘producer ‘. Over the years, the PSUs became a provider of employment rather than an efficient producer of goods. This made the public sector a less competitive and with time, in industry  after industry, it was marginalised by the emergence of more  competitive private sector firms.

 நேரு தலைமையிலான திட்டக்கமிட்டி 1938-39 லேயே state as a facilitator -not an obstruction to development என்ற பார்வையை வைக்காமல் இல்லை. அதிகாரவர்க்க லைசென்ஸ் ராஜ்யம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகத் துவங்கியது.  இந்தக்காலத்தில் சில தனியார்கள் தங்களை வளர்த்துக்கொள்ளாமல் இல்லை. பாரு சொல்கிறார்.

On the other hand, some private sector players learnt to influence government policy and benefit from it, thereby using state intervention to their advantage. This sowed the seeds of what has come to be called crony capitalism

திட்டக்கமிஷன்,Indian Statistical Institute, Delhi School of Economics பல அறிஞர்களை ஈர்த்தது. பிரைட்மேன், ஜான் கால்பிரைத், பால் பாரன், ஆஸ்கர் லாங்கே, ஜான் ஸ்டிராட்சி, ராக்னர், தார்னர் , நிகோலஸ் கல்தார் போன்றவர்களை பாரு குறிப்பிட்டு சொல்கிறார். இந்தியாவின் புகழ்வாய்ந்த விகேஆர்வி ராவ், காட்கில்,கே என் ராஜ், ஐஜி படேல், பகவதி, அமர்த்யாசென், டி என் ஶ்ரீனிவாசன், லக்டவாலா போன்ற பலரின் பங்களிப்பையும் பாரு சொல்லாமல் இல்லை.

நேருவிற்கு பின்னரான சாஸ்திரி, இந்திரா, மொரார்ஜி, இந்திரா ராஜிவ்,  வி பி சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் என ஏற்பட்ட மாற்றங்கள் ஓரளவிற்கு பேசப்பட்டுள்ளன. குறிப்பாக 1991ல் நரசிம்ம ராவ்- மன்மோகன் சிங்  சந்தித்த சவால்கள் உருவாக்கிய தாராளமய மாற்றங்கள் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இந்திரா காலம் பற்றி பேசுகிற அத்தியாயம் Economy Turns Left - Nationalisation of Banks, Monopolies Enquiry Commission, Monopolies and Restrictive Trade Practices போன்றவற்றை பாரு விளக்கியிருப்பார்.

ஹசாரி கமிட்டி லைசென்ஸ் ராஜ் காலத்தில் 20 குடும்பங்கள் பெரும் பலன் அடைந்தன என்றது.

அடுத்த அத்தியாயத்தில் Economic Policies Shifts Right என பாரு எழுதியிருப்பார். இதில் மொரார்ஜி, இந்திரா, ராஜிவ் காலத்திலிருந்து துவங்கிய இந்த வலது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பேசியிருப்பார்.

ஜூன் 22, 1991ல் நரசிம்மராவ்

The economy is in crisis..there is no time to lose..we must tighten our belts and be prepared to make the necessary sacrifices to preserve our economic independence  என்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பினார். India has much to learn from what is happening elsewhere in the world என்று கண்களை திறக்க வேண்டினார்.

நிதி அமைச்சராக மன்மோகன் அவர்கள் தனது பட்ஜெட் உரையில் விக்டர் ஹ்யுகோவின் no power on earth can stop an idea whose time has come என்பதைக் காட்டி புது பாதைக்கான பயணத்தை உருவாக்கினார்.

அவர்கள் துவங்கி வைத்த பாதையில் சிற்சில மாறுதல்களுடன் இன்றுவரை இந்தியா பயணித்து வருகிறது. விரிவு அஞ்சி இந்த பாரு புத்தகம் குறித்த அறிமுகத்தை முடிக்கிறேன்.

 மேலும் அறிய விரும்புவோர், வாய்ப்புள்ளவர் படித்துக்கொள்ள முடியும்.

27-3-2023

Thursday, March 23, 2023

அம்பேத்கர் அறிவுசார் சரிதை

 

அம்பேத்கர் அறிவுசார் சரிதை

Dr Ambedkar an Intellectual Biography of Ideas, enlightenment, life and liberation work என்ற நீளமான தலைப்பில் அம்பேத்கரின் வாழ்க்கைப்போராட்டம், சிந்தனை செயல் ஓட்டங்களை சித்தரிக்கும் புத்தகம் 2016 ல் வந்தது. Vijay Mankar ஆசிரியர்.



இப்படி intellectual biography  மார்க்ஸ், லெனின் போன்றவர்களுக்கும் வந்துள்ளன. அவர்கள் தங்கள் சூழலில் வந்தடைந்த சிந்தனைப்புள்ளிகளையும் அதற்கு முன்வைக்கும் செயல்பூர்வ திட்டங்களையும் பொதுவாக இந்த intellectual biography பேசுவதைக் காணமுடியும்.

விஜய் மாங்கர் இந்த நூலில் அம்பேத்கரை குறிப்பிடும் இடங்களில் எல்லாம் capital  ‘H’ He His எனப்பயன்படுத்தியிருப்பார்.   காரணமாக the relevance and regard for this great man எனச் சொல்கிறார். அதேபோல பிராமணர் குறிக்க எல்லா இடங்களிலும் small  b பயன்படுத்தியிருப்பார். காரணம் அவர்களின் anti social, anti human ideologies and institution எனச் சொல்கிறார்.

விஜய் மாங்கர் ஏறத்தாழ ஒரு லட்சம் பக்கங்களின் வாசிப்பு வழியாக 360 வால்யூம் புத்தகங்கள், 650 notes மூலம் தனது ஆய்வை செய்து இந்த புத்தகத்தை தந்ததாகச் சொல்கிறார். விஜய் மாங்கர் group A அதிகாரிப் பணியைத்துறந்து அம்பேத்கர் ஆய்வில் தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக்கொண்டுள்ள அறிஞர் மற்றும் அமைப்பாளர்.  50 வயதான விஜய் மாங்கர் தனது 20 ஆம் வயதிலிருந்து அம்பேத்கரின் தீவிர வாசிப்பாளர். 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதாகச் சொல்கிறார்.

நூலில் நுழைவாயிலில் விஜய் இவ்வாறு சொல்கிறார்.

Dr. B R Ambedkar : An Intellectual Biography, is an exposition for human enlightenment and the reconstruction of the world. A brief biographic account of this greatest among great men- Dr Babasaheb Ambedkar therefore needs a special mention. In twenty four chapters we shall take a voyage to His life and work..

இந்த விஜய் மாங்கர் அவர்களின் ’வாயேஜ்’ எப்படி செல்கிறது எனப் பார்க்கலாம்.

                                      2

விஜய் மாங்கரின்அம்பேத்கர் அறிவு சரிதைஅவர் குறித்த பெரும் hagiography வகைப்பட்ட புத்தகம். 490 பக்கங்களைக்கொண்ட இதன் முதல்பாகமான 145 பக்கங்களிலிருந்து அதில் உள்ளவாறு சில செய்திகளை தந்துள்ளேன். இரண்டாவது பகுதி அவரது சிந்தனை முன்வைப்புகளை அவரது ஆக்கங்களிலிருந்து பேசும் பகுதி.

அம்பேத்கர் பெற்றோர் ராம்ஜி சக்பால்- பீமாபாய்க்கு 14 குழந்தைகள். மிஞ்சி உயிர் தரித்த குழந்தைகளாக பலராம், ஆனந்தராவ், பீம்ராவ், மஞ்சுளா, துளசி இருந்தனர்.

அம்பேத்கருக்கு 18/19 வயதில் துணைவியாராக ரமாபாய் 13/14 வயதுக்காரர் அமைகிறார். 1912ல் முதல் மகன் யஷ்வந்த் பிறக்கிறார். 1917-1920க்குள் கங்காதர், இந்து, ரமேஷ் பிறக்கின்றனர். யஷ்வந்த் மட்டுமே தறிக்கிறார்.

லண்டனில் அம்பேத்கர் பெர்ட்ரண்ட் ரசலை சந்தித்து உரையாடுகிறார். அம்பேத்கரின் நலன் விரும்பியாக இருந்த நண்பர் நவல் படேனா. பேரா செலிங்மேன், ஜாகோபி போன்றவர் அவருக்கு ஆலோசகர்களாக இருந்தனர்.

லண்டனில் அவர் தங்கியிருந்த புரூக் கிரீன், ஹாம்மர் ஸ்மித் பகுதியில் தோழியானவர் Fanny Fitzerlands.

திலகரின் மகன் சித்தார்த்பந்த் திலகர் அம்பேத்கர் மீதான மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தார்.

அம்பேத்கரின் பம்பாய் சட்டமன்ற நுழைவு, மகத் சத்தியாகிரகம் பற்றி குறிப்புகள் உள்ளன. சைமன் கமிஷன் , காலராம் கோயில் சத்தியாகிரகம் பேசப்பட்டுள்ளது.

வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் பங்களிப்பு, காந்தியுடனான மோதல் சொல்லப்படுகிறது. முதல் முறையாக அம்பேத்கர் காந்தி சந்திப்பு மணிபவனில் 14.8.1931 மதியம் 2 மணிக்கு நடந்தது. Gandhi was discourteous என்ற குற்றச்சாட்டு இங்கும் வைக்கப்பட்டுள்ளது. affront conversation left Gandhi starred என்றும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. அம்பேத்கர் இப்படிச் சொன்னாராம்

We believe in self help and self respect. We are not prepared to have faith in great leaders and Mahatmas…

கம்யூனல் அவார்ட் ஆகஸ்ட் 17, 1932 ல் அறிவிக்கப்பட்டதை அறிவோம். ஆனால் மே மாதம் அம்பேத்கர் confidentially proceed to London and met PM Ramsay…The day when PM signed the Award, Ambedkar was in London on 4th Aug என்ற தகவல் தரப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ஏதும் ஆசிரியர் தரவில்லை.

அடுத்து காந்தியின் உண்ணா நோன்பு பேச்சு வார்த்தைகள் புனே உடன்பாடு சொல்லப்படுகிறது. காந்தி குறித்த விமர்சனங்கள் சொல்லப்பட்டுள்ளன. காந்தியின் மகன் தேவதாஸ் கண்ணீர் மல்க தனது தந்தையின் உயிரை காக்க வேண்டி அம்பேத்கரை சந்தித்த செய்தியும் உள்ளது. இது எந்த தேதியில் எங்கு நடந்தது என்பது பற்றி குறிப்பேதும் ஆசிரியரால் தரப்படவில்லை.

அக் 13, 1935ல் conversion call- I shall die as a Hindu என்ற அறிவிப்பை அம்பேத்கர் தந்தார். ஜட் பஸ் தோடக் மண்டல் Annihilation of caste issue, Independent Labour Party நடவடிக்கைகள் சொல்லப்பட்டுள்ளன.

1936 நவம்பர் மற்றும் ஜனவரி 13, 1937 வரை அய்ரோப்பாவில் அம்பேத்கர் இருக்கிறார். வதந்தி ஒன்று பரவியது. The Daily Star evening newspaper of London had reported “ Dr Ambedkar secretly married an English Widow, left Venice with wife, Jan 3”. Vividharvretta பம்பாய் இந்த செய்தியை வெளியிட்டதாம். இதற்கு டாக்டர் அம்பேத்கர் ஏதாவது மறுப்போ கருத்தோ தெரிவித்தாரா என்ற செய்தி இந்த நூலில் இல்லை.

சித்ரா எனும் பத்திரிகையில் அம்பேத்கர் described ’Gandhi age’ as dark age in an article ‘Gandhi A Mahatma?’ . Ambedkar asked people to read RTC speeches to judge who is anti national.

 

அம்பேத்கர் நேருவை முதல்முறையாக அக் 1939ல் சந்திக்கிறார். இருவரும் ஒடுக்கப்பட்டவர் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். நேரு விடைபெற்றவுடன் தனது சக தோழர்களிடம் அம்பேத்கர் இப்படி பதிவொன்றை தந்தாராம். Dr Ambedkar thought ( Nehru) no better than a fourth standard student. இப்படி கருத்து மதிப்பீடுகளை அம்பேத்கர் தருவது நியாயமாகுமா என ஏற்கமுடியவில்லை.

இந்துத்துவம் பாசிச கொள்கை என்ற கருத்தை அம்பேத்கர் பிரதிபலித்ததை இந்த புத்தகம் இப்படி சொல்கிறது.

Hinduism is a political ideology of the same character as the Fascist or Nazi ideology and thoroughly anti democratic.

Viceroy Executive council Labour Minister ஆக அவரது பணிகள் சிறக்க சொல்லப்படுகின்றன. அப்படி அந்த அமைச்சர் கவுன்சிலில் நுழைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் காண்கிறோம்.

ஜூலை 1942ல் அம்பேத்கர் All India Depressed class Meetல் கொடுத்த விளக்கம் அவரது சிந்தனை செயலின் மய்யத்தன்மையை புலப்படுத்தும். இதிலும் காந்தி மீதான தாக்குதல் இருப்பதைக் காண்கிறோம்.

The key note of my politics lies in the proposition that the untouchables are not a sub head or sub section of the Hindus, and they are separate and distinct element in the national life of India…one malignant factor which has been working to weaken our position is Gandhi and Gandhism. By signing Poona pact I helped to save the life of Mr Gandhi. Mr Gandhi not withstanding the Poona pact which saved him from death never gave his true and honest consent to the principle underlying the Poona pact.

இங்கு புனே உடன்பாடு பற்றி குறிப்பிடுகையில் தனது தாராள மனதின் பெருமிதங்களை மட்டுமே அம்பேத்கர் உணர்ந்து பேசுவது போல் இருக்கிறது. வேறு யார்க்கும் எந்த பங்கோ, அல்லது அவர் கோரிக்கையில் உறுதியாக காந்திக்கு எதுநேர்ந்தாலும் அது குறித்து பொருட்படுத்தாமல் அவரால் ஏன் நிற்கமுடியாமல் போனது என்பது பற்றியோ அவரிடம் விளக்கம் ஏதுமில்லை. அப்படி அவர் மனம் கசிந்து உதவியிருந்தால் அதை சொல்லிக்காட்டி அரசியல் செய்வது அவரின் மேதைமைக்கு அழகாக என்னால் உணரமுடியவில்லை.

 

அம்பேத்கர் ஜூலை 18 , 1942ல் பேசியதாக நூலாசிரியர் விஜய் சொல்வது if I fail myself I will shoot myself . இதன் அதீத உளவியல் அவரின் சாதிக்க வேண்டிய வைராக்கியத்தையும், இல்லையேல் மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற விரக்தியையும் புலப்படுத்துகின்றனவா?

1946ல் (கவுன்சில் அமைச்சர் குழாமில் நுழைய) ஜெகஜீவன்ராம் முக்கியத்துவம் பெறத்தக்க வகையில் காய்கள் நகர்த்தப்பட்டதாம். இங்கும் காந்தி மீதான விமர்சனம் வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு தனிக்கல்லூரி என அம்பேத்கர் சொன்னதை மாளவியா விமர்சித்தார். பதில் விமர்சனத்தை பனாரஸ் முழுமையாக பார்ப்பனர்களுக்கு ஆகிவிட்டதே என அம்பேத்கர் வைத்தார்.

மார்ச் 26, 1946 ல் அம்பேத்கர்  தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார். அவரின் உறுதிப்பாட்டை நமக்கு அவ்வரிகள் காட்டுகின்றன.

I want to tell my Hindu friends that I shall not live on their charity. I do not want their charity. I am a citizen of this country. I am entitled to claim from the Government Treasury whatever rights and benefits every other community is claiming itself. I do not want charity.

காபினத் தூதுக்குழுவிடம் அம்பேத்கர் ஏப்ரல் 5 1946ல் SCs do not want Cabinet Assembly - a commission to solve constitutional questions என்றார். வேண்டாம் எனச் சொன்ன அரசியல் அசெம்பிளி வருவது உறுதியான நிலையில் அதற்குள் செல்வதற்கான முயற்சிகளை ஜோகேந்திரநாத் மண்டல் உதவியுடன் மேற்கொண்டார். வங்கத்திலிருந்து ஜூலை 19, 1946ல் அவர் தேர்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் பிரிந்த பின் மராட்டியத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் கட்டளைப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வர்ணாஸ்ரமத்தை ஒழிக்க முடிந்தால் அது சூத்திரர்களால்தான் முடியும். அதற்கு அவர்கள் பயிற்சிக்கப்படவேண்டும். அது இருப்பதற்கு அவர்களும் காரணம் என அவர் 1946 ல் எழுதிய who were Shudrasல் தெரிவித்தார்.

It is the shudras, who have been largely been the instrumental in sustaining the infamous system of Chaturvarnya, though it has been the primary cause of their degradation and that only the Shudras can destroy the Chaturvarnya,  it would be easy to realize why I allowed the necessity of educating and thereby preparing the Shudra fully for such a sacred task to outweigh all other considerations.."

காபினட் தூதுக்குழுவில் திருப்தி அடையாத அம்பேத்கர் 1946 அக்டோபரில் லண்டன் சென்றாராம். நவம்பரில் அவர் அட்லி, சர்ச்சில் போன்றவர்களை சந்தித்து உரையாடுகிறார். Abrogating Poona Act என்ற கோரிக்கையை வைக்கிறார். அட்லி SCs needed to be looked after என்றும், சர்ச்சில் keen and desirous of seeing SCs were protected in any constitution என்று அம்பேத்கர் வெளிப்படுத்தினார்.

எட்வினா மவுண்ட்பாட்டன் வந்தவுடன் சந்தித்த ஒரு சிலரில் அம்பேத்கரும் ஒருவர். நாட்டின் பிரிவினைக்குப் பின்னர் இந்தியா பற்றி கருத்துச் சொல்ல ஜின்னாவிற்கு உரிமையில்லை என்பதை அம்பேத்கர் தெரிவித்தார்.

Mr Jinnah asked for his Pakistan State and he has got it. After that he has no more right to speak on the affairs of the Indian Union that has any other foreign ruler…His party’s unwillingness to stay in the Union has won it separation. It cannot now start sowing seeds of trouble in rest of India.

தேசியக்கொடியில் தம்ம சக்கரம் இருப்பதும் அதன் saffron வர்ணத்தையும் புத்தரின் குறியீடுகளாக அவர் பார்த்து வரவேற்றார்.

அரசியல் அசெம்பிளியில் அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக, பல்வேறு கமிட்டிகளில் அவர் ஆற்றிய பணி சொல்லப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் தன்னைக் கவனித்து உடல் நலம் காத்திட டாக்டர் சாரதா கபிர் அவர்களை ஏப்ரல் 15, 1948ல் மணம் முடிக்கிறார். இந்த திருமண எண்ணத்தை வெளிப்படுத்தி இரகசியம் காக்குமாறு மார்ச் 6 அன்றே கெயிக்வாடிற்கு அம்பேத்கர் கடிதம் எழுதுகிறார்.

…medical advisers have been urging me to keep a nurse or housekeeper if I did not wish to marry..

I have no doubt that keeping a nurse or housekeeper would give rise to scandal. The better course is to marry. After Yeshwant’s mother’s death I had decided not to marry. But under situation have forced my resolution. The doctor says that for me the choice is between marriage and early death.

 

A women to be my wife must be educated, must be a medical practitioner and must be good at cooking. It would be impossible in our community to find a women who would combined the three qualifications and also suit my age. Fortunately I have been able to find one. She comes from the Saraswat Brahmin community. The marriage at present will take place in Delhi on the 15 th April. Keep this confidential.

என்று திருமணம் குறித்து முன்னரே தெரிவித்து இரகசியம் காக்குமாறு சொன்னதைக் காண்கிறோம்.

ஒருமுறை சிவராஜ் அவர்களிடம் வாசிக்கும் முறை பற்றி அம்பேத்கர் கருத்து தெரிவித்தார். சிலவற்றை புரட்டினால் போதும். சில புத்தகங்கள்தான் ஆழமான வாசிப்பைக்கோரும். Casual browsing, cursory reading, through reading என அவர் வகைப்படுத்துவர். அம்பேத்கர் பெரும் புத்தகக்காதலர் . ஒருமுறை இப்படி தெரிவித்தார்

Is there a man in Asia who has climbed the Everest of Knowledge? Remember he is Ambedkar.

பல்லாயிரக்கணக்கான நூல்களை அவரது நூலகம் கொண்டிருந்தது. எந்த நூல் எங்கு என்ன அட்டையில் என்பது கூட அவருக்கு தெரியும். தெலாங் என்பாரின் நூலகத்தின் லாரி நிறைய புத்தகங்களை ஒரு புத்தகம் ரூ 2 flat priceல் அம்பேத்கர் வாங்கினார். மதன்மோகன் மாளவியா ரூ 2 லட்சம் கொடுத்து நூலகத்தை கேட்டபோது புத்தகங்கள் போனால் என் உயிர்போவது போல் என அம்பேத்கர் மறுத்தார். பிர்லா கேட்டபோது மறுத்தார். நேரு என்னிடம் உள்ள titles- subjects விட மிக அதிகமாக அம்பேத்கரிடம் இருந்ததாக வியந்துள்ளார். வாழ்நாள் முழுதும் பெரும் அறிவுக்காதலராக அம்பேத்கர் வாழ்ந்தார்.

புத்தரும் தம்மமும் மார்ச் 1956ல் அவர் எழுதி முடித்தார். அக்டோபர் 14, 1956 புத்தமதத்திற்கு மாறும் நாளும் வந்தது. Purification of land where conversion at the hands of a Brahmin Bhavanishankar என்ற செய்தி அவரிடம் எட்டியபோது, அப்படி என்றால் நான் வரமாட்டேன் என்ற உறுதியை அவர் காட்டினார். I will not keep my feet that land purified by that Brahmin.

எனது மதமாற்றம் முற்றிலும் பாரத வயப்பட்டதே..அதன் பெருமைமிகு இந்திய கலாச்சாரமே. உலகிற்கே இந்த நாடு கொடுத்த அருங்கொடை புத்தம் என்பது. இங்கு இந்துக்கள் அவர்களின் முட்டாள்தனத்தால் இந்த பெருமையைஇழந்து விட்டனர். அதை நான் மீட்டுள்ளேன் என்றார். அம்பேத்கர்.

டிசம்பர் 6, 1956ல் மரணம் அவரைத் தழுவியது. The cause of death mysterious என்றும் சாக்சேனா அறிக்கை ஏன் பொதுவெளியில் வரவில்லை எனவும் விஜய் மாங்கர் வினவுகிறார்.

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதி ideas enlightenment and reconstruction of world என்ற தலைப்பில் 8 அத்தியாயங்களில் அவரது சிந்தனை முன்வைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கரை தெய்வீக ஆராதனைக்குரியவராக உயர்த்துவதோ, போற்றிப்புகழ் பாடுவதோ ஆசிரியர் நிலைப்பாடாக இருக்கலாம். அம்பேத்கர் போற்றல் என்பது கண்டிப்பாக அதன் நாணயத்தின் மறுபக்கமாக காந்தி தூற்றல் என்பதாக இருக்க வேண்டுமா?

இலட்சக்கணக்கான பக்கங்களை படித்து விட்டு எழுதியிருப்பதாகசொல்லும் ஆசிரியர் ஆங்காங்கே உரிய ஆவண குறிப்புகளை பல இடங்களில் காட்டாமல் செல்கிறாரே எனத் தோன்றுகிறது.

23-3-2023