Skip to main content

பேரா. தோழர் அ.மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ்

 

பேரா. தோழர் .மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் 

பேரா. தோழர் .மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஜனவரி 2023ல் வெளியானது. நேற்று கையில் கிடைத்தவுடன் ஒரே நாளில் சில மணிகளில் 198 பக்கங்களையும் படிக்க முடிந்தது. ஆர்வமும் நேரமும் உதவின.

 

மார்க்ஸ் மற்றும் மார்க்சிற்கு பிந்திய மார்க்ஸியம் குறித்த அம்சங்களை அறிமுகப்படுத்தி விளக்கும் ஆக்கமிது. இளைஞர்களுக்கு நல்ல கையேடாக இந்த புத்தகம் அமையும் என்றே வாசித்தவுடன் எனக்குத் தோன்றியது. இடதுசாரி இளம் தோழர்கள் கூட்டாக வாசித்து புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய புத்தகம். கடினமாக இருக்காது.

 


தோழர் .மார்க்ஸ் அவர்கள் மார்க்ஸின் 200 ஆம் ஆண்டில்மக்கள் களம்ஆசிரியரின் வேண்டுகோளுக்கேற்ப எழுதிய தொடர்கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன. 17 கட்டுரைகள் அதைத் தொடர்ந்த பின் இணைப்புகளின் தொகுப்பு இந்த ஆக்கம். 17 கட்டுரைகளின் சாரமாக பின் இணைப்புகளை கொள்ளமுடியும்.

 

இந்நூல் அட்டையில் சொல்லப்பட்டுள்ளபடி மார்க்ஸ் அவரது ஆக்கங்கள் அறிமுகம் குறிப்பாக அவரது கம்யூனிஸ்ட் அறிக்கை, அந்நியமாதல், மதம், உபரிமதிப்பு, இந்தியா குறித்து மார்க்சின் கட்டுரைகள் என்பதுடன், அல்தூசரின் அமைப்பியல் சார்ந்த பார்வை, ஹார்ட் நெக்ரி இரட்டையரின் பேரரசு மற்றும் பெருந்திரள் குறிப்புகள் மற்றும் ஓரளவு மேலை மார்க்சியம் இதில் பேசுபொருளாக்கப்பட்டுள்ளன.

 

மார்க்சியமும் இலக்கியமும் தனித்து பேசப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு வெளிப்படையானதாக ஜனநாயகம் நிறைந்ததாக இருக்க மார்க்சே வலியுறுத்தியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மார்க்சின் எழுத்துக்கள் ஏன் வாசிக்க கடினமாக இருக்கின்றன என்பதை பல இடங்களில் எழுப்பி தோழர் .மா பதில் தருகிறார். அதேபோல் அவரது உபரி மதிப்பு கோட்பாட்டின் பொருத்தப்பாட்டை இன்றும் எவரும் மறுக்க முடியாது என்பதைப் பேசுகிறார்.

மார்க்சியம் என்பதை வளர்ந்து வரும் அறிவியலாக, அது மார்க்ஸ் உடன் நின்று போகவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனச் சொல்கிறார்.

 

மார்க்சியம் தோற்றுப்போனதா என்ற கேள்விக்கான பதிலை அவர் தேடுகிறார். உலகம் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து விடுபடவில்லை என்பதையும், இன்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி அதற்கான முழு தீர்வுகளையும் தரவில்லை எனப் பார்க்கும்போது , மாற்று சிந்தனைக்காக மார்க்சியம் நோக்கி பலரும் வருவதை தோழர் .மா சொல்கிறார். மார்க்ஸ் முதலாளித்துவம் மீதான விமர்சனம் என்பது பொருளாதாரம் தாண்டி அறவியல் தாக்கங்களையும் கொண்டது என .மார்க்ஸ் எழுதுகிறார்.

 

அது போலவே சோசலிசம் தோற்றுவிட்டது என்று வருகிற உரையாடலுக்குமான பதிலை .மா தேடுகிறார். புரட்சிக்கு பிந்திய சமுதாய கட்டுமானங்கள் அதன் சோதனைகள் தோற்றிருக்கலாம் என்பதை தாண்டி அதை சோசலிசத்தின் தோல்வியாக யார் நிறுவியுள்ளனர் என்ற கேள்வியை தோழர் .மா விடம் பார்க்கிறோம். அதே நேரத்தில் சோசலிச கட்டுமானங்கள் குறித்த உரையாடல் பெருகட்டும் என்கிறார்.

 

இந்த அறிமுகத்தை தோழர் .மார்க்சின் வரிகளுடன் நிறைவு செய்கிறேன்

கார்ல் மார்க்சை வெறும் தத்துவ ஆசிரியராக, பொருளாதார மேதையாக, களப்போராளியாக சுருக்கி பார்த்துவிட இயலாது..அவர் எல்லாமுவாக இருந்தவர்.. அப்படியாக ஒருவரை வரலாறு அவருக்கு முன்னோ பின்னோ யாரையும் அடையாளம் காட்டியதில்லை. மார்க்சிற்கு பிந்திய மாற்றங்களை அவர் வழி நின்று ஆய்வு செய்வோம்மார்க்சிற்கு பிந்திய சிந்தனை வளர்ச்சிகளை ஏற்று அறிந்து நம்மையும் மார்க்சியத்தையும் மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்ல; மார்க்சியத்தை வளப்படுத்த வேண்டிய கடமையும் நமக்குண்டு.

புதிய சிந்தனைகளை திறந்த மனத்துடன் எதிர்கொள்வோம். தோழர்களே! நமக்குத் தேவை திறந்த மனது, தெளிந்த அறிவு, கடின உழைப்பு! “

 

என் ஆர்வம் காரணமாக நான் விரைந்து இந்த ஆக்கத்தை படித்திருக்கலாம். ஆனால் அதில் பேசப்பட்டுள்ள கருத்தாங்களை தேட , படித்து புரிந்து கொள்ள பல நாட்கள் கடின உழைப்பு பேரா

.மார்க்ஸ் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கக்கூடும்.

 

28-3-2023

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு