Skip to main content

Posts

Showing posts from September, 2023

More About PB CAT Judgment

                                                          More About PB CAT Judgment   I understand always my limitation on issues concerned and dealt for the last few years. One such issue is pension revision for the BSNL absorbed retirees.   My writeups may convince or may not convince the comrades concerned, but I never fail to go deep and give serious thought over that. I always aim how to bring the bonds to all the stakeholders . I tried to maintain the spirit of Nagara SC Judgment, that pensioners placed in similar positions are a class. My understanding is, may not be a convincing one to many, CG pensioners retired fully from the Govt service, getting CDA is a class of themselves , whereas we the 4 lakh BSNL absorbed forming ourselves a class of different nature on IDA.   In order to join that CG class for the sake of pre 2017 pensioners , we cannot leave our bonds with our post 2017, who were all in 2nd prc scales on 1-1-2017 as employees. I don't say solution

PB CAT Judgment

  PB CAT Judgment Congratulations to all those leaders and Pensioners’ Associations of BSNL and MTNL who labored a lot for bringing a favorable CAT judgment for their applications and prayers. The copy of Judgment was first sent to me by Com Mathi of Vellore and later by many comrades. I am one amongst the serious contestants against the associations demanding 7 th CPC fitment and scales for the sake of those retiring on or after 1-1-2017 that is post 2017 pensioners ( the employees on 1-1-2017). All my ‘learned’ articles and write-ups were thrown into dust bin by this PB CAT judgment pronounced on sep 20, 2023. All the criticism leveled against me is getting its justification as on date by this judgment. The future criticism about ‘poverty’ of my understanding on this issue will also find its justification.   But my heart does not feel guilty as I wrote only the found truth, and mind says ‘nothing that placed is wrong’. I did not get that legal stamp for my views, and the simil

‘ ரிக் வேதகால ஆரியர்கள்

 ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘ ரிக் வேதகால ஆரியர்கள் ‘ என்கிற அவரது ஆய்வு நூல் தமிழில் இருக்கிறது. அலைகள் திரு எத்திராஜூலு மொழிபெயர்ப்பில் கொணர்ந்த நூல். தோழர் சாங்கிருத்தியாயன் விசால வாசிப்பில் சில முக்கிய வரலாற்று செய்திகளை ரிக் வேத 10 மண்டலங்களையும் சார்ந்த பாடல்கள் வழி சேகரித்து தன் perceptionயை இந்த புத்தகத்தில் தந்துள்ளார். இன்று நாம்  பொது புத்தியில் புரிந்தது மாதிரி வைத்திருக்கும் அம்சங்கள் ஆரியர்- திராவிடர் வரலாற்று வெளிச்சத்தில் சரியானவையா என்ற கேள்வி இந்த ஆக்கத்தை படிக்கும்போது வரலாம். சில பொது ஏற்புகளையும் பார்க்கலாம். இனி ராகுல் ஆய்வில் கிடைக்கும் சில வரலாற்று துணிபுகள்.. ஆரியர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஏற்காவிட்டால் வரலாற்று குழப்பம் ஏற்படும். சிந்து வெளி மக்கள் ஆரியருக்கு முன்பே நகர நாகரிகங்களில் வியாபார உலகில் சிறந்து வாழ்ந்தவர். அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் இம்மக்களை தஸ்யூக்கள் கறுப்பர்கள் என அடிமைப்படுத்தினர் ஆரியர். தாசன் என்கிற பதம் இதிலிருந்து தான் வந்தது. இவர்கள் திராவிடர்கள் எனவும் வரலாற்றில் அறியப்பட்டுள்ளனர். இந்த தஸ்யூக்கள்  ‘கிருஷ்ணர்கள்’ எ

புறநானூற்றிலிருந்து 34 பாடல்களை

 சாமி. சிதம்பரனார் மதிக்கப்பட்ட தமிழறிஞர். பெரியார் வரலாறு தந்தவரும் கூட. அவரிடம் வேறுபட்டவரும் கூட. சாமி. சிதம்பரனார் 1958ல் புறநானூற்றிலிருந்து 34 பாடல்களை தேர்ந்து, மிக அழகான கதைச்சொல்லி வகைப்பட்டு விளக்கங்களை தந்த புத்தகம்  ‘புறநானூறு தமிழர் நாகரீகம்’. பழந்தமிழர் சமுதாயத்தின் பண்பாட்டை -அதன் நேர்த்தி மற்றும் இன்றுள்ள நாகரீகப் பார்வையில் குறைகளை எடுத்து இயம்பும் ஆக்கமிது. தமிழரின் தலை சிறந்த கொள்கையை கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் வைத்து சிதம்பரனார் விளக்கியிருப்பார். குறிப்பிட்ட ஊரை எமது எனச் சொல்லாமல் மக்கள் வாழும் எல்லா ஊர்களையும், எல்லா மக்களையும் சுற்றத்தார் எனப்பேசுதல் ..சிறியவர் என இகழ்தல் இல்லாமல், பெரியோர் என வியந்து போற்றாமல் இருக்கும் மாண்பு பேசுதல்.. நன்றி மறப்பது நன்றன்று எனச் சொல்லித்தரும் ஆலத்தூர் கிழார் பாடல் ( புற 34),  ஒன்று அறங்கருதி விட்டுவிடு இல்லையேல் மறங்கருதி போராட துணிவு கொள் என நம்பிக்கையூட்டும் கோவூர் கிழார் ( நலங்கிள்ளி- நெடுங்கிள்ளி மோதல்)  புற 44 பாடல், தமிழ்ப் புலவர் என்றால் தன்மானம் வேண்டும் எனக்காட்டும் மதுரைக் குமரனார்  “ அரசே நாம் ய

திராவிட அரசியலின் எதிர்காலம் சுகுணா திவாகரின்

 திராவிட அரசியலின் எதிர்காலம் என்கிற ஆக்கம் 2020ல் எதிர் வெளியீடாக வந்தது. சுகுணா திவாகரின் 10 கட்டுரைகள் அடங்கிய 80 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடு.  இதில் இவ்வாசிரியர் வந்தடைந்த சில முக்கிய கருத்தாக்க புள்ளிகளாவன.. பெரியார்  அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகார மய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களில் நிலவுவதால், அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால்- வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்.. பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது. எம்ஜிஆர் காலம்வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக , ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணி தலைமை தாங்கிய காலத்திற்குப்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன - தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சிநிரலை கருத்தியல் கட்டுமானங்களை தீர்மானிப்பதாக மாறிப்போனது தமிழுக்காக பாடாற்றியதிலும், மார்க்சியம் உட்பட முற்போக்கு கருத்துகளை இம்மண்ணில் விதைத்ததிலும் முன்னோடிகளாகத் த

pension Revision issue

 தோழர் DG  உரை குறித்து.. பென்சனர் சங்க அனைத்திந்தியத் தலைவர்  மரியாதைக்குரிய தோழர் DG அவர்களின் 45 நிமிட , நீதிமன்ற பெட்டிஷன் குறித்த உரையை ஆகஸ்ட் 25 இரவு தோழர்  SSG அவர்களும், ஆக 26 அன்று செல்வம் அவர்களும் நான் கேட்டு தெரிந்துகொள்வதற்காக அனுப்பியிருந்தனர். சென்னையில் இல்லாத சூழலில் , உரையைக் கேட்டும் என்னால் எனது புரிதலை உடன் வெளிப்படுத்தமுடியாமல் போனது. சென்னை வந்த நிலையில் எனது பார்வையை முன்வைத்துள்ளேன். PWA இயக்கத்தில் தோழர்கள் DG, ராமன்குட்டி, முத்தியாலு, நடராஜன், கங்காதராவ், மூர்த்தி, சுகுமார் உள்ளிட்ட பல leading lights இருந்து பென்சனர் நலனுக்காக செயல்பட்டு வருவதை நான் உணர்கிறேன். தற்போது வரபிரசாத் பொதுச்செயலராக தன் பணியை ஆற்றிவருகிறார்.  தோழர் DG  உரையை செவிமடுக்க பலர் ஆர்வமாக இருப்பதையும் நான் உணராமல் இல்லை.  தமிழ்நாட்டிலும் மாநிலச் செயலர்களாக வழிகாட்டுபவர்களாக இருந்த ஆர்வி , ராமராவ் உள்ளிட்ட, தற்போது இருக்கும் சுந்தரகிருஷ்ணன் என பலரும்  பென்சனர் நலனுக்காக பணியாற்றி வருகிறார்கள். மாவட்டங்களிலும் அற்புதமாக பலர் தொண்டாற்றி வருவதை அறிகிறேன். பிற பென்சன் சங்கத்தார்களும் தங்கள் பொற

பகுதி 1 திராவிட மாயை சுப்பு

 அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை, வர்ணாஸ்ரமம், பணத்தோட்டம், இன்பத் திராவிடம் போன்ற புத்தகங்களை அடுத்தடுத்து முன்னர் படித்த நினைவுண்டு. பணத்தோட்டத்தை  எடுத்துக்கொண்டு தோழர் பி ராமமூர்த்தி அவர்கள் தனது ஆரிய மாயையா திராவிட மாயையாவில் விரிவாக விமர்சனத்துடன் விவாதித்திருந்தார்.  அண்ணாவின் ஆரிய மாயையை மீண்டும் கிண்டில் வழி சென்ற வாரம் வாசித்தேன். ஏனெனில் சுப்புவின் மூன்று வால்யூம் ‘திராவிட மாயை ஒரு பார்வை’யை படிப்பதற்கு முன்னால் அண்ணாவின் பார்வையை நினைவூட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அண்ணா அதில் மேற்கு - குறிப்பாக ஆங்கில பிரஞ்சு ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி  வந்தேறி ஆரியர்களின் சூது நயவஞ்சகம் அவர்களை வெளியேற்றி திராவிடம் கொணரவேண்டிய அவசியத்தின் கருத்துப் போராட்டத்தை அதில் முன்னெடுத்திருப்பார்.  சுப்புவின் திராவிட மாயை புத்தகத்தை நான்காவது பதிப்பாக கடந்த 2022ல் மூன்று பகுதிகளாக rare books என்கிற பதிப்பகத்தார் கொணர்ந்துள்ளனர். ஆர் எஸ் எஸ்  சங்க் குடும்பம் சார்ந்த தமிழக அறிவுஜீவிகள் அரவிந்தன் நீலகண்டன், வெங்கடேசன் போன்றவர்கள் ஒத்துழைப்பில் எழுதியதை சுப்பு ஏற்றுள்ளார். தான் எழுதும் விவரங்களுக்கு முதல்

Marx’s Das Capital A Biography

 பிரான்சிஸ் வீன் எழுதிய அளவில் சிறிதான புத்தகம் Marx’s Das Capital A Biography. Books that shook the world வரிசையில் பிரான்சிஸ் வீன் இந்த புத்தகத்தையும் டெல்லி மஞ்சுள் என்கிற பதிப்பகத்தார் கொண்டுவந்துள்ளனர். இதில் சுவையான சில செய்திகள் கிடைக்கின்றன. மார்க்ஸ் மூலதனம் முதல் பாகம் 4 வருடங்களில் ஜெர்மானிய வாசகர்கள் மத்தியில் 1000 காப்பிகள் விற்றதாம். தொழிலாளர்கள் விடுதலைக்காக தன்னை அழித்துக்கொண்டு அவர் படைத்த இந்த நூலை, ஜெர்மன் தொழிலாளர்கள் சற்று கூடுதல் தியாகம் செய்து பெற்றிருக்கவேண்டும் என ஜென்னியிடம் வேதனை இருந்ததாம். மார்க்ஸ்  கூட கிண்டலாக  political economy remains a foreign science in Germany என்றாராம் ( பக் 85) 1872ல் மூலதனத்தின் ரஷ்ய மொழி வடிவம் தயாராகிவிட்டது. ஜார் ஆட்சியில் நமக்கு இடையூறாக ஏதும் இல்லை என்றால் தணிக்கைக்குப் பின்னர் அனுமதிக்கலாம். ஆனால் remove the picture of the author என்றனராம் .  மார்க்சிற்கு பெரும் ஆச்சர்யம். ஒரே ஆண்டில் அங்கு 3000 காப்பிகள் விற்றுப்போனதையறிந்து..  எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் is it an irony of fate? என்று மார்க்ஸ் கேட்டாராம். 25 வருடம் ரஷ்யர

ஈரோட்டுப் பாதை சரியா - ப. ஜீவானந்தம்

 தோழர் ஜீவாவின் முழு திரட்டை என் சி பி எச் 2007 ல் கொணர்ந்தார்கள். இரு பாகங்களாக 1938 பக்கங்களில் கொணரப்பட்ட அத்தொகுப்புகளுக்கு பேரா அரசு பதிப்பாசிரியர். 2002ல் சந்தியா பதிப்பகம்  ஜீவாவின் கட்டுரையான ‘ஈரோட்டுப் பாதை சரியா’ என்பதை சிறு வெளியீடாக பேரா அரசின் முன்னுரையுடன் கொணர்ந்தனர். சுயமரியாதை இயக்கத்திலிருந்து , காங்கிரஸ் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி என பயணித்த ஜீவா, சுயமரியாதை இயக்கம்- பெரியாரின் கருத்துக்களை முன்வைத்து இதில் எதிர்வினையாற்றிருப்பார். அதில்  உப்பு சத்தியாகிரகத்தை பெரியார் ஏற்காததை ஜீவா சுட்டிக்காட்டியிருப்பார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையை கண்டித்து தீர்மானம் போடவேண்டும் என சில சுய மரியாதை இயக்க இளைஞர்கள் கோரியபோது, ஆர்.கே சண்முகம் அவர்கள் தலைவராக தனது தீர்ப்பைச் சொன்னார். சுயமரியாதை இயக்கம் ‘அரசியலில் கலக்கலாமா’ என்ற முடிவு இருந்தால்தான் தீர்மானத்தையே எடுத்துக்கொள்ள முடியும் என்றார்.  பெரியார் உடனே சு.ம.இ ‘அரசியலில் கலக்ககூடாது’ எனச் சொன்னதால் , தீர்மானத்திற்கு இடமில்லாமல் போனதை ஜீவா இதில் சுட்டிக்காட்டியிருப்பார்.  அரசியலில் பங்கேற்பதில்லையானால்,  நீதிக்கட்சி வெற்

periyar Political Bio

 Periyar A political Biography of E V Ramasamy by BalaJeyaraman கிண்டில் வழி படித்துக்கொண்டிருந்தேன்.  பெரியார் வாழ்க்கை வரலாறு குறித்து நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் முழுமையாக நிகழ்வுகளை (கிடைத்தவற்றை முடிந்தவரை) ஆவணப்படுத்தும் அவரது political bio வரவில்லையோ எனத்தோன்றுகிறது.   சாமி சிதம்பரம், நெதுசு, கருணாநந்தம், நீலமணி, சுப்பு ரெட்டியார் என பல இருக்கின்றன. ஆங்கிலத்திலும் Anita Diehl, Dr  E sa Viswanathan போன்றவைகள் உள்ளன. பால ஜெயராமன் புத்தகத்திலிருந்து சில செய்திகள்..  பெரியார் 1933 டிசம்பரில் “ இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என எழுதிய தலையங்கத்திற்காக  இந்தியன் பீனல் கோடு செக்‌ஷன் 124  படி கைது செய்யப்பட்டார். கோவையில் 6 மாதம் சிறைவாசம். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்திற்காக கைதாகி அங்கிருந்தார்.  அடுத்த அடுத்த “செல்” என்பதால்  வேறுபாடுகொண்ட நண்பர்கள் பேசிக்கொண்டனர். மீண்டும் காங்கிரசில் ஈ வெ ரா வரவேண்டும் என்கிற முயற்சியை ராஜாஜி எடுத்தார்.  வகுப்புவாரி பிரச்சனை வேறுபாடு இருந்தபடியால் பலனளிக்கவில்லை. பெரியாரை கைது செய்து அடைத்தது நீதிக் கட்சி ஆட்சி. பொப்பிலி ராஜா முதல்வர். 1934ல்