Skip to main content

Marx’s Das Capital A Biography

 பிரான்சிஸ் வீன் எழுதிய அளவில் சிறிதான புத்தகம் Marx’s Das Capital A Biography. Books that shook the world வரிசையில் பிரான்சிஸ் வீன் இந்த புத்தகத்தையும் டெல்லி மஞ்சுள் என்கிற பதிப்பகத்தார் கொண்டுவந்துள்ளனர். இதில் சுவையான சில செய்திகள் கிடைக்கின்றன.

மார்க்ஸ் மூலதனம் முதல் பாகம் 4 வருடங்களில் ஜெர்மானிய வாசகர்கள் மத்தியில் 1000 காப்பிகள் விற்றதாம். தொழிலாளர்கள் விடுதலைக்காக தன்னை அழித்துக்கொண்டு அவர் படைத்த இந்த நூலை, ஜெர்மன் தொழிலாளர்கள் சற்று கூடுதல் தியாகம் செய்து பெற்றிருக்கவேண்டும் என ஜென்னியிடம் வேதனை இருந்ததாம். மார்க்ஸ்  கூட கிண்டலாக  political economy remains a foreign science in Germany என்றாராம் ( பக் 85)

1872ல் மூலதனத்தின் ரஷ்ய மொழி வடிவம் தயாராகிவிட்டது. ஜார் ஆட்சியில் நமக்கு இடையூறாக ஏதும் இல்லை என்றால் தணிக்கைக்குப் பின்னர் அனுமதிக்கலாம். ஆனால் remove the picture of the author என்றனராம் .  மார்க்சிற்கு பெரும் ஆச்சர்யம். ஒரே ஆண்டில் அங்கு 3000 காப்பிகள் விற்றுப்போனதையறிந்து.. 

எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் is it an irony of fate? என்று மார்க்ஸ் கேட்டாராம். 25 வருடம் ரஷ்யர்களை சண்டை போட்டென். அவர்கள் இப்படி patrons ஆவார்கள் என நினைக்கவில்லை என்றாராம்.

மார்க்சிற்கு பிரஞ்சு மொழி தெரியும். மூலதனம் பிரஞ்சில் வெளிவருவதில் ஏகப்பட்ட ‘சொதப்பல்களை’ அவர் உணர்ந்தாராம். தானே முன்வந்து அவ்வேலையை செய்யலானார்.

இங்கிலாந்தின் தொழில்களைப்பற்றித்தான் லண்டனில் வாழ்ந்துகொண்டு மார்க்ஸ் மூலதனம் எழுதினார். பிரஞ்சு, ஜெர்மன் தெரிந்த சில ஆங்கிலேயே நண்பர்கள், சீடர்கள்தான் அதைப் படித்திருந்தனர்.  அதை ஆங்கிலத்தில் கொண்டுவரவேண்டுமே என்கிற பேச்சு எழுந்தது. மார்க்சிடம் பழகிவந்த, ஹைண்ட்மேன் மூலதனத்தின் சில அத்தியாயங்களை மார்க்ஸ் பெயரை நூலை சொல்லாமல் 1881ல் England for All நூலில் பயன்படுத்திவிட்டார். மார்க்ஸ் எங்கெல்ஸ் கடுமையாக கோபம் கொண்டனர்.

பெல்பர்ட் பாக்ஸ் மூலதனத்தை, மார்க்சின் மேதாவிலாசத்தை வியந்து சில கட்டுரைகளை ஆங்கில பத்திரிகை Modern Thoughtல் எழுதினார். பெர்னார்ட் ஷா கூட தன்னால் பிரஞ்சு மூலதனத்தையே படிக்க முடிந்தது என்றார். That was a turning point in my career என்றார் அவர்.  பின்னர் பாபியன் சோசலிஸ்ட்டாக அவர் இருந்தார்.

மார்க்ஸ் மறையும்வரை ஆங்கில மொழிபெயர்ப்பு வரவில்லை. எங்கெல்ஸ் சொல்வது படி சாமுவேல் மூர் மொழிபெயர்ப்பு 1887ல் வந்தது.

இந்தப் புத்தகம் பக் 100ல் மார்க்சிற்கும் லெனினுக்குமான வேறுபாடு என்னவென டிராட்ஸ்கி சொல்வதை பிரான்சிஸ் தருகிறார்

The whole of Marx appears in the Communist Manifesto, Critique of political economy, in Das Capital…the whole of Lenin on the other hand appears in revolutionary action. His scientific works are only a preliminary for activity

இங்கு பிரான்சிஸ் எழுதுகிறார்

“Marxism as practised by Marx himself was not so much  an ideology as a critical process, a continuous dialectical argument “

மூலதனம் எழுதும் முயற்சியில் மார்க்ஸ் பட்ட துன்பங்களை பலர் எழுதியுள்ளனர். அவர் முதல் வால்யூம் என எழுதி முடித்தபோது 1200 பக்க கையெழுத்து பிரதியாக இருந்ததாம். 1866 ஜனவரி புத்தாண்டு தினத்தன்று அதை fair செய்யத்துவங்கினார் .அப்போது அவர் தெரிவித்தது licking the infant clean after long birth pangs.  நோயினால் அவர் அவதிப்பட்டுக்கொண்டிருந்த்கார். உடல் முழுதும் கொப்பளங்கள். மார்க்ஸ் எழுதினார்

At all events, I hope the bourgeoisie will remember my carbuncles until their dying day. இதை பிரான்சிஸ் அவரது சாபம் என வர்ணிக்கிறார்.

இவர் மூலதனத்தை எப்போது முடிப்பார் என்ற கவலை எங்கெல்ஸ்க்கு இருந்தது. போதும் அதிலிருந்து முடித்துவிட்டு  வெளியே வாருங்கள் என அவர் சொல்ல நேர்ந்தது.  You would and could never extricate yourself until you had got it off your back என எங்கெல்ஸ் அறிவுறுத்தினார். அவ்வளவு தேடல் தவிப்பு கொண்ட மனமாக மார்க்ஸ் வாழ்ந்தார்


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு