https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, August 23, 2019

Ordnance factories Strike


      இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள்  வேலைநிறுத்தம்
-    ஆர். பட்டாபிராமன்



இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள் (Ordnance factories) தங்களது ஒருமாத வேலைநிறுத்தத்தை  கடந்த ஆகஸ்ட் 20 அன்று துவங்கியுள்ளார்கள். ஆர்ட்னஸ் பாக்டரிகளை கார்ப்பரேஷன் ஆக்கும் அரசின் முயற்சியை கைவிடக்கோரியே இந்த வேலைநிறுத்தம்.  முன்பிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பல்வேறு காலங்களில் இது குறித்த உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றனர். நாயர் கமிட்டியாக இருந்தாலும் -கேல்கர் கமிட்டியாக இருந்தாலும்  கார்ப்பரேஷனாக்குவது எனும் பரிந்துரை தந்தபோது பெர்னாண்டஸ், பிரணாப் முகர்ஜி,  கே அந்தோணி ஆகியவர்கள் ஊழியர் தரப்பை கலந்தாலோசிக்காமல்  முடிவெடுக்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை தந்தனர். மறைந்த மரியாதைக்குரிய பரிக்கர் கூட 2015ல் இந்த உறுதிமொழியை நல்கினார்.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி கொள்கை என்பதை அவ்வப்போது அரசாங்கம் அறிவித்துவருகிறது. அவ்வாறு ஒன்றை நகல் அறிக்கையாக 2018 மார்ச்சில் பா.. அரசாங்கம் முன்வைத்து பொதுக் கருத்தையும் கேட்டது. அதில் கார்ப்பரேஷன் ஆக்குவது என்கிற பாலிசி முடிவு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
Boosting OFB and Public sector  : 15.3 Ordinance factories will be professionalized  to make them competitive and improve their productivity
15.2 OFB/DPSUs will be encouraged to increase their productivity and timely execution of orders by addressing issues...
15.1 Govt will support infusion of new technology/ machineries to enable them take up advanced manufacturing of futuristic weapons..
 15.4 disinvestment of minority stake in DPSUs will be pursued
 ஆனால் இறுதி செய்யப்பட்ட கொள்கை அறிக்கையில் மேலே கூறப்பட்டவைகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும்  கூடுதலாக
 16.3 OFB/DPSUs will be mandated to outsource a minimum of 50% of their work content by 2025.
16.4 Ordnance  Factories will be corporatised to make them competitive and improve their productivity 
என்பதும் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பார்வைக்கு வந்த நகலில் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு இறுதி அறிக்கையில் தெரிவித்து அதன் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் கேள்விக்குள்ளாக்கும் செயலாகியுள்ளது.
2019 ஜூலை மத்தியில் பாதுகாப்பு உற்பத்தி துறை இலாகா Department of Defence Production அறிவுறுத்தப்பட்டு  அதிஅவசரமாக தளவாட பாக்டரிகளை  இலாகாவிலிருந்து பிற பாதுகாப்பு பொதுத்துறைகள் போன்று கார்ப்பரேஷனாக்குவதற்கு காபினட் குறிப்பு தயாராகி  அமைச்சகங்களுக்கு இடையிலான கருத்துக் கேட்பிற்கு விடப்பட்டுள்ளது.

 AIDEF- INDWF- BPMS  என்கிற மூன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும்  ஒரு மாத கால வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கொடுத்தன. அதிகாரிகள் சங்கங்கள்,  நிர்வாக பணியாளர் சங்கங்களும் ஆதரவை தந்துள்ளன.  இலாகா அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை பலனைத் தரவில்லை. அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை பாரதிய சங்கம் சந்தித்து முடிவை மறுபரீசீலனை செய்யக்கோரியது.   Things are in advance stage மற்றவர்களுடன் கலந்துபேசி  சொல்வதாக அவரும் தெரிவித்துள்ளார். முறையான ஒப்பந்தம் இல்லாமல் போராட்டத்தை முடிவிற்கு கொணர இயலாது என சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள்  Coporatisation of  Ordanance Factories  என்பதை ஏன் எதிர்க்கிறோம் என்பதை எழுத்துபூர்வமாக தந்துள்ளனர். அதில் முக்கியமாக  BSNL  அனுபவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கு சம்பளம் வருமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதையும்  தெரிவித்துள்ளனர். OFB  யின் 218 ஆண்டுகால புகழ், அதன் கேந்திர முக்கியத்துவம், இராணுவ சேவைகளுக்கு பல்வேறு போர்களில் அதன் பங்களிப்பு போன்றவற்றையும், பாக்டரிகள் உற்பத்தி ஆர்டர் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும்  சங்கத்தலைவர்கள்  தோழர்கள் ஸ்ரீகுமார், சீனிவாசன், முகேஷ் சிங் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கார்ப்பரேஷன் என்றாக்கி சந்தை விளையாட்டுகளில் இராணுவத்தளவாட உற்பத்தியை நிறுத்துவது தேசப்பாதுகாப்பிற்கு குந்தகமானது என்பதையும் தலைவர்கள் அழுத்தமாக கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலாகாவிலிருந்து பொதுத்துறைக்கு சென்றவர்கள் பணிநிலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளவுகளையும் தலைமை கணக்கில் கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்றுள்ள நிலையிலேயே அரசின் பட்ஜெட் எஸ்டிமேட்டில் தெரிவிக்கப்படும் நிதியானது திருத்தப்படும் எஸ்டிமேட்டில் வெட்டப்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்கிற நிலை உருவாகியுள்ளது. ரூ 15000 கோடி ஒதுக்கீடு இருந்தால்தான் உற்பத்தி இலக்குகளையும் குறித்தநேர டெலிவரிகளையும், குவாலிட்டி கருவிகளையும் பாக்டரிகளால் தரமுடியும் என்பது உணரப்படாமல் இருக்கிறது. கார்ப்பரேஷன் என்றாக்கி அரசாங்கம் தன் பொறுப்பிலிருந்து வெளியேறப்பார்க்கிறது. நிர்வாக செலவு 30 சதம் என்பது அதிகம் என்று பேசுகிறது.
உண்மையில் ஊழியர் செலவு என்பது 9 சதமாகத்தான் இருக்கிறது. 1-1-17 அன்று கணக்கீட்டின்படி Ordanance Factories Sanctioned Strength 1,19,968.  Actual Strength is 70810.  அதாவது இடைவெளி 49.7 சதமாகவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை என்பது நாடாளுமன்ற கமிட்டியே சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சமாகவும் இருக்கிறது. இருக்கின்ற ஊழியர்களைக்கொண்டு, ஒப்பந்த ஊழியர்களுடன் தரமான நம்பற்குரிய இராணுவக்கருவிகள் செய்து தரும் ஊழியர்களின் மனநிலையை கார்ப்பரேஷன் ஆக்குவது பாதிக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊழியர் சங்கங்கள் மிகப்பொறுப்புடன் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள்  Fire, Pumping, Drivers  வருகைப்பதிவில் ஒப்பமிடாமல் பணி செய்யலாம் என விலக்கு கொடுத்துள்ளனர். அரசாங்கமும் போராட்டத்தை முடிவிற்கு கொணர முயற்சிக்கவேண்டும். போராட்டம் வெல்லட்டும். ஒருவேளை அரசாங்கம் பிடிவாதமாக கார்ப்பரேஷனை திணித்தால் BSNL  பென்ஷன் அனுபவம் மற்றும் அதன் நிதி ஆதாரத்தன்மை போன்றவற்றை தலைவர்கள் கணக்கில் கொள்வார்கள் எனக் கருதுகிறேன். வாழ்த்துகள்!
22-8-19

Saturday, August 17, 2019

Converting the IDA Pension to CDA Pension


                                                                                 Pension Revision
                                                      Converting the IDA Pension to CDA Pension
                       -         R.Pattabiraman
I happened to see a letter (dt 2-8-2019) addressed to DOT Secy   by Pensioners' Associations (CBMPA) demanding Pension Revision from 1-1-2016 by notionally converting the IDA Pension to CDA Pension. This letter   was sent with annexure justifying the demand, formula for Conversion and with other details. I wish their efforts every success.
 They started the case of Justification by quoting Rule 8 of 37 A and taking support of DOPPW clarification dt 27-3-2009. I restrict myself herewith about these two references in the justification.  The following is my understanding regarding these two references.
1.        Rule 8 of 37 A: This sub rule 8 of CCS PR 37A is a common rule for all those absorbed employees from any Govt department to any PSU on or after 1-10-2000. It is specially meant for absorbed employees on retiring whether getting pension from Govt or from any trust of that PSU.
Moreover it speaks about the same formula as that of CG in fixing pension for the employees retiring on the same date that is for future pensioners not for the existing pensioners who had already availed this rule when he or she retired after 1-10-2000. It is not a recurring rule for those already retired and availed that during the time of his or her retirement. If any changed formula is availed by these future pensioners and their pension is fixed as of that, then the question of modified parity comes for the existing pensioners. So quoting this rule will not justify pension revision before pay revision.
2.       DOPPW Desk D lr 27-3-2009:
The subject matter is applicability of 6th CPC on DCRG, Emoluments for Pension, Commutation, and qualifying service to Ex DOT employees absorbed in BSNL
The OM dt 2-9-2008 referred in that was issued only for the benefit of future Pensioners retiring post 2006 not for the existing pensioners ( pre 2006). In the said Desk D letter it was also clarified that the DOPPW OM dt 1-9-2008 issued for Pre pensioners had no relevance.
The next one about annexure V. I shall feel thankful, if someone helps me to understand the steps mentioned.
3.       Annexure V Pension Revision for Post 2016 retirees- As the illustration given is for one who retired on 31-5-2019, the following question is arising?
 Step 1: Notional Pension to be calculated on 1-1-2016
The question is how can pension either actual or notional be calculated when one is still an employee on  1-1-2016 having retirement date on 31-5-2019. 
Suppose an employee retires say in Dec 2025, how can we calculate his pension notionally when he was an employee on 1-1-2016 and having 10 years service to get his pension fixed?  His pay may be fixed notionally or actually but how pension when he is an employee in service all along.  How can one assume him as pensioner when he  is an employee. If he is a pensioner on a particular date then notional or actual revision from a particular date is possible.- even notional scale is possible as per 7th CPC for pension revision.
4.       Sub Rule 9  of 37 A is guiding to fix his pension when the absorbed employee is retiring on a particular date. Sub Rule 10 is DR as per IDA pattern.
( Sub Rule   (9) The pension of an employee under sub-rule (8) shall be calculated on the basis of his last ten months’  average pay.
 Sub Rule  (10) In addition to pension or family pension, as the case may be, the employees shall also be eligible to  Dearness relief as per industrial dearness allowance pattern.)
The CBMPA letter ends with a note “ of course, this requires  an amendment to sub Rule 10 of 37 A”. The point here is both SR 9  or SR 10 are common to all not only specific to BSNL absorbed employees. This also needs clarification from the concerned.
5.       DOT in its OM dt 16-3-2017 clarified that there is no change in the formula for pension/FP w.e.f 1-1-2016. BSNL/MTNL absorbee employees will therefore continue to get pension based on the same formula. This OM of DOT was not addressed by the concerned. This OM only made us eligible to 20 L gratuity ceiling for those retired on or after 1-1-2016.. That is applicability to BSNL retirees also from 1-1-16. But it is silent about linking it with the present 2nd PRC IDA, because it needs to be linked only to 3rd PRC IDA.
6.       The Guidelines issued on 19-9-2003 speaks about relevant equivalent CDA scale only for fixation of pension(Pension  be calculated at 50% of the minimum of that scale) and DR on CDA pattern be granted thereon for the absorbed IDA Retirees quoting 10-12-98 OM issued for Pre 1986 retirees of 5th CPC. This became a problem during the time of 2007 pension revision and DOT failed when the same was attended during 2009. It was clarified that 19-9-2003 was not applicable to BSNL absorbed employees and so we got revised pension on IDA for 2007 pay revision.
The CBMPA works out the conversion factor on the basis of Pension plus DA.
The equivalent scales of CDA (inclusive of GP) as on 1-1-2006 of 6th CPC and IDA as on 1-1-2007 of 2nd PRC is given below
5th CPC 3200 scale     6th CPC CDA 7200-22000    2nd PRC 9020-17430
5th CPC 5000 scale     6th CPC CDA 13500-39000   2nd PRC 13600-25420
5th CPC 6500 scale     6th CPC CDA 13500-39000   2nd PRC 16390-30630
Once again I convey my Wishes to the efforts of all the leaders trying to solve the issue.
15-8-19


Wednesday, August 14, 2019

ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி


ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி
-    ஆர். பட்டாபிராமன்

 பிரிவினையுடன் விடுதலை என்பது காந்தியை வாட்டி வதைக்கும் விஷயமாக இருந்தது. இந்த முடிவிற்காகவா நமது வாழ்நாள் போராட்டத்தை புனிதமானது என உரிமைப் பாராட்டிக்கொண்டோம், O Lord Lead us from darkness into light   என்றே அவர் தெரிவிக்கலானார்.  வேறொரு நேரத்தில் கடிதம் ஒன்றில் ஆகஸ்ட் 15 குறித்து என் பார்வையில் ஒரு மதிப்பும் இல்லை- எவரிடத்தும் உற்சாகமில்லை என  வழக்கம்போல் துணிவான கருத்தை வெளிப்படுத்தினார். 

 ஆகஸ்ட் 15 நெருங்கும் தருணத்தில் பாகிஸ்தான்  என பிரிந்துபோகும் பகுதியிலிருந்து முஸ்லீம் அல்லாத நண்பர் ஒருவர் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். உங்களைப்போன்றவர் ஆகஸ்ட் 15- சுதந்திரம் என கொண்டாட்டங்களில் இருக்கிறீர்கள். எங்கள் நிலையை நினைத்துப் பார்த்தீர்களா? என்ன மகிழ்ச்சி எங்களிடம் இருக்கும்?  இந்த அச்ச உணர்விற்கு  பதில் என்ன என்கிற நிலை இருந்தது. அதே நேரத்தில் இந்திய யூனியன் என அறியப்படும் பகுதிகளில் வகுப்புக்கலவரம் என்பதும் காந்தியை கவலையுற செய்தன. பாகிஸ்தான் பகுதியில் ஏதாவது நேர்ந்தால் ஆகஸ்ட் 15க்கு பின்னர் அதன் விளைவுகளை இந்தியாவில் சந்திக்க நேரும் என காங்கிரஸ் மாகாண தலைவர்கள் பேசினர். இதை கேள்வியுற்ற காந்தி காங்கிரஸ் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டுவிட்டதா - அமைப்பு விதிகள் நான் அறியாமல் மாறிவிட்டனவா எனகிற கேள்விகளை எழுப்பினார். மக்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளத் துவங்கினால் யாரால் கட்டுப்படுத்த இயலும் என்றார்.
 ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை சார்ந்த ஆர்தர் மூர் காந்தியிடம் நீங்கள்தான் பெரும் சக்தி எனச் சொன்னபோது   I am a spent Bullet  -பாகிஸ்தான் வருவது உறுதியாகிவிட்டது. நட்பு வருமா எனத் தெரியவில்லை என்றார். மற்றொரு கடிதம் ஒன்றில் பாகிஸ்தான்  என்கிற முடிவு தவறான ஒன்று. ஆனால் நான் யாரை எதிர்த்து எந்த முடிவிற்காக போராடுவது என காந்தி எழுதியிருந்தார். புவிப்பிரிவினையும் சொத்துபிரிவினையும் மனங்களின் பிரிவினையாக தொடரவேண்டுமா என்கிற கேள்வியை அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். முஸ்லீம் லீகிலும் சிலர்  Hanske liya hai pakistan, Larke lenge Hindustan ( we got pakistan in fun; we will take Hindustan by force )என முழங்கி வந்தனர்
ஆசப் அலிக்கு அவர் எழுதிய கடிதத்தில்  சுதந்திரம் கிடைத்துவிட்டது- ஆனால் நான் உறைந்து போயுள்ளேன். நான் வழக்கொழிந்தவன் ஆகியுள்ளேன் (Freedom has come but it leaves me cold.. so far as I can see, I am a back number). நம்மிடம் அகிம்சை என்பது மேலெழுந்தவாரியாகவே இருந்துள்ளது. இதயத்தில் வன்முறை நிறைந்துள்ளது என தெரிவித்திருந்தார். வேறு கடிதம் ஒன்றில் பிரிட்டிஷார் போகின்றனர்- இதில் உற்சாகம் கொள்ள என்ன இருக்கிறது என எழுதியிருந்தார்.
 மருமகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் நாட்டில் அதிகார மாற்றம் -பாகிஸ்தான் உருவாக்கம் எனக்கு அதிக strain  தந்துள்ளது நீண்டநாட்கள் வாழ்வேனா என்பதில் நம்பிக்கை இழப்பு வந்துவிட்டது என எழுதினார் . I almost despair of seeing peace in my life time   என நொந்து பேசினார். அமைதி விரும்பும் மனிதனுக்கு தீங்கு நிறைந்த உலகில் இடமில்லாமல் போகலாம். ஆனாலும் அவன் அங்குதானே வாழவேண்டும் என தன்னை அவர் சமாதானம் செய்துகொண்டு வந்தார்.
கண்முன் நிகழும் அனைத்து தவறுகளையும் சரிசெய்யமுடியாது. அதே நேரத்தில் எனக்கு அதில் பொறுப்பில்லை என சொல்லவும் முடியாது. எனது ஆன்மா ஓர் பக்கம் நகர்கிறது. உடம்போ வேறுபக்கம் இழுக்கிறது. சிலுவையில் அறைந்து கொள்ளும் போராட்டம்தான் தீர்வு போல் தெரிகிறது என அவர் பேசிக்கொண்டிருந்தார்.
ஜூலை 1947ன் இறுதியில் அவர் படேலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நடந்துகொண்டிருப்பவை எனக்கு உவப்பாக இல்லை. நீங்கள் யாரும் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என சொல்லவில்லை. ஆகஸ்ட் 15க்கு முன் நான் பீகார் நவகாளிக்கு செல்ல விழைகிறேன். ஹரிஜன் பத்திரிகையைக் கூட நிறுத்திவிடவேண்டும் என கருதுகிறேன். அதில் நான் வேறுபட்ட வழிகாட்டலை தருவதாக அமைந்துவிடக்கூடாது  என எழுதினார்.
 காந்தியின் தோழர்களோ அரசாங்க பொறுப்பேற்று நிர்வாகிகளாக செயல்படவேண்டும். அவர்கள் பொதுமக்கள் கருத்தை  தெரிந்து செயல்படவேண்டிய நிலையில் இருந்தனர். சீர்திருத்தக்காரர் எதையும் துணிச்சலாக சோதித்துவிடமுடியும். நிர்வாகிகளால்  அவ்வாறு முடியுமா?
 முதல் கவர்னர் ஜெனரல் மெளண்ட்பாட்டன் என தனது தோழர்கள் எடுத்த முடிவை காந்தி பாராட்டினார். முன்னால் எதிரி என அறியப்பட்ட நிர்வாகம்  ஒன்றை சார்ந்தவரை நம்பி ஏற்றது துணிச்சலான செயல் என்றார். யூனியன் ஜாக் கொடி தொடர்ந்து பறக்கும் என்ற செய்தி பரவியபோது உணர்ச்சிவசப்படவேண்டாம் என்றே காந்தி கருத்து தெரிவித்தார். அது வதந்திதான் என தெரியவந்தபோது பலரும் குதித்து மகிழ்ந்தனர். அதையும் அவர் நிதானப்படுத்தவே செய்தார். திராவிடஸ்தான் என்கிற முழக்கம் எழுந்தபோது அவர் அதை ஏற்கவில்லை. பாகிஸ்தான் கொடி குறித்து பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என அவரிடம் கேள்வி வந்தபோது  If the Pakistan flag represents all the inhabitants equally, irrespective of religion, it will command my salute as it should yours  என்கிற கருத்தை அவர் தந்தார்.
இந்தியா ஒட்டிஇணைந்து செயலாற்ற வேண்டும் எனில் அது தனது நெறி சார்ந்தவற்றில் பிறழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். காங்கிரஸ் தனது நெறி மேன்மை கொண்டு கட்டப்பட்ட இயக்கம் எனில் அரசியல் விடுதலைக்குப் பின்னர் அதை விட்டுவிடவேண்டும் என்பதில்லையே என அவர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார். காங்கிரஸ் சக்தி வாய்ந்த அமைப்பாக தொடரவேண்டும் எனில் ஆக்கபூர்வ செயல்பாடுடையவர்களின் அசோசியேஷன் ஆக அது இருக்கவேண்டும் என்றார்.
சர்க்கா போட்ட மூவர்ண கொடிக்கு பதிலாக அசோக சக்கரம் ஏற்கப்பட்டு புதிய துணிக்கொடிகள் காதி கடைகளுக்கு வந்ததால் பழைய கொடிகள் ரூ 2 லட்சம் மதிப்பில் விற்கப்படமுடியாமல் போன செய்தி அவர் செவிக்கு எட்டியது. ஏழைகளின் ஸ்தாபனம் பாதிக்கப்படக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்- பழைய கொடியை விற்காமல் புதுக்கொடிகளை விற்காதீர் என காந்தி தன் கருத்தை தெரிவித்தார்.
இந்தி தேவநாகரி எனும் பிரச்சனை அவரிடம் வந்தபோது இந்தியா இந்துக்கள்- முஸ்லீம்கள் என அனவருக்குமான நாடு. எனவே எளிய இந்தி- எளிய  உருது கலந்த இந்துஸ்தானிதான் மொழியாக இருக்கவேண்டும். அது தேவநாகரி மற்றும் உருது ஸ்கிரிப்டில் இருக்கவேண்டும் என்றார்.
விடுதலைக்கு பின்னர் பெரும் விஷயங்களில் மட்டுமே கவனம் குவிந்துவிடும்-  சிறு விஷயங்கள் (little things ) உதாசீனமாக்கப்பட்டுவிடும் என்கிற கவலை அவருக்கு இருந்தது.. ஆனால் நமது கிராமங்கள் சிறு விஷயங்களை நம்பியே இருக்கின்றன என அவர் கருதினார்..
II
 ஜூன் 11, 1947 அன்று  திவான் சர் சி பி ராமசாமி அய்யர் ஆகஸ்ட் 15 அன்று திருவாங்கூர் சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் என்றார். உடன் ஹைதராபாத் நிசாமும் அறிவித்தார். பிரிட்டிஷ் இருக்கிறவரை அதன் அதிகாரத்தில் திருப்தியுற்ற திவான் தற்போது இவ்வாறு பேசுவது சரியாகாது என காந்தி பதில் தந்தார். திருவாங்கூருக்கு சொன்னதுதான் ஹைதராபாதிற்கும் என்றானது. படேலின் பெரும் முயற்சியால் பல சமஸ்தான பிரதிநிதிகள் அரசியல் அசெம்பிளிக்கு வர இசைந்தனர். காஷ்மீர் பெரும் பிரச்சனையாக இருந்தது. நேரு, படேல் , மெளண்ட்பாட்டன், காந்தி என பலதரப்பிலிருந்தும் முயற்சி தேவைப்பட்டது.
ஆகஸ்ட் 1947 முதல்வாரத்தில் அவர் காஷ்மீர், ராவல்பிண்டி சென்றார். காஷ்மீரில் மகாராஜா, மற்றும் அப்துல்லா ஆகியோர்களை சந்தித்து பேசினார். ராவல்பிண்டியில் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களை சந்தித்தார். என்ன மிருகத்தனம்- கொடூரம் என வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.. சாவு வருவதற்கு முன்னர் செத்துவிடக்கூடாது. அஞ்சாமல் நிலைமைதனை சமாளிக்க பார்ப்போம் என்றார். ஆகஸ்ட் 15 பற்றி பாட்னாவில் கேட்டபோது prayer, fasting, spinning  மூலம் கொண்டாடுங்கள் என்றார்.
நவகாளி- கல்கத்தா  கலவரம் நிற்க வேண்டும்  அங்கு அமைதி  தழைக்க செய்வதற்கு நேரே செல்லவேண்டும் என முடிவெடுத்தார் காந்தி. மனதிற்கு உகந்த செயல் என அவர் நினைத்துவிட்டால் அதற்காக அனைத்து துனபங்களையும் ஏற்க சித்தமாக இருப்பது அவரது இயல்பு. கல்கத்தாவில் சுக்ரவார்தியுடன்  முஸ்லீம் பகுதியில் ஒரே வீட்டில் தங்குவது என்பதை அவரது ஒப்புதலுடன் காந்தி அறிவித்தார். ஆகஸ்ட் 13 1947ல் இதை படேலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.  உடனடியாக படேல் பதிலளித்தார். மிகமோசமான பகுதியில் பொருத்தமில்லா கம்பெனியுடன் தங்கி ஆபத்தை மேற்கொள்கிறீர்கள் . நான் அஞ்சுகிறேன் என்றார் படேல்.
சரியாக அன்று மதியம் 2.30க்கு யாரும் குடியிருக்காத பாழடைந்த பெலியகட்டா ஹைதாரி மான்சனுக்கு  காந்தி சென்றார். ஜன்னல், கதவுகள் உடைந்து கிடந்தன. ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. அதற்கு முன்னர் நூற்றுக்கணக்கானவர்கள் பயன்படுத்தியிருந்த நிலையில்  அக்கழிப்பறை இருந்தது.
பெய்த மழையால் களிமண் சேறும் சகதியுமாக இருந்தது. அதன் மீது பிளீச்சிங் பவுடர் தூவியிருந்ததால் தலை கிறுகிறுக்க செய்ததாக பியாரிலால் பதிவு சொல்கிறது. காந்திக்கு ஓர் அறை. அலுவலகம் செயல்பட வேறு ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டமாக  வந்ததவர்கள் காந்தியிடம் ஏன் இங்கு வந்தீர்கள்-  இந்துக்கள் நாங்கள் கஷ்டப்பட்டபோது எங்கே போனீர்கள் என்றனர். காந்தி அறையில் அமர்ந்திருந்தார். கற்கள் வீசப்பட்டன. நவகாளியில் உங்கள் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1946க்காக 1947ல் பழிவாங்குவது என்ன நியாயம் இருக்கமுடியும் என காந்தி வினவினார். இங்கிருந்து நான் சேவை செய்ய விழைகிறேன் என்றார். என் வாழ்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் எனக்கு எதிராக நடந்துகொள்ள விரும்பினால் அவ்வாறே செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
நவகாளியில் அமைதி கொணர சுக்ரவர்தி பெரும்பாடுபடுவார் என்பதை உணருங்கள் என்றார். உங்கள் அகிம்சா உபதேசத்தை நிறுத்துங்கள். இஸ்லாமியரை இங்கு வாழவிடமாட்டோம். வெளியேறுங்கள் என்றது கூட்டம். எனக்கு உங்களைவிட வரலாறு தெரியும்.  இந்து இளைஞன் இஸ்லாமியரை மாமா என் உரிமையுடன் அழைக்கும் பழக்கம்பற்றி நீங்கள் அறியவேண்டும்.. விழாக்களில் இணைந்து கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். போலீசை அழைக்கமாட்டேன். நான் எவ்வாறு இந்துக்களுக்கு விரோதியாக இருப்பேன் என காந்தி எடுத்துரைத்தார். சுக்ரவார்தியை வரச்சொல் என்றது கூட்டம். அவர் வந்தபோது கொலைகளுக்கு நீரே காரணம் என்றனர். ஆமாம் நான்தான் பொறுப்பு என்றார் அவர். கல்கத்தாவில் 20 லட்சம் இந்து முஸ்லீம்கள் மோதிக்கொண்டிருந்தால் நான் நவகாளியில் எந்த முகத்துடன் செல்வது என்றார் காந்தி. பதட்டம் சற்று தணிய இரவு 11 மணிக்கு பின்னர் உணவு ஏதுமின்றி காந்தி படுக்கைக்கு சென்றார். இதே கோபப்பட்ட இளைஞர்களில் சிலர் அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு  செக்யூரிட்டி போல் நின்றனர்.
ஆகஸ்ட் 14 அன்று இன்று இரவு இந்தியா துண்டாடப்படுகிறது. நாளை முதல் விடுதலை -  சுதந்திரநாடு என்கிற கொண்டாட்டம் இருக்கும். கூடவே துயரமும் இருக்கிறதே என்றார் காந்தி. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஆயிரக்கணக்கில் ஒன்றாக ஊர்வலம் செல்கிறார்கள். தேசியக்கொடி ஏற்றப்போகிறார்கள் என்ற செய்தியும் வந்தது. இரவு 10 மணிவரை ஏரிப்பகுதியில் சுக்ரவர்தியுடன் காந்தி நடைப்பயிற்சி மேற்கொண்டார். நேரமாகிவிட்டது. நான் காலை 3.30க்கு எழுபவன் எனச்சொல்லி  அவர் 11 மணிக்கு படுக்கச் சென்றார். எங்கும் விடுதலை கொண்டாட்டங்கள் கொடிகள் தோரணங்கள். இஸ்லாமிய சகோதரர்கள் காந்தி தங்கியிருந்த அந்த இல்லத்தில் தோரணம் விளக்குகளை அலங்கரித்தனர்.
ஆகஸ்ட் 15 1947 அன்று காந்தி வழக்கத்திற்கு மாறாக விடியற்காலை 2 மணிக்கே எழுந்தார். அன்று மகாதேவ தேசாய் நினைவுநாள். அதை அனுசரித்தார். சிலபெண்கள் ரவீந்திரநாத் தாகூரின்  விடுதலை கீதங்களை பாடிக்கொண்டே வந்து காந்தியை தரிசித்தனர். அதே போல் மற்றொரு  குழுவில் பெண்கள் பாடிக்கொண்டே வந்தனர்.
காந்தி காலை நடைப்பயிற்சிக்கு சென்றார். அவரை பார்ப்பதற்காக ஏராள மக்கள் கூடினர். அரைமணிக்கு ஒருமுறை அவர் மக்கள் பார்வைக்கு தன்னை வைத்துக்கொண்டார். மேற்கு வங்க அமைச்சர்கள் வந்தனர். முட்கிரீடம் சூடியுள்ளீர்கள். எளிமையாக இருங்கள். உண்மை அகிம்சையை போற்றுங்கள். ’அதிகாரம் எச்சரிக்கை - ஏழை எளியவர்களுக்கு தொண்டாற்றுங்கள் என்றார். அன்று மாலையில் 30000 மக்கள் கூடினர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார். அய்ரோப்பியர் இங்கு தங்கினால் அவர்களையும் கண்ணியத்துடன் நடத்துங்கள் என்றார். 
அன்று இரவு சுக்ரவர்தி கார் ஓட்ட கல்கத்தா நகரை சுற்றிவந்தார் காந்தி. பல இடங்களில் இஸ்லாமியர் சூழ்ந்துகொண்டு மகாத்மா காந்தி ஜிந்தாபாத் முழக்கமிட்டனர். தலைவர்கள் இருவரும் ஒருசேர ஜெய்ஹிந்த் என்றனர்.
 ராஜ்குமாரி அம்ரித் கெளருக்கு கடிதம் எழுதினார் காந்தி. கடிதத்தில் எனக்கு எல்லா உதவிகளும் முஸ்லீம் நண்பர்களே செய்கின்றனர். எனக்கு தென்னாப்பிரிக்கா, கிலாபத் நாட்கள் நினைவிற்கு வருகின்றன.. இத்தருணத்தில் நான் பகைவன்  ஆக எவருக்கும் இல்லை. சுக்ரவர்தி மாறியிருக்கிறார். அப்படித்தான் தெரிகிறது என குறிப்பிட்டிருந்தார்.
 காந்தியை பார்க்க வந்த பலர் கால் ஷூக்களுடன்  நுழைந்தபோது ராஜாஜி மட்டும் மரியாதையுடன் தனது காலணியை வெளியே விட்டுவிட்டு சற்று தூரம் நடந்துவந்து காந்தியைப்பார்த்தார். இருவர் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் சிரித்து வேடிக்கை பேச்சுக்களில்  ஒரு மணிநேரம் ஈடுபட்டனர்.
 ஆகஸ்ட் 16 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் 50ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.  காந்தி தனது செய்தியில் திருட்டு குறித்து பேசினார். பண்டைய நமது முன்னோர்கள் காலத்தில்  வீடுகளை எவரும் தாளிடாத பழக்கம் இருந்துள்ளது.  மக்களிடம் நாணயம் இருந்தது. திருட்டு இல்லாமல் இருந்தது. ஆனால் விடுதலை தினத்தில் அரசாங்க அலுவலகத்தில்  கூட்டம் புகுந்து இருக்கைகளை நாசப்படுத்தி சிலவற்றை தூக்கி சென்றுள்ளனர். இராணுவம் வந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டியுள்ளதை நினைத்துப் பார்த்தால் அவமானகரமாக இருக்கிறது. எவர் எதை எடுத்து சென்றாரோ அதை அவர்களே அரசாங்க அலுவலகத்தில் வைத்துவிட்டனர் என்ற செய்தி வந்தால் நல்லது என்றார்.
 சுக்ரவர்தி ஆகஸ்ட் 18 ஈத் நிகழ்வுகளுக்கு இஸ்லாமியர் இந்துக்களை அழைத்துள்ளதாக தெரிவித்தார். ஈத் அன்று ஏராளமானவர்கள் காந்தியை பார்க்க பழங்களுடன் வந்தனர். மசூதி தொழுகையின் போது இந்துக்கள் பாடல்களை போடாமல் இருக்க காந்தி வேண்டுகோள் விடுத்தார். மாலை 5 லட்சம்பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டம் முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப்பில் நடந்தது. விடுதலையை காத்திட அளப்பரிய தியாகம் செய்யத்தயார் என இஸ்லாமிய தலைவர்கள் பேசினர். காந்திஜி உண்மையில் மகாத்மாதான் எனப் பேசினார் சுக்ரவர்தி.
III
 மகாராஜா ஒருவருக்கு அவர் அனுப்பிய லட்சம் ரூபாய்க்கு ரசீது அனுப்பி நன்றிக் கடிதமும் காந்தி எழுதினார். நவகாளி நிவாரணத்திற்கு 1 1/2 லட்சம் ரூபாய் இருக்கிறது. தற்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்- கல்கத்தா, சிட்டகாங், பீகார் பகுதி இந்து முஸ்லீம்களுக்கும் தங்கள் பணத்திலிருந்து நிதி ஒதுக்க தங்கள் அனுமதியை கோருகிறேன்  என எழுதினார். தான் அனுப்பும் நிதி எதற்கு செலவிடப்படுகிறது என்பதை அவர் அறியச் செய்யவேண்டும் என்கிற பொறுப்பு நிதி பெற்றுக்கொள்பவர்க்கு இருக்கிறது என்கிற பேருண்மையை காந்தி இதன் மூலம் புலப்படுத்தினார்.
 மெளண்ட்பாட்டன் One Man Boundary Force  என காந்தியைப்புகழ்ந்து  கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 15 அன்று தங்கள் பெயரைகேட்டவுடன் அரசியல்நிர்ணயசபை உற்சாகத்துடன் மெய்சிலிர்த்து தங்களை நினைத்துக்கொண்டது என்பதையும் அவர் எழுதியிருந்தார். 
ஆகஸ்ட் 17 அன்று காந்திஜிக்கு தந்தி ஒன்று வந்தது. ராவல்பிண்டியில் நடந்ததைவிட அதிகமாக லாகூர் நகரில் இந்துக்கள் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. வர்த்தகப் பகுதி தீக்கிரையாகியுள்ளது. சிலர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். தப்பிக்க நினைத்தவர்களை போலீசாரும் இராணுவமுமே சுட்டுள்ளது. எனவே லாகூருக்கு வாருங்கள் என்பது தந்தி மூலம் தரப்பட்ட செய்தி.. படேலுக்கு அதை அனுப்பி உண்மை கண்டறிய காந்தி வேண்டினார். உண்மையாக இருந்தால் கொடுமையானது என்றார்.
ஆகஸ்ட் 21 அன்று தன்னை சந்தித்த பெண்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரிகளிடம் செல்லுங்கள்- நட்பு பாராட்டுங்கள் என காந்தி தெரிவித்தார்.
 பஞ்சாப் சென்று பார்த்து வந்த நேரு ஆகஸ்ட் 21 அன்று காந்திக்கு அவரின் பஞ்சாப் வருகை அவசியம் என்கிற தந்தியை அனுப்பியிருந்தார். நவகாளியில் தேவைப்படுகிறேன். பீகாரில் சில நாட்கள் தேவைப்படலாம். இச்சூழலில் நான் எவ்வாறு வருவது என நேரு வழிகாட்டவேண்டும் என காந்தி பதில் அனுப்பினார். உடனடியாக தங்களை போகச்சொல்லவில்லை- நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். திரும்ப நான் சொல்கிறேன் என நேரு பதில் அனுப்பினார்.
பஞ்சாபியர் சிலர் காந்தியை சந்தித்து பெண்கள் கடத்தப்படுவது குறித்தும், நடைபெறும் கொலைகள் பற்றிய செய்தியையும் தெரிவித்தனர். அவசியமெனில் உடன் செல்கிறேன் என செய்தியை நேருவிற்கு காந்தி அனுப்பினார். நேரு ஆகஸ்ட் 25ல் தான் மறுமுறை பஞ்சாப் போய்வந்து அறிந்த செய்திகளை பகிர்ந்துகொண்டார். அமிர்தசரஸ் பகுதியில் 50000 இஸ்லாமியர் அழிக்கப்பட்டனர் என சொல்வது கூடுதலாக இருக்கலாம். ஆனால் 10000க்கும் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இரு பக்கங்களிலும் ஏராள கொலைகள்- இழப்புகள் தெரிகின்றன. அகாலியினர் கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் இருதரப்பிலும் மானபங்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்- மாஸ்டர் தாராசிங் அமைதிக்கு முயற்சித்து வருகிறார். சில இடங்களில் அகாலிகளுடன் ஆர் எஸ் எஸ் சேர்ந்துள்ளனர்- மவுண்ட்பாட்டனும் காந்தி பஞ்சாப் செல்வது தேவை என கருதுகிறார்  என நேரு தெரிவித்திருந்தார்.
சுசிலா நாயார் ராவல்பிண்டி அருகாமையில் இஸ்லாம் அல்லாதவர் முகாம்களுக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை உருவாக்கிட சென்றார். அரசாங்கத்திற்கு கிடைத்த விவரங்களையடுத்து படேல் ஆகஸ்ட் 24 அன்று லியாகத் அலிகானுக்கு கடிதம் எழுதினார்.. முகாமில் உள்ளவர்க்கு சாப்பாட்டுவசதி, இதர வசதிகளை செய்துகொடுத்து நம்பிக்கை உண்டாக்க வேண்டினார். இயலவில்லையெனில் கிழக்கு பஞ்சாபிற்கு முகாமை மாற்றுமாறு வேண்டினார். மேற்கு பஞ்சாப் நிர்வாகம் முழு நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லியாகத் பதில் அனுப்பினார்.
சுசிலாவை அங்கு அனுப்பியுள்ளது பற்றி காந்திக்கு படேல் எழுதினார். காய்கறிகளை வெட்டுவது போன்று மனிதர்கள் நறுக்கப்படுகின்றனர் என படேல் காந்திக்கு தனக்கு கிடைத்த தகவலை பரிமாறிக்கொண்டார். ஆகஸ்ட் 26 அன்று படேலுக்கு பதில் எழுதினார் காந்தி. சாவின் வாயிலுக்கு சுசிலாவை அனுப்பியுள்ளேன். ஆனால் முகாமில் இருப்பவர் பாதுகாப்பை நன்மைகளை அறிந்த பிறகே சுசிலா வர இயலும் என தெரிவித்தார். ஆகஸ்ட் 27 அன்று படேல் காந்திக்கு திரும்ப எழுதினார். லேடி மெளண்ட்பாட்டனும் ராஜ்குமாரியும் சுசீலாவை பார்த்துள்ளனர். சுசிலா செல்லக்கூடாது என முகாம் மக்கள் அழுகின்றனர். எனவே அவர் அங்கு தொடர்ந்து நீடிக்கிறார். மற்றவை கடவுளின் விருப்பமென அதில் படேல் தெரிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 24 ஹரிஜன் இதழில் ஒரே வீட்டில் சுக்ரவர்தியுடன் தங்கியிருப்பது- முஸ்லீம் நண்பர்கள் உதவி பற்றி எழுதினார். நாங்கள் இருவரும் இறைவனின் விருப்பத்திற்கேற்ப  நடனமாடுபவர்கள். இறைவன் எங்களை கருவியாக்கிக்கொண்டுள்ளார் என எழுதினார்.
ஆக்ஸ்ட் 26 அன்று நள்ளிரவிலேயே விழித்த காந்திஜி தேங்கிக் கிடந்த வேலைகளில் கவனம் செலுத்தினார்.  இரவு 1 1/2 மணிக்கு படுத்து அரைமணி ஓய்வெடுத்தார். மீண்டும் 2 மணியிலிருந்து வேலையைத்துவங்கினார். காலை பிரார்த்தனைவரை  வேலை செய்துகொண்டிருந்தார்.  கவலையுடன்  அமைதியின்றி இருப்பதாக தெரிவித்தார். ஏன் நம்பிக்கை இழந்துள்ளேன் என வினவினார்.
ஆகஸ்ட் 27 அன்று கிட்டெர்பூர் துறைமுக பகுதியில் தொழிலாளர்களிடம் உரையாற்றினார். மத நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.  முஸ்லீமிடமா இந்துவிடமா எவரிடம் வேலைபார்க்கிறோம் என பார்க்காது ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார்.
 அடுத்தநாள்யுனிவர்சிட்டி சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களுடன் பிரார்த்தனை கூட்டம் இருந்தது. சுக்ரவர்தி குறித்து தவறாக சொல்லப்பட்டபோது நம்மிடம் வந்த எந்த விருந்தாளியின் மனதையும் நோகச் செய்வது நல்ல மரபல்ல என்றார் காந்தி.  சுய கட்டுப்பாடு, அடக்கம் என்கிற பண்புகளை மாணவர்கள் கற்கவேண்டும் என்றார்.
 மீராபென்னுக்கு எழுதிய கடிதத்தில் நான் அடுத்தக்கணம் எங்கு இருப்பேன் எனத்தெரியவில்ல.  சிட்டுக்குருவிகள் அப்படித்தானே வாழ்கின்றன.  கணத்திற்கு கணம் வாழ்வோம் ( Let us literally live from moment to moment)  என தெரிவித்திருந்தார்.
ராஜ்குமாரி அம்ரித் கெளருக்கு  மானுடத்தின் மீது நம்பிக்கை இழப்பு வேண்டாம். சில துளிகள் அழுக்காக இருப்பதால் சமுத்திரம் அழுக்காகிவிடுவதில்லை என்பதை புரிந்துகொள்வோம். ஜவஹர் டெல்லிக்கு வரச்சொல்கிறார் என கடிதம் எழுதினார்.
ஆகஸ்ட் 29 அன்று காந்தி மீண்டும் நேருவிற்கு தந்தி அனுப்பினார். சர்தார் அஜித் சிங் என்னை பஞ்சாபிற்கு வர வற்புறுத்துகிறார். என்ன செய்வது. உயிர்களும் உடைமைகளும் போன பின்னர் போவது கேலிக்குரிய விஷயமல்லவா என காந்தி கேட்டிருந்தார். நேரு தன் பதிலில்  தாங்கள் டெல்லிக்கு வருவது அவசியம் என தெரிவித்தார். மேலும் நேருவும் லியாகத்தும் இணைந்து பஞ்சாப் சுற்றுப்பயணம் செல்கின்றனர். அமைதி திரும்பலாம். மற்றவை கடவுளின் கிருபையில் இருக்கிறது என பஞ்சாபிலிருந்து செய்தி காந்திக்கு கிடைத்தது.
 ஆகஸ்ட் 30 1947ல் நேருவிற்கு காந்தி எழுதினார். படேல் மற்றும் தங்கள் விருப்பம் இல்லாமல் நான் பஞ்சாப் செல்லமாட்டேன். டெல்லியில் வந்து அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பது என்பது பொருத்தமானதல்ல.   My advice has value only when I am actually working at a particular thing.  வெறும் கன்சல்டண்ட் எனும் வகையில் நான் உருவாகவில்லயே என  அதில் குறிப்பிட்டிருந்தார். தான் பார்க்காத அறியாத செயல்படமுடியாத ஒன்றின்மீது கருத்து சொல்வது எனபது அவர் இயல்பிற்கு மாறானது. வெற்று விவாதங்களில் அவருக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இறங்கி காரியமாற்றினால்தான் தீர்வு என்பதில் அவர் உறுதியாக இருந்தவர்.
 ஆகஸ்ட் 31 அன்று இரவு ரெளடி கும்பல் ஒன்று காந்தி இருந்த இடத்திற்கு வந்து கலவரம் செய்தது. ’சுக்ரவர்தி ராஸ்கல் எங்கே எனக்கேட்டது அக்கும்பல். தாக்க வேண்டும் எனில் என்னை தாக்குங்கள் என்றார் காந்தி. போலீசார் அவர்களை தாக்கி அப்புறப்படுத்தவேண்டாம் என்றார். விவரம் அறிந்து முதலமைச்சர் டாக்டர் பிரபுல்லா கோஷ் வந்தார். இந்துமகாசபா தலைவர்களை கைது செய்யட்டுமா என்றார். காந்தி வேண்டாம். அமைதி நிலவ அவர்களிடம் பொறுப்பை கொடுக்கப் பாருங்கள் - அவர்களிடம் ஒத்துழைப்ப வாங்கப் பாருங்கள் என்றார். இரவு 12.30க்குத்தான் அன்று காந்தி படுக்கைக்கு சென்றார்.
 போலீசார்   கண்ணீர்புகை மூலம்தான் கூட்டத்தை விடியற்காலை கலைக்க முடிந்தது. இதுதான் ஆகஸ்ட் 15 நமக்கு தருகிறதா என காந்தி கவலையுடன் வினவினார்.
நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த டாக்டர் சியாமாபிரசாத் முகர்ஜி கல்கத்தாவில் அமைதிக்கான வேண்டுகோளைவிட சம்மதித்தார். காந்தியும் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். காந்தியின் நம்பிக்கையில் முஸ்லீம்கள் சிலர் டிரக் வண்டியில் தங்கள் இல்லங்களுக்கு திருப்பியபோது அவர்கள் மீது கையெறிகுண்டு வீசப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர். செய்தி அறிந்து காந்தி விரைந்தார். கொடுமையான நிகழ்வைப் பார்த்தார்.
 காந்தியிடம் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டு வந்தவர்களிடம் வேறுவழியில்லை. எரியும் நெருப்பின் மத்தியில் போய் நின்று அமைதிப்படுத்தவேண்டும். அவசியமெனில் நாம் அதில் உயிர் துறக்கவும் சித்தமாகவேண்டும் என்றார். அன்று  மதியம்  கொடுக்கப்பட்ட பழத்தை வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரின் உடல் உபாதைக்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு நீர் குளுகோஸ் கொடுத்தனர். ராஜாஜி வந்தார். குண்டர்களுக்கு எதிராக பட்டினி என்பது செல்லுபடியாகுமா எனக் கேட்டார். அவர்கள் இதயத்தை தொடுகிறதோ இல்லையோ சமுகம் அவர்களை ஏற்கவில்லை எனபதாவது நடக்குமே என்றார் காந்தி. ராஜாஜி தாங்கள் இறக்க நேரிட்டால் பெருந்தீ உருவாகும்- மோசமாகும்  என்றார் (suppose you die, the conflagration would be worse) .   அதை நான் பார்க்க இருக்க மாட்டேன் அல்லவா- என கடமையை செய்தவனாவேன் (Atleast I won't be a living witness of it. I shall have done my duty. More is not given to a man to do)  என்றார் காந்தி.
காந்தி  உண்ணா நோன்பு இருக்கப்போகிறார் என்ற செய்தி ராஜாஜிக்கு காட்டப்பட்டப்பின் பத்திரிகைகளுக்கு இரவு 11 மணியளவில் தரப்பட்டது.  பாடுபட்ட சுதந்திரம் காக்கப்படவேண்டும் எனில் அனைவரும் கும்பல் தாக்குதல்- கொலை என்பதை விட்டு மறக்கவேண்டும். சட்டத்தை கும்பல் கையில் எடுக்கக் கூடாது என்பது விதியாக மாறவேண்டும் (must completely forget lynch law....The recognition of the golden rule of never taking the law into one's own hands has no exceptions.).. என் உண்ணாநோன்பு கருவி பொய்த்ததில்லை. சிலநேரம் என் வார்த்தைகள் செய்யமுடியாததை என் பட்டினி  செய்துவிடுகிறது (what my word in person cannot do, my fast may) என்கிற தன் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
அறிவித்தபடியே செப்டம்பர் 1 1947 இரவு 8.15க்கு அவர் உண்ணாநோன்பை துவங்கினார். நிலைமைகள் சீராகும்வரை பட்டினிதான் என்றார். நேருவிற்கு தெரிவித்த கடிதத்தில் கோபம் கொள்ளவேண்டாம்-  கல்கத்தாவில் நிலைமைகள் சீராகும்வரை  இச்செயல் தவிர்க்கமுடியாதது என எழுதினார்.
 Ref:
 Mahatma Gandhi   The Last Phase Part 2  Pyarelal