Skip to main content

Posts

Showing posts from August, 2019

Ordnance factories Strike

      இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள்   வேலைநிறுத்தம் -     ஆர். பட்டாபிராமன் இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள் (Ordnance factories) தங்களது ஒருமாத வேலைநிறுத்தத்தை   கடந்த ஆகஸ்ட் 20 அன்று துவங்கியுள்ளார்கள் . ஆர்ட்னஸ் பாக்டரிகளை கார்ப்பரேஷன் ஆக்கும் அரசின் முயற்சியை கைவிடக்கோரியே இந்த வேலைநிறுத்தம் .   முன்பிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பல்வேறு காலங்களில் இது குறித்த உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றனர் . நாயர் கமிட்டியாக இருந்தாலும் - கேல்கர் கமிட்டியாக இருந்தாலும்   கார்ப்பரேஷனாக்குவது எனும் பரிந்துரை தந்தபோது பெர்னாண்டஸ் , பிரணாப் முகர்ஜி ,   ஏ கே அந்தோணி ஆகியவர்கள் ஊழியர் தரப்பை கலந்தாலோசிக்காமல்   முடிவெடுக்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை தந்தனர் . மறைந்த மரியாதைக்குரிய பரிக்கர் கூட 2015 ல் இந்த உறுதிமொழியை நல்கினார் . பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி கொள்கை என்பதை அவ்வப்போது அரசாங்கம் அறிவித்துவருகிறது . அவ்வாறு ஒன்றை நகல் அறிக்கையாக 2018 மார்ச்சில் பா . ஜ . க அரசாங்கம் முன்வைத்து பொதுக் கரு

Converting the IDA Pension to CDA Pension

                                                                                  Pension Revision                                                        Converting the IDA Pension to CDA Pension                        -          R.Pattabiraman I happened to see a letter (dt 2-8-2019) addressed to DOT Secy    by Pensioners' Associations (CBMPA) demanding Pension Revision from 1-1-2016 by notionally converting the IDA Pension to CDA Pension. This letter    was sent with annexure justifying the demand, formula for Conversion and with other details. I wish their efforts every success.   They started the case of Justification by quoting Rule 8 of 37 A and taking support of DOPPW clarification dt 27-3-2009. I restrict myself herewith about these two references in the justification.   The following is my understanding regarding these two references. 1.         Rule 8 of 37 A: This sub rule 8 of CCS PR 37A is a common rule for all those absorbed employees from any Govt depart

ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி

ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி -     ஆர். பட்டாபிராமன்   பிரிவினையுடன் விடுதலை என்பது காந்தியை வாட்டி வதைக்கும் விஷயமாக இருந்தது . இந்த முடிவிற்காகவா நமது வாழ்நாள் போராட்டத்தை புனிதமானது என உரிமைப் பாராட்டிக்கொண்டோம் , O Lord Lead us from darkness into light    என்றே அவர் தெரிவிக்கலானார் .   வேறொரு நேரத்தில் கடிதம் ஒன்றில் ஆகஸ்ட் 15 குறித்து என் பார்வையில் ஒரு மதிப்பும் இல்லை- எவரிடத்தும் உற்சாகமில்லை என   வழக்கம்போல் துணிவான கருத்தை வெளிப்படுத்தினார்.     ஆகஸ்ட் 15 நெருங்கும் தருணத்தில் பாகிஸ்தான்   என பிரிந்துபோகும் பகுதியிலிருந்து முஸ்லீம் அல்லாத நண்பர் ஒருவர் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார் . உங்களைப்போன்றவர் ஆகஸ்ட் 15- சுதந்திரம் என கொண்டாட்டங்களில் இருக்கிறீர்கள். எங்கள் நிலையை நினைத்துப் பார்த்தீர்களா? என்ன மகிழ்ச்சி எங்களிடம் இருக்கும்?   இந்த அச்ச உணர்விற்கு   ’ பதில் என்ன ’ என்கிற நிலை இருந்தது . அதே நேரத்தில் இந்திய யூனியன் என அறியப்படும் பகுதிகளில் வகுப்புக்கலவரம் என்பதும் காந்தியை கவலையுற செய்தன . பாகிஸ்தான் பகுதியி