இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஆர். பட்டாபிராமன் இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள் (Ordnance factories) தங்களது ஒருமாத வேலைநிறுத்தத்தை கடந்த ஆகஸ்ட் 20 அன்று துவங்கியுள்ளார்கள் . ஆர்ட்னஸ் பாக்டரிகளை கார்ப்பரேஷன் ஆக்கும் அரசின் முயற்சியை கைவிடக்கோரியே இந்த வேலைநிறுத்தம் . முன்பிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பல்வேறு காலங்களில் இது குறித்த உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றனர் . நாயர் கமிட்டியாக இருந்தாலும் - கேல்கர் கமிட்டியாக இருந்தாலும் கார்ப்பரேஷனாக்குவது எனும் பரிந்துரை தந்தபோது பெர்னாண்டஸ் , பிரணாப் முகர்ஜி , ஏ கே அந்தோணி ஆகியவர்கள் ஊழியர் தரப்பை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை தந்தனர் . மறைந்த மரியாதைக்குரிய பரிக்கர் கூட 2015 ல் இந்த உறுதிமொழியை நல்கினார் . பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி கொள்கை என்பதை அவ்வப்போது அரசாங்கம் அறிவித்துவருகிறது . அவ்வாறு ஒன்றை நகல் அறிக்கையாக 2018 மார்ச்சில் பா . ஜ . க அரசாங்கம் முன்வைத்து பொதுக் கரு