Skip to main content

Posts

Showing posts from July, 2019

தோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு

தோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு -ஆர். பட்டாபிராமன் இந்திய நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த மனிதராக கருதப்பட்டவர்களில் இந்திரஜித் குப்தாவும் ஒருவர் . நாவன்மை , மக்கள் பிரச்சனைகளின்பாற் தெளிவு என்பதை நாடாளுமன்றத்தில் பலமுறை நிரூபித்தவர் . 1960 துவங்கி 77-80 என்கிற காலம் தவிர 2001 வரை நாடாளுமன்றம் அவரது குரலை கருத்தைக் கேட்டுக்கொண்டேயிருந்தது . அவர் நாடாளுமன்றத்திற்கு 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரை   ’ Father of the House’   என்று பலரும் அழைத்தனர் . 1991, 96, 98, 99 ஆண்டுகளில் அவரது சீனியாரிட்டி காரணமாக ’ புரோடேர்ம் ஸ்பீக்கராக ’ இருந்து சபாநாயகர் தேர்வை நடத்திக்கொடுத்தவர் . பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் அவர் சேர்மனாக இருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டது .. அவர் நாடாளுமன்ற விவாதங்களில் பேச எழுந்தாலே அவை உன்னிப்பாக கவனிக்கத்துவங்கிவிடும் . தனது பேச்சாற்றலால் உழைப்பாளர்கள், தெருவோர மனிதர்கள், கவனிக்கப்படவேண்டியவர்கள் குறித்து அரசின் நடவடிக்கைகளை அவரால் வலிவுடன் கோரமுடிந்தது . மத்திய அரசு ஊழியர்களு