Skip to main content

பட்டாபியின் 5 புத்தகங்கள்

பட்டாபியின் கீழ்கண்ட 5 புத்தகங்கள் www.freetamilebooks.com குழுவினரால் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. விழைவுள்ளவர் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். தமிழ் உலகில் விலை ஏதுமின்றி கருத்துக்களை கொண்டுசெல்லவேண்டும் என்கிற விழைவில் தமிழ் ஆக்கங்களை சில இளைஞர்கள் மின்னூல் வடிவில் தங்கள் பெரும் உழைப்பை செலுத்தி கொண்டுவருகின்றனர். அந்த இளம் தோழர்களுக்கு எனது வாழ்த்தும் நன்றியும். இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை இந்நண்பர்கள் இலவசமாக அனைவருக்கும் கிடைக்க வழி செய்துள்ளனர். 60 லட்சத்திற்கு மேற்பட்ட பதிவிறக்கங்களுக்கு அவர்களின் உழைப்பு பயன்பட்டுள்ளது. எனது சிறிய உழைப்பும் இப்புத்தகங்களை எழுதுவதில் உள் உறைந்து இருக்கிறது. மகத்தான தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில்  நான் ஒரு பொருட்டானவன் அல்லன் என்றாலும்
போராளிகளின் சிந்தனைகள்  4419
பகவத்கீதை பன்முகக் குரல்கள்  3341
ஹெகல் துவங்கி    2155
மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி 1424
நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்  400
பதிவிறக்கங்களை பெற்றுள்ளன.  இவ்வைந்து புத்தகங்களும் 11739 முறை  பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன். இதில் 200 பேர் படித்திருந்தால் கூட இன்றுள்ள சூழலில் அவர்களுக்கு நான் கடமைப்பட்டவனாகிறேன். என் அன்பை தெரிவிக்கிறேன். பலருக்கும் நேரம் பெரும் பிரச்சனையே. எஞ்சி வாழப்போகும் காலத்தில் ஏதோ ஒரு வகையில் சமூகப் பயன்பாடு இருக்கவேண்டுமே என்கிற  ஆர்வத்தில் செய்யப்பட்ட முயற்சியாக எனது புத்தகங்களை பார்க்கலாம். பீற்றிக்கொள்வதற்கு ஏதுமில்லை.


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு