Skip to main content

Posts

Showing posts from August, 2022

சொற்களின் சரிதம்

                                      சொற்களின் சரிதம் சொற்களின் சரிதம் அளவில் சிறிய புத்தகம்தான் . பல நூல்களை   தந்திட்ட வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய நூல் . அவரின் மறைவையடுத்து டிசம்பர் 1956 ல் வெளியான நூல் . அவரின் சில கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளனர் . முதல் கட்டுரை ’ கழகம் ’ எனும் சொல் குறித்த ஆய்வு . திருக்குறள் , சிந்தாமணி , கலித்தொகை என பல நூல்களில் இச்சொல் இடம் பெற்றுள்ளது . ஆரம்பத்தில் ’ சூதாடுமிடும் ’ என்பது இதற்கு பொருளாக இருந்துள்ளது . காலகதியில் வேறு பொருள் தரும் சொல்லானது என வையாபுரி அவர்கள் குறிப்பிடுகிறார் . திருவாய்மொழியில் ’ திரள் ’ என்கிற பொருளில் இடம்பெற்றதை அவர் சொல்கிறார் .     இராமயணத்தில் இதன் பொருள் ’ கல்வி பயிலுமிட ’ மென வருவதாக வையாபுரி வகைப்படுத்துகிறார் . சொற்பொருள் வரலாற்றில் இழிவு பொருண்மை ( degradation)    உயர்வுப் பொருண்மையில் (elevation) வருதல் பற்றி வையாபுரி விளக்குவார் . Nice   என்ற ஆங்கிலச் சொல் ஆதியில் அறியாமை - மடமை என்ற பொருளில்தான் வழங்கப்பட்டது . இப்பொழுது அது

தமிழும் சமஸ்கிருதமும் (ம பொ சி பார்வையில்)

    தமிழும் சமஸ்கிருதமும் (ம பொ சி பார்வையில்) ம பொ சி அவர்கள் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் மிகச் சிறிய புத்தகம்தான் . 1983 ல் செங்கோல் பத்திரிகையில் வெளியானதை திரட்டி நூலாக தந்துள்ளனர் .   தமிழுக்கு அடுத்தபடியாக அது பேச்சுமொழியில்லாவிட்டாலும் சமஸ்கிருதத்தை நேசிக்கிறேன் என ம பொ சி இதில் சொல்லியிருப்பார் .. தமிழ் தாய்மொழி - வாழ்க்கை மொழி என்றால் இந்தியன் இந்து என்ற வகையில் சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழி எனவும் ம பொ சி கருதினார் . சமஸ்கிருதத்தை பயிலக்கூடாது என்ற எண்ணம் ஏதும் அவரிடத்தில் இருந்ததில்லை . தனது குடும்பச் சூழலில் கல்வி பெறவே வாய்ப்பில்லா நிலையில் தமிழ் கற்கைக்கே 35 வயதை தாண்டவேண்டியிருந்தது . ஆங்கிலத்தில் புலமை பெறாமல் போனதற்கு கூட வருந்தவில்லை - ஆனால் சமஸ்கிருதம் அறியாமல் போனதற்கு வருந்துவதாகவும் ம பொ சி சொல்லியிருப்பார் . தமிழ்மொழி தொண்டை இப்பொழுதைவிட கூடுதலாக திறமையாக சமஸ்கிருத மொழி அறிவு இருந்திருந்தால் செய்திருக்கமுடியும் எனவும் அவர் பேசியுள்ளார் .   தமிழ்மொழியில் பெயர்க்கப்பட்ட