Skip to main content

Posts

Showing posts from July, 2022

A piece for BSNL Employees and Absorbed Retirees

  A piece for BSNL Employees and Absorbed Retirees   As Employees you are all expecting wage revision, due from Jan 2017. As pensioners we are all expecting pension revision from the same Jan 2017. In this material world, the expectations and desires of both of us are not unfair.   Trade Unions and Pensioners Associations are trying their level best to settle the issue. Even the TUs have gone to the extent of telling the masters that Pension revision may be done delinking wage revision, may be spiritually correct but materially difficult.   The Administrative Masters from DOT and DPE (now from MOF ) are showing the guidelines issued for 3 PRC implementation. Those PSUs having profit started implementing the wage revision in the last 5 years. BSNL is not able to implement because of its loss making financial position.   In this scenario all unions and associations changed their approach in getting pension revision as it is being paid by GOI thro DOT Demands for Grants. T

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

                    சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ’ ஆலயங்கள் சமுதாய மையங்கள் ’ என்ற தொகுப்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய ’ சைவ சித்தாந்தமும் மார்க்சியம் ’ எனும் கட்டுரை ஒன்றும் இருக்கிறது . இந்த தொகுப்பு 1987 ல் வெளியான ஒன்று .. இந்நூலில் மெய்கண்டர் தேவர் முதல் மார்க்ஸ்வரை தான் பேசியிருப்பதாக அடிகளார் சொல்லியிருப்பார் . தோழர் கவிஞர் யுகபாரதி இது குறித்து முகநூல் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார் . அடிகளார் 40 பக்கத்திற்குள்ளாகத்தான் தன் ஆய்வை நமக்கு தந்திருப்பார் . அவரின் எழுத்துக்கள் , பேச்சு எல்லாம் பொருள் பொதிந்ததாக சுருக்கமானதாக அதே நேரத்தில் அடர்த்தி நிறைந்ததாக இருக்கும் . சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான் .  பிற சமயங்களுடன் விவாதித்து அதில் தெரியும் குறைகளை சுட்டி நிராகரிப்பது போல ஒன்றல்ல மார்ச்கியம் என்பதை அடிகளார் முதலிலேயே சொல்லிவிடுவார் . மார்க்சியத்தை உலகாயததத்தின் வளர்ச்சியாக அவர் பார்ப்பார் . கடவுள் மறுப்பு தத்துவங்கள் தோன்ற காரணம் எவை என கேள்விகளைக்

தமிழ் நெறியும் லெனினியமும்

  தமிழ் நெறியும் லெனினியமும்   குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 12 ல் ’ தமிழ் நெறியும் லெனினியமும் ’ எனும் சிறு பகுதியுண்டு . குன்றக்குடி அடிகளார் லெனினியம் என்பதை எதையும் அறிவின் அடிப்படையில் எதார்த்த உணர்வுடன் ஆராய்ந்து முடிவெடுப்பது என்கிறார் . எந்த ஒன்றையும் அறிவில் ஆராய்ந்து அனுபவரீதியாக முடிவெடுக்க வேண்டுமென்பது லெனினிய அடிப்படை . விரிந்தும் பரந்தும் கிடக்கிற உலகத்தை இயற்கையானதாக லெனினியம் பார்க்கிறது . இந்த உலகத்தைப் படைத்த இன்னொரு சக்தி என்பதை அது நம்பவில்லை . இந்த உலகம் ஒரே மாதிரியாகவும் இல்லை . முழுமைபெற்றுப் பக்குவமாக இல்லை . மாறி வருகிறது . இன்ப துன்ப கலப்பு இருக்கிறது என லெனினியம் புரிந்துகொள்கிறது என்கிற தன் புரிதலை தருவார் அடிகளார். தமிழ் இலக்கிய மரபு பல குரல் கொண்டது . உலகத்தைப்பற்றிய கருத்தில் ஒருமைப்பாடில்லை . ஆனாலும் உயிர் வர்க்கங்கள் கடவுளால் படைக்கப்பட்டவையல்ல என்று தமிழ்ச் சமய மரபு அறுதியிட்டுக் கூறுகிறது என்கிறார் அடிகளார். இதற்கு துணையாக ஐங்குறுநூறு , புறப்பொருள் வெண்பா பாடலைக்

மாநில கட்சிகள் பற்றி சிபிஎம்

                      மாநில கட்சிகள் பற்றி சிபிஎம் (2002- 2022 ஆண்டுகளின் 7 கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானங்களை முன்வைத்து ) CPM கட்சி தனது கட்சி காங்கிரசை அதன் அமைப்பு விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரக்கூடிய கட்சி . இடதுசாரி இயக்கங்களில் பெரிய கட்சியாகவும் உள்ளது . மூன்று மாநிலங்களில் பல ஆண்டுகள் ஆண்ட கட்சி . எனவே   இந்தியாவில் ஆட்சி செய்வது என்றால் எப்படி - எவ்வளவு சிக்கல்கள் என்பதை நிச்சயமாக அறிந்த கட்சியாக இருக்கும்/ இருக்கவேண்டும் . அக்கட்சி   21 ஆம் நூற்றாண்டின் இந்த 22 ஆண்டுகளில் 2002 ல் 17 வது காங்கிரசையும் , 2022 ல் தனது 23 வது காங்கிரசையும் நடத்தி முடித்துள்ளது . 17,18,19,20,21,22,23 என 7 காங்கிரஸ் அகில இந்திய மாநாடுகளை இந்த 22 ஆண்டுகளில் நடத்தியுள்ளது . ஒவ்வொரு காங்கிரசிலும் அடுத்து தான் செயல்படப்போகிற மூன்று ஆண்டுகளுக்கான திசைவழியைக் காட்டிட அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்கிறது . அதைத்தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்பட்டதை ரிவ்யூ செய்வது , ஸ்தாபன நிலைமைகளை சீர்தூக்கி பார்க்கு