Skip to main content

Posts

Showing posts from May, 2020

நேருவின் நிர்வாகம்

நேருவின் நிர்வாகம் - ஆர்.பட்டாபிராமன் நேரு உலக அரசியல் நிகழ்வுகள்- போக்குகள், இந்திய விடுதலைப்போராட்டம் குறித்த ஞானம் மிகுந்தவராக இருந்தார். அலகாபாத முனிசிபல் நிர்வாகம் என்கிற நிர்வாக அனுபவம்   மட்டுமே கொண்ட நேரு 1946ல் இடைக்கால சர்க்காரின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.   பிரிட்டிஷ் வைத்துவிட்டுப் போகும் நிர்வாக எந்திரத்தை மக்களுக்கு நெருக்கமாக ஜனநாயகப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைக்குப் பின்னர் காத்திருந்தது.   நாடு பிரிவினையின் துயர்களை அனுபவித்துக்கொண்டிருந்தது. அகதிகள் பிரச்சனை, சமஸ்தானங்களின் பிரச்சனைகள், மகாத்மா படுகொலை என தொடர் துயரங்களின் ஊடே விடுதலை அரசாங்கம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு நேரு தலைமையில் அன்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள்   அனைவருக்கும் இருந்தது. பல்வேறு சிந்தனை ஓட்டங்களில் இருந்த காங்கிரஸ் தலைவர்களை கொண்டு உடனடியாக தீவிரமான மாற்றங்களை செய்ய இயலாது என்கிற எதார்த்த நிலையும் நேருவால் உணரப்பட்டிருந்தது. மய்யம்- பரவலான அதிகாரமுறை ( Centralisation- Decentralisation)   என்கிற பிரச்சனையை நேரு நடைமுறை ச

நேருவும் நாடாளுமன்றமும்

நேருவும் நாடாளுமன்றமும் - ஆர்.பட்டாபிராமன் இந்தியாவின் எதிர்காலம் அய்ந்து அடிப்படைகளைக் கொண்டது எனக் கருதி அதற்காக செயல்பட்டவர் ஜவஹர்லால் நேரு . நாடாளுமன்ற ஜனநாயகம் , திட்டமிட்ட வளர்ச்சி , மதசார்பின்மை , அறிவியல் மனோபாவம் , சோசலிசம் என்பனவே அவை . பாராளுமன்றத்தின் அணிகலன்   என்கிற போற்றுதலுக்குரியவராக நேரு திகழ்ந்தார்.   நாடாளுமன்ற அமைப்பும்   மற்றும் இருக்கிற பிற நிறுவனங்களும் நமது மக்களின் சிந்தனை - குறிக்கோள் நடத்தைகளை பிரதிபலிப்பவையாகவே இருக்கும் . அவைகளின் வலிமையும் நீடித்த தன்மையும் மக்களின் நடத்தை   மற்றும் சிந்தனையை பொறுத்தே அமையும் என்று கருதியவர் நேரு . வாக்கு போடுவது என்பதுடன் மக்களை நிறுத்தாது அவர்களுடன் ஜனநாயகத்தை நெருக்கமாக்க சிந்தித்தவர்- செயலாற்றியவர் நேரு. ஜனநாயகத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியுடன் கூடவே வளர்வது- இரண்டறக் கலந்தது என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. வறுமையும் கல்வியறிவின்மையும் நிறைந்த நாட்டில் வாக்களிக்க வரும் மக்கள் புரிந்து வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு கற்றுத்தரு