Skip to main content

Posts

Showing posts from July, 2020

சிந்தனையாளர் கோவை ஞானி

சிந்தனையாளர் கோவை ஞானி ஜூலை 22 2020 அன்று மறைந்தார். அவருடன் சில ஆண்டுகளே ’நீடித்த’ தொடர் பழக்கத்தில் இருந்தேன். அவர் இல்லம் சென்று நடத்திய உரையாடல் கூட மிகக்குறைவே. தொலைபேசி உரையாடல் பல நாட்கள் நடந்தது. அவர் நடத்திய நிகழ், தமிழ்நேயம் இதழ்களுக்கு கட்டுரை எழுத என்ணை தூண்டியவர் தோழர் ஞானி. பின்தொடரும் நிழல் குறித்த என் கட்டுரையை காலச்சுவடு திருப்பி அனுப்பியது அறிந்து அதை வாங்கி பிரசுரித்தார். தோழர் கோவை ஞானிக்கான சிறப்பிதழ் ஒன்றுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் கேட்ட அடிப்படையில் எழுதிக் கொடுத்த கட்டுரை இங்கு இணைப்பில் தரப்பட்டுள்ளது. NCBH வெளியீடான மார்க்சியத் தடங்கள் 2006 பதிப்பில் இக்கட்டுரையும் இடம் பெற்றது. https://drive.google.com/file/d/17qhdCgoQZ9kFusUyEjb9GfXTPr4o48Hg/view?usp=sharing

பயணிகள் இரயில் போக்குவரத்தில் தனியார்

            பயணிகள் இரயில் போக்குவரத்தில் தனியார் -           ஆர். பட்டாபிராமன் இந்திய இரயில்வே உலகின் பெரும் கட்டமைப்புகளில் ஒன்று . இந்திய பொருளாதாரத்தின் ஆதாரபூர்வ சக்தியாகவும் விளங்கிவரும் துறை . தொழில்வளர்ச்சிக்கு அதன் பங்கு மகத்தானது . குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணத்திற்கும் - நீண்டு விரிந்த இந்தியாவின் சரக்கு போக்குவரத்திற்கும் அதன் பங்களிப்பை எவரும் அறிவர் .   பா ஜ க மோடி சர்க்கார் பதவியேற்றவுடன் தனியாக இருந்த ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது . அதன் பட்ஜெட் மான்ய கோரிக்கைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது . இரயில்வேயில் பென்ஷன் மற்றும் ஓய்வுக்கால பலன்களுக்கு மட்டுமே 57000 கோடி தேவைப்படுகிறது . அதன் எரிசக்தி - எரிபொருள் கணக்கு 31000 கோடியாக இருக்கிறது . அதன் மராமத்து செலவிற்கே 50000 கோடி தேவை . சரக்கு போக்குவரத்தில் 1.22 லட்சம் கோடியும் , பயணிகள் போக்குவரத்தில் 51000 கோடியும் வருவாய் வருகிறது. இவையெல்லாம் அதன் பிரம்மாண்டத்தை காட்டுவதற்காகவே இங்கு சொல்லப்படுகிறது . இப்படி பெரும் வாழ்வாதாரத்தை க