https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, April 25, 2023

post 2017 BSNL Pensioners

 2017க்கு பின்னர் பி எஸ் என் எல்  பொதுத்துறையில் 37 ஏ வழியில் ஓய்வு பெறக்கூடியவர்களுக்காக பல விஷயங்களை நான் முன்னரே  எழுதியுள்ளேன். இந்த வரிசையில் 6 அசோசியேஷன்கள் வெளியிட்ட 7வது மத்திய ஊதியக்குழு பிட்மெண்ட்  ஏன் சாத்தியமாகாது என்பதை சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்கள் மூலம் விளக்கியிருந்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதில் இருக்கும் வரலாற்றுப் பகுதியை விட்டுவிட்டு, மிக முக்கியமான கேள்விப்பகுதியை மட்டும் இங்கு தமிழில் தர முயற்சித்துள்ளேன். ஆங்கிலத்தை வாசிக்க முடியாத தோழர்களுக்கு சற்று விவரத்தை இது தரக்கூடும்.


1. பி எஸ் என் எல் பொதுத்துறைக்கு அரசாங்க பென்ஷனுடன் உள் நுழைந்தவர்க்கு பென்ஷன் ரிவிஷனுக்கு என ஏதாவது வழிகாட்டல் அல்லது விதிகள் இருக்கின்றனவா?


அப்படி ஏதும் இதுவரை இல்லை.


2. 2017க்கு முந்தி ஓய்வு பெற்றவரின் பென்ஷன் ரிவிஷன் 2017க்கு பின்னர் பெற்றவர்க்கு என்ன தாக்கத்தை தரும் என்பதை பார்க்காமல் புறக்கணிக்கமுடியுமா?


முடியாது. குறிப்பிட்ட 1-1-2017 அன்று என தேதியை வைத்துக்கொண்டு பரஸ்பரத் தொடர்பு கொண்ட 37 ஏ கிளாஸ் வகைப்பட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர்களை பிரிக்க முடியாது.


3. 2017க்கு முந்தியவர்க்கு பென்ஷன் ரிவிஷன் 1-1-2017 முதல் என்றால், 2017க்கு பிந்தியவர்க்கு தரவேண்டிய பலனுக்கு வேறு ஒரு தேதி என ஒத்திப்போடமுடியுமா?


முடியாது. இரு சாராருக்கும் ஒரே தேதியான 1-1-2017 முதல்தான் பலனைத் தரமுடியும்.


4. 2017க்கு பிந்தியவர் அந்த 1-1-2017 அன்று ஊழியர் தானே- அப்போது பென்ஷன் திருத்தம் என்பது பொருந்துமா?


2017க்கு பிந்திய அனைவரும் அந்த 1-1-2017ல் ஊழியர்களாக இருப்பர். எனவே அந்த தேதியில் அவர்களுக்கு  Pay  என்கிற ஊதியத்தில் மாற்றம் கொண்டுவந்துதான் அவர்களுக்கான பலனைத் தரமுடியும்.  இரண்டாவது ஊதியக் கமிட்டி  PRC  அடிப்படையில் இவர்கள் பென்ஷன் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை 1-1-2017 அன்று ஊதிய மாற்றம் செய்து அவர்கள் ஓய்வு பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட பென்ஷனை மாற்றி உயர்த்தி தரவேண்டும்.


5. 2017க்கு பிந்தியவர் 7 வது மத்திய ஊதியக்குழு அடிப்படையில் பிட்மெண்ட் பெற முடியாதா?


ஆமாம் - முடியாது. அவர்கள் 1-1-2017ல் ஊழியர்கள்- அவர்கள் பொதுத்துறை ஊதிய நிலையில் இருப்பர். அதை அடுத்த மூன்றாவது ஊதியக்கமிட்டி ஊதிய நிலையில் வைத்து தான் அவர்களுக்கான புதிய ஊதியத்தை அதன் மூலம் புதிய பென்ஷனை தரமுடியும்.


6.  DOT  இந்த 2017க்கு பிந்தியவர்களுக்கு என்ன சொல்கிறது? ஊதிய மாற்றம் இல்லாமல் எப்படி செய்வதாகச் சொல்கிறது?


ஊதிய மாற்றம் வந்து அத்துடன் பென்ஷன் ரிவிஷன் வந்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. டி ஒ டி ஊதிய மாற்றமில்லாமலேயே பென்ஷன் ரிவிஷன் என ஏற்றுள்ளது. அதற்கு அது வசதியாகவும் இருக்கிறது. 1-1-2017ல் அந்த ஊழியர்  இருக்கும் அடிப்படை ஊதியத்தில் கிராக்கிப்படி 119.5 சதம் இணைத்து   ஜீரோ சதம் பிட்மெண்ட் என டி ஓ டி சொன்னது. அனைவரும் அதை ஏற்காத நிலையில் 5 சதமோ 10 சதமோ எதை நிதி அமைச்சகம் ஏற்கிறதோ அதை காபினட் ஒப்புதல் பெற்று அவர்கள் தரலாம். இந்த 1-1-2017ல் புதிதாக நிர்ணயிக்கப்படும் ஊதியமும்  3வது ஊதியக் கமிட்டி ஊதிய நிலையும் நோஷனலாக அந்த ஊழியர் ஓய்வு பெரும் வரை வந்து அதில் அவர் பென்ஷன் நிர்ணயிக்கப்படும். அவர் பென்ஷனராக ஆகும் காலத்தில் பி எஸ் என் எல் தந்துகொண்டிருக்கும் இரண்டாவது ஊதியக் கமிட்டி ஊதியம்- ஊதிய நிலையில்-  last pay drawnல் நிர்ணயிக்காமல் புதிய நோஷனல் ஊதியத்தில் அவர் பென்ஷன் நிர்ணயமாகும் . முன்பு அவ்வாறு நிர்ணயித்து இருந்தால் புதிய ஊதியப்படி அது மாற்றி உயர்த்தப்படும்.


7. இதனால் 2017க்கு பிந்தியவர்க்கு நட்டம் உண்டாகுமா?


அசோசியேஷன் கேட்டது தான் நட்டத்தை தரும். டி ஓ டி சரியான முறையைத்தான் தந்துள்ளது இதனால் அந்த ஊழியர்கள் தங்கள் புது ஊதியத்தில் இன்க்ரிமெண்ட்களைப் பெற்று கூடுதல் பென்ஷன் பலனைப் பெறுவர்.


8. ஊதிய மாற்றமில்லாமல் இப்படி நோஷனாலாக பென்ஷன் நிர்ணயிப்பதால் பாதிப்பு உண்டா?


ஊதிய மாற்றம் வந்திருந்தால் 1-1-2017ல் பெற்ற பலனை அவர்கள் பெற்றிருப்பர். அரசாங்கம் அப்பலன்களுக்கு  actual date  அமுலாக்க தேதி கொடுப்பதிலிருந்து கிடைத்திருக்கும். இப்போது பி எஸ் என் எல் இவர்கள் ஓய்வு பெறும்வரை, ஊதிய மாற்றம் இன்மையால், எந்த புதிய ஊதியத்தையோ புதிய ஊதிய நிலையயோ தரவேண்டியிருக்காது. ஓய்வு பெற்ற மறுநாளில் நோஷனல் பலன்கள் - 1-1-17லிருந்து கிடைக்கப்பெற்ற பலன்கள் பென்ஷன் நிர்ணயத்தில்தான் தன் வெளிச்சத்தைக் காணும். அதுவரை அது உறங்கும். டி ஓ டி ஆல் உறைய வைக்கப்பட்டிருக்கும்.


உதாரணமாக ஒருவர் 2016 டிசம்பரில் ஓய்வு பெறுகிறார் என்றால், அவர் ஒரு நாள் கூட இந்த 10 ஆண்டில் புதிய ஊதிய பலன்களை பெற்றிருக்க மாட்டார். 10 ஆண்டுகள் கழித்து ஓய்வு பெறும் 1-1-2027ல் தான் அவருக்கான பலன்கள் பென்ஷன் நிர்ணயம் மூலம் வெளிச்சமாகும். இது மிக அநீதியாகும். இந்த அநீதி ஊதிய மாற்றம் இல்லாமல் பென்ஷன் மாற்றம் என வருவதால் உருவாக்கப்படும் அநீதி.


 போஸ்ட் 2017 தோழர்களும் புதிய வகைப்பட்ட பென்ஷன் நிர்ணய பலனை அடையவேண்டும் என்பதற்கு டி ஒ டி கண்டெடுத்த  possible shortest route  தான் இந்த நோஷனல் பென்ஷன் நிர்ணயம் என்பதாகும். இதற்கும் 37 ஏ வில் திருத்தம் வேண்டும். 


எனவே  போஸ்ட் 2017 தோழர்களிடம் சரியான புரிதல் இருந்தால், நிரந்தர தீர்வு என்ற பெயரில் 7வது மத்திய ஊதியக்குழு பிட்மெண்ட் கதையாடலை எவரும் இன்றுள்ள சூழலில் நடத்த முடியாது. போஸ்ட் 2017 தோழர்கள் அமைதியாக, அல்லது நமக்கென்ன என அறியாமையில் உழன்றால் தொடர்ந்து அந்த பேச்சு ஊர்வலம் வரும்.


25-4-2023  13 hrs   ஆர். பட்டாபிராமன்

Wednesday, April 19, 2023

Six Associations and seventh CPC Fitment

 

Six Associations and seventh CPC Fitment

(An Appeal to BSNL Post 2017 Pensioners and For the consideration of Pre 2017 Pensioners)

I happened to go thro a letter addressed on 17th April, 2023 by a Committee of 6 Associations, and that caused me to write this appeal. This one is for the consideration of Pre 2017 pensioners and requesting Post 2017 pensioners to understand the following for their benefit.  A recap of history with some relevant questions is given below.

It seems to me the Committee is seriously straining to settle the issue on 7th CPC fitment and it is attributing that as reason for permanent solution of future pension revisions also.

History

There is no ‘Central Commission’ having nomenclature with the wordings either ‘pension’ or ‘pension revision’. It is only ‘Central Pay Commission’ and as per the terms of ref for CG Employees and Pensioners they are getting the recommendations of the same CPC on Govt order. On a particular date as recommended by CPC ( say 7th CPC  w.e.f  1-1-2016) CG employees getting their pay revision, CG pensioners on that date getting pension revision on the concept of modified pay parity .

We were all in that category upto 5th CPC. On 1-10-2000 Govt made a break and we were all absorbed in BSNL as per newly created ‘37 A rules’ , amended in the ‘Pension Rules’ specially for this kind of conversion to PSUs. This one was done only after a great battle of employees and fine wisdom of com  OP Gupta who led that struggle.

The break from CG employees and becoming BSNL absorbed employees were compensated by agreeing to give Govt pension from the Govt budget allocation with the Govt pension formula. This clause was peculiar to BSNL alone thereafter extended to MTNL by 2014, now offered to Ordinance factory employees.

The role played by com Gupta in getting the relevant interpretation to Sub Rule 8 was commendable. That was only helping us to get 6th and 7th CPC changes pertaining to pension, gratuity, commutation, qualifying service, emoluments. In that formula CPC fitment for fixation of pension is not coming. 37 A is only for fixing pension related issues. If coming under applicability, then date of effect is the same that of CPC ( say 7th CPC w.e.f 1-1-2016) - and if incorporated then date of effect from the PRC ( say 3rd PRC w.e.f 1-1-2017) .

When we got our pay revision again within 4 years after 5 th CPC and fixing ourselves with first PRC scales in oct 2000, there was no question of any parity felt by our employees till the date of 30-9-2000, as we were separated from CG Employees class. I stop the old history here.

Now some relevant questions to understand  ‘Pension Revision’ in today’s context .

 

Is there any recommendations/ Rules for Pension Revision for those absorbed in BSNL?

A grand ‘NO’ is the answer.

Can Pension Revision  be considered  for Pre 2017 pensioners without taking the implications of Post 2017 Pensioners?

 NO. On a particular date( say 1-1-2017) they cannot be delinked as per  Nakara 1982 case. There is interconnectivity

Can there be any other date of effect for post 2017 other than 1-1-2017?

No it cannot be. They will also get the same date of effect only ( that is 1-1-2017)

How the post 2017 pensions get their benefit if we demanded 7 th CPC?

No. It is not possible as the 7th CPC fitment and scales are not compatible with the PSU employees. They were in the second PRC scales on that date( 1-1-2017). They can be shifted to  3rd PRC scales only

Whether post 2017 employees pension (based on 2nd PRC) can be modified without changing their pay on 1-1-2017?

No, not possible. If they need to get the 2nd PRC fixed pension changed, they need ‘pay change’ on 1-1-2017 thro 3rd PRC scales.

How can a pay change possible without any pay revision for post 2017 pensioners?

This was the botheration of DOT and DOT accepted the demand of delinking pension revision from Pay Revision as it suits DOT better. The Associations were detailed about the fixation method for Pension revision by PPT on Oct 17th. The issue was zero percent fitment. It seems that DOT has taken 3rd PRC IDA merger points, Executive Scales and obtained NE scales from BSNL and calculated the estimated expenditure.

What is the present proposal of DOT for post 2017?

On 1-1-2017 the benefits will be given and that  new pay will travel notionally ( parallel with BSNL 2nd PRC)  taking all the relevant increments on its way without any loss and will land on the person retiring on his date of retirement ( any date in post 2017) to fix his Pension. The last pay drawn travelled in BSNL 2nd pRC will become silent on that day, and this notional pay travelled all along will get its light and so Pension fixation on notional pay. For this they need amendment in 37 A.

I hope that I have narrated the issue as per my understanding and I do not say so ‘just because DOT is refusing 7th CPC’, but because of the concern about  interconnectivity and inter relatedness of all those   absorbed in BSNL through 37 A.

It is upto Post 2017 employees/pensioners to understand the issue with the help of pre 2017 pensioners and bring appropriate changes in their adopted resolutions of their respective (six) associations and I hope all can travel together to get some fair pension revision to the extent possible on improving the track travelled by DOT for both Pre and Post 2017. Best wishes to all.

11 hrs 19-4-2023   - R. Pattabiraman

 

 

Tuesday, April 11, 2023

வல்லப்பாய் பட்டேல்

                            வல்லப்பாய் பட்டேல்

Builders of Modern India வரிசையில் வல்லப்பாய் பட்டேல் குறித்த ஆங்கில புத்தகம் 1985ல் வந்தது. நவபாரதச் சிற்பிகள் வரிசையில் சர்தார் வல்லப்பாய் பட்டேல் தமிழில் 2017ல் வந்தது. ஆங்கிலத்தில் ஆசிரியர் ஜே பட்டேல். தமிழில் எஸ் கணேசன் மொழிபெயர்த்துள்ளார்.


பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிட்டுள்ள அளவில் சிறிய 195 பக்கங்களைக்கொண்ட புத்தகம்தான். சர்தார் குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தியும் எழுதியிருக்கிறார். இந்த ஜே பட்டேல் புத்தகம் சர்தார் அவர்களின் முழு வாழ்க்கையை பேசுகிற ஒன்றல்ல. குறுக்குவெட்டு தோற்றம் என்பார்களே அப்படி கட்டமைக்கப்பட்ட பிரதி. பெரும் துதியெல்லாம் இருக்காது. ஆனால் அவரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஆக்கம் எனலாம்.

லண்டன் படிப்பிருந்தும், சட்ட அறிவிருந்தும், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருந்தும் அவர் எப்படி எளிமையான வாழ்வை, சொல்லாடலை, கிராம விவசாயி நோக்கை, உறுதியான ஸ்தாபன கோட்பாடுகளை, காந்தியுடன் விவாதத்துடன் கூடிய சீடன் என்கிற வெளிப்பாட்டை, விடுதலைப்போரை சக விவசாயிகளின் போருடன் இணைத்து நடத்திய பாங்கை, பிரிட்டிஷாருடன் யதார்த்தம் சார்ந்த உரையாடல்களை, விடுதலைக்குப் பின்னர் மேனன் போன்றவர் உதவியுடன் அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்றினைத்த பெரும் இந்திய உருவாக்கத்தை செய்த மனிதர், தலைவர் என்ற காட்சியை இந்தப் புத்தகம் தந்துவிடும்.

சர்தார் தனது நடவடிக்கைகளில் ஒளிவு மறைவற்ற நேர்மையை அனுசரித்தார் என்பதுடன், இரட்டை நிலை எடுப்பவர்களின் முகத்திற்கு முன்னர் தாட்சண்யமின்றி விமர்சித்து விடுவார் என்பதும் இந்த ஆக்கத்தில் உணர்த்தப்பட்டுள்ளது. இதனால் கசப்பான உறவுகளை அவர் கடக்க வேண்டியிருந்தது. நமது திசைகள் எதுவானாலும் நாம் யதார்த்தமாக இருப்போம் என்றார் சர்தார்.

தனது மகன் தன் பெயரை ஒருமுறை misuse செய்தார் என அறிந்து இறுதிவரை அவரது வீட்டிற்கு பட்டேல் செல்லவில்லை என அறிகிறோம்.

பள்ளி வாழ்க்கையிலிருந்தே கனவுகளால் பறக்காமல், பூமியின் அடிகளில் நடைமுறை சார்ந்து வாழ்ந்தவர் சர்தார் என்ற சித்திரம் இதில் கிடைக்கும். அவரின் விரைப்பான புறத்தோற்றம் நட்பு வட்டத்தை சற்று தள்ளி வைத்தாலும், நெருங்கியவர்களால் அவரின் ஈரக்கசிவை எப்போதும் உணரமுடிந்துள்ளது. காந்தி, சர்தார், மகாதேவ தேசாய் கூட்டான சிறை அனுபவ செய்திகள் , இந்த கரடுமுரடான மனிதன் எவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் இருந்துள்ளார் என்பதை உணரவைக்கும். காந்திக்கு தன்னை முழுமையாக ஒப்புகொடுத்து பணிவிடை செய்துள்ளார் என்பதைக் காட்டும். அவர் காந்தியை விட 6 வயதுதான் சிறியவர் என்பதை சேர்த்துப்பார்த்தால் இந்த அர்ப்பணிப்பை புரிந்துகொள்ள முடியும்.

பர்தோலி விவசாயிகளின் தோழனாக அவர் எடுத்த முயற்சிகள்தான் அவரை அவர்கள் அன்புடன் சர்தார் என அழைக்க வைத்தன. அவர் எளிய விளக்கங்களை தந்து தன் கிராம மக்களை திரட்டுவாராம். பிரிட்டிஷ்க்கு அஞ்சாமை குறித்து அவர் இப்படி ஒப்புமைக் காட்டி பேசினாராம். உள்ளூர் பேச்சு வழக்கில் ஆங்கிலம் கலக்காமல் பேசுவாராம்.

’மட்பாண்டத்தை உடைக்க சிறு துண்டு போதும். சிறு துண்டு பானையை பார்த்து அஞ்சலாமா’

”காளை மாடுகள் மோட்டார் வாகனத்தை கண்டு மிரள்வது போல பிரிட்டிஷார் குறித்து ஏன் பயப்படுகிறீர்கள்

இறந்து போகாமல் நம்மில் யாராவது சொர்க்கம் போகமுடியுமா..சுதந்திரத்திற்கு போராடாமல் தியாகம் செய்யாமல் பெறமுடியுமா”

”உடல் அளவில் நோஞ்சான் ஆகத் தெரிந்தாலும் நீங்கள் எல்லாம் மனதளவில் பாயும் புலிகள்” என்பாராம்.

 

ஒருமுறை ஜப்திக்கு அதிகாரிகள் வருகிறார்கள் என அறிந்த கிராம மக்கள் ஆடு, மாடுகளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வெளியே போராடிக்கொண்டிருந்தனராம். செய்தி அறிந்து வந்த சர்தார் எருமை மாடுகளை உள்ளே பூட்டி வைத்துவெள்ளைக்கார பெண்களைப்’ போல் ஆக்கப்போகிறீர்களா எனக்கேட்டு நிலைமையின் பதட்டத்தை தன் பேச்சால் தணித்தாராம்.

வரிகொடா இயக்கம் குறித்த பாராட்டுகள் வந்தபோது பட்டேல் அடக்கமாக இவ்வாறு பேசினாராம்

”இந்தியாவில் தெய்வங்களும் மகாத்மாக்களும் படையல்களை எடுத்துக்கொள்வதில்லை. மக்களிடம் அவை வந்து வினியோகிக்கப்பட்டுவிடும். காந்தியும் எல்லாவற்றையும் நமக்கு கொடுத்துவிட்டார் .”

வத்வான் எனும் பகுதியில் அரசியல் மாநாடு நடந்தது. ஹரிஜனங்களுக்கு தனியிடம் வைக்கப்பட்டதைப் பார்த்த சர்தார், ஏதும் ஏற்பாட்டாளர்களிடம் பேசாமல், அந்தப் பகுதியில் அத்தோழர்களுடன் போய் அமர்ந்தார். அவரை அடுத்து தர்பார் சாஹேப், பக்தி லஷ்மி அங்கு வந்து அமர்ந்தனராம். பின் அனைவரும் ஒன்றாகி மாநாடு நடைபெற வேண்டிய அவசியத்தை தனது செயல்மூலம் அவர் எடுத்துரைத்ததைக் காண்கிறோம்.

சர்தாரின் மூத்தவர் வித்தல்பாய் . சில முரண்கள், அரசியலிலும் கூட வந்தது. சர்தார் குடல் உபாதையால் கழிப்பறை சென்றால் திரும்ப நேரம் பிடிக்கும். வித்தல் ஒரு முறை கதவை தாளிட்டு விட்டார். கழிப்பறையிலிருந்து கூட மீளமுடியாத இவரெல்லாம் உங்கள்தலைவர் என அண்ணன் தம்பி படேலை கிண்டல் செய்தார். பொது இடத்தில் அண்ணனுக்கு கண்ணியக்குறைவு ஏற்படுத்தாமல் ஏதும் நடவாதது போல் பட்டேல் அடுத்த வேலையில் கவனம் குவித்தார்.அவரின் பொறுமை இப்படி பல இடங்களில் அவருக்கு துணை நின்றதாம்.

 

1924 ல் போர்சாட் எனும் பகுதியில் கொள்ளைக்காரர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் ஊர் மக்கள் தற்காத்துக்கொள்ளவும், முடிந்தவரை கொள்ளையர் கிராமத்திற்கே அஞ்சாமல் சென்று அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்கவும் அம்மக்களுக்கு ஆலோசனைகளை சர்தார் தந்து அவை பலனும் கொடுத்த செய்தியை இந்தப் புத்தகம் நமக்குத்தரும்.

அவர் பொறுப்பில் காங்கிரஸ் மாநாடு என்றால் அதை எவ்வளவு நேர்த்தியாகவும் சிக்கனமாகவும் ஆற்றல் கொண்ட பலரை ஒருங்கிணைத்து நடத்துபவராகவும் சர்தார் இருந்தார் என்பதை ஐ ஜே பட்டேல் காட்டியுள்ளார். மணலில் அமர்பவர் செருப்புகளை எங்கு வைப்பது என்ற கேள்விக்கு கூட பதில் அறிந்து தனிப்பை ஒன்றை ஒவ்வொருவருக்கும் அதற்கென கொடுத்தாராம்.

நிவாரணப்பணிகள் என்றால் அதில் அவரின் திட்டமிடலும் முடுக்கிவிடலும் அபாரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவர் தந்தார். தலைவர்களுக்கு பஞ்சமிருக்காது. விசுவாசமான தொண்டர்களின் தட்டுப்பாட்டை போக்கிவிட்டால் எல்லாம் சிறப்பாகுமென்பாராம்.

இடதுசாரிகளுடன் அவருக்கு அவ்வப்போது முரண்கள் ஏற்பட்டது. அவர்களிடமும் அவர்இன்று என்ன’ என்ற நடைமுறை சார்ந்த பேச்சை எதிர்பார்த்தார்.

’புரட்சி முழக்கங்களை எழுப்புவோர் முதலில் புரட்சியை கொண்டுவாருங்கள். இல்லாத ஒன்றை எழுப்பிக்கொண்டிருக்காதீர்கள்’ என கடிந்தார். சொந்த வாழ்வில் மாற்றத்தைக்கொணர முடியாத நாம் புரட்சி முழக்கம் எழுப்புவதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி அவரிடம் இருந்தது.

”பொதுவுடைமைவாதிகளிடம் மோதலில் நான் இறங்க விரும்பவில்லை. எதிர்கால நிர்வாகமுறை, எதிர்கால சமூக அமைப்பு குறித்த சர்ச்சையில் இறங்குவது மூலம், இன்றைய நாளுக்கான எனது பணிகளை நான் ஒத்தி வைக்க விரும்பவில்லை. இன்றுள்ள பணிகளைச் செய்தால், நாளைக்கான கேள்விக்கு தீர்வு வரும்” என அவர் பேசியதைப் பார்க்கிறோம்.

 

”பொதுவுடமைவாதிகள் காங்கிரசில் பணியாற்றும் தன்மை மீது தான் எனக்கு வெறுப்பு. அதை நான் மூடி மறைப்பதில்லை” எனவும் அவரது கருத்தை அவர் பகிரங்கப்படுத்தினார்.

தண்டி யாத்திரை நேரத்தில் சர்தாரும் சிறையில் வைக்கப்பட்டார். ஒரே பார்வையாளர் அனுமதி என்ற வகையில் மகாதேவ தேசாய் சிறையில் பார்க்கப் போகிறார். எப்படி நடத்துகின்றனர் என தேசாய் கேட்டார்.

கொள்ளைக்காரனையும் திருடனையும் போல் நடத்துகிறார்கள். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் என பட்டேல் பதில் தந்தார். போர்வை தந்தனர். உணவா ..நாம் என்ன இன்பமாக இருக்கவா சிறைக்கு வந்துள்ளோம் என்றார். காற்றை உட்கொண்டு வாழப்பழகுவேன் எனச் சொல்லி சிரிக்கிறார்.

அவருக்கு சிறையில் கஷ்டம் என்றால் கழிப்பறைதான். வந்த சில நாட்களுக்கு கழிப்பறை போகமலேயே தாக்குப்பிடித்து பின்னர் பழகிக்கொண்டுள்ளார்.

1931 கராச்சி மாநாடு. பகத்சிங் தோழர்கள் தூக்கில் ஏற்றப்பட்ட நேரம். காந்திக்கும் பட்டேலுக்கும் இளம் தோழர்கள் கருப்புக்கொடி காட்டுகின்றனர். தலைமை பட்டேல். ”காந்திக்கு 63 வயது எனக்கு 56. வயதான நாங்கள்தான் விடுதலையைக் காண இளைஞர்களைவிட அவசரப்படவேண்டும். விவசாயம் பற்றிப் பேசுகிறீர்கள். விவசாயிகளிடம் வேலை செய்ய எந்த இளம் தோழருடனும் நான் போட்டியிடத் தயார்” என சர்தார் தனது உறுதிப்பாட்டைக் காண்பித்ததை அறிகிறோம்.

வாய்ப்புள்ளவர் இந்த எளிய புத்தகத்தை வாசித்துப் பார்க்கலாம்.

10-4-2023

 

 

 

 

 

Monday, April 3, 2023

ஒளரங்கசீப்

 ஒளரங்கசீப் 

Audrey Truschke எழுதிய Aurangzeb The Man and the Myth 2018ல் வெளிவந்த புத்தகம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கிழக்கு பதிப்பகத்தால் ஒளரங்கசீப் என்ற பெயரில் ஜன 2022ல் வெளியானது. ஜனனி ரமேஷ் நேர்த்தியாக ஆட்ரே ட்ரஷ்கே ஆக்கத்தை தமிழில் தந்துள்ளார்.



வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் லகுவாக இந்த 157 பக்கங்களையும் படித்துவிட முடியும். ஒளரங்க சீப் குறித்து பாரபட்சமில்லாமல், இருக்கிற, கிடைக்கிற ஆவணங்களிலிருந்து தேடி இந்த பிரதியை ட்ரஷ்கே தந்துள்ளார். எண்ணற்ற கதைகளை கற்பனைகளை தள்ளி வைத்து அவர் ஆளும் காலச்சூழலின் பேரரசன்- மனிதன் என அவரை மீட்க முயற்சித்துள்ளதாக ஆசிரியர் சொல்கிறார். படிக்கிறவர்களும் இதை ஏற்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஒளரங்கசீப் 1618ல் பிறந்து 1707 ல் மரணமுற்றவர். அந்நியனாக வந்தேன்- அந்நியனாக விடைபெறுகிறேன் என அவரின் சாவுத் தருணத்தில் அவர் எழுதினாராம்.

ஒளரங்கசீப் என்றாலே இஸ்லாமிய வெறியர், இந்துக்களை ஒடுக்கியவர் என்ற செய்தி உறைய வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்நாட்டின் வரலாற்று நினைவுகளிலிருந்து துடைத்தெறியப்படவேண்டும் என்ற இன்றைய அரசியல் பார்வை செயல்பட்டுவருவதைக் காண்கிறோம். இந்த புத்தகம் இவற்றிற்கெல்லாம் விடையைத்தேடி, மனம் உள்ளவர்களை சற்று நிதானப்படுத்தும்.

ஒளரங்கசீப் கோயில்களை இடித்தார் என்ற செய்தியை ஆதாரமாக்கினால், அவர் கோயில்களை காக்க, மான்யம் வழங்க, நிலம் கொடுக்க உத்தரவிட்டார் என்பதையும் சேர்த்து ஏன் சொல்வதில்லை என ஆசிரியர் வினவுகிறார்.

அவர் ஹோலியை மட்டும் தடை செய்தது போல் காட்டுபவர்கள், மொகரம் -ஈத் அனுசரிப்புகளுக்கும் கூட தடை போட்டார் என்பதை சொல்வதில்லை. அவரை வெறும் மத காழ்ப்புணர்ச்சியில் மட்டும், மதமோதல்களுக்கு காரணமானவர் என்று காட்டப்படும் பார்வை பிழையை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிலைமைகளை வைத்தே வரலாற்று பார்வைகொண்டவர்கள் புரிந்து வெளிக்கொணரவேண்டும் என்பதே ட் ரஷ்கே விழைவு . சமகால தரக்கட்டுப்படுகள் மீது அவரை ஏற்றி புரிந்துகொள்ள முடியுமா?

ஒளரங்கசீப் ஒரு முஸ்லீம்.. மதப்பற்றாளர். ஆனால் அவரது ஆட்சி வரலாறு முழுதுமே மதம்சார்ந்த ஒன்றாக விளங்கிக்கொள்ளக்கூடாது என்பதை ஆசிரியர் பல்வேறு தரவுகளிலிருந்து நிறுவுகிறார். அவர் பேசிய ஒழுக்கமுறை, ஆட்சி முறை, அறவுணர்வு எல்லாம் கூட இருக்கின்றன. அவர் தந்தையை சிறைவைத்தது, கூடப்பிறந்தவர்களை சாய்த்தது- ஆட்சி அதிகாரத்தில் 49 ஆண்டுகள் இருந்தது எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை. அதே போல் இந்துக்கள் மீது கொடுமைகள் என்ற செய்தியுடன், அவர் பல நேரங்களில் சகிப்புத்தன்மை, பாதுகாப்பு என்பதற்கும் முன்னுரிமை தந்தவர் என்ற செய்திகளும் இருக்கின்றன.

அவரது பிறப்பு வளர்ப்பு இளவரசன் வாழ்க்கை போர்கள் , காதல் தருணங்கள், முடிசூடிக்கொள்தல் என சிறு அளவில் காட்சிகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. சிம்மாசனமா கல்லறையா என்கிற முழக்கம் இவரது வாழ்விலும் துரத்தாமல் இல்லை.

முன்னதாக வந்த ஜாதுநாத் சர்க்காரின் Anecdotes of Aurangzeb நூலில் கிளுகிளுப்பான செய்திகளும் , தவறான தகவல்களும் இருப்பதாக ட் ரஷ்கே சொல்கிறார். ஆனாலும் ஜாதுநாத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் அவர் சொல்லாமலில்லை.

“ ஒளரங்கசீப் வரலாற்றை எளிதாக விளக்கமுடியாது..சாலை பாதுகாப்பு குறித்து கவலைப்படுவார். ஆனால் தந்தையை சிறையில், தாரா ஷுகோ உள்ளிட்டவரை கொன்று குவிக்கவோ, சம்பாஜி போன்ற எதிரிகளை உண்மையிலேயே துண்டாக்கி கூறுபோடவோ அவர் தயங்கியதில்லை.

தொழுகைக்கான தொப்பிகளை கைகளாலேயே தைத்து பக்திமானாகவே வாழ விரும்பினார். மோசமான நிர்வாகிகள், உருப்படாத மகன்கள், அழுகிய மாம்பழங்களால் கோபப்பட்டார். இசைக்கலைஞர் ஹீராபாயிடம் காதல்கொண்ட அவர், நடுவயதில் இசை விருப்பத்திலிருந்து விடுவித்துக்கொண்டார்..அவர் புதிராகவே இருந்தார்”

ஒளரங்கசீப் பாரசீக மொழியில் எழுதியவற்றில் 2000 கடிதங்கள் இப்போதும் கிடைத்துள்ளதாம்.

ட் ரஷ்கே தனது ஆய்வின் மூலம் வந்தடைந்த முக்கிய புள்ளி:

பாரசீகத்தை படிக்கும் திறன் இல்லாமல் ஒளரங்கசீப் வகுப்புவாதம் பற்றி குவிந்து கிடக்கும் படைப்புகளை சந்தேகத்தோடுதான் அணுகவேண்டியிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் டெலிகாம் உயர் அதிகாரி ஒருவரை தொழிற்சங்க வேலைக்காக சந்தித்தபோது அவர் சொன்ன வரி நினைவிற்கு வருகிறது. Half Knowledge is dangerous. இந்த வரி

வரலாற்று அறிவிற்கும் , வேறு எது குறித்த அறிவிற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

2-4-2023

ட் ரஷ்கேயின் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் 157 பக்கங்களைக்கொண்ட சிறு ஆக்கம்தான். வாய்ப்புள்ளவர் படிக்கமுடியும்.