Skip to main content

Posts

Showing posts from April, 2023

post 2017 BSNL Pensioners

 2017க்கு பின்னர் பி எஸ் என் எல்  பொதுத்துறையில் 37 ஏ வழியில் ஓய்வு பெறக்கூடியவர்களுக்காக பல விஷயங்களை நான் முன்னரே  எழுதியுள்ளேன். இந்த வரிசையில் 6 அசோசியேஷன்கள் வெளியிட்ட 7வது மத்திய ஊதியக்குழு பிட்மெண்ட்  ஏன் சாத்தியமாகாது என்பதை சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்கள் மூலம் விளக்கியிருந்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதில் இருக்கும் வரலாற்றுப் பகுதியை விட்டுவிட்டு, மிக முக்கியமான கேள்விப்பகுதியை மட்டும் இங்கு தமிழில் தர முயற்சித்துள்ளேன். ஆங்கிலத்தை வாசிக்க முடியாத தோழர்களுக்கு சற்று விவரத்தை இது தரக்கூடும். 1. பி எஸ் என் எல் பொதுத்துறைக்கு அரசாங்க பென்ஷனுடன் உள் நுழைந்தவர்க்கு பென்ஷன் ரிவிஷனுக்கு என ஏதாவது வழிகாட்டல் அல்லது விதிகள் இருக்கின்றனவா? அப்படி ஏதும் இதுவரை இல்லை. 2. 2017க்கு முந்தி ஓய்வு பெற்றவரின் பென்ஷன் ரிவிஷன் 2017க்கு பின்னர் பெற்றவர்க்கு என்ன தாக்கத்தை தரும் என்பதை பார்க்காமல் புறக்கணிக்கமுடியுமா? முடியாது. குறிப்பிட்ட 1-1-2017 அன்று என தேதியை வைத்துக்கொண்டு பரஸ்பரத் தொடர்பு கொண்ட 37 ஏ கிளாஸ் வகைப்பட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர்களை பிரிக்க முடியாது. 3. 2017க்கு முந்தி

Six Associations and seventh CPC Fitment

  Six Associations and seventh CPC Fitment (An Appeal to BSNL Post 2017 Pensioners and For the consideration of Pre 2017 Pensioners) I happened to go thro a letter addressed on 17th April, 2023 by a Committee of 6 Associations, and that caused me to write this appeal. This one is for the consideration of Pre 2017 pensioners and requesting Post 2017 pensioners to understand the following for their benefit.   A recap of history with some relevant questions is given below. It seems to me the Committee is seriously straining to settle the issue on 7th CPC fitment and it is attributing that as reason for permanent solution of future pension revisions also. History There is no ‘Central Commission’ having nomenclature with the wordings either ‘pension’ or ‘pension revision’. It is only ‘Central Pay Commission’ and as per the terms of ref for CG Employees and Pensioners they are getting the recommendations of the same CPC on Govt order. On a particular date as recommended by CPC ( sa

வல்லப்பாய் பட்டேல்

                            வல்லப்பாய் பட்டேல் Builders of Modern India வரிசையில் வல்லப்பாய் பட்டேல் குறித்த ஆங்கில புத்தகம் 1985 ல் வந்தது . நவபாரதச் சிற்பிகள் வரிசையில் சர்தார் வல்லப்பாய் பட்டேல் தமிழில் 2017 ல் வந்தது . ஆங்கிலத்தில் ஆசிரியர் ஐ ஜே பட்டேல் . தமிழில் எஸ் கணேசன் மொழிபெயர்த்துள்ளார் . பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிட்டுள்ள அளவில் சிறிய 195 பக்கங்களைக்கொண்ட புத்தகம்தான் . சர்தார் குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன . காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தியும் எழுதியிருக்கிறார் . இந்த ஐ ஜே பட்டேல் புத்தகம் சர்தார் அவர்களின் முழு வாழ்க்கையை பேசுகிற ஒன்றல்ல . குறுக்குவெட்டு தோற்றம் என்பார்களே அப்படி கட்டமைக்கப்பட்ட பிரதி . பெரும் துதியெல்லாம் இருக்காது . ஆனால் அவரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஆக்கம் எனலாம் . லண்டன் படிப்பிருந்தும், சட்ட அறிவிருந்தும், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருந்தும் அவர் எப்படி எளிமையான வாழ்வை , சொல்லாடலை , கிராம விவசாயி நோக்கை , உறுதியான ஸ்தாபன கோட்பாடுகளை , காந்தியுடன் விவாதத்துடன் கூடி

ஒளரங்கசீப்

 ஒளரங்கசீப்  Audrey Truschke எழுதிய Aurangzeb The Man and the Myth 2018ல் வெளிவந்த புத்தகம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கிழக்கு பதிப்பகத்தால் ஒளரங்கசீப் என்ற பெயரில் ஜன 2022ல் வெளியானது. ஜனனி ரமேஷ் நேர்த்தியாக ஆட்ரே ட்ரஷ்கே ஆக்கத்தை தமிழில் தந்துள்ளார். வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் லகுவாக இந்த 157 பக்கங்களையும் படித்துவிட முடியும். ஒளரங்க சீப் குறித்து பாரபட்சமில்லாமல், இருக்கிற, கிடைக்கிற ஆவணங்களிலிருந்து தேடி இந்த பிரதியை ட்ரஷ்கே தந்துள்ளார். எண்ணற்ற கதைகளை கற்பனைகளை தள்ளி வைத்து அவர் ஆளும் காலச்சூழலின் பேரரசன்- மனிதன் என அவரை மீட்க முயற்சித்துள்ளதாக ஆசிரியர் சொல்கிறார். படிக்கிறவர்களும் இதை ஏற்க முடியும் என்றே தோன்றுகிறது. ஒளரங்கசீப் 1618ல் பிறந்து 1707 ல் மரணமுற்றவர். அந்நியனாக வந்தேன்- அந்நியனாக விடைபெறுகிறேன் என அவரின் சாவுத் தருணத்தில் அவர் எழுதினாராம். ஒளரங்கசீப் என்றாலே இஸ்லாமிய வெறியர், இந்துக்களை ஒடுக்கியவர் என்ற செய்தி உறைய வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்நாட்டின் வரலாற்று நினைவுகளிலிருந்து துடைத்தெறியப்படவேண்டும் என்ற இன்றைய அரசியல் பார்வை செயல்பட்டுவருவதைக் காண்கிறோம். இந்த ப