https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, January 29, 2017

Gopalakrishna Gandhi Essay in Tamil

67 ஆண்டுகள்  கவனப்படுத்துக                       கோபாலகிருஷ்ண காந்தி
                                 (தமிழில்  ஹேமலதா பட்டாபிராமன்)
அன்புக்குரிய பிரதமர் அவர்களுக்கு
 குடியரசுதின நல்வாழ்த்துகள்! இந்தியகுடியரசு ஆன  அதே ஆண்டில் தங்கள் பிறப்பும்  நிகழ்ந்திருக்கிறது. குடியரசாகி 67 ஆண்டுகள். அதேபோல் தங்களுக்கும் 67 ஆண்டுகள். பிறப்பால் அரசியல் அமைப்புடன் பின்னிப்பிணைந்த உங்களுக்கு இன்னொரு உறவும் இருக்கிறது.. பிரதமராக பதவியேற்கும்பொழுது இறைவனின் பெயரால்- அரசியல் அமைப்பிற்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதற்கான உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். அந்த உயர்ந்த நிலையிலிருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை புனித புத்தகம் என கூறியுள்ளீர்கள். பிறப்பாலும், உறுதிமொழியாலும் இருவகையிலும் அரசியல் அமைப்பிற்கானவராகவே இருக்கிறீர்கள்.
உறுதிமொழி ஏற்று இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இந்நாளில் அந்தப் பிணைப்பிற்கான உங்கள் வினையை எப்படி எதிர்கொள்கிறீர்கள். இந்திய மக்களை கேளுங்கள்- நான் உண்மையானவனாக இருந்திருக்கிறேனா இல்லையா என்பதை அவர்கள் சொல்லுவார்கள் எனக்கூட தாங்கள் பதிலளிக்கலாம். நான் அவ்வாறு செய்யும்போது தங்களுக்கு பாராட்டுகள் பொழியக்கூடும். உங்களை புகழ்பவர்களிடமிருந்து மட்டுமல்லாது, தங்களை நடுநிலையுடன் விமர்சிப்பவர்களிடமிருந்தும் கூட அவ்வாறு வரலாம்.
தங்களின் வசிகரிக்கும் சக்தி 2014-17 ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டிருப்பதை யாரும் மறுக்கமுடியாது. மூன்று காரணங்களுக்காக அவை வளர்ந்து கொண்டே இருக்கின்றன. முதலாவது ஒரு முடிவெடுத்து அதை செயலாற்றுபவராக நீங்கள் உணரப்படுகிறீர்கள். இரண்டாவது ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் இருப்பதாக அறியப்படுகிறீர்கள். மூன்றாவது தங்கள் முன்னோடிகளைவிட பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் கடுமையான போக்கை கொண்டுள்ளீர்கள். நான்காவதாக ஒன்றையும் பாராட்டாக இல்லாவிட்டாலும்கூட சொல்லவேண்டியுள்ளது. மிகவும் புத்திசாலியாகவும் உழைப்பாளியாகவும் நம்பப்படுகிறீர்கள். பணமதிப்பு பற்றிய அறிக்கையை ’இன்று இரவிலிருந்து’ என நீங்கள் அறிவித்தபோது மறுநாள் காலைமுதல் ஏ டி எம் வரிசையில் நின்றவர்களால் இத்தேசத்திற்கு பெரும் நன்மை செய்பவராகவே பேசப்பட்ட்டீர்கள்

முக்கிய கேள்வி
மூன்றிலும் அதாவது உறுதியான முடிவு , ஊழல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் கடுமை என்பனவற்றில் தாங்கள் ஏற்ற அரசியல் அமைப்பு உறுதிமொழியின்படி சாதிக்க முடிந்ததா?  இன்று குடியரசு தினத்தில் இக்கேள்வியை  எதிரொலிப்பது அவசியமானதாக உள்ளது
பிரதமர் இந்திரா அம்மையார் உறுதியான முடிவை எடுத்தவர். மற்ற காலங்களைவிட 1975-77 காலத்தில் அவரின் வழக்கமாக எடுக்கும் முடிவுகளையும் தாண்டி மிகவும் கடுமையான முடிவுகளை எடுத்தார். அவரால் குற்றவாளிகளாக கருப்புபணமுதலைகளாக பதுக்கல்காரர்களாக ஊழல்வாதிகளாக சித்தரிக்கப்பட்டவர்களை அவசர சட்டக் காலத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். பயங்கரவாதம் என நாம் இன்று அறிவது அக்கட்டத்தில் இல்லாமல் போனது .ஆனால் இந்திரா அம்மையார் தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு உண்மையாக இருந்தாரா?  தாங்கள் அப்போது 25 வயதில் இருந்தீர்கள். அவர் அரசியல் அமைப்பு சட்டத்திலிருந்து விலகி, ஏற்ற உறுதிமொழிக்கு துரோகம் செய்தபோது  எவ்வாறு பதவியிலிருந்து துடைத்தெறியப்பட்டார் என்பது தங்கள் நினவில் இருக்கும்.
இந்திரா இந்தியாவல்ல. எந்த பிரதமரும் இந்தியாவாக முடியாது. இந்தியா மட்டுமே இந்தியாவாகும்.
 இந்தியாவாக நீங்கள் பார்க்கப்படவேண்டும் என பதிவுகள் நிலவுகிறது . அதாவது உங்கள் மீதான விமர்சனங்கள்  இந்தியா மீதான விமர்சனங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு தேசத்துரோகமாக கருதப்படும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் தங்களது கருப்புபண ஒழிப்பு , பயங்கரவாதம் குறித்த மென்மை, தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விகள் தேசத்துரோகமாகின்றன. தங்கள் கருத்துக்களில் தவறேதும் செய்யாதவராக, பரிசுத்தவானாக நினைக்கப்படுகிறீர்கள். இதனால் கேள்விக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டம் உருவாகிறது.
நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட மக்களின் பிரதிநிதி எவரும் சர்வாதிகாரியாக, மேலாதிக்கவாதியாக இருக்கமுடியாது. மேலாதிக்காவாதியானவர் குறிப்பிட்ட இனம், கலாச்சாரம் போன்றவற்றில் தனது ஆதிக்கத்தை நிலநாட்டுபவர்.  பிரதமர் அவர்களே இந்தியாவிற்கான  பார்வையில் நீங்கள் மேலாதிக்கவாதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பிரதமராக உள்ள இந்தியாவில் தங்கள் நடவடிக்கைகள் இதுவரை நடந்திராத, தனித்துவமான, இணையற்றதென கொண்டாடப்படவேண்டும் என நினைக்கிறீர்கள். செவ்வாய் கிரகம் தாண்டிய, நிலவில் கால் பதித்த இந்தியாவை தாங்கள் விரும்புகிறீர்கள். தங்கள் முன்னோடிகளைவிட, அவர்தம் கனவுகளைவிட  அதிகமான ஏவுகணைகளை நீல்வானத்தில் செலுத்தவும், நீர்முழ்கி கப்பலகளை சத்தமின்றி ஆழ்கடலில் உட்செலுத்தவும் விரும்புகிறீர்கள். தன்நாட்டின் மக்களின் முன்னேற்றம் பற்றி அதிகுறிக்கோளுடன் பெரிதினும் பெரிது விழைபவராக பிரதமர் ஒருவர் இருப்பது இயல்பே. தன்னை பற்றிய மிகைமதிப்பீடுகள் கொண்டிராமல் அவ்வாறு இருக்கும் நாட்டின் தலைவர் போற்றுதலுக்குரியவரே.
சர்தார் பட்டேல் அப்படிப்பட்ட மேலாதிக்கவாதியல்ல. ஆக உயர்ந்த யதார்த்தவாதி.
தனிமையாகிப்போன அதிகாரம்
மேலாதிக்கவாதிகள் தங்களின் கூட்டத்தால் விரும்பப்படுவராகவும், கூட்டத்தை விரும்புவராகவும் இருந்தாலும் அவர்கள் தனிமைவாதியாகவும் உள்ளனர். இந்த தனிமை என்பது இரகசியம், தன்னிச்சைத்தன்மை என்கிற இரு நண்பர்களை காண்கிறது. சோதிக்கப்படாத மூட்டம் மேலாதிக்கவாதிகளின் முடிவுகளை சூழ்கிறது. முடிவுகள் மனஉந்துதலில் திடிர்திடிரென எடுக்கப்படுகின்றன. சிலநேரங்களில் அவை ஈர்க்கின்றன. பெரும்பாலான தருணங்களில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதில் அழிவையும் புதிய சிக்கல்களையும் உருவாக்குகின்றன. தனிப்பட்ட அதிகாரம்  கலந்தாய்வுகளிலிருந்தும் சக கூட்டாளிகளிடமிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் பலன்களை இழக்கிறது. ரிபப்ளிக்கன் பங்குத்துவம் என்கிற போனஸ் பலனையும் அது இழக்கிறது. தன்குரலை, தன் உரையை மட்டும் இரசிக்க நினைக்கிறது. பிறரை கேட்பதாக நினைக்கும் சமயங்களில் கூட மேலாதிக்கவாதி தன்வினையாக தன்குரலை மட்டுமே கேட்கிறார். அவரது பாட்டை அவரே பாடுபவராகவும் கேட்பராகவும் இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் சுயமைய்யத்தன்மை  ஜனநாயகத்தில் முரண். குடியரசில் முறைகேடு. 1975-77 காலத்தில் பயமுறுத்தியதும் இதுவே. நமது அரசியல் கலாச்சாரத்தில் இதையோ, இதன் வேறுவடிவங்களையோ திரும்ப அனுமதிக்ககூடாது.
திட்டக்கமிஷனை முடிவிற்கு கொண்டுவந்தது, தன்னாட்சி கல்வி நிறுவமன பொறுப்பாளர் நியமனத்தில் சார்புதன்மை, நீதிபதிகள் பணிநியமனத்தை நிறுத்துவது, இராணுவ ஜெனரல் பதவிஉயர்வுகளில் பணிமூப்புவிதிகளை மீறுவது, ராஜதந்திரிகள் அதிகாரிகள் பதவி உயர்த்தல், லோக்பால், தகவல் உரிமை சட்ட முக்கியத்துவம் குறைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை குறிவைத்தல், பணமதிப்பு நீக்கம் இவை அனைத்து முடிவுகளும் நான்தான், நானே சிந்துவும் கங்கையும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டவை. பிரதமர் அவர்கள் சில மேலாதிக்கவாதிகளுடன் தன்னுடைய ரசம்பூசப்பட்ட ரதத்தில் தெரியாதவை நோக்கி காப்புறுதியற்ற பயணத்தில் இருக்கிறார்.
அரசியல் தலைவர் ’தான் என்ற நிலையிலும்’ தனது சொந்த நாடு குறித்து சிறந்த அறிவுடன் இருப்பார், தனது அதிகாரிகளை காட்டிலும் கூட.. சர்வதேச உறவுகள் குறித்த விஷயத்தில் எந்த ராஜங்க தூதரும் ஜவஹர்லாலுக்கு இணையாக முடியாது. அரசியல் உளவியலில் நிர்வாக, போலீஸ் உயர் அதிகாரிகள் எவரும் பட்டேலுக்கு இணையாக முடியாது. ஊரக அரசியலை முதல்வராக இருந்த பந்தை, கிராம நகர்ப்புற பொருளாதாரா நுணுக்கங்களில் முதல்வர் நம்பூதிரிபாட்டை,   தமிழக சிக்கலான அரசியலில் முதல்வர் காமராஜரின் தேர்ச்சியை எவராலும் இணை செய்யமுடியாது.  சில அம்சங்களில் தன்னார்வநிறுவனங்கள், விற்பன்னர்கள் அதிகாரிகள் அரசியல்வாதிகளை விடவும் கூடுதலான அறிவுடன் இருப்பர்.  நிதி திட்டங்கள், பன்னாட்டு உறவுகள், பாதுகாப்பு உத்திகள், அறிவியல் சுற்று சூழல் , மற்றும் அன்றாட வாழ்வுக்குரிய அலுவல் அலுவல்சாரா  அம்சங்களில் பணமிரட்டல், பணிபாதுகாப்பின்மை, மருத்துவ வசதி இல்லாமை , காப்பீடூ-ஓய்வூதியமின்மை போன்றவற்றை உதாரணப்படுத்தலாம். தேர்ச்சியின்மையிலிருந்து அனுபவம் நோக்கிய பணிவு தலைவர் ஒருவரை உருவாக்குகிறது
முன்னோக்கும் பாதை
ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்திட  அறிவுறுத்துகிறீர்கள். நீர்சிக்கனம் குறித்து எங்களுக்கு அறிவுறுத்துகிறீர்களா? ஏ டி எம் களில் பணிமில்லையெனில் பிளாஸ்டிக் அட்டைகளை பயன்படுத்த சொல்கிறீர்கள். எங்கள் நீர்நிலைகள்  வற்றுவது பற்றி என்ன? மின்நீர் மூலம் வாழமுடியுமா? காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்கள், மின்சாரம் எரிபொருள் நெருக்கடி,  சுழலும் காற்று-நீர்- வெப்ப நோய்கள் பற்றியெல்லாம் நாட்டிற்கு எச்சரிக்கைசெய்யவில்லை. சுத்தம், தூய்மை பற்றி சொல்கிறீர்கள். அசுத்தத்தின் காரணியான பிளாஸ்டிக் குழுமம் பற்றி என்ன சொல்வது? யோகாவின் சிறப்புகளை சொல்கிறீர்கள். தீங்கிழைக்கும் புகையிலை, குட்கா குழுமத்தின் ஊற்றுக்கண்களை அடைக்கவில்லை. நிலம், சுரங்கம், காடுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மாபியாகும்பல், தரகர்களுக்கு சவால் ஏதுமில்லை .
பிறகு காஷ்மீர் பிரச்சனை.  யஷ்வந்த் சின்ஹா தலைமையில்,வஜாகத் அபிபுல்லா ஊக்கத்தில் காஷ்மீர் சென்ற குழு  தனது கண்டறிந்த உண்மைகளையும் பரிந்துரைகளையும் தந்துள்ளது. பிரதமர் அவர்களே அவர்களின் தெளிவான குரலை கேளுங்கள். 1960ல் ஜெயபிரகாஷ் நாரயணன் தந்திருந்த  எச்சரிக்கைகளையும், வழிகாட்டல்களையும் கேட்டிருந்தால் இப்போது உணரப்படும் வலிகள் இல்லாமல் இருந்திருக்கும். நாட்டின் ஒருபகுதி இடைவிடாத இரத்தம் சிந்துதலுக்காக நமது அரசியல் திட்டம் எழுதப்படவில்லை. நமது நாட்டின் மிக அழகான ஒருபகுதி அமைதி பெறுவதற்கு தைரியமான, புது முயற்சிகளை மேற்கொள்ள வரலாறு மற்றுமொரு வாய்ப்பை நல்கியிருக்கிறது.
முன்பே குறிப்பிட்டது போல தங்களின் வசீகரிப்பு அதிகரித்திருக்கிறது அதே போல் மாறாக நிராகரிப்பும். பிறப்பாலோ உறுதிமொழியாலோ அரசியல் அமைப்புடன் இல்லாவிட்டாலும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை சகிக்காத, விமர்சனங்களை திரித்து தேசத்துரோகமாக பார்ப்பதால் அரசியல் சட்டத்தையும் அதன் மேன்மைகளை நம்பும் அனைவரும் அவதியுறுகிறார்கள்- கிலியடைகிறார்கள்.
கிர்னாரில் நீங்கள் பார்த்திருக்கலாம். அசோகரின் கல்வெட்டு சாசனம் ஆறு ’எனது செயல் விழிப்புணர்வில் அல்லது நிறைவேற்றத்தில் முழு திருப்தி அடைவதில்லை’ என தெரிவிக்கிறது. அசோகர் ’அனுசாயாவில்’ ஒப்புக்கொண்டதை நினைவில் கொள்ளுங்கள். மற்றுமொரு உயரிய வார்த்தை உங்களது குஜராத்தியில் உள்ள உன்னதமான  ’அனுதாபா’. . பரிவும் கருணையும் பலவீனத்தின் எடுப்புகள் அல்ல. அவை தலைவரின் அடையாளமான மேன்மையை எடுத்துக்கொள்ளும்.
 குடியரசின் மீது பெருமிதமும்  அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கையை மீட்கும் அதன் செயல்திறனில் விசுவாசமும் கொண்ட
                                          தங்கள் சக குடிமகன்


Thursday, January 26, 2017

P C JOSHI பி சி ஜோஷி

 P  C  ஜோஷி
                              -ஆர்.பட்டாபிராமன்
ஜோஷி தனது 28ஆம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட்அரசியல் இயக்க  தலைமை பொறுப்பிற்கு வந்தவர்.   கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பை துணிச்சலுடன் எடுத்துக் கொண்டவர். நூற்றுக்கும் குறைவாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடுதலையின் நெருக்கத்தின் போது 80 ஆயிரமாக உயர்த்தியவர். பன்முகத் தன்மை கொண்ட பல்வேறு பிரிவுகளுடன் விவாதித்து நெருக்கமாக விழைந்தவர். எழுத்தாளர், கலைஞர், கவிஞர், அறிவாளிகள், விஞ்ஞானிகள் என தோழமை கொண்டவர். நாட்டின் விடுதலை குறித்த பார்வை உட்கட்சி சச்சரவுகளால் தனது தலையாய இடத்தை பறி கொடுத்தவர். அவரது தேசிய முன்னணி என்கிற அரசியல் முன்னெடுப்பு அன்றுள்ள சூழலில் விவாதங்களை கிளப்பியது.
ஜோஷி அல்மோர எனும் இமாலய அடிவாரத்தில் எப்ரல் 14, 1907ல் பிறந்தவர். முழுப்பெயர் பூரண சந்திர ஜோஷி. தந்தையார் பண்டிட் ஹர் நந்தன் ஜோஷி தலைமை ஆசிரியராக இருந்தவர். தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தார். தாயார் மாலதிதேவி. ஜோஷியின் 10வது வயதில் நோய்வாய்பட்டு இறந்தார்.
அன்றுள்ள சூழலில் மற்ற அனைவரையும் போல் பள்ளிகளில் காந்தி குறித்த பேச்சறிந்தார் ஜோஷி. சுயராஜ்யம் என்ற முழக்கம் பாலகன் ஜோஷியிடம் விடுதலை தாகத்தை எற்படுத்தியது. மீரட் மாவட்டம் ஹபூரில் தனது மெட்ரிக்  கல்வியை 1920 ல் முடிக்கிறார். இண்டர்மீடியட்டில் சமஸ்கிருதத்தில் தங்க மெடலை பெறுகிறார். 1924ல் அலகாபாத் பலகலை கழகத்தில் பொருளாதாரம், ஆங்கிலத்தில் பட்டம் பெறுகிறார். 1928க்குள் MA LLB ஆகிறார்.

அலகாபாத் நகரம் மதன்மோகன் மாளவியா தாக்கத்திலும் மோதிலால் நேரு தாக்கத்திலும் இருந்த நேரமது. மோதிலால் பக்கம் நிற்பவராக ஜோஷி மாறுகிறார்.. கதர் ஆடையுடன் நவஜவான் பாரத்சபா உறுப்பினராகிறார். ஜவஹர்லால்நேரு தலைமையில் செயல்பட்ட அலகாபாத் இளைஞர் கழக உறுப்பினராகிறார். ஆனந்த்பவன் ஈர்ப்பு மையமாகிறது. 1928 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் பிரச்சினைகளில் நேருவின் நிலைபாட்டில் ஜோஷி அதிருப்தியுற்றார்.  அல்மோர மாவட்டம் சார்ந்த அப்தர் அலி என்கிற தொழிற்சங்க தலைவர் மூலம் அவருக்கு ரஜினி பாமித்ததின் “நவீன இந்தியா” எம்.என்.ராயின் இந்திய அரசியலின் எதிர்காலம் போன்ற எழுத்துக்கள் கிட்டின.  எம்.என் ராய் மீது மரியாதை ஏற்பட்டது. தோழர் ரஜினி பாமிதத் எங்கள் வழிகாட்டியானார் என ஜோஷி பின்னர் குறிப்பிடுகிறார். லேபர் மன்த்லி கிடைக்கிறது.
மீரத்தில் செப் 1928ல் விவசாய தொழிலாளர் கட்சியுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார் ஜோஷி. அதன் இணைச்செயலராகிறார். சர்தேசாய், பரத்வாஜ் போன்றவர்களின் தோழமையும் கிட்டுகிறது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான மரியாதை உயர்கிறது. பிலிப் ஸ்பிராட், பென்பிராட்லியுடன் விவாதங்கள் நடைபெறுகின்றன. பிலிப் கேம்பிரிட்ஜ் பட்டதாரி. பிராட்லி பொறியியல் தொழிலாளி பகுதியிலிருந்து கட்சிக்கு வந்தவர். கட்சி அமைப்பை கட்டுவது குறித்த பயிற்சியை அவர்கள் தந்தனர். காந்தி குறித்த எதிர்மறை கருத்துக்களே தரப்பட்டுவந்தது.
பிரிட்டிஷார் 1929ல் தொழிற்த்கராறு சட்டம் மூலம் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்தனர். 1929 மார்ச்சில் போராடிய அனைத்து முக்கிய தலைவர்கள் டாங்கே,காட்டே, மிராஜ்கர், அதிகாரி, முசாபர், தாரணி, பிராட்லி, ஸ்பிராட் என 31 தோழர்கள் விசாரணை கைதிகளாகினர். 22 வயதான ஜோஷியும் விடுதியிலிருந்து தூக்கி வரப்பட்டார். மீரத் சதிவழக்கு என பின்னர் இது வரலாற்றில் இடம்பெற்றது. மோதிலால் தலைமையில் தோழர்கள் பாதுகாப்பு கமிட்டி ஒன்ற காங்கிரஸ் அமைத்தது. காந்தி நேரிடையாக வந்து சிறையில் தோழர்களை சந்தித்தார். சிறையை மார்க்சிய கல்விக் கூடமாக தோழர்கள் மாற்றினர். அனைவரும் தங்களை சாதியற்றவர்கள் என பதிவுசெய்து கொண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கண்டன உரைகளை வழக்கு விசாரணயின்போது வெளிப்படுத்தினர். சோசலிச புரட்சி என பேசினர்.

ஹிரன்முகர்ஜி ஆங்கில புலமையை அனைவரும் அறிவர்.  ஜோஷி மிக நேர்த்தியாக  ஆங்கிலத்தில்  ஆவணங்கள் உருவாக்குவதில் தேர்ச்சியை காண்பித்தார் என ஹிரன் பதிவிடுகிறார். சிறையில் மிக பணிவுடன், இணக்கமாக நடப்பவராக ஜோஷியிருந்தார். அவரின் தோட்டப்பயிற்சி பாராட்டை பெற்றது. 1933ல் வெளிவந்த பின்னர் தொடர்ந்து ஜோஷி கட்சி வேலைகளில் ஈடுபட்டார். டெக்ஸ்டைல் தொழிலாளர் போராட்டம் மீண்டும் இரு ஆண்டுகள் சிறைக்கு அவரை அனுப்பியது. இம்முறை துணிவெளுத்தல், தோட்டவேலைகள் தரப்பட்டன.
தோழர்கள் ரணதிவே போன்றவர்கள் தந்த தீவிர முழக்கங்களால் கட்சியில் பிரிவினை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியே மிக ஆரம்பநிலையில்தான் இருந்தது. அதில் போல்ஸ்விக் என பேசியதில் மேலும் பலவீனம் ஏற்பட்டது. அகிலத்தின் 7வது மாநாடு 1935ல் காங்கிரஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற புரிதலுக்கு வந்தது. அய்க்கிய முன்னணி தந்திர பார்வையில் பென்பிராட்லி தீசீஸ் பிப்ர்வரி 1936 இம்ப்ரிகார் இதழில் வெளியிடப்பட்டது.  காங்கிரசுடன் இணைந்தா என்ற தயக்கம்  நெருடல் இங்கிருந்த இளம் கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. ரஜினிபாமிதத் பல்வேறு குழுக்களுடன் விவாதித்து அனைத்திந்திய ஒருங்கிணப்பை வலியுறுத்தினார். கட்சி மையம் ஒன்றை பலப்படுத்தி  செயல்பட முடிவானது. தோழர் ஜோஷியிடம் பொதுச்செயலர் பொறுப்புகொடுக்கப்பட்டது. சர்வதேச இயக்கத்தலைமை வழிகாட்டலுடன் இவை யாவும் செய்யப்பட்டன.

மிஷல் காரி என்கிற ஐ சி எஸ் மற்றும் தோழர் மிஷல் ஸ்காட்  உதவியுடன் கல்கத்தாவில் மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. ஜோஷி, அஜாய், பரத்வாஜ் சந்திப்புடன் சூரத்தில் ஜூன் 1936ல் ஜோஷி பொதுச்செயலராக அறிவிக்கப்படுகிறார். மேற்கு பகுதிக்கு அஜாய், வடக்கிற்கு பரத்வாஜ், தென்பகுதிக்கு காட்டே பொறுப்பாக்கப்படுகின்றனர். 1936ல் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படுகிறது.  AISF  அமைக்கப்படுகிறது.  1935ல் பாரிசில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் தாக்கம் இங்கும் ஏற்பட்டது. பாசிச கலாச்சாரத்திற்கு எதிரான குரலை அங்கு கார்க்கி, மால்ரக்ஸ், ஈ எம் பாஸ்டர் எதிரொலித்தனர். 1938ல் விவசாயி- கவிஞர் கூட்டு மாநாடு என்ற புதுமை பரிதாபாத்தில் நடந்த்து.1945ல் உருது எழுத்தாளர் மாநாடு ஒன்று அய்தராபாத்தில் சரோஜினிதேவி நாயுடு தலைமையில்  நடைபெற்றது.  இவ்வனைத்திலும் உத்வேக பங்களிப்பை நல்கினார் ஜோஷி.
ஜமின்தாரி ஒழிப்பு என்ற முழக்கத்தில் கிசான் சபாக்கள் உருவான  காலமும் இதுதான்.  National Front பத்திரிக்கையும் துவங்கப்பட்டது. ஜோஷியுடன்  டாக்டர் அதிகாரி கல்கத்தாவில் செயல்பட்டுவந்தார். ஜோஷி, அதிகாரி, பரத்வாஜ் , அஜாய் பத்திரிக்கை ஆசிரியர்குழுவில் செயல்பட்டனர். 1938ல் கட்சியின் மையம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. தேசிய காங்கிரசும் தொழிலாளிவர்க்கமும் என்ற பிரசுரத்தை கட்சி வெளியிட்டது. அரசியல் போராட்டங்களில் பங்கேற்பீர் என்ற வேண்டுகோளும் விடப்பட்டது. சுபாஷ்போஸ் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என  கட்சி நிலை எடுத்தது
தோழர் ஜோஷ்யின் னிசிறப்பு மணிக்கணக்காக இளைஞர்களுடன் தனிஉரையாடல்களை மேற்கொள்வது- அதன் மூலம் தோழர்களை ஈர்ப்பது என்பதாக இருந்தது. 1942 வெள்ளைய்னே வெளியேறு இயக்கத்தின் போது கட்சி பல விமர்சங்களை சந்தித்தது. வங்க பஞ்சத்தில் மக்கள் பணியாற்றி கட்சி தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என பெரும் களப்பணிக்கு ஜோஷி திட்டமிட்டு கட்சித்தொண்டர்களை இறக்கினார். பஞ்சத்தின்போது ஒருகோடி மக்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவெல்லாம் பிணங்கள் என்ற நிலை. பல்லாயிரக்கணக்கான பெண்கள்  அன்றாட வாழ்க்கைக்கே விபச்சாரிகள் ஆக்கப்பட்ட சூழல் இருந்தது. பெண்கள் சுயபாதுகாப்பு அமைப்பை  ஒன்றை நிறுவி ஏராள இளம் பெண்களை காத்திட , மீட்டெடுக்க இயக்கம் ஒன்றிற்கு ஜோஷி வழிகாட்டினார். கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியாற்றிட ஆயிரக்கணக்கில் உவுகூடங்கள் தேவைப்பட்டன. கட்சி  நூற்றுக்கணக்கன உவுகூடங்கள் அமைத்திட ஜோஷி வழிகாட்டினார். தாமே நேரில் சென்று செயல்படும் தோழர்களை உற்சாகப்படுத்தினார். ப்பான் பாசிதிர்ப்பு முழக்கங்களுடன் விடுதலையை கோரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஜோஷி அமைக்க செய்தார். வங்கம் வீழ்ந்தால் இந்தியா வாழாது என்ற முழக்கத்துடன் வங்க நிலைமைகளை  தேசிய பிரச்சனையாக்கினார். தேசிய அரசாங்கம் என்ற முழக்கத்தை ம் என் ராய் ஆதரவாளர்கள் பேசிவந்தனர். ஜோஷியும் கல்கத்தாவில்  நிலைமைகளை சீராக்கிட தேசிய அரசாங்கம் என்றார். டாக்டர் ஷியாமபிரசாத் போன்றவர் உதவட்டும் என்றார். அந்த அளவிற்கு வங்க மீட்பு என்பதில் அக்கறை செலுத்தினார்.
1943ல்  இந்திய மக்கள் நாடக மன்றம் என்கிற இப்டா உருவாக்கப்பட்டது. கட்சி சொல்லத்தகுந்த அளவில்  உறுப்பினர்களை பெற்றது. முழுநேர புரட்சியாளர்கள் என்ற பதிவில் முழுநேர பணியாளர்கள் 2000 இருந்தனர். தொழிற்சங்கம், கிசான் சபா, மாணவர் இயக்கம், மாதர் அமைப்புகளில் கட்சி செல்வாக்கு பெற்றது. கட்சியின் பத்திரிக்கைகள், பிரசுரங்கள் 11 மொழிகளில் வெளிவந்தன. அடிக்கப்பட்ட யிரக்கணக்கன கட்சி வெளியீடுகள் தேங்கி நிற்காமல் விற்கப்பட்டன. அனைத்திந்திய அரசியலில் விவாத இடம் ஒன்று கட்சிக்கு கிடைக்கப்பெற்றது. அனைத்திந்திய அமைப்பு வடிவமும் கிடைத்தது. தோழர்களை கட்சிக்கு ஈர்ப்பதில் ஜோஷியின் திறமை பாராட்டுக்குரியதாக இருந்தது. அறிவுஜீவிகள், கவிஞர், கலைஞர் என பலரும் தயக்கமின்றி அவருடன் விவாத உறவுகளை மரியாதையை வைத்திருந்தனர்.

1941 கையூர் தியாகிகளின் பேரன்பில் நெகிழ்ந்தார் ஜோஷி. கையூர் போராட்ட்த்தில் 60 தோழர்கள் மீது வழக்கு- நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சாவைக்கண்டு  சோராமல்  அப்பு, அபுபக்கர், சிறுகண்டன், குணாம்பு ஆகிய தோழர்கள் ஜோஷியை பார்க்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும் , தோழர்  ஜோஷி பார்க்க வந்தார். அவர்களை பர்றி மிகப்பெருமையுடன் உரையாடினார். தோழர் கிருஷ்ணன் பிள்ளை மொழிபெயர்த்தார். மகத்தான கடமைக்கான உயிர்த்தியாகம் வீணாகாது என ஜோஷி தெரிவித்தவுடன் கட்சி பொதுச்செயலர் மூலம் தங்களுக்கு மாபெரும் அங்கீகரிப்பை தந்துவிட்டதா அத்தோழர்கள் மனதிலிருந்து நன்றி தெரிவித்தனர். காவிய நிகழ்வு போல் இக்காட்சி அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஜோஷியும் வாழ்க என சொல்லி அத்தோழர்கள் தூக்கில் ஏறினர்.
ஜோஷிக்கு மற்றொரு சிறந்த பொறுமைக்குணமும் இருந்தது. நாம் கூட்டத்தில் பேசும்போது யாராவது கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தால், நம்க்கு கோபம் வரலாம்- சோர்வு ஏற்படும்- கவனம் சிதறலாம். ஆனால் ஜோஷி அதை நாம் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார். நாம் பேசுவது அவர்களை தொடவில்லை என புரிந்து கொள்வோம் என்பார். அவரது கூட்டங்கள் பலநேரங்களில் தடை பெற்றிருக்கிறது. பாட்னா, பெகுசராய் சுற்றுப்பயணத்தில் அவருக்கு இவ்வனுபவம் ஏற்பட்ட்து. கட்சி ஒழிக. ஜோஷி ஒழிக முழக்கங்களை அவர் கேட்டார். ஜோஷி மிக சிறந்த பேச்சாளர் என கருதப்படவில்லை. விளக்கபாணியில் உரையாடல் செய்பவராக இருந்தார். அவர் தது பயணத்தை மூன்றாம் பெட்டிகளில்தான் செய்து வந்தார்.
கட்சித்தலைவர்கள் சிறையிலிருந்தனர். தியோலி சிறையில் தோழர்கள் டாங்கே, ரணதிவே, அஜாய் ஆகியோருக்கு மக்கள் யுத்தம் என்கிற ஆவம் கிடைக்கப்பெற்றது. காங்கிரசின் யுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டை தாக்கியும், சோவியத்தை காப்பது என்ற பொருளிலும் அறிக்கை ஒன்று தயாரிக்கபட்டது. முன்பு பிரிட்டிஷ் தலைவர்கள் தேச உணர்விற்கு மிக எதிராக போகவேண்டியதில்லை என்ற அறிவுரையை ஜோஷி, அதிகாரியிடம் தந்திருந்தனர். ஆனால் சோவியத் யுத்த களத்திற்கு வந்தவுடன் மக்கள் யுத்த முழக்கம் வந்தது.
தோழர் ரஜினி பாமிதத்திற்கு அடுத்து கட்சி கொள்கை நிலைகளில் டாக்டர் அதிகாரியை ஜோஷி பொதுவாக மதித்து வந்தார். அதிகாரி சொல்லும் போது தட்ட முடியாது என்ற நிலையை ஜோஷி எடுத்தார். ஹன்ஸ்ராஜ் என்ற பெயரில் அவ்வறிக்கை ஜோஷியால்   Forward to Freedom  வெளியிடப்பட்டது. தேச ஒற்றுமை, பாதுகாப்பு, தேச அரசாங்கம் என்ற முழக்கம் தரப்பட்டது. விடுதலைப்போரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் செயல்பாடுகளும் என்ற பிரசுரத்தை ஜோஷி எழுதினார். அதற்கு பிரிட்டிஷ் கட்சியின் செயலர் ஹாரிபொலிட் முன்னுரை எழுதி அப்பிரசுரம் லண்டனில் வெளியிடப்பட்டது. ஜப்பனின் பேராபத்து அதில் சுட்டிக்காட்டப்பட்ட்து. யுத்த்த்தில் நடுநிலை இல்லை என்பது தெளிவாக்கப்பட்ட்து.
கட்சி எடுத்த நிலைப்பட்டிற்கு காங்கிரசின் வலது பட்டேல் பிரிவும், காங்கிரஸ் சோசலிஸ்ட் இட்து ஜெயபிரகாஷ் பிரிவும் கடும் கண்டனங்களை எழுப்பின. காந்தியை ஜோஷி நேரிடையாக சந்தித்து தங்கள் நிலைபாட்டை விளக்கினார். பின்னர் நடந்த கடித போக்குவரத்துகள் காந்தி- ஜோசி கடிதங்கள் என வெளியாயின. காந்தியை தேசத்தந்தை என ஜோஷி விளித்தார். காந்தியும் உங்களைப் போன்றவர்களை நான் இழக்க விரும்பவில்லை என பேசினார். காங்கிரஸ் ராம்கர் மாநாடின்போது கூட பரத்வாஜ் போன்ற தோழர்கள் கைதாவதிலிருந்து தப்பிட காந்தியுடன் ஒரே காரில் பயணிக்க முடிந்தது. வெள்ளைய்னே வெளியேறு தீர்மானம் வந்தபோது டக்டர் கே எம் அஷ்ரப் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எதிர்த்து கலகம் ஏதும் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமை தங்கள் அமைப்பில் செயலாற்றிய கம்யூனிஸ்ட்கள் மீது சார்ஜ்சீட் கொடுத்தது-. நீக்கவேண்டும் என்று பேசியது.  ஆனால் அரசியல் பெருந்தன்மையுடன் ஜோஷி தலைமை காங்கிரசை ஒடுக்கி தலைவர்களை சிறையில் வாட வைப்பது பிரிட்டிஷ் நலன்களுக்குகூட உகந்த்தல்ல என்ற நேரிய அறிக்கையை தந்தது.
கம்யூனிஸ்ட்கள் மீதான காங்கிரஸ் குற்றசாட்டுகளுக்கு பதில் என்கிற ஆவத்தை கடும் உழைப்பை நல்கி ஜோஷி தயாரித்தார். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தருவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஆவணமது. 1945ல் PPH வெளியீடாக வந்தது. காங்கிரசும் லீகும் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை ஜோஷி தொடர்ந்து சொல்லி வந்தார். They Must Meet, They Must Meet Again என்கிற அழுத்தம் தரக்கூடிய பிரசுரங்கங்களை கொணர்ந்தார். காந்தி- ஜின்னவைத்தான் அவர்கள் என ஜோஷி குறிப்பிட்டார். அதேபோல் அக்டோபர் 1945ல் கங்கிரஸ் லீக் கம்யூனிஸ்ட் தேசிய முன்னணி என பேசினார். தெபகா, தெலங்கானா எழுச்சிகளில் கட்சி முக்கிய பாத்திரமாற்றியது. தெலங்கனா பகுதி போராட்டத்திற்கு ஆயுதங்கள் பெற்று அனுப்புவதில் அவர் பெரும் பங்காற்றினார். 1946 தொழிலாளர் இயக்கங்கங்கள் பெருகின.

லீக் பாகிஸ்தான் கோரிக்கையை உறுதியாக வற்புறுத்தி வந்தது. 1946 ஜூனில் பிரிட்டிஷ் திட்டம் எதிர்ப்போம் என்றது கட்சி. வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் சட்ட அசெம்பிளி என்றது. டாக்டர் அதிகாரி லெனினிய வெளிச்சத்தில் பாகிஸ்தான் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு ஆவணம் என்றார். ஜோஷி தயக்கம் எடுபடவில்லை. ரஜினிபாமிதத்தின் அறிவுரைக்கு பின்னர் பாகிஸ்தான் கோரிக்கையை சுயநிர்ணய பின்னணியில் பார்த்த்தும் அதற்கு லெனினை துணைக்கு அழைத்துக்கொண்ட்தும் தவறு என புரிந்துகொள்ளப்பட்ட்து. இதை ஜோஷி பின்னாட்களில் தெளிவுபடுத்தினார்.

P C JOSHI பி சி ஜோஷி பகுதி 2

                         II P c ஜோஷி
மவுண்ட்பாட்டன் தனது திட்டத்துடன் மார்ச் 1947ல் வருகிறார்.  காங்கிரசுடன் உறவுகளை சரி செய்திட அறிவுறுத்தல் வருகிது. கட்சி இந்து முஸ்லீம் ஒற்றுமை முழக்கத்தை பலப்படுத்த துவங்கியது. விடுதலை காலத்தில் நாட்டின் பிரிவினை, வகுப்புவாத கலவரங்களால் நாட்டின் ஆன்மா பாதிக்கப்படுகிறது. நாடு அலைக்கழிக்கப்படுகிறது. காந்தி, நேருவுடன் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் அய்க்கிய முன்னணி என்கிறார் ஜோஷி. கட்சிக்குள் இந்தப்பாதை மீது விமர்சனம் எழுகிறது. நேரு சீனாவின் சியாங்காய் ஷேக்குடன் ஒப்பிடப்படுகிறார். தெலங்கானா ஏனான் என்ற ஒப்பீடு வருகிறது. இந்திய சுதந்திரம் போலி என கருத்துக்கள் முன்வருகின்றன. ரணதிவே, அதிகாரி இவ்விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அய்ரோப்பாவிலிருந்த டாங்கே பெல்கிரேடில் அகிலத்தின் பிரதிநிதி எட்வர்ட் கர்டெல்ஞ் என்பாரை சந்திக்கிறார். காங்கிரஸ் எதிர்ப்பும் போராட்டமும் அறிவுறுத்தப்படுகின்றன.. நாடு திரும்பிய டாங்கே இந்த வழிகாட்டலை பொலிட்ப்யூரோவில் வைக்கிறார். ஜோஷி பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகிறார்.
 கட்சியின் பெரும்பான்மை ஜோஷியை நிராகரிக்கிறது. பொதுச்செயலரிலிருந்து ஜோஷி வெளியேறுகிறார். தோழர் ரணதிவே பொறுப்பேற்று பிப்ரவரி 1948 கல்கத்தா கங்கிரசில் பொதுச்செயலராகிறார். ஜோஷி தனிமைப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. சுயவிமர்சனம் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அப்போது கட்டாயமாக இருந்தது . தலைவர்கள்  அதை அனுசரிக்கவும் செய்தனர். ஆரம்பத்தில் சுந்தரையா போன்றவர் ஜோஷி பக்கம் நின்றாலும் பெரும்பான்மைக்கு முன் யாரும் நிற்கமுடியாது என்பது பொதுவான சூழல். கட்சி ஆயுதம் தாங்கிய எழுச்சி என பேசியது. நகரங்களில் வேலைநிறுத்தம் கிராமங்களில் போராட்டங்கள் என்று வழிகாட்டப்பட்டது. புரட்சி மிக அருகாமையில் போன்ற சித்தரிப்புகள் வந்தன.  விடுதலை நேரத்தில் ஏறத்தாழ வெகுஜன கட்சி 80 ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலையிலிருந்த கட்சி  சரியத்துவங்கியது. இந்திய பூர்ஷ்வாக்கள் முழுமையாக ஏகாதிபத்திய பக்கம் என்பதை ஏற்கமுடியாது என்றார் ஜோஷி. சீர்திருத்த அபாயம் என 1949ல் ஜோஷியை கட்சியிலிருந்து தலைமை நீக்கியது.
1980களில் புபேஷ் குப்தா அன்று ஜோஷி நீக்கம் கட்சிக்கு மிகப்பெரிய அடி என தெரிவித்தார். ஜோஷி  பேராசிரியர்  ஜே டி பெர்னால் மூலம் கட்சியின் தவறான பாதை குறித்தும் தனது நிலைப்பாட்டை குறித்தும் பிரிட்டிஷ் கட்சிக்கு எடுத்துரைக்க செய்தார். ரதிவே மீது விமர்சனம் எழுந்து ஆந்திர தோழர்கள் சீனப்பாதை என ராஜேஷ்வர்ராவ் தலைமையில் பேசினர். பின்னர் மூன்று பி ஆவணம் என டாங்கே, அதிகாரி, ஜோஷி முன்வைத்தனர். ஜோஷிக்கு அனைத்திலும் கருத்து வேறுபாடு இருந்த்து. ராஜேஸ்வர்ராவிற்கு பின்னர் அஜாய் பொதுச்செயலர் பொறுப்பேற்றார். ஜோஷி மீண்டும் 1951 ஜூனில் கட்சிக்குள் சேர்க்கப்பட்டர். கட்சி ரணதிவேவை சுயவிமர்சன நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியபோது தனது அனுபவம் அவருக்கு வேண்டாம் என பேசினார் ஜோஷி. கட்சி தோழர்களை தனிமைப்படுத்துவதுபோல் நடப்பது சரியல்ல என்றும் கருதினார்.
ஜோஷி அலகாபாத் திரும்பி India Today என்கிற மாதப்பத்திரிக்கையை துவங்கினார். ரஜினிபாமிதத் எழுதிய புகழ்வாய்ந்த புத்தக தலைப்பு அது. இந்தியா சீனா சோவியத் கூட்டு அவசியம் என அதில் எழுதினார். முதல் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசின் வெற்றியை குறைத்து மதிப்பிடவேண்டாம் என எச்சரித்தார். கட்சிக்கு வெளியே சிறந்தவர்கள் இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து தோழமை கொள்வது அவசியம் என்றார். 1952 டிசம்பரில் வியன்னாவிற்கு சமாதான கவுன்சில் மாநாட்டிற்கு சென்றார். பாமிதத் அவரை பொறுமையுடன் இருக்க வேண்டிக்கொண்டார். அஜாய் சரி செய்வார் என்றார். மாற்றங்களை கொணர்வார் என்றார்.
நேருவின் 5 ஆண்டுதிட்டம், சீன-ருஷ்ய உறவுகள், நேரு குறித்து நேர்மறையான அணுகுமுறை அஜாய்- டாங்கேவிடம் ஏற்படவில்லை என ஜோஷி கருதினார். 1956 பாலக்காடு காங்கிரசில் விடுதலை குறித்த பார்வை அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஜோஷியையும் ரணதிவேயையும் சமப்படுத்தி கயிற்றின் மேல் நடக்கும் வேலையை அஜாய் செய்யவேண்டியிருந்தது என்பதை ஜோஷியே ஏற்றுக்கொண்டார். எந்தவித வறட்டுத்தனமும் வெகுஜன கட்சிக்கு உதவாது என்பதில் ஜோஷி அழுத்தம் தந்தார். 1968 பேட்டி ஒன்றில் நமது செக்டேரியன் அணுகுமுறையால் நாம் கேரளா ஆட்சியை இழந்தோம் என கருத்து தெரிவித்தார்.

1958 அமிர்தசரஸ் காங்கிரசில் அவர் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி வந்தார். 1962வரை நியுஏஜ் ஆசிரியராக செயல்பட்டார். அவரால் டெல்லி தனிமையை பழக்கமாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. சீன யுத்தத்தின்போது கட்சிக்குள் வேறுபாடுகள் அதிகமாயின. டாங்கே பிரிட்டிஷ் ஏஜெண்ட் என தாக்கப்பட்டார்.  டாங்கே பதவி விலகி ஒற்றுமைக்கு உதவலாம் என்ற கருத்து ஜோஷியிடம் இருந்தது. கட்சி உடைவு என்பது பலருக்கு அளித்த வருத்தம் போல் ஜோஷிக்கும் வேதனையை தந்தது. 40 ஆண்டுகள்  தவப்பணி வீண் போனது என கருதினார். கட்சியைவிட்டு வெளியேறியவர்களில் சிலர் அதிதீவிர இடது பேசுபவர்கள் அல்லர், அவர்களுக்கு டாங்கே எதிர்ப்பு இருந்தது அவ்வளவுதான் என  ஜோஷி பேசிவந்தார். உடைவிற்கு பின்னரும் கட்சி டிசம்பர் 1964ல் டாங்கேவை சேர்மனாக தேர்ந்தெடுத்தது. டாங்கே சேர்மன் ஆவது சரியல்ல என ஜோஷி கருதினார். அவர் தனக்கு மத்திய பொறுப்பு ஏதும் வேண்டாம் என மறுத்துவிட்டார்.
உ.பி மாநிலமையத்திற்கு தனது உறுப்பினரை மாற்றிக்கொண்டு அவர் சென்றார். அவரது கட்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. தனது வாழ்நாட்களை இனி ஆய்வுகளில் கழிக்கலாம் என ஜவஹர்லால் பலகலைகழக வளாகத்தை தேர்ந்தெடுத்து பெரும்பான்மை நேரத்தை செலவழித்தார். கேரளாவின் புகழ்வாய்ந்த சிந்தனையாளர்களில் ஒருவராக கருதப்பட்ட தோழர் தாமோதரனுடன் இணைந்து ஜே என் யு வில் இடதுசாரி ஆவண காப்பகம் நிறுவிட பாடுபட்டார்.  இதற்காக பெர்லின், மாஸ்கோ என தேடிச் சென்றார். இந்தியாவில் பல்வேறு நண்பர்களுடன் தொடர்பு கொண்டு ஆவணகாப்பிற்கான தொண்டினை செய்தார். 1857 முதல்விடுதலைப்போர் குறித்த கட்டுரைகளை கொணர்ந்தார்.

தோழர் ஜோஷியின் துணைவியார் தன்னளவில் புகழ் வாய்ந்த கல்பனா தத்தா என்பார். விடுதலை புரட்சியாளர். . கல்பனாதத் இன்றுள்ள பங்களாதேஷ் பகுதியில் உள்ள ஸ்ரீபூர், சிட்டகாங்கில் ஜூலை 27, 1913ல் பிறந்தவர். 1929ல் மெட்ரிக் முடித்தவுடன் மாணவர் இயக்கத்தில் இணைந்து  சூர்யாசென் புரட்சிகர செயல்பாடுகளுக்கு துணையாக நின்றவர்.  அவர்கள் மே 19, 1933ல் சிட்டகாங் ஆயுத கிடங்கு கொள்ளை வழக்கில் கைதாகின்றனர்.  சென், தாரகேஷ்வர்தஸ்திதார், கல்பனாவிற்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது, அப்போது கல்பனாவிற்கு வயது 20. தாகூர் போன்றவர்கள் தலையிடுகின்றனர். கல்பனாவிற்கு தண்டனை மாற்றப்பட்டு, பின்னர் 1939ல் அவர் விடுதலையாகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். கட்சி வகுப்பு ஒன்றிற்கு அவர் 1942ல் வந்தார். ஜோஷியிடம் நட்பு ஏற்பட்டு இருவரும் 1943 ஆகஸ்டில் மணம்புரிகின்றனர். கட்சி அலுவலகத்தில் ரணதிவேவும், முசாபரும் மணமக்கள் சார்பில் இருந்து பிஸ்கட்- தேநீர் செலவில் திருமணம் நடந்தேறியது. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காலத்தில் கணவர் ஜோஷிக்கு ஆறுதலைதரும் துணையாக நின்றார். Indian Statistical துறையில் சில காலம் பணிபுரிந்தார். தனது இறுதி காலத்தில் பத்திரிக்கைகளில் பணிபுரிந்த தம் மகன் சந்த்ஜோஷி, மருமகள் மானி சட்டர்ஜியுடன் இருந்தார். பிப்ரவரி 8, 1995ல் அவர் இயற்கை எய்தினார். 15 ஆண்டுகளுக்கு முன்னதாக தோழர் பி சி ஜோஷி நவம்பர் 9, 1980ல் மறைந்திருந்தார்.

ஜோஷியின் மனிதநேய தோழமை குறித்து அவருடன் நெருக்கமாக பழகிய தோழர்கள் பதிவு செய்துள்ளனர். பம்பாய் கம்யூன் வாழ்வில் லீலா சுந்தரையா பொறுப்பில் தோழர்களுக்கான உணவுக்கூடம் துவங்கியது, இளம் மொகித் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள போராடியதுவரை  ஜோஷி நகைச்சுவை உணர்வுடன் தோழமை பாராட்டியவற்றின் பதிவுகள் உள்ளன.
1934ல் 50 உறுப்பினர்கள் அதுவும் உதிரியாக  என்று பிபன் சந்திரா தனது கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறார். 1943ல் இது 17000 ஆக முதல் மாநாட்டின்போது உயர்ந்தது. விடுதலை காலத்தில் 80000 தாண்டியது. புகழ்வாய்ந்த இந்தியர்களான பி சி மகலனாபிஸ், டி டி கோசாம்பி. ராகுல்ஜி, பால்ராஜ் சஹானி, பி என் கங்குலி, கியான் சந்த், சம்பு மகராஜ் போன்றவர்கள் ஜோஷியிடம் அன்பு பாராட்டிய பெரியோர்களில் சிலர். People’s Democarcy ல் ஜோஷி நூற்றாண்டின் போது ஜோஷியின் பங்களிப்பை சுட்டிக்காட்டி தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை ஒன்றை எழுதினார். ஜோஷியை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டிய முன்னோடிகளுள் ஜோஷி முக்கியமானவர். அவர் பங்களிப்பை மறப்பது வரலாற்றுக்கு புறம்பானது- மார்க்சியத்திற்கும் புறம்பானது என்று அதில் அவர் குறிப்பிடுகிறார்.
கம்யூனிஸ்ட் இயக்கம் போன்ற சர்வதேச கோட்பாடுகளைகொண்ட இயக்கங்கள் நேஷனலிசம் என்பதை பூர்ஷ்வா கருத்துருவம் என குறுக்கிவிடக்கூடாது என்பதிலே ஜோஷிக்கு அளப்பரிய பங்களிப்பு இருந்தது.  காந்தி பற்றிய புரிதலில் அவரது பார்வையை கட்சியின் பார்வையை வரலாற்றாய்வாளர் பிபின் சந்திரபால்  குறையாக விமர்சிக்கிறார்.  பாமிதத் வழியாக காந்தியை அவர்கள் கண்டனர். பாமிதத்தின் ஆய்வுகள் அரைகுறையாக இருந்தன என்பது பிபின் வைத்த விமர்சனமாக இருந்தது. நேருவின் மறைவு முதலாண்டு நினைவில் Nehru Legacy- A self Critical Communist Evolution என்ற கட்டுரையை ஜோஷி எழுதினார்
பாலக்காடு காங்கிரசின்போது ராஜேஸ்வர்ராவ்,பவானிசென், சோமநாத் லாகிரி, ரவிநாரயண் ரெட்டி போன்றவர்கள் ஜோஷி நிலைப்பட்டிற்கு நெருக்கமாக இருந்தனர். கட்சியின் கொள்கை நிலையில் திருப்புமுனையாக அமைந்த 1958 அமிர்தசரஸ் காங்கிரசில் ஜோஷி முக்கிய பங்காற்றினார். 1977-78 படிண்டாவிற்கு அவர் வந்தபோது பலரும் அவரிடம் நேயத்தை காட்டினர். கம்யூனிஸ்ட் கட்சியை அதன் குழந்தை நிலையிலிருந்து தேசிய பருவத்திற்கு உயர்த்தியவர் ஜோஷி என்ற பெருமிதத்தை அவரது நூற்றாண்டின்போது பலரும் தெரிவித்தனர்,.

Ref:
1.P.C. Joshi : A Political Journey , by Bipan Chandra
2.P.C. Joshi: A Biography Gargi Chakravartty

3. Joshi Centenary Articles in PD, Mainstream

Wednesday, January 25, 2017

Synthesis- Nehru

Synthesis Is Our Tradition   by Jawaharlal Nehru (1959 Lecture)
  Reproduced in Tuesday 24 April 2007 Mainstream
To endeavour to understand and describe the India of today would be the task of a brave man. To describe tomorrow’s India would verge on rashness.
What is India? That is a question which has come back again and again to my mind. The early beginnings of our history filled me with wonder. It was the past of a virile and vigorous race with a questing spirit and an urge for free inquiry and, even in its earliest known period, giving evidence of a mature and tolerant civilisation. Accepting life and its joys and burdens, it was ever searching for the ultimate and the universal. It built up a magnificent language, Sanskrit, and through this language, its arts and architecture, it sent its vibrant message to far countries. It produced the Upanishads, the Gita and the Buddha.

Hardly any language in the world has probably played that vital part in the history of a race which Sanskrit has. It was not only the vehicle of the highest thought and some of the finest literature, but it became the uniting bond for India, in spite of its political division. The Ramayana and the Mahabharata were woven into the texture of millions of lives in every generation for thousands of years. I have often wondered, if our race forgot the Buddha, the Upanishads and the great epics, what then will it be like! It would be uprooted and would lose the basic characteristics which have clung to it and given it distinction throughout these long ages. India would cease to be India.
Gradually deterioration set in. Thought lost its freshness and became stale, and the vitality and exuberance of youth gave place to crabbed age. Instead of the spirit of adventure there came lifeless routine, and the broad and exciting vision of the world was cabined and confined and lost in caste divisions, narrow social customs and ceremonials. Even so, India was vital enough to absorb the streams of people that flowed into her mighty ocean of humanity and she never quite forgot the thoughts that had stirred her in the days of her youthful vigour.
Subsequently, India was powerfully influenced by the coming of Islam and Muslim invasions. Western colonial powers followed, bringing a new type of domination and a new colonialism and, at the same time, the impact of fresh ideas and of the industrial civilisation that was growing up in Europe. This period culminated, after a long struggle, in independence and now we face the future with all this burden of the past upon us and the confused dreams and stirrings of the future that we seek to build.
We have all these ages represented in us and in our country today. We have the growth of nuclear science and atomic energy in India, and we also have the cowdung age.
In the tumult and confusion of our time, we stand facing both ways, forward to the future and backwards to the past, being pulled in both directions. How can we resolve this conflict and evolve a structure for living which fulfils our material needs and, at the same time, sustains our mind and spirit? What new ideals or old ideals varied and adapted to the new world can we place before our people, and how can we galvanise the people into wakefulness and action?
For the present, in India we are rightly absorbed in the Five-Year Plans and in a tremendous effort to raise our people’s living standards. Economic progress is essential and a prerequisite for any other type of advance. But a doubt creeps into our minds. Is this by itself enough or is something else to be added on to it? The Welfare State is a worthwhile ideal, but it may well be rather drab. The examples of states which have achieved that objective bring out new problems and difficulties, which are not solved by material advance alone or by a mechanical civilisation. Whether religion is necessary or not, a certain faith in a worthwhile ideal is essential to give substance to our lives and to hold us together.
Change is essential but continuity is also necessary. The future has to be built on the foundations laid in the past and in the present. To deny the past and break with it completely is to uproot ourselves and, sapless, dry up. It was the virtue of Gandhiji to keep his feet firmly planted in the rich traditions of our race and our soil and, at the same time, to function on the revolutionary plane. Above all, he laid stress on truth and peaceful means. Thus he built on old foundations, and at the same time, oriented the structure towards the future.
When Islam came to India in the form of political conquest it brought conflict. It had a twofold effect. On the one hand, it encouraged the tendency of Hindu society to shrink still further within its shell; on the other, it brought a breath of fresh air and fresh ideals, and thus had a certain rejuvenating influence. Hindu society had become a closed system. The Muslims who came from outside brought their own closed system with them. Hence the great problem that faced India during the medieval period was how these two closed systems, each with its strong roots, could develop a healthy relationship. Wise rulers like Akbar and others realised that the only hope for the future lay in some kind of harmony being established.
The philosophy and the world outlook of the old Hindus was amazingly tolerant; and yet they had divided themselves up into numerous separate caste groups and hierarchies. The Muslims had to face a new problem, namely, how to live with others as equals. In other countries where they had gone, their success was so great that this problem did not really arise. They came into conflict with Christendom and through hundreds of years the problem was never solved. In India, slowly a synthesis was developed. But before this could be completed, other influences came into play.
The new liberal thought of the West and industrial processes began to affect the mind and life of India. A new nationalism developed, which was inevitably against colonialism and sought independence, and yet which was being progressively affected by the new industrial civilisation as well as the language, literature and ways of the West.
Rammohun Roy came, seeking some kind of a synthesis between old India and modern trends. Vivekananda brought back something of the vigour of old Indian thought and dressed it in a modern garb. Political and cultural movements grew up and culminated in Gandhiji and Rabindranath Tagore.
In Europe there had been a fierce conflict between science and traditional religion, and the cosmology of Christianity did not fit in at all with scientific theories. Science did not produce that sense of conflict in India and Indian philosophy could easily accept it without doing any vital injury to its basic conceptions.
In India, as elsewhere, two forces developed—the growth of nationalism and the urge for social justice. Socialism and Marxism became the symbol of this urge for social justice and, apart from their scientific content, had a tremendous emotional appeal for the masses.


Living is a continual adjustment to changing conditions. The rapidity of technological change in the last half century has made the necessity of social change greater than ever, and there is a continual maladjustment. The advance of science and technology makes it definitely possible to solve most of the economic problems of the world and, in particular, to provide the primary necessities of life to everyone all over the world. The methods adopted will have to depend upon the background and cultural development of a country or a community.
Internationally, the major question today is that of world peace. The only course open is for us to accept the world as it is and develop toleration for each other. It should be open to each country to develop in its own way, learning from others, and not being imposed on by them. Essentially, this calls for a new mental approach. The Panchsheel, or the Five Principles, offer that approach.
There are conflicts within a nation. In a democratic apparatus with adult suffrage, those conflicts can be solved by normal constitutional methods.
In India we have had most distressing spectacles of conflict based on provincialism or linguism. In the main, it is conflict of class interests that poses problems today, and in such cases vested interests are not easy to displace. Yet we have seen in India powerful vested interests like those of the old princes and of the big jagirdars, talukdars and zamindars being removed by peaceful methods, even though that meant a break-up of a well-established system which favoured a privileged few. While, therefore, we must recognise that there is class conflict, there is no reason why we should not deal with it through these peaceful methods. They will only succeed, however, if we have a proper objective in view clearly understood by the people.
We have deliberately laid down as our objective a socialist pattern of society. Personally I think that the acquisitive society, which is the base of capitalism, is no longer suited to the present age. We have to evolve a higher order more in keeping with modern trends and conditions and involving not so much competition but much greater cooperation. We have accepted socialism as our goal not only because it seems to us right and beneficial but because there is no other way for the solution of our economic problems. It is sometimes said that rapid progress cannot take place by peaceful and democratic methods. I do not accept this proposition. Indeed, in India today any attempt to discard democratic methods would lead to disruption and would thus put in end to any immediate prospect of progress.
The mighty task that we have undertaken demands the fullest cooperation from the masses of our people. The change we seek necessitates burdens on our people, even on those who can least bear them; unless they realise that they are partners in the building of a society which will bring them benefits, they will not accept these burdens or give their full cooperation.
Whether in land or industry, or in the governmental apparatus, institutional changes become necessary from time to time as functions change. A new set of values will replace those that have governed the old acquisitive society based on the profit motive. The problem before us is ultimately to change the thinking and activities of hundreds of millions of people, and to do this democratically by their consent.
India today presents a very mixed picture of hope and anguish, of remarkable advances and at the same time of inertia, of a new spirit and also the dead hand of the past and of privilege, of an overall and growing unity and many disruptive tendencies. Withal there is a great vitality and a ferment in people’s minds and activities.
It is a remarkable thing that a country and a people rooted in the remote past, who have shown so much resistance to change in the past, should now be marching forward rapidly and with resolute steps.
What will emerge from the labour and the tumults of the present generation? I cannot say what will tomorrow’s India be like. I can only express my hopes and wishes. I want India to advance on the material plane—to fulfil her Five-Year Plans to raise the standards of living of her vast population; I want the narrow conflicts of today in the name of religion or caste, language or province, to cease, and a classless and casteless society to be built up where every individual has full opportunity to grow according to his worth and ability. In particular, I hope that the curse of caste will be ended, for there cannot be either democracy or socialism on the basis of caste.

Four great religions have influenced India—two emerging from her own thought, Hinduism and Buddhism, and two coming from abroad but establishing themselves firmly in India, Christianity and Islam. Science today challenges the old concept of religion. But if religion deals not with dogmas and ceremonials, but rather with the higher things of life, there should be no conflict with science or inter se between religions. It might be the high privilege of India to help in bringing about this synthesis. That would be in India’s ancient tradition inscribed on Asoka’s edicts.
Tomorrow’s India will be what we make it by today’s labours. We have started on this pilgrimage with strong purpose and good heart, and we shall reach the end of the journey, however long that might be.
What I am concerned with is not merely our material progress, but the quality and depth of our people. Gaining power through industrial processes, will they lose themselves in the quest of individual wealth and soft living? That would be a tragedy, for that would be a negation of what India has stood for in the past and, I hope, in the present time also as exemplified by Gandhiji.
Can we combine the progress of science and technology with this progress of the mind and spirit also? We cannot be untrue to science, because that represents the basic fact of life today. Still less can we be untrue to those essential principles for which India has stood in the past throughout the ages.

From India Today and Tomorrow, Azad Memorial Lectures, New Delhi (February 1959)