Skip to main content

Review :Makers of Modern India- Ramachandra Guha

வரலாற்றசிரியர் ராமசந்திர குஹா தொகுத்த Makers of Modern India நவீன இந்தியாவின் சிற்பிகள் என தமிழ்வடிவில் திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகம் 2014ல் வெளியிட்ட புத்த்கம். கிண்டில் தமிழ் புத்தக வரிசையில் கிடைத்ததால் படிக்கமுடிந்தது. விலை ரூ 400. ஆங்கில புத்தகம் 270ல் கிடைக்கலாம்.

மகாத்மா காந்திஜவாஹர்லால் நேருபி.ஆர். அம்பேத்கர், · ராம்மோகன் ராய்ரவீந்திரநாத் தாகூர்பாலகங்காதர திலகர், பெரியார், · முகம்மதுஅலி ஜின்னா,· சி.ராஜகோபாலச்சாரி,· ஜெயப்பிரகாஷ் நாராயண்,· கோபாலகிருஷ்ண கோகலே,· சையது அகமது கான்,· ஜோதிராவ் ஃபுலே,· தாராபாய் ஷிண்டே,· கமலாதேவி சட்டோபாத்யாய், · எம்.எஸ்.கோல்வல்கர்,· ராம் மனோகர் லோஹியா,· வெரியர் எல்வின்,· ஹமீத் தல்வாய்  என 19 பெரியவர்களின் முக்கிய சொற்பொழிவுகள், கட்டுரைகள் என கருதப்பட்டவை அவர்கள் குறித்த் குஹாவின் முன்னுரையுடன் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. அற்புத சிந்தனை தெறிப்புகளை அனைத்து முன்னோடிகளின் பேச்சு- எழுத்தில் ஒருவர் காணமுடியும்.  அவர்கள் நமது நாட்டின் மக்கள் வளர்ச்சிக்காக சமுக நல்லிணக்கத்திற்காக மத ஒற்றுமைக்காக, ஒடுக்கப்பட்டவர்பால் மிகுந்த கரிசனத்துடன் பேசியவை காணப்படுகின்றன. இது மாதிரியான தொகுப்பு ஒன்றை ராமசந்திரா தான் கொணரவேண்டும் என்பதில்லை. எவர் வேண்டுமானாலும் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் அதற்கான Resources- அதில் பொருத்தமான தேர்வு என்பதில் ராமசந்திராவின் நவீன இந்தியா குறித்த – வரலாற்றுப் பார்வை, தவிப்பை நம்மால் உணரமுடியும்.

தமிழில் இப்படிப்பட்ட நூல்கள் நமது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள உதவும். ஒருவருக்கு எதிராக தொடர்ந்து மற்றவரை நிறுத்தி அவர்கள் போராடிய காலச்சூழல், தேவைகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளாமல் சிலரை புனிதப்படுத்தி மற்றவரை வில்லனாக்கும் பார்வையிலிருந்து இப்புத்தகம் மாறுபட்டு நிற்கிறது. அவரவர் முயற்சியில் நாட்டின் முழுமையான அல்லது பகுதிசார்ந்த மேம்பாட்டிற்கான அப்பெருமகனார்களின் முயற்சி - சில மிக உயர்ந்த அவர்களின் பேச்சு- எழுத்துக்களை குஹா காட்ட முனைந்திருப்பது பாராட்டிற்குரியது. கோல்வால்கரை சேர்க்க முடிந்த அவரால் எந்தவொரு கம்யூனிஸ்ட் போராளியையும் சேர்க்கமுடியாமல் போனதேன். விடுதலைக்கு முன்பாக பிரிவுகளாக இயங்கினாலும் சோசலிஸ்ட்கள், போஸ் என இட்துபிரிவினரை எடுத்துக் கொண்டவர் சோவியத்- கோமிண்டர்ன் சொற்படி கேட்டவர்கள் என்பதால் பிற இரு இட்து பிரிவுகளாக இருந்த எம் என் ராய், கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொள்ளாமல் விட்டதை ஏற்க முடியவில்லை. அவர்களிடம் எந்த ஒரிஜினாலிட்டியையும் குஹா காணவில்லையா – அவர்கள் மேற்கூறிய தலைவர்கள் போல் சுயமாக சிந்திக்காதவர்கள் வகையினரா என்ற கேள்விகள் எழும்புகின்றன. இதற்கான பதிலை குஹா தனது முன்னுரையில் ஆம் அவை இறக்குமதி கொள்கைகள் என்கிறார். மார்க்சியம் மட்டும் இப்புத்தகத்தில் இடம் பெற வைக்கப்படவில்லை என்கிறார்.  மற்றவர் எவருக்கும் எந்த வெளிநாட்டிலிருந்தும் சிந்தனையாளர்கள் பாதிப்பு இருக்கவில்லையா? டால்ஸ்டாய், தோரோ, கரிபால்டி, மாஜினி என சிந்தனைப் பற்றாதவர் எவர். ஆங்கில ஆட்சியின் ஊடாக வளர்ந்த மேற்கித்திய சிந்தனையாகத்தானே சம்த்துவம், சுதந்திரம் , சகோதரத்துவம் வந்தது. அய்ரோப்பிய சிந்தனைகள்  ஊடும்பாவுமாக இத்தலைவர்களை கவ்வி பற்றவில்லையா?  இப்புத்தகத்தில் மார்க்சியம்- அதை பிடிவாதமாக ப்ற்றிகொண்டு செயல்பட்ட ஏதாவதொரு தலைவர் பற்றி சொல்லியிருக்கலாம். கேரளாவில் அனுபவமான நம்பூதிரி, சிந்தனையாளர் தாமோதரன், அச்சுதமேனன் அல்லது மேற்கு வங்க 25 ஆண்டுகள் ஆளும் அனுபவத்துடன் வாழ்ந்த ஜோதிபாசு  என எடுத்து பேசியிருக்கலாம். விவசாய புரட்சி குறித்த பேச்சுக்கள் இடம் பெற்றது போல் தொழிற்சங்க இயக்கத்தில் வாழ்ந்த முன்னோடிகள் டாங்கே , ரணதிவே ,கம்யூனிஸ்ட் அல்லாத என் எம் ஜோஷி, என எவரையாவது எடுத்து அவர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கலாம். எம் என் ராய் எடுத்து அவரின் மார்க்சியம் சார்ந்த, கம்யூனிசத்திற்கு அப்பால் என்பதை பேசியிருக்கலாம். மார்க்சிய  எழுத்துக்களுடன் தொடர்புடையவன் என்ற வகையில் இப்புத்தகத்தில் குறையாகபடுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்புத்தகம்  நேரமுள்ளவர்களால் படிக்கப்படுவது அவசியமானது..

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு