பட்ஜெட்டும் மாநில ஒதுக்கீடும் பட்ஜெட் குறித்து பல ஆவணங்களை இண்டியாபட்ஜெட் இணையத்தில் தேடுபவர்களால் பார்க்கமுடியும். நிதி அமைச்சர் பட்ஜெட் உரை 90 நிமிடம் என்பதில் கொண்டுவரமுடியாத ஏராள விவரங்கள் அந்த ஆவணங்களில் காணப்படும். வழக்கம்போல் பட்ஜெட் குறித்து ஆளுங்கட்சிக்காரார்கள் கொண்டாடுவதும், எதிர்கட்சியினர் விமர்சிப்பதும் இம்முறையும் நடந்து வருகிறது. அமிர்தம் என ஆள்வோரும், நாற்காலி காப்பாற்ற மட்டுமே என எதிர்கட்சி கேலியும் பார்த்து வருகிறோம். இந்த ஆவணங்கள் பல நூறு பக்கங்கள் கொண்டவை. பலரது உழைப்பால் தயாரிக்கப்பட்டவை. புள்ளி விவரங்களின் நேர்மை குறித்து நாம் சொல்லவேண்டும் என்றால் , வேறு நம்பிக்கையான மாற்று விவரங்கள் கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஊடகங்களில் மேலெழுந்த விவாதமும், சில ஆங்கில ஊடகங்களில் நிபுணத்துவர்களின் எதிரும் புதிருமான விவாதங்களும் காணக்கிடைக்கின்றன. நேற்று தமிழ் டிவி ஒன்றில் பலர் விவாதத்தில் ஒப்பேற்றிக்கொண்டிருந்தனர். தற்குறிகள் என திட்டிக்கொண்டனர். கட்சி சார்ந்து நின்று பேசினர். நெறியாளர் பட்ஜெட்டே இல்லாமல் இருந்தால்
இந்திராணி ஜெகஜீவன்ராம் சுயசரிதைகள் சுவையானதாகவும் செய்திகளைத் தரக்கூடியதாகவும் இருக்கும் . சில நேரம் நல்ல அனுபவமாக இருக்கிறதே எனக்கூடத் தோன்றும் . அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் மனோபாவம் இருக்கத்தானே செய்கிறது . திருமதி இந்திராணி ஜெகஜீவன்ராம் தன் வரலாறு நினைவுக் குறிப்புகள் ஆங்கிலத்தில் Milestones என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது . வந்து மாமாங்கம் ஆகிறது . இந்தியில் 1990 களில் மூன்று வால்யூம்களாக அவை இந்தியர்களுக்கு கிடைக்கப்பெற்றன . ஆங்கிலத்தில் 300 பக்கங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது . பெங்குவின் இந்தியா கொணர்ந்துள்ளனர் . மகள் புகழ்வாய்ந்த மீராகுமார் சிறிய முன்னுரை எழுதியுள்ளார் . 1946 லிருந்து மிக உயர்ந்த அதிகார ஆட்சிமுறை வீட்டின் பெண்மணி என்கிற வகையில் இந்திய அரசியலின் நுணுக்கங்களை - அதன் மேடு பள்ளங்களை நன்கு அறிந்தவராகவே இந்திராணி அம்மையார் இருந்திருப்பார் . எதைச் சொல்லலாம் - கூடாது என்பதில் அவருக்குள் போராட்டம் நடந்திருக்கும் . பாபுஜி என அழக்கப்பட்ட ஜெகஜீவன் வாழ்க்க