பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்க்கு நல்வாழ்த்துகள் என் வாழ்த்துகளை சம்பந்தப்பட்ட தொழிலாளரோ அவர்களின் தொழிற்சங்க தலைவர்களோ பார்ப்பார்களா எனக்கூட நான் அறியேன். கொஞ்சம் தொழிற்சங்க அனுபவம் பெற்ற வகையில் ஏற்பட்ட பழக்கம் எழுத வைக்கிறது. வேலை - உழைப்பு என்பதுதான் மனிதனை கண்ணியமிக்கவனாக்குகிறது. வேலையின்மை என்பது ஒருவகை economic death sentence ஆகிறது. இந்த வகையில் போராட்டம் முடிந்து அத்தொழிலாளர் வேலைக்கு மீண்டும் செல்வது மிக முக்கியமான ஒன்று. நல்வாழ்த்துகள். அக்டோபர் 15, 2024 ல் பேச்சு வார்த்தை இறுதிநிலையை அடைந்து , நிருவாகத்தினர்- தொழிலாளர் தரப்பு இரு சாராருக்கும் தமிழ்நாடு லேபர் கமிஷனர் அறிவுரை தரப்பட்டு ஏற்கப்பட்ட சூழல் உருவான நிலையில் போராட்டம் முடிவிற்கு வந்தது. அந்த 4 அறிவுரையின் சாராம்சத்தை தமிழக அமைச்சர் குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ( கையெழுத்து இல்லா நகலை) வெளியிட்டிருந்தனர். சம்பந்தப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பேட்டியிலும் அந்த 4 அம்ச அறிவுரைகள் இருதரப்பினராலும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கையெழுத்திடப்பட்ட அதிகாரபூர்வ நகலை என்னால் பார்க்க இயலவில்லை. போர
Communism in India Unpublished documents Subodh Roy பிரிட்டிஷ் உளவுத்துறையினரால் போல்ஷ்விக்குகள் ஆதரவு இந்தியர்கள் (உள்நாட்டு, வெளிநாட்டு) குறித்து பல்வேறு அறிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றை National Archives லிருந்து தொகுத்து 1970களில் Communism in India Unpublished documents என்று 3 வால்யூம்களை சுபோத் ராய் என்பார் கொணர்ந்தார். முதல் தொகுப்பு 1919-24வரையிலான காலத்திற்குரியது. 1997ல் சிபிஎம் சார்பான என்பிஏ கணசக்தி பிரிண்டர்ஸ் இதைக் கொணர்ந்தனர். அதிகாரபூர்வ கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் இடம் பெற்றிருக்காத சில செய்திகள் இதில் இருப்பதால், ஆய்வாளர்க்கு சரி பார்த்து வரலாற்றை புரிந்து கொள்ள இத்தொகுப்பு உதவலாம் என சுபோத் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைகள் எல்லாம் Director criminal Intelligence Home இலாகாவிலிருந்து வாரந்திர மாதாந்திர அறிக்கைகளாக அனுப்பபட்டவை. உளவுத்துறை அனுப்பும் குறிப்புகள் என்ற அளவில்தான் இவற்றை காணவேண்டியிருக்கும். எல்லாமே எட்டுக்கட்டுகள் என்பதாக இராது. observation facts speeches written docs என்பனவும் இவ்வறிக்கைகளில் இடம் பெறத்தக்கவகையில் அவர்கள் செயல