https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, March 23, 2023

அம்பேத்கர் அறிவுசார் சரிதை

 

அம்பேத்கர் அறிவுசார் சரிதை

Dr Ambedkar an Intellectual Biography of Ideas, enlightenment, life and liberation work என்ற நீளமான தலைப்பில் அம்பேத்கரின் வாழ்க்கைப்போராட்டம், சிந்தனை செயல் ஓட்டங்களை சித்தரிக்கும் புத்தகம் 2016 ல் வந்தது. Vijay Mankar ஆசிரியர்.



இப்படி intellectual biography  மார்க்ஸ், லெனின் போன்றவர்களுக்கும் வந்துள்ளன. அவர்கள் தங்கள் சூழலில் வந்தடைந்த சிந்தனைப்புள்ளிகளையும் அதற்கு முன்வைக்கும் செயல்பூர்வ திட்டங்களையும் பொதுவாக இந்த intellectual biography பேசுவதைக் காணமுடியும்.

விஜய் மாங்கர் இந்த நூலில் அம்பேத்கரை குறிப்பிடும் இடங்களில் எல்லாம் capital  ‘H’ He His எனப்பயன்படுத்தியிருப்பார்.   காரணமாக the relevance and regard for this great man எனச் சொல்கிறார். அதேபோல பிராமணர் குறிக்க எல்லா இடங்களிலும் small  b பயன்படுத்தியிருப்பார். காரணம் அவர்களின் anti social, anti human ideologies and institution எனச் சொல்கிறார்.

விஜய் மாங்கர் ஏறத்தாழ ஒரு லட்சம் பக்கங்களின் வாசிப்பு வழியாக 360 வால்யூம் புத்தகங்கள், 650 notes மூலம் தனது ஆய்வை செய்து இந்த புத்தகத்தை தந்ததாகச் சொல்கிறார். விஜய் மாங்கர் group A அதிகாரிப் பணியைத்துறந்து அம்பேத்கர் ஆய்வில் தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக்கொண்டுள்ள அறிஞர் மற்றும் அமைப்பாளர்.  50 வயதான விஜய் மாங்கர் தனது 20 ஆம் வயதிலிருந்து அம்பேத்கரின் தீவிர வாசிப்பாளர். 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதாகச் சொல்கிறார்.

நூலில் நுழைவாயிலில் விஜய் இவ்வாறு சொல்கிறார்.

Dr. B R Ambedkar : An Intellectual Biography, is an exposition for human enlightenment and the reconstruction of the world. A brief biographic account of this greatest among great men- Dr Babasaheb Ambedkar therefore needs a special mention. In twenty four chapters we shall take a voyage to His life and work..

இந்த விஜய் மாங்கர் அவர்களின் ’வாயேஜ்’ எப்படி செல்கிறது எனப் பார்க்கலாம்.

                                      2

விஜய் மாங்கரின்அம்பேத்கர் அறிவு சரிதைஅவர் குறித்த பெரும் hagiography வகைப்பட்ட புத்தகம். 490 பக்கங்களைக்கொண்ட இதன் முதல்பாகமான 145 பக்கங்களிலிருந்து அதில் உள்ளவாறு சில செய்திகளை தந்துள்ளேன். இரண்டாவது பகுதி அவரது சிந்தனை முன்வைப்புகளை அவரது ஆக்கங்களிலிருந்து பேசும் பகுதி.

அம்பேத்கர் பெற்றோர் ராம்ஜி சக்பால்- பீமாபாய்க்கு 14 குழந்தைகள். மிஞ்சி உயிர் தரித்த குழந்தைகளாக பலராம், ஆனந்தராவ், பீம்ராவ், மஞ்சுளா, துளசி இருந்தனர்.

அம்பேத்கருக்கு 18/19 வயதில் துணைவியாராக ரமாபாய் 13/14 வயதுக்காரர் அமைகிறார். 1912ல் முதல் மகன் யஷ்வந்த் பிறக்கிறார். 1917-1920க்குள் கங்காதர், இந்து, ரமேஷ் பிறக்கின்றனர். யஷ்வந்த் மட்டுமே தறிக்கிறார்.

லண்டனில் அம்பேத்கர் பெர்ட்ரண்ட் ரசலை சந்தித்து உரையாடுகிறார். அம்பேத்கரின் நலன் விரும்பியாக இருந்த நண்பர் நவல் படேனா. பேரா செலிங்மேன், ஜாகோபி போன்றவர் அவருக்கு ஆலோசகர்களாக இருந்தனர்.

லண்டனில் அவர் தங்கியிருந்த புரூக் கிரீன், ஹாம்மர் ஸ்மித் பகுதியில் தோழியானவர் Fanny Fitzerlands.

திலகரின் மகன் சித்தார்த்பந்த் திலகர் அம்பேத்கர் மீதான மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தார்.

அம்பேத்கரின் பம்பாய் சட்டமன்ற நுழைவு, மகத் சத்தியாகிரகம் பற்றி குறிப்புகள் உள்ளன. சைமன் கமிஷன் , காலராம் கோயில் சத்தியாகிரகம் பேசப்பட்டுள்ளது.

வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் பங்களிப்பு, காந்தியுடனான மோதல் சொல்லப்படுகிறது. முதல் முறையாக அம்பேத்கர் காந்தி சந்திப்பு மணிபவனில் 14.8.1931 மதியம் 2 மணிக்கு நடந்தது. Gandhi was discourteous என்ற குற்றச்சாட்டு இங்கும் வைக்கப்பட்டுள்ளது. affront conversation left Gandhi starred என்றும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. அம்பேத்கர் இப்படிச் சொன்னாராம்

We believe in self help and self respect. We are not prepared to have faith in great leaders and Mahatmas…

கம்யூனல் அவார்ட் ஆகஸ்ட் 17, 1932 ல் அறிவிக்கப்பட்டதை அறிவோம். ஆனால் மே மாதம் அம்பேத்கர் confidentially proceed to London and met PM Ramsay…The day when PM signed the Award, Ambedkar was in London on 4th Aug என்ற தகவல் தரப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ஏதும் ஆசிரியர் தரவில்லை.

அடுத்து காந்தியின் உண்ணா நோன்பு பேச்சு வார்த்தைகள் புனே உடன்பாடு சொல்லப்படுகிறது. காந்தி குறித்த விமர்சனங்கள் சொல்லப்பட்டுள்ளன. காந்தியின் மகன் தேவதாஸ் கண்ணீர் மல்க தனது தந்தையின் உயிரை காக்க வேண்டி அம்பேத்கரை சந்தித்த செய்தியும் உள்ளது. இது எந்த தேதியில் எங்கு நடந்தது என்பது பற்றி குறிப்பேதும் ஆசிரியரால் தரப்படவில்லை.

அக் 13, 1935ல் conversion call- I shall die as a Hindu என்ற அறிவிப்பை அம்பேத்கர் தந்தார். ஜட் பஸ் தோடக் மண்டல் Annihilation of caste issue, Independent Labour Party நடவடிக்கைகள் சொல்லப்பட்டுள்ளன.

1936 நவம்பர் மற்றும் ஜனவரி 13, 1937 வரை அய்ரோப்பாவில் அம்பேத்கர் இருக்கிறார். வதந்தி ஒன்று பரவியது. The Daily Star evening newspaper of London had reported “ Dr Ambedkar secretly married an English Widow, left Venice with wife, Jan 3”. Vividharvretta பம்பாய் இந்த செய்தியை வெளியிட்டதாம். இதற்கு டாக்டர் அம்பேத்கர் ஏதாவது மறுப்போ கருத்தோ தெரிவித்தாரா என்ற செய்தி இந்த நூலில் இல்லை.

சித்ரா எனும் பத்திரிகையில் அம்பேத்கர் described ’Gandhi age’ as dark age in an article ‘Gandhi A Mahatma?’ . Ambedkar asked people to read RTC speeches to judge who is anti national.

 

அம்பேத்கர் நேருவை முதல்முறையாக அக் 1939ல் சந்திக்கிறார். இருவரும் ஒடுக்கப்பட்டவர் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். நேரு விடைபெற்றவுடன் தனது சக தோழர்களிடம் அம்பேத்கர் இப்படி பதிவொன்றை தந்தாராம். Dr Ambedkar thought ( Nehru) no better than a fourth standard student. இப்படி கருத்து மதிப்பீடுகளை அம்பேத்கர் தருவது நியாயமாகுமா என ஏற்கமுடியவில்லை.

இந்துத்துவம் பாசிச கொள்கை என்ற கருத்தை அம்பேத்கர் பிரதிபலித்ததை இந்த புத்தகம் இப்படி சொல்கிறது.

Hinduism is a political ideology of the same character as the Fascist or Nazi ideology and thoroughly anti democratic.

Viceroy Executive council Labour Minister ஆக அவரது பணிகள் சிறக்க சொல்லப்படுகின்றன. அப்படி அந்த அமைச்சர் கவுன்சிலில் நுழைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் காண்கிறோம்.

ஜூலை 1942ல் அம்பேத்கர் All India Depressed class Meetல் கொடுத்த விளக்கம் அவரது சிந்தனை செயலின் மய்யத்தன்மையை புலப்படுத்தும். இதிலும் காந்தி மீதான தாக்குதல் இருப்பதைக் காண்கிறோம்.

The key note of my politics lies in the proposition that the untouchables are not a sub head or sub section of the Hindus, and they are separate and distinct element in the national life of India…one malignant factor which has been working to weaken our position is Gandhi and Gandhism. By signing Poona pact I helped to save the life of Mr Gandhi. Mr Gandhi not withstanding the Poona pact which saved him from death never gave his true and honest consent to the principle underlying the Poona pact.

இங்கு புனே உடன்பாடு பற்றி குறிப்பிடுகையில் தனது தாராள மனதின் பெருமிதங்களை மட்டுமே அம்பேத்கர் உணர்ந்து பேசுவது போல் இருக்கிறது. வேறு யார்க்கும் எந்த பங்கோ, அல்லது அவர் கோரிக்கையில் உறுதியாக காந்திக்கு எதுநேர்ந்தாலும் அது குறித்து பொருட்படுத்தாமல் அவரால் ஏன் நிற்கமுடியாமல் போனது என்பது பற்றியோ அவரிடம் விளக்கம் ஏதுமில்லை. அப்படி அவர் மனம் கசிந்து உதவியிருந்தால் அதை சொல்லிக்காட்டி அரசியல் செய்வது அவரின் மேதைமைக்கு அழகாக என்னால் உணரமுடியவில்லை.

 

அம்பேத்கர் ஜூலை 18 , 1942ல் பேசியதாக நூலாசிரியர் விஜய் சொல்வது if I fail myself I will shoot myself . இதன் அதீத உளவியல் அவரின் சாதிக்க வேண்டிய வைராக்கியத்தையும், இல்லையேல் மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற விரக்தியையும் புலப்படுத்துகின்றனவா?

1946ல் (கவுன்சில் அமைச்சர் குழாமில் நுழைய) ஜெகஜீவன்ராம் முக்கியத்துவம் பெறத்தக்க வகையில் காய்கள் நகர்த்தப்பட்டதாம். இங்கும் காந்தி மீதான விமர்சனம் வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு தனிக்கல்லூரி என அம்பேத்கர் சொன்னதை மாளவியா விமர்சித்தார். பதில் விமர்சனத்தை பனாரஸ் முழுமையாக பார்ப்பனர்களுக்கு ஆகிவிட்டதே என அம்பேத்கர் வைத்தார்.

மார்ச் 26, 1946 ல் அம்பேத்கர்  தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார். அவரின் உறுதிப்பாட்டை நமக்கு அவ்வரிகள் காட்டுகின்றன.

I want to tell my Hindu friends that I shall not live on their charity. I do not want their charity. I am a citizen of this country. I am entitled to claim from the Government Treasury whatever rights and benefits every other community is claiming itself. I do not want charity.

காபினத் தூதுக்குழுவிடம் அம்பேத்கர் ஏப்ரல் 5 1946ல் SCs do not want Cabinet Assembly - a commission to solve constitutional questions என்றார். வேண்டாம் எனச் சொன்ன அரசியல் அசெம்பிளி வருவது உறுதியான நிலையில் அதற்குள் செல்வதற்கான முயற்சிகளை ஜோகேந்திரநாத் மண்டல் உதவியுடன் மேற்கொண்டார். வங்கத்திலிருந்து ஜூலை 19, 1946ல் அவர் தேர்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் பிரிந்த பின் மராட்டியத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் கட்டளைப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வர்ணாஸ்ரமத்தை ஒழிக்க முடிந்தால் அது சூத்திரர்களால்தான் முடியும். அதற்கு அவர்கள் பயிற்சிக்கப்படவேண்டும். அது இருப்பதற்கு அவர்களும் காரணம் என அவர் 1946 ல் எழுதிய who were Shudrasல் தெரிவித்தார்.

It is the shudras, who have been largely been the instrumental in sustaining the infamous system of Chaturvarnya, though it has been the primary cause of their degradation and that only the Shudras can destroy the Chaturvarnya,  it would be easy to realize why I allowed the necessity of educating and thereby preparing the Shudra fully for such a sacred task to outweigh all other considerations.."

காபினட் தூதுக்குழுவில் திருப்தி அடையாத அம்பேத்கர் 1946 அக்டோபரில் லண்டன் சென்றாராம். நவம்பரில் அவர் அட்லி, சர்ச்சில் போன்றவர்களை சந்தித்து உரையாடுகிறார். Abrogating Poona Act என்ற கோரிக்கையை வைக்கிறார். அட்லி SCs needed to be looked after என்றும், சர்ச்சில் keen and desirous of seeing SCs were protected in any constitution என்று அம்பேத்கர் வெளிப்படுத்தினார்.

எட்வினா மவுண்ட்பாட்டன் வந்தவுடன் சந்தித்த ஒரு சிலரில் அம்பேத்கரும் ஒருவர். நாட்டின் பிரிவினைக்குப் பின்னர் இந்தியா பற்றி கருத்துச் சொல்ல ஜின்னாவிற்கு உரிமையில்லை என்பதை அம்பேத்கர் தெரிவித்தார்.

Mr Jinnah asked for his Pakistan State and he has got it. After that he has no more right to speak on the affairs of the Indian Union that has any other foreign ruler…His party’s unwillingness to stay in the Union has won it separation. It cannot now start sowing seeds of trouble in rest of India.

தேசியக்கொடியில் தம்ம சக்கரம் இருப்பதும் அதன் saffron வர்ணத்தையும் புத்தரின் குறியீடுகளாக அவர் பார்த்து வரவேற்றார்.

அரசியல் அசெம்பிளியில் அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக, பல்வேறு கமிட்டிகளில் அவர் ஆற்றிய பணி சொல்லப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் தன்னைக் கவனித்து உடல் நலம் காத்திட டாக்டர் சாரதா கபிர் அவர்களை ஏப்ரல் 15, 1948ல் மணம் முடிக்கிறார். இந்த திருமண எண்ணத்தை வெளிப்படுத்தி இரகசியம் காக்குமாறு மார்ச் 6 அன்றே கெயிக்வாடிற்கு அம்பேத்கர் கடிதம் எழுதுகிறார்.

…medical advisers have been urging me to keep a nurse or housekeeper if I did not wish to marry..

I have no doubt that keeping a nurse or housekeeper would give rise to scandal. The better course is to marry. After Yeshwant’s mother’s death I had decided not to marry. But under situation have forced my resolution. The doctor says that for me the choice is between marriage and early death.

 

A women to be my wife must be educated, must be a medical practitioner and must be good at cooking. It would be impossible in our community to find a women who would combined the three qualifications and also suit my age. Fortunately I have been able to find one. She comes from the Saraswat Brahmin community. The marriage at present will take place in Delhi on the 15 th April. Keep this confidential.

என்று திருமணம் குறித்து முன்னரே தெரிவித்து இரகசியம் காக்குமாறு சொன்னதைக் காண்கிறோம்.

ஒருமுறை சிவராஜ் அவர்களிடம் வாசிக்கும் முறை பற்றி அம்பேத்கர் கருத்து தெரிவித்தார். சிலவற்றை புரட்டினால் போதும். சில புத்தகங்கள்தான் ஆழமான வாசிப்பைக்கோரும். Casual browsing, cursory reading, through reading என அவர் வகைப்படுத்துவர். அம்பேத்கர் பெரும் புத்தகக்காதலர் . ஒருமுறை இப்படி தெரிவித்தார்

Is there a man in Asia who has climbed the Everest of Knowledge? Remember he is Ambedkar.

பல்லாயிரக்கணக்கான நூல்களை அவரது நூலகம் கொண்டிருந்தது. எந்த நூல் எங்கு என்ன அட்டையில் என்பது கூட அவருக்கு தெரியும். தெலாங் என்பாரின் நூலகத்தின் லாரி நிறைய புத்தகங்களை ஒரு புத்தகம் ரூ 2 flat priceல் அம்பேத்கர் வாங்கினார். மதன்மோகன் மாளவியா ரூ 2 லட்சம் கொடுத்து நூலகத்தை கேட்டபோது புத்தகங்கள் போனால் என் உயிர்போவது போல் என அம்பேத்கர் மறுத்தார். பிர்லா கேட்டபோது மறுத்தார். நேரு என்னிடம் உள்ள titles- subjects விட மிக அதிகமாக அம்பேத்கரிடம் இருந்ததாக வியந்துள்ளார். வாழ்நாள் முழுதும் பெரும் அறிவுக்காதலராக அம்பேத்கர் வாழ்ந்தார்.

புத்தரும் தம்மமும் மார்ச் 1956ல் அவர் எழுதி முடித்தார். அக்டோபர் 14, 1956 புத்தமதத்திற்கு மாறும் நாளும் வந்தது. Purification of land where conversion at the hands of a Brahmin Bhavanishankar என்ற செய்தி அவரிடம் எட்டியபோது, அப்படி என்றால் நான் வரமாட்டேன் என்ற உறுதியை அவர் காட்டினார். I will not keep my feet that land purified by that Brahmin.

எனது மதமாற்றம் முற்றிலும் பாரத வயப்பட்டதே..அதன் பெருமைமிகு இந்திய கலாச்சாரமே. உலகிற்கே இந்த நாடு கொடுத்த அருங்கொடை புத்தம் என்பது. இங்கு இந்துக்கள் அவர்களின் முட்டாள்தனத்தால் இந்த பெருமையைஇழந்து விட்டனர். அதை நான் மீட்டுள்ளேன் என்றார். அம்பேத்கர்.

டிசம்பர் 6, 1956ல் மரணம் அவரைத் தழுவியது. The cause of death mysterious என்றும் சாக்சேனா அறிக்கை ஏன் பொதுவெளியில் வரவில்லை எனவும் விஜய் மாங்கர் வினவுகிறார்.

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதி ideas enlightenment and reconstruction of world என்ற தலைப்பில் 8 அத்தியாயங்களில் அவரது சிந்தனை முன்வைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கரை தெய்வீக ஆராதனைக்குரியவராக உயர்த்துவதோ, போற்றிப்புகழ் பாடுவதோ ஆசிரியர் நிலைப்பாடாக இருக்கலாம். அம்பேத்கர் போற்றல் என்பது கண்டிப்பாக அதன் நாணயத்தின் மறுபக்கமாக காந்தி தூற்றல் என்பதாக இருக்க வேண்டுமா?

இலட்சக்கணக்கான பக்கங்களை படித்து விட்டு எழுதியிருப்பதாகசொல்லும் ஆசிரியர் ஆங்காங்கே உரிய ஆவண குறிப்புகளை பல இடங்களில் காட்டாமல் செல்கிறாரே எனத் தோன்றுகிறது.

23-3-2023

 

 

 

 

 


Saturday, March 18, 2023

மேகநாத் தேசாயின் Marx’s Revenge

 

மேகநாத் தேசாயின் Marx’s Revenge

மேகநாத் தேசாயின் Marx’s Revenge : The Resurgence of Capitalism and the Death of Statist Socialism மிக கவனத்துடன் படிக்கப்படவேண்டிய புத்தகம். முதலாளித்துவம் எப்படி தொடர்ந்து தன்னை காத்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பேசும் புத்தகம். அது மட்டுமல்லாமல் அரசு சோசலிசம் வீழ்ந்த கதையையும் பேசுகிற புத்தகம்.




மார்க்ஸ் எழுதிய காபிடலின் மய்ய சரடிலிருந்து, எங்கெல்ஸ் தொகுத்த மூலதனம் பாகங்கள், பெர்ன்ஸ்டைன், காட்ஸ்கி புரிந்துகொண்டவை, லெனினின் பொருளாதார குறிப்புகள், ரோஸாவின் மூலதனக்குவியல், ஹெல்பர்டிங் எழுதிய இம்பீரியலிசம், லெனின் வரையறுத்த இம்பீரியலிசம் என்ற பல்வேறு ஆக்கங்களின் அடைப்படையில் மிக நுணுக்கமான விவரங்களை மிக கச்சிதமாக முன்வைத்து எழுதப்பட்டுள்ள புத்தகம்.

ஸ்கும்பீட்டர், கீன்ஸ், ஹாயக் குறித்த சில குறிப்புகளும் சுருக்கமாக இடம்பெற்றுள்ள புத்தகம்.

ஆடம்ஸ்மித் குறித்தும் ஹெகலின் அரசு குறித்தும் தனித்தனியான சாப்டர்கள் பேசப்பட்டுள்ளன. இலாபம் பற்றி ஸ்மித், ரிகார்டோவிற்கு இல்லாத பார்வை மார்க்சிடம் இருந்ததை profits என்ற சாப்டரில் தேசாய் விரிவாக விளக்குகிறார்.

அதேநேரத்தில் one reason for the controversy is the language of Marx used, the labour content of the wage he called ‘necessary labour’

Surplus labour= total hours worked- necessary labour

Rate of profit= surplus value /  variable capital+ constant capital. இந்த உபரி மதிப்பின் பொருத்தப்பாடு குறித்தும் பல்வேறு பொருளாதார அறிஞர்களின் வாதங்களை இந்த புத்தகம் முன்வைக்கிறது.

மார்க்ஸின் மூன்றாம் வால்யூம் 1894ல் வெளிவந்த பின்னர் அதுவும் பல அறிஞர்களுக்கு திருப்தியை தரவில்லை என்கிறார் தேசாய். அது முன்வைத்த transformation problem akin to destruction of capitalism என்பது விவாதமானது. அது அப்படியாகத்தான் இருக்க வேண்டுமா என்பது விவாதமானது.

இலாபம் வராமல் எவரையும் எந்த முதலாளியும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை. மார்க்ஸின் வகைப்பாட்டில் the falling tendency of profitability became entwined with the probability of survival of capitalism itself. மார்க்ஸ் தான் முதலில் cycle சுழற்சி குறித்தும் ஆழமாக யோசித்த முதல் அறிஞர். ஒருவரை ஒருவர் சார்ந்த ஆனால் முரண்பாடுகள் கொண்ட முதலாளி தொழிலாளி உறவு வழி அதை அவர் விளக்கினார்.

இதையும் மேக்நாத் தேசாய் தெரிவிக்கிறார். மார்க்ஸ் தனது பெரும் படைப்பில் சோசலிசத்தின் தன்மை இப்படித்தான் என்கிற ஊகங்களை வெளிப்படுத்தவில்லை.

மார்க்ஸின் rate of profit had a tendency to fall என்பது அப்படித்தான் வீழும் தன்மையிலாக தொடர்ந்ததா..என்ற கேள்வியும் தேசாயிடம் இருக்கிறது. இங்கு தேசாய் சொல்வது the seeds of recovery are within the crisis itself. The value of capital falls; hence a given amount of profit is now higher rate of profit .

பல நேரங்களில் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை பைபிளாக கொண்டாடுகிறோமே தவிர காபிடல் நூலை அல்ல என்ற வருத்தத்தையும் தேசாய் வைக்கிறார். இதற்கு காரணம் வெகு சிலர் மட்டுமே காபிடலின் மூன்று வால்யூம்களையும் வாசித்து புரிந்துகொண்டதுதான் என்கிறார். மேலும் அப்படி படித்தவர்களில் சிலரும் அவர்கள் சொல்வதைக் கேட்பவர்களில் பலரும் that in Capital Marx provided an analytical argument for the breakdown of capitalism என்று புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் தேசாய் தன் வாசிப்பாக கீழ்கண்ட வரிகளையே வந்தடைகிறார். இது தேசாய் வந்தடைந்த முக்கிய புள்ளி.

What we discover is that on reading capital, one could conclude that capitalism will live thorough cycles, and a slow as well as cyclical tendency of the rate of profit to decline.

சோவியத் அனுபவத்தில் டிராட்ஸ்கி போலவே தேசாயும் கேள்வியை வைக்கிறார். If capitalism is a global phenomenon, how can it be successfully challenged by socialists in a single country?

ரோசா லக்சமபர்க்கின் accumulation of capital ஆக்கம் குறித்து பேசும் தேசாய் ரோசா பேசிய அந்தடிபார்ட்மெண்ட் 3 குறித்த ஆயுத தளவாட உற்பத்தி பற்றிக் கூறுகிறார். லக்சம்பர்க்ஓரநாடுகளின் இருப்பால்மய்ய நாடுகளின் மூலதன வேட்டை பற்றி பேசினார்.

ஹில்பெர்டிங் வளப்படுத்திய finance capitalism பற்றி சற்று தேசாய் விளக்குகிறார். ருஷ்ய மார்க்சியர்கள் வெரா ஜசுலிச், நரோத்னிக்குகள், லெனின் , புகாரின் போன்றவர்களின் பொருளாதார புரிதல்களைச் சொல்லிச் செல்கிறார். Russian Revolution Miscarriage எனக்கேட்டு விவாதிக்கிறார். இரண்டாம் அகிலத்தில் காட்ஸ்கியின் புரிதலும் ஓரளவிற்கு தேசாயால் விவாதிக்கப்படுகிறது.

Socialism one or many என்கிற விவாதத்தில் socialism within capitalism, socialism outside capitalism , socialism beyond capitalism என்கிற சோதனைகளைச் சொல்கிறார். நமது நேருவை முன்னதற்கு உதாரணமாக சொல்லலாம் என்றால் (தேசாய் சொல்லவில்லை) சோவியத் முயற்சியை இரண்டாவதற்கும், மார்க்சிய perception யை மூன்றாவதிற்கும் சொல்லலாம் .

இரண்டாவது அகிலத்தின் திருத்தல்வாதம் குறித்த விமர்சனத்துடன் மூன்றாம் அகிலம் பிறந்தாலும் சோவியத் ரஷ்யாவின் தேசிய நலன்களை ஒட்டியே அதன் பார்வை இருந்ததை தேசாய் உணர்த்துகிறார். என் பி மூலம் சில சமரசங்களை லெனின் செய்யவேண்டிய எதார்த்தம் உணரப்பட்டது. லெனின் மறைவிற்குப் பின்னர் மார்க்சிசம் என்பதே ஸ்டாலின் சொல்வது என்றானதை தேசாய் விவரிக்கிறார்.

முசோலினி அரசில் இருந்த அறிஞர் ஜியோவன்னி ஜென்டில் என்பார்தான் totalitarian என்கிற பார்வையை முன்வைத்தவராம். ஜூலை 1932ல் நாசி கட்சி எனப்படும் National socialists அங்கு செயல்பட்ட ஜெர்மானிய கம்யூனிஸ்ட்களின் SPDயை விஞ்சி ஆட்சிக்கு வருகிறது. அந்த நேரத்தில் ஸ்டாலினும் எஸ் பி டி தலைமை எதிர்த்து அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் போராட வழிகாட்டினாராம். SPD social fascist என ஸ்டாலின் விமர்சித்தார். இன்னொரு தகவலையும் தேசாய் தருகிறார்.

ஹிட்லர் சுதந்திர சந்தை எதிர்த்தும் நின்றாராம். He abandoned the liberal tenets of free trade, free mobility of capital and labour and laissez faire , but without challenging Capitalism and profits என தேசாய் எழுதியுள்ளார். ஸ்டாலினுக்கு, ஹிட்லருக்கும் என்ன இதில் வித்தியாசம் என்பதையும் சுருக்கமாக தேசாய் தருகிறார்.

Statin’s challenge to the liberal order was that of economic development and industrialisation without resort to private property and profit making. Hitler’s challenge was to declare the free market wasteful, unnecessary for economic growth under capitalism .

பாவர்க், லுத்விக் மைசஸ் , ஹாயக் போன்ற ஆஸ்திரிய பொருளாதார மேதைகள் பற்றிய சிறு அறிமுகத்தையும் தேசாய் தருகிறார். ஸ்கும்பீட்டர் முதலாளித்துவத்தின் நல்லதும் மோசமானதுமான இரட்டை குணங்களை விவரித்ததாக தேசாய் சொல்கிறார். ஹாயக் bank credit- real cycle என்பது குறித்து பேசியதையும் , பால் ஸ்வீசி போன்றவர்களே தங்கள் இளமையில் Hayak had the key to capitalism சொன்னதாக அறிகிறோம்.

கீன்ஸ் தனது The General Theory of Employment, Interest and Money மூலம் உலக நாடுகளிடம் அரசாங்கங்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கினார். பொருளாதாரத்தின் மொழியையே அவரால் மாற்றமுடிந்தது என தேசாய் எழுதுகிறார். பெர்னார்ட் ஷாவிடம் பேசிய கீன்ஸ்தான் பொருளாதார அயின்ஸ்டின் என சொல்லிக்கொண்டதை தேசாய் குறிப்பிடுகிறார்.

கீன்ஸ் பேசிய வேறு ஒரு முக்கிய உரையாடலை தேசாய் தந்துள்ளார். மார்க்சின் உபரி மதிப்பு சரி ,ஆனால் if goods are not sold, the surplus value is just notional, unrealised என்கிற முக்கிய பார்வையை கீன்ஸ் வெளிப்படுத்தினார். கீன்ஸின் புரட்சி என்று அவர் கொண்டாடப்பட்டதைக் காண்கிறோம். பொருள் விற்கப்படவில்லை என்றால் உபரி மதிப்பை உணரமுடியாது என்ற விவாதம் வந்ததைக் காண்கிறோம்.

சோசலிசம் வேலைக்கு ஆகுமா என்ற ஒரு அத்தியாயமும் இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. நியுரத் எனும் அறிஞர் இவ்வாறு எழுதினார் “ The theory of Socialist Economy acknowledges only one manager or producer, the society, without calculation of losses or profits and without taking the circulation of money as a basis- no market..”

Mises இதை in societies based on the division of labour, the distribution of property rights effects a kind of mental division of labour, without which neither economy nor systematic production is possible என எழுதியதைப் பார்க்கிறோம். சோசலிசம் வேலையாகுமா என்பதற்கு எதிர்மறையாக அது irrational and impracticable என்றும் அவர் சொல்வதைக் காண்கிறோம். இந்த விவாதங்கள் முன்பே வந்தவைதான். மைசஸ் வாதத்தை மார்க்சிய பொருளாதார அறிஞர்கள் ஏற்கவில்லை.

கார்ல் போலயானியின் கருத்துக்களையும் தேசாய் தொட்டுச்செல்கிறார். இங்கும் உபரி மதிப்பு என்று சொல்வதால் இல்லை, விற்கப்பட்டால்தான் இலாபம் என்ற பிரச்னை சொல்லப்படுகிறது . Markets in labour power arise from the private property rights என தேசாய் இப்பகுதியில் விளக்குகிறார்.

Golden age of capitalism என்கிற பகுதியில் பூர்ஷ்வாமயமாக்கப்பட்டு வரும் தொழிலாளி மார்க்ஸ்க்கு உதவுவானா என்ற விவாதத்தை தேசாய் முன்வைக்கிறார். வால்ட் ரோஸ்டோ தனது Non Communist Manifesto வை எழுதுகிறார். அவர் கென்னடியின் ஆலோசகராகிறார்.

The High Noon of Socialism என்கிற அத்தியாயத்தில் மார்க்சியர்களான பால் பாரன், ஸ்வீசி விவாதிக்கப்படுகின்றனர். மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். மேற்கு மார்க்சியம், மாவோயிசம், புதிய இடதுகளின் சிந்தனைப் போக்குகளை அறிமுகப்படுத்திச் செல்கிறார் தேசாய். Can a socialist society base its investment and wage policy on the criterion of productivity, which is only hidden signal for profitability? என்ற கேள்வி எழும்புகிறது.

சீனாவில் பல்கலையில் கம்யூனிஸ்ட் அறிக்கை, டூரிங்கிற்கு மறுப்பு, லெனினின் ஏகாதிபத்திய புத்தகங்கள் பாடங்களாக்கப்பட்டதையும் தேசாய் சொல்கிறார். சியாங்காய் ஷேக் தனது கட்டுப்பாட்டு பகுதியில் தனது புத்தகத்தை பாடமாக்கியபோது, மாவோ தனது கட்டுப்பாட்டு பகுதியில் தனது புத்தகத்தை பாடமாக்கிய அனுபவம் அங்கு முன்பே நடந்தேறியது.

டோனி கிராஸ்லாண்ட் தனதுசோசலித்தின் எதிர்காலம் என்ற ஆக்கத்தில் party is over என விவாதித்தாராம்..

பொதுத்துறை உழைப்பிற்கு தனியார் துறை உழைப்பிற்குமான வேறுபாட்டை அழகாக தேசாய் விளக்கியுள்ளார். பொதுத்துறையில் உபரி மதிப்பு இலாபம் என்பதை காணமுடியாது. அங்கு அரசு வருவாயிலிருந்து செலவு செய்யப்படுகிறது. ஆனால் தனியார் துறையில் productive workers accumulation profit என்பது அவசியமாகும். இங்கு தேசாய் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறார்.

Were Marxist writers, revolutionary though they saw themselves to be, unproductive labour?

பால் சாமுவேல்சன் என்கிற அறிஞர் மார்க்ஸின் சுரண்டல் கோட்பாடு குறித்த விமர்சனத்தை வைத்தார். விலை என்பதை மதிப்பு , உபரி மதிப்பு கொண்டுதான் தீர்மானிக்கவேண்டும் என்பதல்ல என்றார். அவர் டெக்னாலஜியின் பங்களிப்பை விதந்து பேசினார்.

சிரபா எனும் அறிஞர் one can calculate a rate of profit for an economy independently of prices, purely as a consequence of the technology of the system. Labour power or surplus value were not required என்கிற முடிவிற்கு வந்தார். இந்த Staffa இத்தாலியின் மார்க்சியர் கிராம்சியின் நண்பர். கிராம்ஸி சிறையில் இருந்த தருணம் புத்தகங்களை அனுப்பி உதவியவர் என்ற செய்தியை தேசாய் தந்துள்ளார்.

ஜான் வெண் நியுமான் என்கிற அறிஞர் திராட்சை அறுவடைக்கான உழைப்பையும், திராட்சை ஜூஸ் ஒயின் உருவாக்க தேவைப்படும் செயல்முறையும் சொல்லி, இரண்டாவதில் உழைப்பு என்பதற்கு பங்களிப்பு இல்லை என்கிறார். The value of wine exceeds that of the grape juice by a large factor, yet labour contributes nothing to the extra value. Thus, value and surplus value could arise from factors other than labour. உழைப்பின் வழி தான் உபரி மதிப்பு என்பதில்லை என இந்த அறிஞர்கள் பேசுகின்றனர்.

சோவியத்தில் கோர்பசாவ் ஆட்சி ,அவரது நடவடிக்கைகள், சோவியத் வீழ்ச்சியை சற்று குறிப்பிட்டுவிட்டு சோவியத் பொருளாதார அம்சம் ஒன்றையும் தேசாய் எழுதுகிறார். அது நடுத்தர வருவாய் நாடு. அதன் GDP misleading one. அதன் உற்பத்தி பொருட்கள் உலக விலை அடிப்படையில் பார்த்தால், இராணுவ தளவாடங்கள் தவிர மற்றவை சோவியத்தை மூன்றாம் உலக நாடுகளின் வரிசையில்தான் காட்டியது என்பதையும் தேசாய் எழுதுகிறார்.

ஸ்டாலிசம் குறித்த மதிப்பீடாக தேசாய் முன்வைப்பது

Stalinism had promised plenty for the price of unfreedom, but all it had delivered was poverty and unfreedom.

Leninism became a doctrine of oppression, scarcity, unfreedom என்ற விமர்சனத்தை up from the abyss அத்தியாயத்தில் தேசாய் வைத்துள்ளார்.

சில கேள்விகளை உரத்த சிந்தனைக்காக தேசாய் விட்டுச்செல்கிறார். Was there a proletariat?, How we’re the classes defined?, was there any mobility between classes?

இவை குறித்து ஜான் ரோமெர் ஆய்வு செய்ததான செய்தியை தேசாய் தருகிறார்.

சோவியத்தின் வீழ்ச்சி இடதுசாரிகளிடம் பெரும் தாக்கத்தை சோர்வை உண்டாக்காமல் இல்லை. அது எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் பால் கட்டப்பட்ட ஒன்று. It is a doctrine of hope and its eclipse is the End of Hope. முதலாளித்துவம் இன்னும் இருப்பேன் என்கிறது. Capitalism says that I survived. Not just survived but rejuvenated என தேசாய் தன் ஆய்வில் வந்தடைகிறார்.

தேசாயின் இந்த புத்தகத்தின் சாரத்தை இப்படி சொல்லலாம்.

Capitalism still survived not only survived but become a dynamic worldwide phenomenon yet again- still having a potential. Neither underconsumption and lack of markets, nor workers’ organisation and their rising share in total income, nor the loss of empire or the shortage of oil, or the threat of proletariat , all of these and more rehearsed as possible causes of its downfall could stop capitalism

அடுத்து தேசாய் சொல்ல வருவது

There is a need for a longer term complementarity between capital and labour. Conflict is endemic to capitalism, but if it is seen that capitalism is not about to die, then the beliefs, as well as behaviour of the workers undergo a modification.

தேசாய் முன் வைத்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரின் இந்த முன்வைப்புகளை எவரும் செவிமடுத்தது போல் தெரியவில்லை.குறைந்தது மனம் திறந்த வாசிப்பிற்காவது இந்த புத்தகம் உள்ளாக வேண்டும்.

 

17-3-2023