Skip to main content

Posts

Showing posts from November, 2018

’மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி

In Memory of Maxim Gorky's 150th Birth anniversary     A Book on His Political Space  R.Pattabiraman in Tamil மாக்சிம் கார்க்கியின் 150 ஆம் ஆண்டின் நினைவாக ’மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி ’  தோழர் பட்டாபியின் புதிய புத்தகம்  விருப்பம் உள்ளவர் கீழ்கண்ட இணைப்புகளில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் http://freetamilebooks.com/ebooks/politics_of_maxim_gorky/ https://archive.org/details/GorkyA4

அக்டோபர் புரட்சிக்கு பின்னரான லெனின் ஆட்சிக்காலம்

           அக்டோபர் புரட்சிக்கு பின்னரான லெனின் ஆட்சிக்காலம்                   புரட்சிக்கு பின்னர் லெனின் Lenin as Premier                புரட்சிக்கு பின்னர் லெனின்   ( ஆட்சியும் மறைவும்)                                                -ஆர்.பட்டாபிராமன் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு இயக்கங்களும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களும் நடத்திவருகிறோம். அக்டோபர் புரட்சி அல்லது புதிய காலண்டர்படி நவம்பர் 1917 புரட்சி நடந்த சூழல் குறித்தும் 1905 முதல் 1917 வரை நடந்த எழுச்சிகர போராட்டங்கள், ருஷ்யாவில்   சோசலிச   புரட்சிகர சக்திகள் மூன்று பெரும்பிரிவுகளாக பிரிந்து செயலாற்றியமை குறித்தும் ஏராள புத்தகங்கள் ஆவணங்கள் வந்துள்ளன. மென்ஷ்விக், சோசலிச புரட்சிகர கட்சிகளைப்பற்றிய பல ருஷ்ய ஆவணங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெற்றால் மேலும் சரியான புரிதலை நாம் பெறமுடியும். அதிகாரபூர்வமான போல்ஷ்விக் ஆவணங்கள் , அவர்களை விமர்சிக்கும் ஆவணங்கள் கிடைக்கின்றன. ருஷ்யாவில் 1905-1917 ஆண்டுகளில் முடியாட்சிக்கும் அதன் அதிகார எல்லைக்குட்பட்டு அரசியல் சட்டமுறைகளை உருவாக்கும் கான்ஸ்டிட்யூஷ

மகாத்மா காந்திஜியின் இறுதிநாள்

                                         மகாத்மா காந்திஜியின் இறுதிநாள்                               (ஜனவரி 30   1948) -     ஆர்.பட்டாபிராமன் வழக்கம்போல்தான் அன்றும் விடிந்தது . அந்த நாளில் இந்தியாவை ஏன் உலகையே குலுக்கும் சம்பவம் நடைபெறும் என எவரும் கணித்திருக்கவில்லை . விடியற்காலை 3.30 க்கு வழிபாட்டிற்கு அனைவரும் எழுந்தனர் . காந்தி   செப்டம்பர் 9 முதல் பிர்லா வீட்டில் அவருக்கு என   எளியவகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தங்கியிருந்தார் . வழக்கம்போல் அன்றைய நாளும் காந்திக்கு நிகழ்ச்சிகளும் சந்திப்புகளும் நிறைந்த தினமாகவே இருந்தது .. காந்தி ஆபாவை எழுப்பினார் .   பல்குச்சியால் வழக்கம்போல் வாயை சுத்தம் செய்துவிட்டு காலைக்கடன்களை முடித்துவிட்டு காந்திஜி வந்து அமர்கிறார். காலையின் திறப்பாகவும் மாலையின் நடை சாத்தலாகவும் அவர் பிரேயரை பார்ப்பார் . சமய புனித புத்தகங்களின் மேற்கோள்கள் குறிப்பாக இந்து இஸ்லாம் மேற்கோள்கள் இருக்கும் . ஆபா துயில் எழவில்லை , அவர் இல்லாமலேயே பிரார்த்தனை 3.45 க்கு துவங்கியது . மனு பகவ