Skip to main content

Posts

Showing posts from November, 2016
The Marxist Sociology in India- A study of the Contribution of A R Desai என்ற ஆய்வு புத்தகத்தை அர்பிதா முகர்ஜி என்ற பேராசிரியை எழுதியுள்ளார். நேஷனலிசம் என்கிற உருவாக்கம் அதில் பங்கேற்றவர்களின் வர்க்கப் பின்னணி, செயல்பாடுகள், இந்திய விவசாயம்- விவசாய வர்க்கம், இந்தியாவில் வளர்ந்து வரும் முதலாளித்துவ அரசு, சமுக இயக்கங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர் மார்க்சிய ஆய்வாளர்கள் பலரின் மேற்கோள்கள், வந்தடைந்த முடிவுகளுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர், சமுகவியளார், மார்க்சிய ஆய்வாளர் தேசாயின் பார்வையில் என அர்ப்பிதா தனது வாதங்களை நகர்த்துகிறார். அக்சய் குமார் ரம்ன்லால் தேசாய் குஜராத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெற்ற மார்க்சிய ஆய்வாளர். ஏப்ரல் 16,1915ல் பிறந்து 80 ஆண்டுகள் வாழ்ந்து செயல்பட்டு நவம்பர் 12, 1994ல் மறைந்தவர்.. இந்தியாவில் சோசியாலஜி என்கிற ஆய்வுவகைதனை நூற்றாண்டாக பலர் செழுமைபடுத்தியுள்ளனர். ராதாகமல் முகர்ஜி, குர்யி, மஜும்தார், பினாய் குமார், தேசாய், சீனிவாஸ், திபங்கர் குப்தா போன்றவர்கள் இந்திய சமூகம் குறித்து ஏராளம
U R அனந்தமூர்த்தி   அவர்களின் Hindutva or Hind Swaraj படித்தவுடன் சாவர்க்கரின் Essentials Of Hinduta வாவையும் - காந்தியின்   Hind Swaraj or Indian Home Rule யையும் படிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமானது . காந்தியின் புத்தகம் குறித்த உரையாடலை தோழர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது அதை தொட்டுவிட்டு விட்டுவிட்டேன் . தோழர் சீனிவாசன் மதுரை BSNL ல் பணிபுரிந்தவர் . ஜெகன்மீது அளவற்ற மதிப்பு கொண்டவர் . பெரும் படிப்பாளி . ஜெகனுக்கு காந்தி நிறுவனங்களில் மேடை அமைத்துக் கொடுத்தவர் . ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களிடம் நெருக்கமான தொடர்புகளை பெற்றிருந்தவர் . என்னிடம் மதுரை கூட்டங்களுக்கு செல்லும்போது சில rare குறிப்புகளை அனுப்புகிறேன் படித்துப் பாருங்கள் என சொல்லி வந்தவர் . ஆய்வுபணிகளுக்காக இலாகா வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டவர் . சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பின்னர் கெளரவ பேராசிரியராக சேர்ந்தார் . அவ்வாறு இருந்தபோது ஒருமுறை சாஸ்த்ரா மாணவர்களிடம் பேசுவதற்கு எனக்குக் கூட வாய்ப்பை உருவாக்கினார் . அவருக்கு இந்நேரத்தில்
யு . ஆர் அனந்தமூர்த்தி இந்தியாவின் புகழ்வாய்ந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர் . அவரின் சம்ஸ்கரா உலகப்புகழ் பெற்றது . சாகித்ய அகாதமியின் தலைவராக இருந்தவர் . ஞானபீடம் பெற்றவர் . மோடி ஆட்சிக்கு வந்ததை கொடுங்கனவாக நினைத்து வருந்தியவர் . வெளிப்படையான கருத்துக்களால் பெரும் அவமதிப்பை சந்தித்தார் . மரணத்திற்கு முன்னர் மிக சிறந்த புத்தகம் ஒன்றை அவர் நமது சமுகத்திற்கு கொடுத்து சென்றுள்ளார் . 2014 ல்   HINDUTA  OR HIND SWARAJ என்பது கன்னட மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றது . காந்தியின் புகழ்வாய்ந்த ’ நூற்றாண்டை கண்ட’ ஆக்கமான Hind Swaraj- Indian Home Rule மற்றும் வினாயக் தாமோதர் சாவார்க்கர் வழிகாட்டிய Essential of Hindutva ஆகிய   இரண்டையும் அனந்தமூர்த்தி ஒப்பீட்டு காந்தியின் ஆக்கம் ஏன் தனக்கு சிறந்து விளங்குவதாக எடுத்துரைக்கிறார் . திரு மோடியை பெரிதும் விரும்பக்கூடியவர்களை கூட நிதானப்படுத்தும் அற்புத ஆக்கமாக அனந்தமூர்த்தியின் புத்தகம் எழுதப்பட்டுள்ளது . கோட்சே காந்தியை படுகொலை செய்ததும் , அதை நியாயப்படுத்தி