Skip to main content
யு.ஆர் அனந்தமூர்த்தி இந்தியாவின் புகழ்வாய்ந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர். அவரின் சம்ஸ்கரா உலகப்புகழ் பெற்றது. சாகித்ய அகாதமியின் தலைவராக இருந்தவர்.ஞானபீடம் பெற்றவர். மோடி ஆட்சிக்கு வந்ததை கொடுங்கனவாக நினைத்து வருந்தியவர். வெளிப்படையான கருத்துக்களால் பெரும் அவமதிப்பை சந்தித்தார். மரணத்திற்கு முன்னர் மிக சிறந்த புத்தகம் ஒன்றை அவர் நமது சமுகத்திற்கு கொடுத்து சென்றுள்ளார். 2014ல்  HINDUTA  OR HIND SWARAJ என்பது கன்னட மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றது. காந்தியின் புகழ்வாய்ந்தநூற்றாண்டை கண்ட’ ஆக்கமான Hind Swaraj- Indian Home Rule மற்றும் வினாயக் தாமோதர் சாவார்க்கர் வழிகாட்டிய Essential of Hindutva ஆகிய  இரண்டையும் அனந்தமூர்த்தி ஒப்பீட்டு காந்தியின் ஆக்கம் ஏன் தனக்கு சிறந்து விளங்குவதாக எடுத்துரைக்கிறார். திரு மோடியை பெரிதும் விரும்பக்கூடியவர்களை கூட நிதானப்படுத்தும் அற்புத ஆக்கமாக அனந்தமூர்த்தியின் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கோட்சே காந்தியை படுகொலை செய்ததும், அதை நியாயப்படுத்தி கொடுத்த வாக்குமூலமும் அனந்தமூர்த்தியால்  தரப்பட்டுள்ளது. சாவர்க்கரின் எழுத்துக்கள்தான் கோட்சேவாவை தூண்டியதாக அனந்தமூர்த்தி பதிவு செய்கிறார். சாவர்க்கர் தனது 1857 முதல் சுதந்திரப்போர் புத்தகத்தை மராத்தியில் எழுதி அது பிரான்ஸ், ஜெர்மன் என எந்த நாட்டிலும் பதிப்பிக்கபடமுடியாமல் போகி பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கில அரசு எவ்வளவு உளவு பார்த்தாலும் கண்டுபிடிக்கப்படமுடியாமல் வெளிக்கொணரமுடிந்த பெருமிதத்தை முந்திய ஜனசங்கத்தினர் பெருமிதமாக சொல்லுவார்கள். அனந்தமூர்த்திகூட தான் சிறுவயதில் சாவர்க்கர் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார். அவருக்கு  திரு.அத்வானி போன்றவர்களிடம் கூட பழக்கம் இருந்தது. ஆனாலும் மோடி குறித்த விமர்சனங்களை வைத்ததால் கடும் கண்டனத்திற்கு ஆளானர்.

காந்தியின் பார்வையில் அனைத்து மதங்களும் தன்னளவில் நிறைவு கொண்டவையல்ல. அவருக்கு தன் மதம் முக்கியம் என்பது போலவே மற்றவர்க்கு அவரவர் மதம் முக்கியம் என்பதில்- UNIVERSAL MAN கருத்தாக்கத்தில் நின்றார்நான் ஆளப்பிறந்தவன் என்கிற சத்ரிய பார்வையை சாவர்க்கர் வழங்குவதாகவும்  கட்டுப்படாத மற்றவரின் இருப்பை அது தொந்திரவு செய்யும் என அனந்தமூர்த்தி பேசுகிறார். ரூ 200க்கு கிடைக்கிறது. இன்றுள்ள இந்திய சூழலில் பொருட்படுத்தி படிக்கவேண்டிய புத்தகம் என எனக்குப்படுகிறது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு