Skip to main content

Posts

Showing posts from August, 2018
ஹெகல் துவங்கி   என்கிற மின்னூல்  freetamilebooks  இளம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழாமிற்கு எனது நன்றி. வர்த்தக நலன் ஏதுமின்றி தமிழ் வாசகர்களுக்கு இலவசமாக தமிழ் எழுத்துக்களை  மின் புத்தக வடிவத்தில் சேர்ப்பது இந்த இளைஞர்களின்  நோக்கம். அவர்களின் ஆர்வமும் உழைப்பும் வெற்றிபெறட்டும் http://freetamilebooks.com/ebooks/hegal-and-more/

இலக்கியம் காட்டும் நல் அமைச்சு

                         இலக்கியம் காட்டும் நல் அமைச்சு -     ஆர்.பட்டாபிராமன்   அமைச்சர்   என்றால் மதியூகம் நிறைந்தவர்   என்றே இலக்கியங்கள் பேசின . ஆட்சிக்கு துணைவனாக ஆட்சியாளர்க்கு நல்லாசானாக இருக்கவேண்டிய பொறுப்பது .   தன்னலம் பேணாத சுயம் உணர்ந்த பொறுப்பது . நாவன்மையும் , வினைத்தூய்மையும் அவரிடம்   எதிர்பார்க்கப்படும் . பழமொழி நானூறு அவர்களை ’தாயொப்ப’   என்றது . வள்ளுவர் பேசிய அரசாட்சி அங்கங்கள் படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்கிற ஆறு. அவ்வாறு பெற்ற அரசாட்சி சிங்கநிகர் ஆட்சி என வள்ளுவம் பேசுகிறது . பத்து அதிகாரங்கள் அமைச்சு குறித்து பேசுகின்றன . அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் அய்ம்பெருங்குழுவினராக அறியப்படுகின்றனர் . மன்னர் வெறுத்தாலும் நன்னெறி தருபவர் அமைச்சர் என கந்தபுராணம் கச்சியப்பர் சொன்னதாக அறியமுடிகிறது . மன்னன் வெகுண்டாலும் யானைப்பாகன் போல் அங்குசத்தால் வெருட்டி நேர் செய்தல் அமைச்சர் அழகு என குமரகுருபரர் சொன்னதை கேட்கமுடிகிறது . நுண்ணிய அறிவுத்திறத்துடன் செய்யவேண்ட