இலக்கியம் காட்டும் நல் அமைச்சு - ஆர்.பட்டாபிராமன் அமைச்சர் என்றால் மதியூகம் நிறைந்தவர் என்றே இலக்கியங்கள் பேசின . ஆட்சிக்கு துணைவனாக ஆட்சியாளர்க்கு நல்லாசானாக இருக்கவேண்டிய பொறுப்பது . தன்னலம் பேணாத சுயம் உணர்ந்த பொறுப்பது . நாவன்மையும் , வினைத்தூய்மையும் அவரிடம் எதிர்பார்க்கப்படும் . பழமொழி நானூறு அவர்களை ’தாயொப்ப’ என்றது . வள்ளுவர் பேசிய அரசாட்சி அங்கங்கள் படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்கிற ஆறு. அவ்வாறு பெற்ற அரசாட்சி சிங்கநிகர் ஆட்சி என வள்ளுவம் பேசுகிறது . பத்து அதிகாரங்கள் அமைச்சு குறித்து பேசுகின்றன . அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் அய்ம்பெருங்குழுவினராக அறியப்படுகின்றனர் . மன்னர் வெறுத்தாலும் நன்னெறி தருபவர் அமைச்சர் என கந்தபுராணம் கச்சியப்பர் சொன்னதாக அறியமுடிகிறது . மன்னன் வெகுண்டாலும் யானைப்பாகன் போல் அங்குசத்தால் வெருட்டி நேர் செய்தல் அமைச்சர் அழகு என குமரகுருபரர் சொன்னதை கேட்கமுடிகிறது . நுண்ணிய அறிவுத்திறத்துடன் செய்யவேண்ட