பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்க்கு நல்வாழ்த்துகள் என் வாழ்த்துகளை சம்பந்தப்பட்ட தொழிலாளரோ அவர்களின் தொழிற்சங்க தலைவர்களோ பார்ப்பார்களா எனக்கூட நான் அறியேன். கொஞ்சம் தொழிற்சங்க அனுபவம் பெற்ற வகையில் ஏற்பட்ட பழக்கம் எழுத வைக்கிறது. வேலை - உழைப்பு என்பதுதான் மனிதனை கண்ணியமிக்கவனாக்குகிறது. வேலையின்மை என்பது ஒருவகை economic death sentence ஆகிறது. இந்த வகையில் போராட்டம் முடிந்து அத்தொழிலாளர் வேலைக்கு மீண்டும் செல்வது மிக முக்கியமான ஒன்று. நல்வாழ்த்துகள். அக்டோபர் 15, 2024 ல் பேச்சு வார்த்தை இறுதிநிலையை அடைந்து , நிருவாகத்தினர்- தொழிலாளர் தரப்பு இரு சாராருக்கும் தமிழ்நாடு லேபர் கமிஷனர் அறிவுரை தரப்பட்டு ஏற்கப்பட்ட சூழல் உருவான நிலையில் போராட்டம் முடிவிற்கு வந்தது. அந்த 4 அறிவுரையின் சாராம்சத்தை தமிழக அமைச்சர் குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ( கையெழுத்து இல்லா நகலை) வெளியிட்டிருந்தனர். சம்பந்தப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பேட்டியிலும் அந்த 4 அம்ச அறிவுரைகள் இருதரப்பினராலும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கையெழுத்திடப்பட்ட அதிகாரபூர்வ நகலை என்னால் பார்க்க இயலவில்லை. போர