Skip to main content

Posts

Showing posts from September, 2017

Books from the Shelf

பிபின் சந்திர பால் இந்திய விடுதலைக்கால புரட்சிகர கருத்துக்களின் தந்தையாக கருதபட்டவர். லால்-பால்-பால் என லாலாஜி, திலகருடன் இணையாக பார்க்கப்பட்டவர். காந்திக்கு முந்திய தலைமுறை. அவரின் எழுத்துக்கள் எனக்கு பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கொடுத்தன. அவரைப்பற்றி சிறிய அளவாவது எழுத எண்ணம் எழுந்துள்ளது. அவரின்  Soul Of India  வை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தேன். இவ்வாரம் அவரின் இரு முக்கிய புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. The New Economic Menance to India  என்ற புத்தகம் இந்தியாவின் வளங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளை அடிப்பதை குறித்து விவரிக்கிறது. அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருத்தாக்கம், தொழிலாளிவர்க்கம் இந்தியாவில் அணிசேரவேண்டும், பிரிட்டிஷ் சோசலிசம் தாக்கம் போன்ற நிலைகளுக்கு மிக அருகாமையில் வருகிறார். அடுத்த புத்தகம்   An Introduction to Hinduism- Comparative study of Religion என்கிற மதம் பற்றிய அறிவியல்- தத்துவ ஆய்வு. இதில் அவர் ஹெகல் முறையை எடுத்துக்கொள்கிறார். 19110க்கு முன்னர் இந்திய தலைவர் ஒருவர் ஹெகல் சிந்தனையுடன் தொடர்பில் இருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது. காண்

Dr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன்                - ஆர். பட்டாபிராமன் இந்திய தத்துவ ஞானி என அறியப்பட்டவரும் பெரும் மேதையுமான இராதாகிருஷ்ணன் நேரடி அரசியல்வாதியாக இல்லையெனினும் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் உயர்ந்தவர். கல்வியாளர், தத்துவஞானி, தூதர், ராஜ்யசபாவை வழிநடத்தியவர், ராஜதந்திரி என்கிற பன்முகத்தன்மையுடன்   இருந்தவர்   .  தன்னைப்பற்றி அதிகம் பேசாதவராக இருந்தவர் . அவரது படைப்புக்கள்தான் அவருக்காக பேசுகின்றன . தனது எழுத்துக்களே   தனது சுயசரிதையாக விளங்கட்டும் என கருதியவர். அவரது புதல்வர் திரு கோபால்   அவரது வாழ்வு குறித்து 1988 ல் பெரும் புத்தகம் ஒன்றை நமக்கு அளித்துள்ளார் . நேரு குறித்த சுயசரிதையும் எழுதியவர் கோபால் .   பிரிட்டிஷார் வரவு அதன் காரணமாக கிறிஸ்துவ சமயம் பெற்ற அரசியல் ஒத்துழைப்பு   என்ற சூழல் இந்தியாவில் நிலவிய காலத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன் . இந்துயிசம் என்பது மத மற்றும் அரசியல் வழிப்பட்டு அறியப்படாமல் பல்வேறு செக்ட் அடிப்படையில் இந்து மத உணர்வு என இருந்த காலமது .