Skip to main content

Posts

Showing posts from April, 2022

புத்தக அறிமுக உரை

       காந்தி கல்வி நிலையத்தில்   (Gandhi Study Centre) ஏப்ரல் 27, 2022  ராமச்சந்திர குஹாவின்   ஜனவரி 2022ல்  வெளியான Rebels Against Raj புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசியது https://www.youtube.com/watch?v=jRRFz0yKc-A&t=54s <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpattabi.raman.5648%2Fposts%2F5956618417686914&show_text=true&width=500" width="500" height="506" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>  

70 ஆண்டுகளுக்கு முன்னர்

 70 ஆண்டுகளுக்கு முன்னர் ...  விடுதலைக்குப் பின்னர் உட்கட்சி விவாதங்களின் அடிப்படையில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தனது  Draft Programme of the CPI  என்பதை 1951ல் வெளியிட்டது.  16 பக்கங்களில் அச்சடிக்கப்பட்ட  ஆங்கில பிரசுரம் ஏப்ரல் 1951ல் இரண்டு அணாவிற்கு பம்பாயிலிருந்து வெளியானது. மே, ஜூன் என அப்பிரசுரம் அடுத்தடுத்த பதிப்புகளையும் கண்டது. பிபின் சந்திரா போன்ற வரலாற்றாய்வாளர்கள் இந்த பிரசுரத்தை மிக முக்கிய விவாத பொருளாக தான் எடிட் செய்த  The Indian Left Critical Appraisals என்ற பெரிய புத்தகத்தில் செய்திருப்பார். அவர் எழுதிய அந்த அத்தியாயம்  A strategy In crisis- The CPI Debate 1955-56  என்பதாகும். ஆர்வமுள்ளவர் தேடி படித்துவிடமுடியும். அந்த டிபேட்டிற்கு மேற்கண்ட 1951யை அவர் ஆதாரமாக்கி பேசியிருப்பார். மேற்கண்ட நகல் திட்டம் இந்தியாவில் வந்தபோதே - பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது திட்டத்தை  Independent, Democratic and Prosperous Pakistan- Programme of the Communist Party of Pakistan  என 1950ல் கொண்டு வந்தனர். 18 பக்கங்களைக்கொண்டு அதன் அச்சு வெளியீடு வந்தது. அதுவும் 2

ராஜாஜியை வாசிக்கலாம்

 ராஜாஜியை வாசிக்கலாம்.. வரலாற்று மாணவர் என்ற வகையில் ஒருவருக்கு எப்போதும் வாசிப்பு நேர்மை தேவைப்படும். தனக்கு உவப்பான விஷயங்களை கொண்டாடுவது- உவப்பில்லாத அம்சத்தை கண்ணை மூடிக்கொண்டு காணாததுபோல் நகர்ந்துவிடுவது அல்லது அதை மறைத்துவிடுவது என்பது வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியவர் செய்யத்தகாத செயலாகும். வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் குறித்த பல பக்கங்களை பார்க்கும்போதுதான் சற்று balanced  மதிப்பீட்டிற்கு ஒருவரால் விருப்பு- வெறுப்பை குறைத்துக்கொண்டு வரமுடியும். எழுதுவது என்பது வெறும் Hagiography புனிதர்களின் திருச்செயல்களாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்பது முக்கியமானது. அதேபோல அவர்களின் தவறுகள் குறித்த வெறும் குற்றப்பத்திரிகைகளாகவும் அவை சுருக்கப்படக்கூடாது. critical appraisal- appreciation  என்கிற பழக்கம் பொதுப்பழக்கமானால் சமூகம் நின்று நிதானமாக செயல்பட அப்போக்கு உதவிசெய்யும். ராஜாஜி குறித்த வாசிப்பும் அப்படித்தான் இருக்கவேண்டும்.  ராஜாஜி குறித்து அவரது பேரன் ராஜ்மோகன்காந்தி உடபட பலர் எழுதியுள்ளனர். ஆயினும் காந்தி, நேரு, அம்பேத்கர்,பெரியார் போல ராஜாஜியின் அரசியல் பொருளாதார சமூக சிந்தன

கிரன் மைத்ரா எழுதிய Marxism in India From Decline to Debacle

 கிரன் மைத்ரா எழுதிய  Marxism in India From Decline to Debacle  என்கிற புத்தகம் 2012ல் வந்த ஒன்று.  தலைப்பை பார்த்து இந்த மாதிரி எழுத்துக்கள் விமர்சனத்தை வாரி இறைப்பவை என்ற சந்தேகம் வரலாம். படித்தால் அப்படி சந்தேகம் கொள்வது தேவையற்றது என உணரவாய்ப்புண்டு.  கிரன் மைத்ரா இந்திய வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் -  ICHR  சார்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில்(1971-81) இருந்தவர். இந்தியாவில் மார்க்சிய சிந்தனைகள் உருவான காலம் துவங்கி மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசாங்க வீழ்ச்சிவரையிலான  ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு மேலான காலவோட்டத்தின் சுருக்கமான பதிவாக இந்த புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். சுருக்கமான என்று சொன்னால் கூட ஒரே புத்தகத்தில்  மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட  கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று விரிவை இப்புத்தகம் உள்ளடக்கமாக வைத்துக்கொண்டுள்ளது. அந்த அளவில் இந்திய மார்க்சியரும் ( இந்திய மார்க்சியம் குறித்து அறிய விருப்பமுள்ள மார்க்சியர் எங்கிருந்தாலும்), மார்க்சியர் அல்லாதவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் எனச் சொன்னால் அது மிகைப்படுத்த ஒன்றாக இருக்காது என்றே கருதுகிறேன். இந்த புத்தகம் இந்திய க

A Paper on OP Gupta on the occasion of His Centenary

  தோழர் குப்தாவிடம் கற்றதும் பெற்றதும் -         ஆர். பட்டாபிராமன் தோழர் குப்தாவின் பிறந்த நூற்றாண்டு நிறைவடையப்போகிறது . NFTE தமிழ் மாநில சங்கம் அதை விழாவாக கொண்டாடுகிறது .   பங்கேற்க வருமாறு மாநில தலைவர் தோழர் முரளி , செயலர் நடராஜன் அழைத்தனர் . என் இயலாமையால் அவ்விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை . என் நல்வாழ்த்துகள் . டெலிகாம் தொழிற்சங்க இயக்கத்தில் அதன் தந்தை ஸ்தானத்திற்கு தோழர் குப்தாவால் உயர முடிந்தது . ‘ தீர்வின் நாயகர் ’ என தொழிலாளர் அவரை புரிந்து ஏற்றிருந்தனர். தனது பொதுவாழ்வு துவங்கிய ‘ முதல் 20 ஆண்டுகளில் ’ (1946-66), தனது பணிகள் குறித்து நின்று நிதானித்து ஓம்பிரகாஷ் குப்தா அசைபோட்டார் . அது   Some Reflections   என்று வெளியானது . அதை தமிழில் தோழர் வீரபாண்டியன் நினைவலைகள் என மொழிபெயர்த்தார் . என்னைப்போன்ற அன்றைய ஆர்வம் கொப்பளித்த இளைஞர்கள் அந்த வெளியீட்டை சரியாக உள்வாங்கிக்கொள்ளவேண்டும் எனக் கருதி அதை டெல்லியிலிருந்து தோழர் ஜெகன்தான் எடுத்துவந்து   தந்தார் .   அதில் தோழர் குப்தா முக்கிய கேள்வி ஒன்றை எழுப

மாநில பட்ஜெட்களும் மாடல் கதையாடல்களும்

                     மாநில  பட்ஜெட்களும்   மாடல்  கதையாடல்களும் இந்திய மாநிலங்கள் பல தங்கள் மாடல் - மாதிரிதான் ஆக உயர்ந்தது என்கிற உரையாடல்களை பெருக்கிவருகின்றன . அது இந்தியா முழுமைக்குமான ஒற்றை மாடல் என்கிற கதையாடலையும் முன்வைத்து வருகின்றன . குஜராத் மாடலா - கேரளா மாடலா விவாதம் முன்பு நடந்தது . தற்போது திராவிட மாடல் சற்று உரக்கப் பேசப்படுகிறது . இதைத்தவிர முன்பேயிருந்த சத்தமில்லாத ஒரிஸ்ஸா மாடலுடன் சற்று சப்தம் கூடிய மமதா மாடல் , டெல்லியின் கெஜ்ரிவால் மாடல்களும் ஆங்காங்கே பேசப்படுகின்றன . இந்த மாடல்கள் போடும் பட்ஜெட்டுகளில் என்ன   Highlights   என்கிற ஆய்வும் ஆங்காங்கே நடக்காமல் இல்லை . அந்ததந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வரலாறு காணா வளர்ச்சிக்கான சமூக நீதிக்கான வறுமையை ஒழிக்கும் ஒப்பிலா பட்ஜெட் என புகழ்ந்து கொள்வர் . அணி கட்சிகளும் ஆமாம் என்பர் . எதிர்கட்சிகள் உப்புசப்பில்லா பட்ஜெட் - ஏழைகளுக்கு மத்தியதர வர்க்கத்திற்கு ஏதுமில்லை என்பர் . இவை   standard discourses.   சரி - இனி இந்த மாடல்களில் சில 2022-23