தோழர் குப்தாவிடம் கற்றதும் பெற்றதும்
- ஆர். பட்டாபிராமன்
தோழர் குப்தாவின் பிறந்த நூற்றாண்டு நிறைவடையப்போகிறது. NFTE தமிழ் மாநில சங்கம் அதை விழாவாக கொண்டாடுகிறது. பங்கேற்க வருமாறு மாநில தலைவர் தோழர் முரளி, செயலர் நடராஜன் அழைத்தனர். என் இயலாமையால் அவ்விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. என் நல்வாழ்த்துகள்.
டெலிகாம் தொழிற்சங்க இயக்கத்தில் அதன் தந்தை ஸ்தானத்திற்கு தோழர் குப்தாவால் உயர முடிந்தது. ‘தீர்வின் நாயகர்’ என தொழிலாளர் அவரை புரிந்து ஏற்றிருந்தனர். தனது பொதுவாழ்வு துவங்கிய ‘முதல் 20 ஆண்டுகளில்’ (1946-66), தனது பணிகள் குறித்து நின்று நிதானித்து ஓம்பிரகாஷ் குப்தா அசைபோட்டார். அது Some Reflections என்று வெளியானது. அதை தமிழில் தோழர் வீரபாண்டியன் நினைவலைகள் என மொழிபெயர்த்தார்.
என்னைப்போன்ற அன்றைய ஆர்வம் கொப்பளித்த இளைஞர்கள் அந்த வெளியீட்டை சரியாக உள்வாங்கிக்கொள்ளவேண்டும் எனக் கருதி அதை டெல்லியிலிருந்து தோழர் ஜெகன்தான் எடுத்துவந்து தந்தார். அதில் தோழர் குப்தா முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி பதிலைக் காண முயற்சித்தார். அவர் 1946ல் தொழிற்சங்கத்தில் முழுநேர கவனக் குவிப்பை செய்யத்துவங்கிய காலத்தில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தவர்கள் ஏன் தோற்றுப்போனார்கள்- ஓரளவு வெற்றியை தன்னால் ஏன் பெறமுடிந்தது? என்பதுதான் அவர் எழுப்பிய அக்கேள்வி.
முழு கட்டுரையும் படிக்க இணைப்பை சொடுக்கவும்
https://ia601509.us.archive.org/7/items/opg-centenary-2022/OPG%20centenary%202022.pdf
No comments:
Post a Comment