Skip to main content



பலரோ சிலரோ ஒருவர் குறித்து பெருமிதத்துடன் புகழ்வதும்- சிலரோ பலரோ அதே நபர் குறித்து இகழ்வதும் தவிர்க்கமுடியாத ஒன்றே. தோழர் லெனினுக்கும் இது நிகழ்ந்தது. சோவியத் புரட்சி- ஆட்சி , உலகத்தின் பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளி என புகழப்பட்டதும் அனார்க்கிஸ்ட்கள், நோம் சாம்ஸ்கி போன்றவர்கள் கூட லெனினை விமர்சித்து வருவதும் நடந்து வருவனவாகவே இருக்கிறது. நூற்றாண்டு என்பதால் இது குறித்து நாம் அதிகம் தெரிந்து கொள்ளமுடியும். பரேஷ் சட்டோபாத்யாய் கனடா க்யூபெக்கில் உள்ள மார்க்சிய ஆய்வாளர். The marxian concept of capital and soviet experience-Paresh Chattopadhyay என்ற புத்தகமும் எழுதியவர். பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்திய கட்டுரை ஒன்று Party problematic in Revolution: Some Random Remarks பிராண்டியர் இதழில் படிக்க நேர்ந்தது .அக்கட்டுரையில் ஜெர்மன் வரலாற்றாசிரியர் OSKAR ANWEILER அவர்களின் சோவியத் இயக்கம் குறித்த ஆய்வு புத்தகம் ஒன்றை குறிப்பிட்டிருந்தார். அதை தேடும் முயற்சி பலனளித்து 360 பக்கங்களை கொண்ட The Russian Workers peasants and Soviet councils 1905-1921  OSKAR ANWEILER படிக்க துவங்கியுள்ளேன்.
 பிராண்டியர் இதழ் கல்கத்தாவிலிருந்து வருகிறது. திருவாரூரில் இருந்தபோது பல ஆண்டுகள் வீட்டிற்கு வந்து இதழ். பேராசிரியர் . மார்க்ஸ் அவர்கள்தான் எனக்கு  பிராண்டியர் முகவரி தந்து உதவியவர். மார்க்ஸ் அவர்கள் தமிழகம் அறிந்த களப்போராளி-Public Intellectual எதையும்  focussed ஆக சொல்லியும் எழுதியும் வருபவர். ஏராள புத்தகங்களை எழுதியுள்ளார். பின்நவீனத்துவம் குறித்து எனக்கு புரியாமல் இருந்தபோது தன் கடிதம் மூலம் எனக்கு புரிதலை தந்திருந்தார். பேரா . மார்க்ஸ் அவர்களுக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்.
 பிராண்டியரில் எனது கட்டுரை ஒன்றும் வந்தது. நியுஏஜ்ஜில் எழுதிக் கொண்டிருந்தபோது பிராண்டியருக்கு எழுதலாமே என்ற முயற்சிக்கு பிராண்டியர் ஆதரவு தந்ததற்கு எனது நன்றிமரியாதைக்குரிய தோழர் சி. இராஜேஸ்வரராவ் (பொதுச் செயலர்  சி பி அய்) அவர்களுடன் மூன்று நாட்கள் இருக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாய்ப்பை நல்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கட்சிக்கும் என் மீது நம்பிக்கை வைத்து அப்பொறுப்பை ஒப்படைத்த திருவாரூர் மறைந்த தோழர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றி. தோழர் ராஜேஸ்வருடன் இளைஞனுக்கே உள்ள ஆர்வத்தில் நக்சல் இயக்கம்-தன்னார்வ இயக்கம் மற்றவை விவாதித்த போது அவர்தான் நியுஏஜ்ஜிற்கு எழுது என பணித்தார். அவர் மறைந்த பின்னர்தான் சில கட்டுரைகளை எழுத முடிந்தது. இதேபோல் வேறு ஒரு நல்வாய்ப்பும் கிட்டியது. சி பி அய்யின் புகழ் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரும்  குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சிவிரெட்டி அவர்களின் இளைய சகோதரரும் ஆகிய  தோழர் நீலம் ராஜசேகர ரெட்டி அவர்களுடன் முழுமையாக ஒருநாள் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது soocial Science probings முதல் இதழ் வந்திருந்த நேரம். அவர்தான் ஆசிரியர்.  CPIM தோழர்கள் Social Scientist பத்திரிக்கையை சிறப்பாக பல ஆண்டுகள் நடத்திக்கொண்டிருந்த நேரம். Science Probings தோழர்களை வாங்க வைக்க மத்தியதர வர்க்க தோழர்கள்முயற்சி செய்ய வேண்டும் என தோழர் ராஜசேகர ரெட்டி அறிவுரை செய்தார். சில இதழ்கள் வந்து மிக சிறந்த பத்திரிக்கையாக வரவேண்டியது நின்றுபோய்விட்டது.
இந்நேரத்தில் மிக முக்கிய தஞ்சை தலைவர் தோழர் கே எஸ் கே அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் கல்லூரியிலிருந்து அப்போதுதான் வேலைக்கு சேர்ந்த நேரம். ஜெகன் கூட்டம்... என்னை பேச சொன்னபோது இங்கிலீசில் உளறினேன். ஜெகன் நீ இங்கே தங்கி வேலை செய்யறதா இருந்தால் தமிழில் பேசு என்றார். கே.எஸ் கே   Dialectics புத்தகத்தை கொடுத்து படி என்றார். ஆங்கிலம்தானே என்று நினைத்து வாங்கிய எனக்கு புரிந்தது ஆங்கிலம் படிக்கத் தெரிந்தாலே எல்லாம் புரிந்து விடாது என்பது. கே எஸ் கே தான் மிகச் சிறந்த அப்போது பெரிதும் நாங்கள் படிக்க காத்துக்கிடக்கும்   PartyLife அறிமுகப்படுத்தினார். மார்க்சிய அரிச்சுவடியில்  சேர உதவிய தோழர் கே எஸ் கேவுக்கு எனது அன்பு நன்றி.

2017 மார்க்சிய உலகில் பெரும் விவாதங்கள் நடைபெறவேண்டிய ஆண்டு. ருஷ்ய புரட்சி 100 படிப்பினைகள், நக்சல்பாரிகள்-50 படிப்பினைகள், சீனா கலாச்சார புரட்சி-50 படிப்பினைகள் என விவாதம் பெருக போகிறது. உடல் ஆரோக்கியம் ஒத்துழக்கின்றவரை இந்த நீண்ட பயணத்தில் சில மைல்கள் பயணிக்க உத்தேசம்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு