Skip to main content
The Marxist Sociology in India- A study of the Contribution of A R Desai என்ற ஆய்வு புத்தகத்தை அர்பிதா முகர்ஜி என்ற பேராசிரியை எழுதியுள்ளார். நேஷனலிசம் என்கிற உருவாக்கம் அதில் பங்கேற்றவர்களின் வர்க்கப் பின்னணி, செயல்பாடுகள், இந்திய விவசாயம்- விவசாய வர்க்கம், இந்தியாவில் வளர்ந்து வரும் முதலாளித்துவ அரசு, சமுக இயக்கங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர் மார்க்சிய ஆய்வாளர்கள் பலரின் மேற்கோள்கள், வந்தடைந்த முடிவுகளுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர், சமுகவியளார், மார்க்சிய ஆய்வாளர் தேசாயின் பார்வையில் என அர்ப்பிதா தனது வாதங்களை நகர்த்துகிறார்.
அக்சய் குமார் ரம்ன்லால் தேசாய் குஜராத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெற்ற மார்க்சிய ஆய்வாளர். ஏப்ரல் 16,1915ல் பிறந்து 80 ஆண்டுகள் வாழ்ந்து செயல்பட்டு நவம்பர் 12, 1994ல் மறைந்தவர்.. இந்தியாவில் சோசியாலஜி என்கிற ஆய்வுவகைதனை நூற்றாண்டாக பலர் செழுமைபடுத்தியுள்ளனர். ராதாகமல் முகர்ஜி, குர்யி, மஜும்தார், பினாய் குமார், தேசாய், சீனிவாஸ், திபங்கர் குப்தா போன்றவர்கள் இந்திய சமூகம் குறித்து ஏராளம் எழுதியுள்ளனர். தேசாய் புகழ்வாய்ந்த ஜி எஸ் குர்யி அவர்களிடம் கற்றவர். இந்திய தேசியம் சமுக பின்புலம் குறித்து எழுதியவர். ஊரக இந்தியாவின் சமுகவியல், அரசும் சமுகமும், விவசாய போராட்டங்கள், இந்தியாவின் வளர்ச்சிப்பாதை போன்ற மிக முக்கிய ஆய்வு நூல்களை தந்தவர்.
தனது இளமைக்காலத்தில் சி பி ஐ கட்சியில் செயல்பட்டவர். ஸ்டாலினிச கொள்கைகளால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மாறுபட்டு டிராட்ஸ்கியவாதியாக போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி என்பதில் இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் நூல்களுடன் டிராட்ஸ்கி, காட்ஸ்கி, மெளரிஸ் டாப், கார்ல் மேன்ஹய்ன் எழுத்துக்களுடன் பழக்கப்படுத்தி கொண்டவர் தேசாய். பின்னர் 1953-81 காலங்களில் ஆர் எஸ் பி கட்சியின் மிக முக்கிய கோட்பாட்டாளராக விளங்கினார். இந்திய சமுகவியலாளர் சொசைட்டியில் முக்கிய பங்காற்றினார். பிரிட்டிஷ் காலத்தில் தொழிற்சங்கங்கள் என்ற புத்தக தொகுப்பை வழங்கினார். குஜராத்தி மொழியில் சோசலிச கருத்துக்களை பரவ செய்யும் வகையில் இதழாசிரியராக இருந்தார். நான்காம் அகிலத்துடன் தொடர்ந்து உறவுகளை வைத்திருந்தார் தேசாய். அவரது ஆய்வுகள் மார்க்சியர் வட்டாரத்தில் போதுமான கவனம் பெறாமல் போனது வருத்ததிற்குரிய ஒன்று.. அர்ப்பிதா எழுத்து நடை வசீகரமாக நம்மை அழைத்து செல்வதாக இல்லை என எனக்கு தோன்றுகிறது. சோர்வை ஏற்படுத்துகிறது . எனினும் தேசாய் போன்ற மறக்கடிக்கப்பட்ட ஆய்வாளர்களை மறு வாசிப்பு செய்ய இப்புத்தகம் உதவுகிறது. வழக்கம் போல் இம்மாதிரி புத்தகங்களை வெளியிடும்கல்கத்தா கே பி பக்ஷி நிறுவனம்தான் இதையும் வெளியிட்டுள்ளது. கன்னிமாரா சென்னை நூலகத்தில் 335.4 எண் கொண்டதாக இப்புத்தகம் கிடைக்கிறது. விலை ரூ 795 தான். 2015 பிப்ரவரியில் கன்னிமாரா வந்த இந்நூலை 2015 ஏப்ரலில் ஒருவர் எடுத்துள்ளார். தற்போது 2016ல் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு