Skip to main content

திராவிட அரசியலின் எதிர்காலம் சுகுணா திவாகரின்

 திராவிட அரசியலின் எதிர்காலம் என்கிற ஆக்கம் 2020ல் எதிர் வெளியீடாக வந்தது. சுகுணா திவாகரின் 10 கட்டுரைகள் அடங்கிய 80 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடு.  இதில் இவ்வாசிரியர் வந்தடைந்த சில முக்கிய கருத்தாக்க புள்ளிகளாவன..

பெரியார்  அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகார மய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களில் நிலவுவதால், அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால்- வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்..

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது.

எம்ஜிஆர் காலம்வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக , ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணி தலைமை தாங்கிய காலத்திற்குப்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன - தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சிநிரலை கருத்தியல் கட்டுமானங்களை தீர்மானிப்பதாக மாறிப்போனது

தமிழுக்காக பாடாற்றியதிலும், மார்க்சியம் உட்பட முற்போக்கு கருத்துகளை இம்மண்ணில் விதைத்ததிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்த பிராமண சமூகத்தைச் சார்ந்த பலரை குறிப்பிட முடியும். அந்த மரபை மீட்டெடுக்க பிராமண சமூக படிப்பாளிகள் முன்வரவேண்டும்.

இப்போது பிராமணர் அல்லாதார் அரசியல் மங்கிப்போய் வெவ்வேறு இடைநிலை சாதிகளின் அரசியல்தான் இருக்கிறது…அய்ம்பதாண்டு காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பார்ப்பனர் ஆதிக்கம் குறைந்திருக்கிறது. அச்சமூட்டும் அளவிற்கு இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்திருக்கிறது. அவர்களே நடைமுறையில் தலித் எதிர்ப்பு சக்திகளாகவும் ஆணவக்கொலைகளை நிகழ்த்துபவராகவும் இருக்கிறார்கள்

ஒருவர் ‘பார்ப்பனரல்லாதவர்’ என்பதாலேயே அவர் எவ்வளவு நேர்மையற்றவராக இருந்தாலும், அதிகாரமய்யமாக இருந்தாலும் , பிற்போக்கு சக்தியாக இருந்தாலும், அவரை ஆதரிப்பது என்பது பகுத்தறிவு ஆகாது

சமகாலச் சூழலுக்கேற்ப பெரியாரியத்தை வளர்த்தெடுப்பதுதான் பெரியாரிஸ்ட்களின் பணியாக இருக்கவேண்டும். பெரியாரியத்தை மதமாக்குவது கூடாது.

கடவுள் இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி காலந்தோறும் தொடரக்கூடிய ஒன்று. புத்தரும் பெரியாரும் அறவுணர்வை சமத்துவத்தை கடவுளின் இடத்தில் வைத்தனர். அண்ணாவும் கலைஞரும் கடவுளின் இடத்தில் தமிழை வைத்தனர். தமிழுணர்வு என்பதை கிட்டத்தட்ட மதவுணர்வாக மாற்றினர்.

அண்ணாவும் கலைஞரும் பெரியாரிடமிருந்து மாறுபட்டு கற்பின் அடையாளமாக கண்ணகியை உயர்த்திப்பிடித்தனர். ..திமுக வினர் மேடைபேச்சுகள் ஆணாதிக்கத்துக்கான அவல உதாரணங்கள்

அண்ணாவும் கலைஞரும் முன்வைத்த இந்தி எதிர்ப்பு மாநில சுயாட்சி கருத்தாக்கங்களை இன்று மமதா முதல் பினராயி வரை உயர்த்திப்பிடிக்கின்றனர்…பன்மைத்துவ இந்தியாவைக் காப்பாற்றவும் உள்ளடக்கும் தேசியத்தை வளர்த்தெடுக்கவும் இந்தியாவுக்கு காந்தியும் நேருவும் மட்டுமல்ல, கலைஞரும் அண்ணாவும் தேவை. 

பெரியார் உருவாக்கியது ‘திராவிடர் இயக்கம். திமுக வந்தபோது  ‘ர்’ போய் திராவிட வந்தது. பெரியார் கூறுகள் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, பெண்ணியம். திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றது.ஆணாதிக்க கட்சியாகவும் ஆனது. தேர்தல் பாதை ஏற்று இந்திய தேச அமைப்பை ஏற்று ஆட்சிக்கு வந்தது. பார்ப்பனல்லாதார் உரிமைகளை உறுதி செய்தல், இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, தமிழ் பற்றை முன்வைத்தல், சிறுபான்மையினர் பக்கம் நிற்றல், வடவர் ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை திமுக  உறுதியாக செய்தது

திராவிட அரசியல் ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், தனிநபர் வழிபாடு போன்ற தீங்குகளை செய்திருந்தாலும், பார்ப்பன எதிர்ப்பு- சிறுபான்மை ஆதரவு, இந்துத்துவா எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்றவை அதன் கொடைகள்

சமகாலச் சூழலில் சமூகநீதி கருத்தாக்கம் மறுவரையறை செய்யப்படவேண்டும்..தலித்துகளுக்கான அதிகாரத்தை உறுதி செய்வது, இடைநிலை சாதி ஆதிக்க எதிர்ப்பு என்று நகரவேண்டும்…மாநில சுயாட்சி என்பது மாநிலத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்பதாகச் சுருங்கிவிடக்கூடாது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு