https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, March 28, 2023

இந்திய பொருளாதாரம் 75 ஆண்டுகள்

 

இந்திய பொருளாதாரம் 75 ஆண்டுகள்

Non Economics மாணவ வாசகர்களுக்கான புத்தகமாக Journey of A Nation 75 years of Indian Economy- Re emerge, Reinvest, Re engage என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

சஞ்சயா பாரு மிகத்திறமையாக சொற்செட்டுடன், பொருளாதார கணக்குப்புலிகளைப் போல் அல்லாமல் என் போன்ற பாமரனுக்கும் புரியவைக்க முயற்சித்துள்ளார். குறிப்பாக இந்தப் புத்தகம்  young audience of millennialsக்கானது என்கிறார். 2000க்குப் பின் பிறந்த இளைஞர்களை மனதில் வைத்துக்கொண்டு பாரு இதனை எழுதியிருப்பதாக அறிவித்துள்ளார்.



2022ல் ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளனர். 175 பக்கங்களில் 14 சாப்டர்களில் இந்திய பொருளாதாரத்தின் திசைவழிதனை புரிய வைக்கும் முயற்சி. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு முந்திய இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படி வீழ்த்தப்பட்டது என்ற அறிமுகத்துடன் பாரு இதை துவங்குகிறார்.

காலனி எதிர்ப்பு இயக்க காலத்தில் பல்வேறு தேசப்பொருளாதார மீட்சிக்கான பாதைகளும் கருத்துக்களும் எப்படி மோதிக்கொண்டன. எப்படிப்பட்ட செழுமையான விவாதங்கள் நடந்தன என்பதை ஓரளவிற்கு தொட்டுக்காட்டுகிறார்.

தாதாபாய் நெளரோஜியின் poverty and Un British Rule in India  துவங்கி Homespun ideas , சோவியத் மற்றும் ஜப்பானிய தாக்கத்தில் வளர்ந்ததை குறிப்பிடுகிறார்.

காந்தியின் வரவையடுத்து இரு பெரும் பிரிவுகளான உரையாடல்களாக  இவை  இந்திய அரசியல் அரங்கில் உருவெடுத்தன.  இதை பாரு இவ்வாறு குறிக்கிறார்

Two grand ideas began to shape indian political thinking on economic policy by the middle of the 20th century- one the ideas  espoused by Gandhiji and Gandhians who believed in the preservation and promotion of gram Swaraj or village industry, small scale industry; second the views of Indian business and political leadership who pushed for large scale and modern industrialisation, mimicking the soviet model.

இந்தியாவில் இருந்த விஜயநகர, காகதீய, சேர, சோழ, பாண்டிய அரசுகளின் கால விவசாய செழுமை, வர்த்தகம், கடல் ஆதிக்கம் என்பதை பாரு தொட்டுக்காட்டுகிறார். அய்ரோப்பாவைவிட இந்தியா நகர நாகரீகம் மேம்பட்ட நாடாக இருந்துள்ளது. முகலாயர் காலத்திலும் கூட இந்தச் சிறப்புகள் நீடித்து வளர்ந்தன. வீழத்துவங்கியதை பற்றிப் பேசும்போது மாடிசன் நூலை பாரு எடுத்துக்காட்டுகிறார்.

The steep decline in India’s share of world income, as shown by Maddison, was the consequence of this drain and parasitical nature of the European colonialism.

மேலும் பாரு எழுதுவதைப் பார்ப்போம்

சஞ்சயா பாருவின் தேசத்தின் பயணம் இந்திய பொருளாதாரம் 75 ஆண்டுகள் அளவில் சிறிய புத்தகமானாலும், நாட்டின் பாதைக்கு போடப்பட்ட கொள்கை முன்வைப்புகள் அவற்றின் விளவுகளை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் புத்தகம். குறிப்பாக என் போன்ற laymanக்கான  புத்தகம்.

பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் அவர்களின் காலனிகால கொள்ளை குறித்த புத்தகங்கள் ஏராளம் வந்துள்ளன. பாரு தோழர்கள் உட்சா மற்றும் பிரபாத் பட்நாயக்கிடமிருந்து கணக்கு ஒன்றைத்தருகிறார். கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் பெறப்பட்ட ஒவ்வொரு 100 ரூபாயிலும் 33 இங்கிலாந்திற்கு சென்றுவிட்டது. இப்படி drain  ஆன wealth 2020 படி பார்த்தால் 13.39 டிரில்லியன் பவுண்ட் - அதாவது பிரிட்டனின் 2020க்கான gdp போல 4 மடங்காம்.

இந்தியாவில் அப்போது இருந்த ஜமிந்தாரி, ரயத்துவாரி முறைகளை பாரு சொல்கிறார். ரயத்துவாரியில் அரசிற்கும் உழவர்க்கும் இடையில் வரி வசூல் ஏஜெண்ட் என ஜமீன்கள் இருப்பதில்லை. மதராஸ் மாகாணம் இப்படி ரயத்துவாரியில் ஒன்றாக இருந்ததால், ஜமின் தாரி கிழக்கைவிட செழுமையாக வளர்ந்தது.

முதல் உலகப்போர், சோவியத் புரட்சி ஆகியவற்றின் பின்புலத்தில் தேசிய எழுச்சிகளும், அதனை ஓரளவிற்கு தணிக்கும் வகையில் பிரிட்டிஷ் பாலிசிகளும் மாற வேண்டியிருந்தது. ஜப்பானின் வளர்ச்சி இந்தியர்களை ஈர்த்தது.

சிகாகோ சென்ற சுவாமி விவேகானந்தர், இத்தருணத்தில் ஜாம்ஷெட்ஜி டாட்டாவுடன் உரையாடினார். இருவரும் ஜப்பானில் இருந்து தங்கள் உரையாடலை நடத்திக்கொண்டனர். சுவாமியின் அருளாசியுடன் இந்தியா திரும்பிய டாட்டா indian Institute of Science நிறுவினார்.

1898ல் ஜப்பான் சென்று திரும்பிய விஸ்வேஸ்வரய்யா ஜப்பான் அனுபவங்களை கணக்கில்கொண்டு industrialise or perish என்ற முழக்கத்தை வைத்தார். அவரின் சேவைகளுக்காக 1955ல் பாரத ரத்னா பெற்றார்.

1916ல் தாகூர் ஜப்பான் சென்றார். 1905 ல் ஆசிய நாடு அய்ரோப்பிய ருஷ்யாவை வெல்லமுடியும் என்று காட்டிய ஜப்பானின் புகழ் பரவியது. தாகூர் எழுதினார்

She has shown her bold spirit in breaking through the confinements of habits, useless accumulations of the lazy mind, seeking safety in its thrifts and its locks and keys. Thus she has come in contact with the living time and has accepted with eagerness and aptitude the responsibilities of modern civilisation. That is it which has given heart to the rest of Asia

ஜெய்சங்கர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகத்தில் 1900-1945 காலத்தில் எப்படி homespun பொருளாதார சிந்தனைகள் குறித்து பலரும் விவாதித்தனர் என சொல்லப்பட்டுள்ளதை பாரு சுட்டிக்காட்டுகிறார்.

லாகூரில் 1909ல் நடந்த இந்திய தொழில் மாநாட்டில் வாமன் கோவிந்த கலே வாசித்த The present Economic Condition of India ல் இந்திய நிலை சொல்லப்பட்டு ஜப்பானின் உயர்வும் காட்டப்பட்டதாம்.

We lack enterprise, capital, experience, scientific knowledge and sufficient state protection. Agriculture is in the most backward condition. Poverty and ignorance stalk over the land. இப்படி 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த இந்தியாவைத்தான், ஆயிரம் குறை குற்றங்களுக்கும் மத்தியிலும் இந்த நூற்றாண்டு காலத்தில், 21 ஆம் நூற்றாண்டு தலைவாயிலில் அதன் பெருமளவு முன்னேற்றத்துடன் காண்கிறோம்.

1921ல் ஜெஹாங்கிர் கோயாஜி discriminating protection through supportive tariff ratesஎன்பதைக் கோரினார். நிதிக்குழுவும் அதை பரிசீலித்ததாம். இதனால் iron and steel industry  வளர வாய்ப்பு கிட்டியதாம்.

அடுத்து பாரு மூன்று முக்கிய விஷயங்களைச் சொல்கிறார். சுபாஷ் அமைத்த நேரு தலைமையிலான National Planning Committee, இந்திய தொழில் அதிபர்கள் முன்வைத்த பம்பாய் திட்டம், எம் என் ராய் முன்வைத்த மக்கள் திட்டம்.

பாரு சொல்வதை மேலும் பார்க்கலாம்….

நேதாஜி காங்கிரஸ் தலைவரானப் பின்னர் அவர் நேருவின் தலைமையில் தேசிய திட்டக் குழு ஒன்றை அமைத்தார். 1938 அக்டோபரில் மாகாண தொழில் அமைச்சர்கள் மாநாடும் கூட்டப்பட்டது.

குழுவில் விஸ்வேஸ்வரய்யா, புருஷோத்தம்தாஸ் தாகுர்தாஸ், மேக்நாத் சஹா, ஷராப், ஷா, நாசிர் அகமது, துபே, வால்சந்த் ஹீராசந்த், குமரப்பா, ராதாகமல் முகர்ஜி போன்ற புகழ் வாய்ந்தவர்கள் இருந்தனர். நிலம்,நீர், இயற்கை வளம், விவசாயம்,தொழிலாளர், தொழில், வர்த்தகம், கல்வி , கிரிடிட் போன்ற அம்சங்களில் திட்டமிடல் அவசியம் எனக் கருதினர்.

1944ல் தாகுர்தாஸ், டாட்டா, பிர்லா, ஶ்ரீராம், தலால், ஜான் மதாய் போன்றவர்கள் கூடி தங்களின் பம்பாய் திட்டம் எனப்படும் A Brief  Memo Outlining a Plan of Economic Development for India என்பதை வைத்தனர்.

பம்பாய் திட்டம் தொழில், விவசாய வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வீடு, கட்டுமானவளர்ச்சி,  தனிநபர் வருவாய் பெருக்கம் குறித்து பேசியது. தனியார் தொழில் ஊக்குவிப்பு என்பதும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட வரிகளும் அதில் இருந்தன என்கிறார் பாரு.

The real capital of a country consists of its materials and manpower, and money is simply a means of mobilising these resources and canalising them into specific forms of activity.

இந்த ஆவணங்களை இணையத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சுனிதி குமார் கோஷ் அவர்களின் மாவோயிச பார்வையிலான ‘இந்திய பெரு முதலாளி வர்க்கம் என்பதை படிப்பவர் இந்த திட்டப் பார்வைகள் குறித்த கடுமையான விமர்சனம் அதில் இருப்பதைக் காண்பர். இந்த தொழிலதிபர்கள் அனைவரையும் பிரிட்டிஷ் தாசானுதாசர்களாக, தரகு ஏஜெண்ட்களாகவும், காந்தியை இந்த தரகு முதலாளிகளின் காவலனாகவும் சுனிதிகுமார் எழுதியிருப்பார்.  பிபின் சந்திரா போன்ற மார்க்சியர்களே இந்தப் பார்வையை ஏற்கமாட்டார்கள்.

பாரு உள்ளதை உள்ளபடி எழுதியிருப்பார். அவரது இந்த ஆக்கம் perception அல்லது Ism சார்ந்த ஒன்றாக இருக்காது. பொருளாதார நாளிதழ் பத்திரிகையாளர் என்ற வகையிலான பார்வையில் அவர் இந்த பிரதியை நகர்த்தியிருப்பார்.

இடதுசாரி பார்வையில் எம் என் ராய் வழிகாட்டலில் பி என் பானர்ஜி, கோவர்தன் தனராஜ் பரிக், விதல் மகாதேவ், தார்குண்டே ஆகியோர் people’s plan for Economic Development of India என்கிற மக்கள் திட்டத்தை முன்வைத்தனர். இந்தியாவில் வறுமை நீக்கம்தான் தலையாய பிரச்னை என்றார் எம் என் ராய். தங்கள் திட்டம் ஏற்கப்பட்டால் தனிநபர் வருவாயை 10 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்த்தலாம் என்ற உரிமை பாராட்டலை ராய் வைத்தார்.

குமரப்பா காந்திய பொருளாதார சிந்தனையை முன்வைத்தார். Parasitic,predatory, enterprising, gregarious, service oriented என பொருளாதார முறை வகைப்பாட்டை அவர் விளக்கினார். அவரின் நிலைத்த பொருளாதாரம் படித்தவர்கள் இதை உணரமுடியும்.

A nation cannot be independent unless it develops self sufficiency in its primary needs- food, clothing, shelter என்ற சாரத்தை அவர் வைத்தார்.

பாரு குமரப்பாவின் பார்வையை இப்படி நிராகரித்துச் செல்கிறார். உடோபியா கற்பனைவாதமாகவும் , மிகை இலட்சியவாதமாகவும் பாரு அதை பார்க்கிறார். பேராசை, காலநிலை குறித்த காந்திய கருத்துக்களை எடுத்துகொள்ளவேண்டும் என பாரு ஏற்கிறார்.

இந்திய விடுதலைக்கு பின்னர் அமுலாக்கத்திற்கு வந்த 5 ஆண்டு திட்டங்கள் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன. முதல் திட்டம் ஒரு  யூனிட் உற்பத்திக்கு மூன்று மடங்கு மூலதனம் என்ற இலக்கை வைத்தது. 25 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக திட்டம் என்றனர்.

கே என் ராஜ் இதில் முக்கிய பங்காற்றினார். வருமானத்தை இரட்டிப்பாக்குதல், விவசாயத்தை நம்பிய உழைப்பாளர்களை 70 சதத்திலிருந்து 1970 களில் 60 சதமாக்குதல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு, ஏற்றத்தாழ்வை குறைத்தல்- பொருளாதார ஜனநாயகத்திற்கு உகந்த சூழல்களை உருவாக்குதல் போன்ற பார்வையை அவர் முன்னெடுத்தார்.

1955 ஆவடி காங்கிரஸ் socialistic pattern of society என்பதை பேசியது.

Economic policy and institutional changes have to be planned in a manner that would secure economic advance along democratic and egalitarian lines.

இரண்டாவது திட்டம் rapid industrialisation emphasis of basic and heavy industries, employment opportunities, reduction of inequalities in income and wealth என்றது. முதல் மூன்று திட்டக்காலத்திலும் 3.6, 4.3, 2.4 percent growth GDP achieved என பாரு காட்டுகிறார். அதேபோல் அடுத்து வந்த திட்டங்களில் ஏற்பட்ட  GDP growth சதம் பற்றியும் சொல்லியிருப்பார். கடைசியாக வந்தது 12 வது திட்டம் 2012-15. அதில் 8 சத வளர்ச்சி எட்டப்பட்டிருந்தது. பின்னர் மோடி ஆட்சியில் திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு நீதிஆயோக் உருவாக்கப்பட்டது. வளர்ச்சி 7 சதமானது.

Industrial policy Resolutions 1948, 1956 குறித்தும் எளிய அறிமுகத்தை பாரு செய்துள்ளார். 1956ல் இடம் பெற்ற சில வரிகள்

The adoption of the socialist pattern of society as the national objective, as well as the need for the planned and rapid development , require that all industries of basic and strategic importance, or in the nature of public utility services, should be in the public sector. Other industries which are essential and require investment on a scale which only the state, in present circumstances could provide, have also to be in the public sector.

பின்னர் 1967ல் ஹசாரி அவர்கள் தலைமையில்   அமைந்த The Industrial and Licensing policy Inquiry committee , கடந்த கால செயல்பாடுகளால் ஆதாயம் அடைந்தவர் பிர்லா என்றது. அனைவருக்கும் கல்வி, ஆரம்ப கல்வி, தொழில்நுட்ப கல்விக்கு போதுமான கவனத்தை நாம் கொடுக்கவில்லை என்ற பொது விமர்சனம் எழுந்தது.

மிஷல் கலேக்கி இந்தியாவில் ஆலோசகராக இருந்து கொடுத்த மதிப்பீடு ஒன்றை பாரு தந்துள்ளார்

The National liberation movements made the middle class potentially influential, and the ‘development of state ‘ offered the middle class access to power through the institution of bureaucracy. This meant such countries would end up neither being truly ‘capitalist ‘ nor ‘socialist ‘ and would, in fact evolve as ‘intermediate regimes ‘

அதாவது நடுத்தரவர்க்கத்தின் கீழ்த்தட்டிலிருந்து கூட  அதன் நலன்களை அரசு முதலாளித்துவத்துடன் இணைக்கும் நோக்கம் என்பதை கலேக்கி விளக்கினார். இது ஓரளவிற்கு equitable development நோக்கிய பாதையாக அமையலாம் எனவும் கருதினார்.

மேலும் பாரு சொல்வதை பார்ப்போம்..எங்களின் அனுபவத்தை சேர்த்தே இதில் சொல்கிறேன்.

நேருவின் காலத்து சிந்தனைகள் கலப்பு பொருளாதார மாடல் என அறியப்பட்டன.  Public sectors the commanding height of economy என உயர்வாக முன் நிறுத்தப்பட்டது.  என் போன்றவர்கள் எல்லாம் இதன் குழந்தைகள். எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இதன் வழி தென்பட்டதை அனுபவித்து வரும் தலைமுறையினர் நாங்கள். இதில் நாடு முழுக்க அந்த தலைமுறை ‘சாதிகளை ‘ தாண்டியே வளர்ந்தது. பிராமணிய தடைகள் பொதுவாக இல்லாமல் பொதுத்துறை வாய்ப்புகளை திறமையானவர் பெற முடிந்தது. அடிமட்டத்திலிருந்து பலர் பதவி மேம்பாடு பெற்றனர்.

எங்கள் பகுதி டெலிகாமில் எங்கள் வாழ்நாளில் பெரும் புரட்சிகர மாற்றத்தைக் கண்டோம். லட்சக்கணக்கான தினக்கூலிகளாக மணிக்கு ரூ 3 ஊதியம் 1980 களில் பெற்ற காஷுவல் லேபர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டு  , அவர்கள் திறமையால் தொழிற்சங்கபோராட்டங்களால் பதவி மேம்பாடு அடைந்து இப்போது ஓய்வு பெறக்கூடியவர்களில் சிலர் மாதம் 90 ஆயிரம் கூட சம்பளம் பெறமுடிந்துள்ளது.

பொதுத்துறைகள் மீது விமர்சனங்கள் ஏராளம் வரத்துவங்கின. ஊழியர்களின் பணி கலாச்சாரம்,  உற்பத்தி திறன் வீழ்ச்சி, மேனேஜர்களின் தவறுகள், அமைச்சர்களின் ஊதாரித்தனம் , மாறி வந்த அரசாங்களின் கொள்கைகள் , தனியார் நுழைவு அவர்களின் இலாப பேராசை என பொதுத்துறை வீழ்ச்சிக்கு பல காரணிகள் பங்களிப்பை செய்தன.  இதில் எல்லாம் என் போன்றோர் பங்கும் உண்டு. நாங்கள் ‘protectors  than producers ‘ என்ற role தான் அதிகம் செய்தோம்.

பாரு முக்கிய பார்வை ஒன்றைத் தருகிறார். The rising role of the state  as a ‘provider ‘ has impacted its role as a ‘producer ‘. Over the years, the PSUs became a provider of employment rather than an efficient producer of goods. This made the public sector a less competitive and with time, in industry  after industry, it was marginalised by the emergence of more  competitive private sector firms.

 நேரு தலைமையிலான திட்டக்கமிட்டி 1938-39 லேயே state as a facilitator -not an obstruction to development என்ற பார்வையை வைக்காமல் இல்லை. அதிகாரவர்க்க லைசென்ஸ் ராஜ்யம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகத் துவங்கியது.  இந்தக்காலத்தில் சில தனியார்கள் தங்களை வளர்த்துக்கொள்ளாமல் இல்லை. பாரு சொல்கிறார்.

On the other hand, some private sector players learnt to influence government policy and benefit from it, thereby using state intervention to their advantage. This sowed the seeds of what has come to be called crony capitalism

திட்டக்கமிஷன்,Indian Statistical Institute, Delhi School of Economics பல அறிஞர்களை ஈர்த்தது. பிரைட்மேன், ஜான் கால்பிரைத், பால் பாரன், ஆஸ்கர் லாங்கே, ஜான் ஸ்டிராட்சி, ராக்னர், தார்னர் , நிகோலஸ் கல்தார் போன்றவர்களை பாரு குறிப்பிட்டு சொல்கிறார். இந்தியாவின் புகழ்வாய்ந்த விகேஆர்வி ராவ், காட்கில்,கே என் ராஜ், ஐஜி படேல், பகவதி, அமர்த்யாசென், டி என் ஶ்ரீனிவாசன், லக்டவாலா போன்ற பலரின் பங்களிப்பையும் பாரு சொல்லாமல் இல்லை.

நேருவிற்கு பின்னரான சாஸ்திரி, இந்திரா, மொரார்ஜி, இந்திரா ராஜிவ்,  வி பி சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் என ஏற்பட்ட மாற்றங்கள் ஓரளவிற்கு பேசப்பட்டுள்ளன. குறிப்பாக 1991ல் நரசிம்ம ராவ்- மன்மோகன் சிங்  சந்தித்த சவால்கள் உருவாக்கிய தாராளமய மாற்றங்கள் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இந்திரா காலம் பற்றி பேசுகிற அத்தியாயம் Economy Turns Left - Nationalisation of Banks, Monopolies Enquiry Commission, Monopolies and Restrictive Trade Practices போன்றவற்றை பாரு விளக்கியிருப்பார்.

ஹசாரி கமிட்டி லைசென்ஸ் ராஜ் காலத்தில் 20 குடும்பங்கள் பெரும் பலன் அடைந்தன என்றது.

அடுத்த அத்தியாயத்தில் Economic Policies Shifts Right என பாரு எழுதியிருப்பார். இதில் மொரார்ஜி, இந்திரா, ராஜிவ் காலத்திலிருந்து துவங்கிய இந்த வலது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பேசியிருப்பார்.

ஜூன் 22, 1991ல் நரசிம்மராவ்

The economy is in crisis..there is no time to lose..we must tighten our belts and be prepared to make the necessary sacrifices to preserve our economic independence  என்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பினார். India has much to learn from what is happening elsewhere in the world என்று கண்களை திறக்க வேண்டினார்.

நிதி அமைச்சராக மன்மோகன் அவர்கள் தனது பட்ஜெட் உரையில் விக்டர் ஹ்யுகோவின் no power on earth can stop an idea whose time has come என்பதைக் காட்டி புது பாதைக்கான பயணத்தை உருவாக்கினார்.

அவர்கள் துவங்கி வைத்த பாதையில் சிற்சில மாறுதல்களுடன் இன்றுவரை இந்தியா பயணித்து வருகிறது. விரிவு அஞ்சி இந்த பாரு புத்தகம் குறித்த அறிமுகத்தை முடிக்கிறேன்.

 மேலும் அறிய விரும்புவோர், வாய்ப்புள்ளவர் படித்துக்கொள்ள முடியும்.

27-3-2023

No comments:

Post a Comment